Pages

South Indian Crime Point

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு - தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்! - 'புயல்' ராமச்சந்திரன்

''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல் கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்கும். 'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார். இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி: