South Indian Crime Point
▼
உத்தர பிரதேசத்தில், எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூட்டாளி ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரபல ரவுடி விகாஷ் துபே மீது, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.துபேயை பிடிப்பதற்காக, கான்பூர் அருகேயுள்ள கிராமத்துக்கு, நேற்று முன்தினம் போலீசார் சென்றனர்.