South Indian Crime Point
▼
பதிவு: ஜூலை 23, 2020 08:40 AM
அயோத்தி,
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 'விழாவில் பங்கேற்க, அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்' என, கோவிலை கட்டும், 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா'அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர், 9ல் அனுமதியளித்து உத்தரவிட்டது.