Sunday, November 23, 2025
Arjun Sampath says, Vijay - DMK's "Tool Kit" for 2026 elections
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 23, 2025, கார்த்திகை 07, விசுவாவசு வருடம் 05-45: AM
சென்னை,
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் ஒருசில இடங்களிலும், 25 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஓரிரு இடங்களிலும், 24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 12 செமீ, நாலுமுக்கில் 11 செமீ, காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 7 செமீ, சிற்றாறு, கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, November 22, 2025
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 22, 2025, கார்த்திகை 06, விசுவாவசு வருடம் 04-15: PM
சென்னை,
அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை;
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
22-11-2025
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23-11-2025
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24-11-2025
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-11-2025
தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26 முதல் 28-ந்தேதி வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை - 22-11-2025 முதல் 24-11-2025 வரை
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
துபாய் கண்காட்சியின் போது ‘தேஜஸ்’ விமானம் தீப்பிடித்து விபத்து - பைலட் உயிரிழப்பு - நடந்தது என்ன?
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 22, 2025, கார்த்திகை 06, விசுவாவசு வருடம் 06-45: AM
துபாய்,
துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் பைலட் உயிரிழந்தார்.
துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவில் விமானக் கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.அந்த வகையில், துபாயின் அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமானக் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் உலகின் பல நாடுகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விமானம் மற்றும் ட்ரோன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்தன.
200-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அணிவகுத்து நின்றன. இதையொட்டி, 12 கருத்தரங்குகளும் நடைபெற்றன. அதில் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விமானத் தொழில்நுட்பம் தொடர்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகள், தொலைநோக்குத் திட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, இந்தியா சார்பில் உள்நாட்டுத் தயாரிப்பான எச்ஏஎல் நிறுவனத்தின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது. விமானக் கண்காட்சியின்போது, விமானங்களின் அணிவகுப்பு, சாகசக் நிகழ்ச்சியும் நடத்தப்படும். இதில் பல நாடுகளை சேர்ந்த சாகசக் குழுவினர் பங்கேற்பார்கள். விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்தியாவின் தேஜஸ் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டது.
வான் சாகசம் செய்து காட்டுவதற்காக தேஜஸ் போர் விமானம் நேற்று மதியம் 2.10 மணி அளவில் புறப்பட்டது. வானில் தலைகீழாக பறந்தும், சுழன்றும் சாகசம் நிகழ்த்தியபோது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது. பயங்கர சத்தத்துடன் தரையில் மோதிய விமானம், சிறிது தூரம் சறுக்கிச் சென்று வெடித்துச் சிதறியது.
சாகசத்தில் ஈடுபட்ட விமானம், கண்ணுக்கு எதிரே தீப்பிழம்பாக எரிவதைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். துபாய் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பைலட் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
தேஜஸ் போர் விமான விபத்து குறித்து துறைரீதியான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. தேஜஸ் போர் விமானம், வான் பாதுகாப்பு, ஏவுகணைகள் மூலம் தாக்குதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யும் 4.5-ம் தலைமுறை போர் விமானம் ஆகும்.
உலகில் உள்ள அனைத்து போர் விமானங்களில் மிகச் சிறியது மற்றும் மிக எடை குறைவானது தேஜஸ் போர் விமானம். கடந்த 2001-ம் ஆண்டு இந்த விமானம் தயாரிக்கப்பட்ட போது, தனது முதல் பறக்கும் சோதனையில் விபத்தை சந்தித்தது. அப்போது பைலட், பாதுகாப்பாக வெளியேறிதப்பினார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ஜெய்சல்மரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோதும் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதன் 23 ஆண்டு கால வரலாற்றில் 3-வது முறையாக தேஜஸ் விமானம் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமானத்தில் மார்டின் - பேக்கர் ஜீரோ-ஜீரோ எஜெக்ஷன் சீட் பொருத்தப்பட்டுள்ளது.
தரையில் இருந்து புறப்படும்போதும், தாழ்வான உயரத்தில் பறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும், பைலட் உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறி பத்திரமாக தரையிறங்கும் வசதி உள்ளது.
அப்படியிருந்தும், துபாயில் நடைபெற்ற விபத்தில் பைலட் உயிரிழந்துள்ளார். இதற்கான காரணம் விசாரணை அறிக்கையில் தெரியவரும். விபத்தில் உயிரிழந்த பைலட் குடும்பத்தினருக்கு, விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - ஜி20 மாநாட்டில் பங்கேற்பு
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 22, 2025, கார்த்திகை 06, விசுவாவசு வருடம் 06-15: AM
ஜோகன்னஸ்பர்க்,
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த ஆண்டு ஜி20 அமைப்புக்கு தென்னாப்பிரிக்கா தலைமை வகிக்கிறது. இதன்படி அந்த நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானத்தில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால் சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டில் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தது. அப்போது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இணைக்கப்பட்டது.
தற்போதைய உச்சி மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை' ஆகும். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மாநாட்டில் எடுத்துரைப்பேன்.
மாநாட்டில் பங்கேற்கும் பிற நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன். மாநாட்டின் ஒரு பகுதியாக 6-வது இந்தியா -பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன்.
தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசுவேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வெள்ளையின மக்களை தென்னாப்பிரிக்க அரசு கொடுமைப்படுத்துவதாக கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜி20 மாநாட்டை புறக்கணித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 22, 2025, கார்த்திகை 06, விசுவாவசு வருடம் 05-45: AM
காஞ்சிபுரம்,
கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.
காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.
அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார்.
இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, November 21, 2025
Middle Class Movie Team Press Meet at Madurai
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...










