Monday, November 17, 2025

மகரவிளக்கு பூஜை - பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 05-50: AM

திருவனந்தபுரம்,

நடப்பாண்டின் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந்தேதி நடைபெற உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந்தேதி(நேற்று), பக்தர்களின் சரண கோஷம் முழங்க மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றனர்.

தொடர்ந்து இன்று(17-ந்தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும். நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்யதுள்ளது.

சபரிமலையில் தினமும் 90,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார் - நவம்பர் 19-ல் பதவியேற்பு விழா

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 04-50: AM

பாட்னா,

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நித்யானந்த ராய் பாட்னாவில் நேற்று முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்துப் பேசினார். அப்போது பிஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தள தலை​வர்​கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினார்.

காலை​யில் தொடங்​கிய இந்த ஆலோ​சனைக் கூட்​டம் பிற்​பகல் வரை நீடித்​தது. இதன்​பிறகு மத்​திய அமைச்​சர் நித்​யானந்த ராய், பாஜக மூத்த தலை​வர்​கள் நிதின் நவீன், கிருஷ்ண குமார் உள்​ளிட்​டோர் முதல்​வர் நிதிஷ் குமாரை சந்​தித்து விரி​வான ஆலோ​சனை நடத்​தினர். இதர கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் அவரை சந்​தித்​துப்பேசினர்.

இன்று ஆளுநருடன் சந்​திப்பு

புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஐக்​கிய ஜனதா தள எம்​எல்​ஏ.க்​களின் கூட்​டம் பாட்​னா​வில் இன்று நடை​பெறுகிறது. இந்த கூட்​டத்​தில் ஐக்​கிய ஜனதா தள சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக நிதிஷ் குமார் தேர்வு செய்​யப்பட உள்​ளார். அதன் ​பிறகு ஆளுநர் ஆரிப் முகமது கானை அவர் சந்​தித்து ராஜி​னாமா கடிதத்தை அளிக்க உள்​ளார். அப்​போது புதி​தாக ஆட்​சி​யமைக்​க​வும் அவர் உரிமை கோரு​வார். வரும் 19-ம் தேதி பிஹாரில் என்​டிஏ அரசு பதவி​யேற்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள் பங்​கேற்க உள்ளனர்.

மத்​திய அமைச்​சர் சிராக் பாஸ்​வான் பாட்​னாவில் நேற்று நிருபர்​களிடம் கூறும்போது, “பிஹாரில் அடுத்த சில நாட்​களில் புதிய அரசு பதவி​யேற்​கும். அமைச்​சர்​கள் யார் என்​பது நவம்​பர் 17-ம் தேதிக்​குள் இறுதி செய்​யப்​படும். இதுதொடர்​பாக பாஜக மூத்த தலை​வர்​ களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறேன்" என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக பிஹார் அரசி​யல் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வரும் 19 அல்​லது 20-ம் தேதி பாட்​னா​வில் உள்ள காந்தி மைதானத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்பு விழா நடை​பெறும். அப்​போது பிஹார் முதல்​வ​ராக நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பதவி​யேற்​பார். இதில் எந்த மாற்​ற​மும் இல்​லை. பிஹார் தேர்​தலில் பாஜக 89, ஐக்​கிய ஜனதாதளம் 85, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சி 19, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளன. பிஹார் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கை​யின் அடிப்​படை​யில் 36 பேரை அமைச்​சர்​களாக நியமிக்க முடி​யும்.

புதிய அமைச்​சர்​கள் நியமனம் தொடர்​பாக ஐக்​கிய ஜனதா தளத்​தின் மூத்த தலை​வர்​கள் லல்​லன்சிங், சஞ்​சய் ஜா ஆகியோர் டெல்​லி​யில் முகாமிட்டு உள்​ளனர். பாஜக மூத்த தலை​வர்​கள் அமித் ஷா, தர்​மேந்​திர பிர​தான், வினோத் தாவ்டே உள்​ளிட்​டோரை அவர்​கள் சந்​தித்து முக்​கிய ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். இதில் புதிய அமைச்​சர்​களின் பெயர்​கள் இறுதி செய்​யப்பட உள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்​டில் மத்​திய பிரதேசத்​தில் பாஜக​வின் புதிய அரசு பதவி​யேற்​றது. அப்​போது 17 புதி​ய​வர்​கள் அமைச்​சர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். அதே ஆண்​டில் மத்​திய பிரதேசத்​தில் பாஜக அரசு பதவி​யேற்​றது. அப்​போது 22 புதி​ய​வர்​களுக்கு அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​டது. இதே பாணியை பின்​பற்றி பிஹாரிலும் பாஜக சார்​பில் புதி​ய​வர்​களுக்கு அமைச்​சர் பத​வி வழங்​கப்​பட வாய்ப்​பு இருக்​கிறது.இவ்​வாறு பிஹார்​ அரசி​யல்​ வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

பாஜகவில் 16 அமைச்சர்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 எம்எல்ஏ.க்களுக்கு ஓர் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி பாஜகவை சேர்ந்த 16 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 14 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். ராஷ்டிரிய லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். சிறிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவி அளிக்கப்படும்.

பாஜக மூத்த தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் தற்போது துணை முதல்வர்களாக உள்ளனர். இதில் சாம்ராட் சவுத்ரி மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கக் கூடும்.

விஜய் குமார் சின்ஹாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். பாஜக மூத்த தலைவர்கள் ராம்கிருபாள் யாதவ், மங்கள் பாண்டே, ரஜ்னீஷ் குமார் ஆகியோரில் ஒருவருக்கு புதிதாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பிலும் துணை முதல்வர் பதவி கோரப்படுவதாகத் தெரிகிறது.

Sunday, November 16, 2025

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கிய நிலையில், நடப்பு மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியை கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு அதாவது 19-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை வழங்க இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.

ஐ.பி.எல். 2026 - சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-45: AM

சென்னை,

மகேந்திரசிங் தோனியை சென்னை அணி தக்கவைத்துள்ளது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், இன்று மாலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது.

இந்நிலையில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனியும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அடுத்த சீசனிலும் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது.

சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்:

மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.

சஞ்சு சாம்சன் (டிரேடிங் முறையில் வாங்கியது).

 வீடியோ பின்வருமாறு;-

 CSK

எஸ்.ஐ.ஆர். விவகாரம் - “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது;

“இந்திய அரசியல் சாசனம், தமிழகத்தில் கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது ஓட்டுரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதற்கு ஓட்டுரிமை முக்கியமாகும். நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம்.”

இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர்.. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நம்மிடம் படிவத்தை கொடுப்பார்கள். அதனை நாம் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிடும். அதில் நம் பெயர் இருக்க வேண்டும். 

பெயர் இருந்தால்தான் நம்மால் ஓட்டு போட வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் குழப்பங்கள் உள்ளன.

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்க முடியுமா? வேலைக்கு செல்வோருக்கு இந்த படிவம் கொடுக்க முடியுமா? தவெகவை சேர்ந்தவர்களுக்கு இந்த விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை என்று தகவல் வருகிறது.

இதனால் தான் நாங்கள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறோம்.

உங்களுக்கு படிவம் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைன் மூலமாக படிவம் பூர்த்தி செய்ய முடியும். வரும் தேர்தலில் ஜென் இசட் வாக்காளர்கள் மிகவும். முக்கியமானவர்கள். உங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்குவதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

வரும் தேர்தலில் நாம் யார், நம் பலம் என்ன என காட்ட வேண்டும். அந்த பலமான ஆயுதம் ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். தமிழ்நாடே வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்து, தமிழ்நாடு தவெகவ? அல்லது தவெகதான் தமிழ்நாடா? என்பதுபோல் இருக்க வேண்டும். ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்.

தவெக தோழர்களே.. ஜென் இசட் படை பலமே.. உஷாராக இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்..

விஜய் பேசிய வீடியோ பின்வருமாறு;-

VIJAY 

https://x.com/TVKVijayHQ/status/1989645823588860392 

Saturday, November 15, 2025

திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’

 


பதிவு: சனிக்கிழமை,   நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-50: AM

சென்னை,

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. அரசியல் அதிரடி படமாக உருவாகி உள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

மேலும் படத்தின் ஆடியோ உரிமைகள் ரூ.35 கோடிக்கு போயிருக்கிறது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.110 கோடிக்கு வாங்கி உள்ளது.

இதுவரை படத்தின் மொத்த வருவாய் ரூ.325 கோடியை தாண்டி இருக்கிறது. சாட்டிலைட் மற்றும் பிற பிராந்திய உரிமைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுவும் உறுதி செய்யப்பட்டால் படத்தின் வருவாய் ரூ.400 கோடியை நெருங்கும். படம்வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய வியாபாரத்தை பெற்று சாதனை படைத்து வருகிறது ‘விஜய்’யின் ஜனநாயகன்.

பிஹாரில் அமோக வெற்றி - 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி - முழு விவரம்

 

பதிவு: சனிக்கிழமை,   நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-20: AM

​பாட்னா,

பிஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தேர்தல் சமயத்தில் பிஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்​கிரஸ் - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார்.

'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் பாஸ்​வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 6 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டன.

இதில் பாஜக 89 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக பாஜக உரு​வெடுத்​துள்​ளது.

ஐக்​கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக்​ மோர்ச்சா 4, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன. அறு​திப் பெரும்​பான்​மைக்கு 122 தொகு​தி​கள் தேவை என்ற நிலை​யில் தே.ஜ.கூட்​டணி 202 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது. கடந்த தேர்​தலை​விட ஆளும் கூட்​டணிக்கு கூடு​தலாக 77 இடங்​கள் கிடைத்​துள்​ளன.

மெகா கூட்​ட​ணிக்கு பெரும் பின்​னடைவு

மெகா கூட்​ட​ணி​யில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்​கிரஸ் 61, இந்​திய கம்​யூனிஸ்ட் - எம்​எல் 20, விஐபி 15, இந்​திய கம்​யூனிஸ்ட் 9, மார்க்​சிஸ்ட் 4, ஐஐபி 3 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தின. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்​கிரஸ் 6, இந்​திய கம்​யூனிஸ்ட் - எம்​எல் 2, மார்க்​சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகு​தி​யில் வெற்றி பெற்​றன. மெகா கூட்டணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. கடந்த தேர்​தலை ஒப்​பிடும்​போது மெகா கூட்​டணி 75 இடங்​களை இழந்​துள்​ளது.

64 தொகு​தி​களில் தனித்​துப்​போட்​டி​யிட்ட ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. 

பகுஜன் சமாஜ்கட்சி ஒரு இடத்​தில் வென்​றது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஆம் ஆத்​மிக்கு ஒரு இடம்​கூட கிடைக்​க​வில்​லை.

துணை முதல்​வர்​கள்

சாம்​ராட் சவுத்ரி (தா​ராபூர்), விஜய்​கு​மார் சின்ஹா (லக்​கி​சா​ராய்) வெற்றி பெற்​றனர். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் (ராகோபூர்​)14,532 வாக்குகள் வித்​தி​யாசத்​தில் வென்றார். பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக நிதிஷ் மீண்​டும் பதவி​யேற்க உள்​ளார். 

பிரதமர் மோடி தனது சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘நல்​லாட்​சி, வளர்ச்​சி, சமூக நீதி வெற்றி பெற்​றுள்​ளது. இந்த வெற்​றியை சாத்​தி​ய​மாக்​கிய நிதிஷ் குமார், சிராக் பாஸ்​வான், ஜிதன் ராம் மாஞ்​சி, உபேந்​திர குஷ்​வா​கா​வுக்​கு ​பா​ராட்​டு​கள்​’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன? 

01. சட்டசபை தேர்தலுக்கு முன்பே, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., சார்பில், ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான், வேட்பாளர் தேர்வும் இருந்தது. 

02. கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது. 

03. அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொண்டர்களிடையே மன உறுதியை பா.ஜ., ஏற்படுத்தியது. 

04. மற்ற மாநிலங்களை போலவே, மோடி - நிதிஷ் குமார் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை பா.ஜ., எதிர்கொண்டது. 

05. கடந்த, 2020 தேர்தலில், மகத், ஷாபாத் பிராந்தியங்களில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பிராந்தியத்தில் உள்ள, 24 தொகுதிகளில், 2ல் மட்டுமே தே.ஜ., கூட்டணி வென்றது. இந்த தேர்தலில், ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ., பயன்படுத்தியது. 

06. கிராமப்புறங்களில் மக்களுக்கு உடனடி தீர்வு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ., ரேஷன் பொருட்களை வழங்கியதோடு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அடிப்படை உதவிகளையும் செய்தது. ஆனால், இலவசம் என்ற வார்த்தையை பா.ஜ., பயன்படுத்தவே இல்லை. 

07. பிரசாந்த் கிஷோரை பா.ஜ., வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. அவரை பற்றி பேசி வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேலிடம் விரும்பவில்லை.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...