Thursday, January 8, 2026
Anganwadi workers seek minimum special pension | Anganwadi workers stagi...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
By standing united, Devendrakula Vellalars can become a politically dete...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Vijayendra Bidari takes charge as new Inspector General of Police (South...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அண்ணா தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி - எடப்பாடி பழனிசாமி – அன்புமணி ராமதாஸ் கூட்டாக பேட்டி
பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 08, 2026, மார்கழி 24, விசுவாவசு வருடம் 02:00 AM
சென்னை,
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை சந்தித்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து கூட்டணி தொடர்பாக அண்ணா தி.மு.க. – பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தசந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் சில கட்சிகள் வரும்
இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு எடப்பாடி மற்றும் அன்புமணி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–
“வருகிற சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.
அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்.” என்று கூறினார்.
தி.மு.க. மீது மக்கள் ஆத்திரம்
இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. எங்களுக்கு இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். இது வலுவான கூட்டணி.
எங்கள் நோக்கம் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான தி.மு.க. ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான தி.மு.க. ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அத்தனை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம்.
காரணம், சமீபத்தில்கூட நான் 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது மக்களைச் சந்தித்தேன். அப்போது, தி.மு.க. மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. கோபம் என்றுகூட சொல்ல முடியாது. மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அண்ணா தி.மு.க. ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அண்ணா தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி அமைத்ததால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் தொடர்கிறார். ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ள நிலையில், கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை கொண்டு வர அண்ணா தி.மு.க. விரும்புகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அண்ணா தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அண்ணா தி.மு.க. ஒதுக்கியது. இதில் 5 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது. 2021-ல் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அண்ணா தி.மு.க. வெற்றிக்கு கணிசமாக உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது
தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்அல்லது மே மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

