Sunday, November 30, 2025

முதுநிலை ஆசிரியராக தேர்வு எழுதிய 85,000 பேர் - தமிழில் 'பெயில்!'

 

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  நவம்பர் 30, 2025, கார்த்திகை 14,  விசுவாவசு வருடம் 08-30: AM

சென்னை,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதியவர்களில், 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். அவர்களின் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு, 1,996 பேரை தேர்வு செய்ய கடந்த அக். 12ல் தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.36 லட்சம் பேர் எழுதினர். முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர்.

தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் தேர்வில் மொத்தம் 50 மதிப்பெண் உண்டு. அதில் 20 மதிப்பெண் எடுத்தால் பாஸ் ஆகலாம். பாஸ் ஆனால் தான், பாடம் சார்ந்த விடைத்தாளை மதிப்பீடு செய்வார்கள்.

இத்தேர்வில், 85,000 பேருக்கு மேல், அதாவது 36 சதவீதம் பேர் 20 மார்க் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். பிரதான பாடம் சார்ந்த தேர்வை இவர்கள் சிறப்பாக எழுதியிருந்தாலும், தமிழில் தோற்றதால் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படாது. அதனால், இவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்வை எழுதியவர்கள் இளநிலை, முதுநிலை, கல்வியியல் என குறைந்தது மூன்று பட்டங்களை பெற்றவர்கள். அதற்கு மேல் எம்.பில்., பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.

இதில் கட்டாய தமிழ் பாட தேர்வின் கேள்விகள், 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் இருக்கும். அதிலும் 40 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் பெயில் ஆகியிருப்பது, கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்து படிக்காமல், பள்ளி படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தால்கூட, பல தனியார் பள்ளிகளில், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இதனால் தான், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலமே வீணாகியுள்ளது.

முனைவர் என்கிற டாக்டர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களை பெற்றவர்களும் கூட, தாய்மொழியான தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது பெரும் அவமானம். நமது கல்வி முறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து உணரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆட்சியாளர்களுக்கு தலைகுனிவு -  அன்புமணி, பா.ம.க. தலைவர்,

தாய்மொழியை ஒரு பாடமாக படிக்காமல், ஒருவர் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்றால், அது தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம். இது தான் தமிழக ஆட்சியாளர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 85,000 பேர் பெயில் ஆனதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இதற்காக, ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். 

சென்னைக்கு தெற்கே 230 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல் - திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’

 

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  நவம்பர் 30, 2025, கார்த்திகை 14,  விசுவாவசு வருடம் 07-50: AM

சென்னை,

வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா' புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களுக்கு `ரெட் அலர்ட்' விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், தமிழகத்​தில் 1.24 கோடி பேருக்கு எச்​சரிக்கை குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தென்​மேற்கு வங்​கக்​கடல், அதையொட்​டிய வடக்கு இலங்கை பகு​தி​களில் ‘டிட்​வா' புயல் நிலை கொண்​டுள்​ளது. இது மேலும் வடமேற்​காக நகர்ந்து இன்று (நவ.30) காலை வடதமிழகம் மற்​றும் அதையொட்​டிய தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இன்று மாலை புயல் சென்​னை​யை நெருங்​கி வரும்.

இதன் காரண​மாக, இன்று வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் மணிக்கு அதி​கபட்​சம் 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வட தமிழக கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தில் தரைக்​காற்று வீசக்​கூடும்.

இன்று திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும். சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது. நாளை திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் கனமழை​யும், மற்ற பகு​தி​களில் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல், மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று அதி​கபட்​ச​மாக 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் 25 செ.மீ., வேதா​ரண்​யத்​தில் 19 செ.மீ., வேளாங்​கண்​ணி​யில் 13 செ.மீ., திருப்​பூண்​டி, நாகை​யில் 12 செ.மீ., தலை​ஞா​யிறில் 11 செ.மீ., ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன், காரைக்​காலில் 10 செ.மீ., தங்​கச்​சிமடம், ராமேசுவரம், தொண்​டி, மண்​டபம், தூத்​துக்​குடி மாவட்​டம் காயல்​பட்​டினம், சிவகங்கை மாவட்​டம் இளை​யான்​குடி, நாகை மாவட்​டம் திருக்​கு​வளை​யில் 7 செ.மீ. மழை பதி​வாகி​உள்​ளது. 

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி

புயல், மழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பாக சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் நேற்று வரு​வாய்த் துறை அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தாழ்​வான பகு​தி​களில் இருப்​பவர்​களைத் தங்​கவைக்க திருமண மண்​டபங்​கள், அவர்​களுக்​குத் தேவை​யான உணவு, குழந்​தைகளுக்கு பால் போன்​றவற்றை தயா​ராக வைக்​கு​மாறு அனைத்து மாவட்ட நிர்​வாகங்​களுக்​கும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மாநில பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 16 அணி​களும், தேசிய பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 12 அணி​களும் தயார் நிலை​யில் உள்​ளன.

இது​வரை புயல், மழை​யால் பெரிய பாதிப்பு ஏற்​பட​வில்​லை. 16 கால்​நடைகள் இறந்​துள்​ளன. 24 குடிசைகள் சேதமடைந்​துள்​ளன. புயல் வந்​தால், அதை எதிர்​கொள்​வது தொடர்​பாக 1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது. காற்​றின் வேகம் அதி​க​மாக இருக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. எனவே, பொது​மக்​கள் யாரும் கடற்​கரை ஓரமாகச் செல்​வதை தவிர்க்க வேண்​டும். புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

4,000 கனஅடி வெளி​யேற்​றம்

சென்​னைக்கு குடிநீர் விநி​யோகிக்​கும் பூண்டி சத்​தி​யமூர்த்தி சாகர் நீர்த்​தேக்​கத்​தில் இருந்து நேற்று மாலை முதல் வி​நாடிக்கு 4,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அதே​போல, செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்​து 2,000 கனஅடி​யும்​, புழல்​ ஏரியி​லிருந்​து 1,500 கனஅடி​யும்​ உபரி நீர்​ வெளியேற்​றப்​பட்​டு வருகிறது.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...