Thursday, January 15, 2026

Camberley, Madurai to link cultural twinning pact

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் - 2026

 சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ்

பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!

பதிவு:  வியாழக்கிழமை,  ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 06:30 AM

சென்னை,

பொங்​கல் பண்​டிகை அனை​வரது வாழ்க்​கை​யிலும் செழிப்​பு, மகிழ்ச்​சி​யைக் கொண்டு வரட்​டும் என்று அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். தலை​வர்​கள் வெளி​யிட்​டுள்ள பொங்​கல் வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

பிரதமர் மோடி

தமிழ் கலாச்​சா​ரத்​தை​யும், இயற்​கை​யுட​னான நமது பிணைப்​பை​யும் பொங்​கல் கொண்​டாடு​கிறது. இந்​தப் பண்​டிகை அனை​வரின் வாழ்க்​கை​யிலும் செழிப்​பை​யும், மகிழ்ச்​சி​யை​யும் கொண்டு வரட்​டும். இயற்​கைக்கு மரி​யாதை செலுத்​து​வதை ஒரு வாழ்க்கை முறை​யாக மாற்ற பொங்​கல் நம்மை ஊக்​குவிக்​கிறது.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி

உலகம் முழு​வதும் உள்ள தமிழ் சகோ​தர, சகோ​தரி​களுக்கு எனது நல் வாழ்த்​துகள். ஒவ்​வொரு வீட்​டிலும் மகிழ்ச்​சி, புதுப்​பிக்​கப்​பட்ட செழிப்பு மற்​றும் நல்ல ஆரோக்​கி​யத்தை நிரப்​பி, ஒற்​றுமை, அமைதி மற்​றும் முன்​னேற்​றத்​தின் உணர்வை வலுப்​படுத்​தி, 2047-ம் ஆண்​டுக்​குள் நம்மை ஒரு வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை நோக்கி இப்​பண்​டிகை வழிநடத்​தட்​டும்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்

உலகத் தமிழர் அனை​வருக்​கும் தமிழ்ப் பண்​பாட்​டுப் பெரு​நாள், தைத்​திரு​நாள், உழவைப் போற்​றும் அறு​வடைத் திரு​நாளாக திகழ்வது பொங்​கலாகும். உழவர் பெருங்குடி மக்​களை வணங்​கி, புத்​தாடை, வண்​ணக் கோலம், விளை​யாட்​டுப் போட்​டிகள், கால்​நடைகளுக்கு நன்றி செலுத்​தும் பண்பு ஆகிய​வற்​றோடு தமிழகமெங்​கும் புதுப்​பானை​யில் பொங்​கும் பொங்​கல் மகிழ்ச்​சிப் பொங்​கலாக அமைய எனது நல் வாழ்த்​துகள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

உழவுத் தொழிலை மைய​மாகக்கொண்ட தமிழரின் வாழ்​வியலோடு இணைந்த பண்​பாட்​டுக் கொண்​டாட்​ட​மான பொங்​கல் திரு​நாளில், உலகத் தமிழர் அனை​வருக்​கும் எனது உளமர்ந்த பொங்​கல் வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை

உழைப்பை போற்​றும் உன்னத திரு​விழா​வான இந்த நன்​னாளில் இல்​லந்​தோறும் மகிழ்ச்சி பொங்​கி, நம் அனை​வரின் உள்​ளத்​தி​லும் ஊக்​க​மும், உத்​வேக​மும் சிறந்து விளங்​கட்​டும்.

இதே​போல, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தி.க. தலை​வர் கி.வீரமணி, பாமக நிறு​வனர் ராம​தாஸ், பாமக தலை​வர் அன்​புமணி, விசிக தலை​வர் திரு​மாவளவன், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, மநீம தலை​வர் கமல்​ஹாசன், தவாக தலை​வர் வேல்​முரு​கன், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, பெருந் தலை​வர் மக்​கள் கட்சி என்​.ஆர்​.தன​பாலன், தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் திரு​நாவுக்​கரசர், பாஜக நிர்​வாகி சரத்​கு​மார், இந்​திய கிறிஸ்தவ மதச் சார்​பற்ற கட்சி நிறு​வனர் எம்​.எஸ்​.​மார்​டின், இந்​திய தேசிய லீக் மாநிலத் தலை​வர் நாகூர் ராஜா உள்​ளிட்​டோரும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

சொந்த ஊர்​களில் உற்​சாகம்

சென்​னை, கோவை, மதுரை,திருப்​பூர், திருச்​சி, சேலம், பெங்​களூரு உள்​ளிட்ட நகரங்​களில் இருந்​து லட்​சக்​கணக்​கான மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர். அங்கு தங்​கள் உறவினர்​களு​டன் பொங்​கல் பண்​டிகையை உற்​சாக​மாக கொண்​டாடி வருகின்றனர்.

டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு - உலகம் முழுவதும் கொண்டாடும் விழா என பெருமிதம்


 பதிவு:  வியாழக்கிழமை,  ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 05:30 AM

புதுடெல்லி, 

 டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ‘ஒரே பாரதம் உன்னதபாரதம்’ என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரும்பு, வாழை தோரணம்

இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

“ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

தமிழ் பொங்கல் வாழ்த்து

விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தன் உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்துதமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

"ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது. தமிழ் கலாசாரம் என்பது முழு தேசத்தின் ஒரு பொதுவான பாரம்பரியம்.

இயற்கையின் மீதான நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளுக்குள் நின்றுவிடாமல், அது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை பொங்கல் பண்டிகை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

கடந்த ஆண்டு, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாரம்பரியமான தமிழ் கலாசாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. திருக்குறள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.

வாழ்க தமிழ், வளர்க பாரதம்! வாழ்க தமிழ், வளர்க பாரதம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்.

விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. திருக்குறளை போற்றி பாடல் பாடப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பிரதமர் மிகவும் ரசித்து பார்த்தார்.


சபரிமலையில் தோன்றிய மகர ஜோதி... லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்

பதிவு:  வியாழக்கிழமை,  ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 04:30 AM

சபரிமலை,

தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

சபரிமலை​யில் ஐயப்​பனுக்கு திரு​வாபரணங்​கள் அணிவிக்​கப்​பட்டு மகர விளக்கு வழி​பாடு கோலாகல​மாக நடை​பெற்​றது. பொன்​னம்​பலமேட்​டில் திரண்​டிருந்த திரளான பக்​தர்​கள் மகரஜோ​தியை வழிபட்​டனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லின் முக்​கிய நிகழ்ச்​சி​யாக மகரஜோதி தரிசனம் திகழ்​கிறது. மகரஜோ​தியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும், மாலை அணிந்​து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்​தர்​கள், பொன்​னம்​பலமேட்​டில் மகரஜோ​தி​யைக் காண நேற்று காலை முதலே திரண்​டிருந்​தனர்.

முன்​ன​தாக, மகரஜோ​தியை முன்​னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்​பரிய ஆபரணங்​கள் பந்​தளத்​தில் இருந்து புறப்​பட்டு நேற்று மாலை சந்​நி​தானத்தை வந்​தடைந்​தது. 

திரு ஆபரணப்​பெட்டி ஊர்​வல​மாகக் கொண்டு செல்​லப்​பட்​ட​தால் காலை 10 மணி முதல் பக்​தர்​கள் நிலக்​கல்​லில் இருந்து பம்​பைக்​குச் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. அதே​போல, காலை 11 மணி முதல் பக்​தர்​கள் பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. ஊர்​வலம் சென்ற பிறகே பக்​தர்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

சந்​நி​தானம் வந்த திரு ஆபரணங்​களை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் வரவேற்​றனர். தொடர்ந்​து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்​பெட்டி கொண்டு செல்​லப்​பட்டு நேற்று மாலை ஐயப்​பனுக்கு ஆபரணங்​கள் அணிவிக்​கப்​பட்​டன. 

மகரஜோதி வழி​பாட்​டுக்கு முன்​னோடி​யாக நேற்று மாலை மகர சங்​கிரம பூஜை நடை​பெற்​றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபா​ராதனை உள்​ளிட்டவை நடை​பெற்​றன. 

மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது. சபரிமலை முழுவதும் சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.

தொடர்ந்​து, பொன்​னம்​பலமேட்​டில் ஜோதி தெரிந்​ததும், சபரிமலை​யில் திரண்​டிருந்த ஐயப்ப பக்​தர்​கள் சரணகோஷங்​கள் முழங்க தரிசித்​தனர். பொன்​னம்​பலமேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை தரிசனம் செய்ய பக்​தர்​களுக்கு 14 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், வண்​டிப்பெரி​யாறு, புல்​மேடு, பஞ்​சாலிமேடு, சத்​திரம், பருந்​துப்​பாறை, அய்​யன்​மலை, நீலிமலை உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்​தும் பக்​தர்​கள் மகரஜோ​தியை தரிசனம் செய்​தனர்.

மகரஜோ​தியை தரிசனம் செய்ய லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​ட​தால் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. மகரஜோ​தியை தரிசித்த பக்​தர்​கள், புல்​மேட்​டில் இருந்து சத்​திரம், வல்​லக்​கடவு வழி​யாக சந்​நி​தானம் சென்​றனர். இரவு 11 மணி வரை பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகர​விளக்கு பூஜைக்​காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு தொடர்ந்து வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன. மண்​டல, மகர​விளக்கு விழாக்​களில் இது​வரை 52 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.


Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...