Thursday, January 15, 2026

சபரிமலையில் தோன்றிய மகர ஜோதி... லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்

பதிவு:  வியாழக்கிழமை,  ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 04:30 AM

சபரிமலை,

தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

சபரிமலை​யில் ஐயப்​பனுக்கு திரு​வாபரணங்​கள் அணிவிக்​கப்​பட்டு மகர விளக்கு வழி​பாடு கோலாகல​மாக நடை​பெற்​றது. பொன்​னம்​பலமேட்​டில் திரண்​டிருந்த திரளான பக்​தர்​கள் மகரஜோ​தியை வழிபட்​டனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லின் முக்​கிய நிகழ்ச்​சி​யாக மகரஜோதி தரிசனம் திகழ்​கிறது. மகரஜோ​தியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும், மாலை அணிந்​து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்​தர்​கள், பொன்​னம்​பலமேட்​டில் மகரஜோ​தி​யைக் காண நேற்று காலை முதலே திரண்​டிருந்​தனர்.

முன்​ன​தாக, மகரஜோ​தியை முன்​னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்​பரிய ஆபரணங்​கள் பந்​தளத்​தில் இருந்து புறப்​பட்டு நேற்று மாலை சந்​நி​தானத்தை வந்​தடைந்​தது. 

திரு ஆபரணப்​பெட்டி ஊர்​வல​மாகக் கொண்டு செல்​லப்​பட்​ட​தால் காலை 10 மணி முதல் பக்​தர்​கள் நிலக்​கல்​லில் இருந்து பம்​பைக்​குச் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. அதே​போல, காலை 11 மணி முதல் பக்​தர்​கள் பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. ஊர்​வலம் சென்ற பிறகே பக்​தர்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

சந்​நி​தானம் வந்த திரு ஆபரணங்​களை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் வரவேற்​றனர். தொடர்ந்​து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்​பெட்டி கொண்டு செல்​லப்​பட்டு நேற்று மாலை ஐயப்​பனுக்கு ஆபரணங்​கள் அணிவிக்​கப்​பட்​டன. 

மகரஜோதி வழி​பாட்​டுக்கு முன்​னோடி​யாக நேற்று மாலை மகர சங்​கிரம பூஜை நடை​பெற்​றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபா​ராதனை உள்​ளிட்டவை நடை​பெற்​றன. 

மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது. சபரிமலை முழுவதும் சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.

தொடர்ந்​து, பொன்​னம்​பலமேட்​டில் ஜோதி தெரிந்​ததும், சபரிமலை​யில் திரண்​டிருந்த ஐயப்ப பக்​தர்​கள் சரணகோஷங்​கள் முழங்க தரிசித்​தனர். பொன்​னம்​பலமேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை தரிசனம் செய்ய பக்​தர்​களுக்கு 14 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், வண்​டிப்பெரி​யாறு, புல்​மேடு, பஞ்​சாலிமேடு, சத்​திரம், பருந்​துப்​பாறை, அய்​யன்​மலை, நீலிமலை உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்​தும் பக்​தர்​கள் மகரஜோ​தியை தரிசனம் செய்​தனர்.

மகரஜோ​தியை தரிசனம் செய்ய லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​ட​தால் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. மகரஜோ​தியை தரிசித்த பக்​தர்​கள், புல்​மேட்​டில் இருந்து சத்​திரம், வல்​லக்​கடவு வழி​யாக சந்​நி​தானம் சென்​றனர். இரவு 11 மணி வரை பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகர​விளக்கு பூஜைக்​காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு தொடர்ந்து வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன. மண்​டல, மகர​விளக்கு விழாக்​களில் இது​வரை 52 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.


No comments:

Post a Comment

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...