Sunday, December 7, 2025

மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம்

 


 
 
பதிவு: ஞாயிறுக்கிழமை,  டிசம்பர் 07, 2025, கார்த்திகை 21,  விசுவாவசு வருடம் 06-30: AM


சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (அதாவது இன்று) மாமதுரை திருநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனையொட்டி, மதுரை மாநகர் மாபெரும் அளவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப்பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில், 18 ஆயிரத்து 881 வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை தொடர்ந்து, நாளை நடைபெறும் விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ரூ.3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்கு பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.

இவைகளை எல்லாம் நினைவில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளபடி, இன்று மதுரைக்கு தேவைப்படுவது வளர்ச்சி மட்டும்தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 6, 2025

இலங்கை மக்களுக்கு 950 டன் நிவாரண பொருட்கள் - மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பி வைக்கிறார்

 

பதிவு: சனிக்கிழமை,  டிசம்பர் 06, 2025, கார்த்திகை 20,  விசுவாவசு வருடம் 07-00: AM

சென்னை,

இலங்கையில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல் இலங்கையை புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலின் கோரத்தாண்டவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.

‘டிட்வா' புயல் ஏற்படுத்திய பேரழிவால் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சிக்கி தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமான படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த புயல் பாதிப்பால் இலங்கையில் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களும் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

புயலால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

அப்போது அவர், இலங்கை மக்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வரும் வகையில், தமிழக அரசு துணைநிற்கும் என்றும், துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை வழங்கிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம் என்றும், அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம் என்றும் கூறியிருந்தார்.

அந்தவகையில் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட உள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் நிவாரண பொருட்களை சுமந்து செல்லும் கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

Friday, December 5, 2025

Tiruparankundram Deepathoon row: contempt petition against the violation...

Madras HC permits the devotees to Light Karthigai Deepam at Deepathoon; ...

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 07-00: AM

மதுரை,


திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் மதுரை ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று மாலை விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, கோயில் செயல் அலு​வலர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் ஆஜராக வேண்​டும் எனவும், நேரில் இல்​லா​விட்​டாலும் காணொலி வாயி​லாக உடனடி​யாக ஆஜராக வேண்​டும் எனவும், காவல் ஆணை​யர் சீருடை​யில் இல்​லா​விட்​டாலும் பரவா​யில்​லை, கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார்.

அரசுத் தரப்​பில் "அதி​காரி​கள் 5 நிமிடங்​களில் ஆஜராக வேண்​டும் என்​றால் எப்​படி?" என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, "5.30 மணிக்​குள் ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் காணொலி வாயி​லாக ஆஜராகா​விட்​டால் கடும் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்" என்​றார். பின்​னர் காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் காணொலி வாயி​லாக ஆஜரா​னார்.

அவரிடம் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுத்​தீர்​களா, 144 தடை உத்​தர​வைப் பிறப்​பிக்க ஆட்​சி​யருக்கு எப்​போது பரிந்​துரைக்​கப்​பட்​டது என்​றெல்​லாம் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு காவல் ஆணை​யர் பதில் அளித்​தார்.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​காக மனு​தா​ரர், அவரது வழக்​கறிஞர்​கள் ஆகியோர் சிஐஎஸ்​எப் பாது​காப்​புடன் மலைக்​குச் செல்ல முயன்​ற​போது காவல் ஆணை​யர் தடுத்​துள்​ளார். 144 தடை உத்​தரவு அமலில் இருப்​ப​தால், மேலே செல்ல அனு​ம​திக்க இயலாது என்று கூறி​யுள்​ளார்.

அதாவது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரி​வித்​துளளார். இதனால் தீபம் ஏற்ற இயல​வில்​லை. காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பு வழங்​கி​யிருந்​தால், பிரச்​சினை பெரி​தாகி​யிருக்​காது. ஆணை​யர் நீதி​மன்​றத்​தை​விட, ஆட்​சி​யர் பெரிய​வர் என்று எண்​ணி​யுள்​ளார். ஆட்​சி​யர் பிறப்​பித்த உத்​தர​வால், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த இயல​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளார். மாவட்ட ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இன்று (டிசம்பர் 4) சர்​வாலய தீபத்திரு​நாள் என்​ப​தால் இன்​றும் கார்த்​திகை தீபம் ஏற்​றலாம். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற காவல் ஆணை​யர் முழு பாது​காப்பு வழங்க வேண்​டும். மனு​தா​ரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தரவை மீறி​னால் கடும் விளைவு​கள் ஏற்​படும்​.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 06-40: AM

மதுரை,

திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் தனி நீதிப​தி​யின் அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்​து, நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்த வேண்​டியது அரசின் கடமை என்று உத்​தர​விட்​டது.

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற உத்​தரவை செயல்​படுத்​தாத​தால், மாவட்ட ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், மனு​தா​ரர்​கள் மற்​றும் 10 பேர் சிஐஎஸ்​எப் வீரர்​கள் பாது​காப்​புடன் தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​மாறும், நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றியது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறும் உத்​தர​விட்​டார். ஆனால், தீபம் ஏற்ற போலீ​ஸார் அனு​மதி மறுத்​தனர்.

இந்​நிலை​யில், தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கக்கோரி ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர்தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு மற்​றும் மனு​தா​ரர்​கள் தரப்​பில் பல்​வேறு வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

அரசுத் தரப்​பில், "நீ​தி​மன்ற பாது​காப்​புப் பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள சிஐஎஸ்​எப் வீரர்​களை மனு​தா​ரர்​கள் பாது​காப்​புக்கு அனுப்​பியது சட்​ட​விரோத​மாகும். காலஅவகாசம் இருந்த போதி​லும், இந்த மனுவை தனிநீதிபதி அவசர​மாக ஏற்​றுக் கொண்​டுள்​ளார். நீதிப​தி​யின் உத்​தர​வால் கலவரம் ஏற்​படும் சூழல் உரு​வாகி, 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது" என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போல, தர்கா தரப்​பிலும் வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​து​வது அரசு இயந்​திரத்​தின், அரசி​யலமைப்​புக் கடமை​யாகும். ஆனால், தனி நீதிப​தி​யின் உத்​தரவை அமல்​படுத்​த​வில்​லை. மாற்று நிவாரணத்​தைக்​கூட பின்​பற்​ற​வில்லை. மனு​தா​ரர் மற்​றும் 10 பேர் தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டும்என்று உத்​தரவு பிறப்​பித்த நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில்144 தடை உத்​தரவை எப்​படி பிறப்​பிக்க முடி​யும்? நீதி​மன்ற உத்​தரவை நிர்​வாக உத்​தரவு கட்​டுப்​படுத்​து​மா?

வழக்​கின் நிகழ்​வு​களைப் பார்க்​கும்​போது, மேல்​முறை​யீட்​டாளர்​கள் தங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்ற அச்​சத்​தில் நீதி​மன்​றத்தை நாடி​யுள்​ளனர் என்று தெரி​கிறது. இது நன்கு வடிவ​மைக்​கப்​பட்ட செய​லாகும். தனி நீதிபதி உத்​தரவை அதி​காரி​கள் வேண்​டுமென்றே பின்​பற்​ற​வில்​லையா என்​பதை சோதிக்க வேண்​டும். மேல்​முறை​யீட்​டில் அதி​காரி​களின் நடத்தை குறித்து அவசர​மாக முடிவுக்கு வர முடி​யாது.

நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்த வேண்​டாம் என்று அதி​காரி​கள் முடிவு செய்​திருப்​பதை கண்​டறிந்த தனி நீதிப​தி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்​எப் உதவியை கோரி​யுள்​ளார். மாநில காவல் துறை​யால் அரசி​யலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது. தேவைப்​பட்​டால் நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்​திய படை​யின் உதவியைப் பெறு​வ​தில் சட்​ட​விரோத​ம் இல்​லை.

மேலும், நீதி​மன்​றத்​தின் முதல் உத்​தர​வில், நீதி​மன்​றத் தீர்ப்பை நிறைவேற்​றும் பொறுப்பு கோயில் செயல் அலு​வலரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் அந்​தப் பொறுப்பை நிறைவேற்​றாததால், மனு​தா​ரர்​களிடம் அந்​தப் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த மனு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை முன்​கூட்​டியே தடுக்​கும் மறை​முக நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Section 144 imposed across Thiruparankundram - Arguments, pushing, tensi...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...