Friday, December 5, 2025

Tiruparankundram Deepathoon row: contempt petition against the violation...

Madras HC permits the devotees to Light Karthigai Deepam at Deepathoon; ...

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 07-00: AM

மதுரை,


திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் மதுரை ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று மாலை விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, கோயில் செயல் அலு​வலர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் ஆஜராக வேண்​டும் எனவும், நேரில் இல்​லா​விட்​டாலும் காணொலி வாயி​லாக உடனடி​யாக ஆஜராக வேண்​டும் எனவும், காவல் ஆணை​யர் சீருடை​யில் இல்​லா​விட்​டாலும் பரவா​யில்​லை, கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார்.

அரசுத் தரப்​பில் "அதி​காரி​கள் 5 நிமிடங்​களில் ஆஜராக வேண்​டும் என்​றால் எப்​படி?" என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, "5.30 மணிக்​குள் ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் காணொலி வாயி​லாக ஆஜராகா​விட்​டால் கடும் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்" என்​றார். பின்​னர் காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் காணொலி வாயி​லாக ஆஜரா​னார்.

அவரிடம் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுத்​தீர்​களா, 144 தடை உத்​தர​வைப் பிறப்​பிக்க ஆட்​சி​யருக்கு எப்​போது பரிந்​துரைக்​கப்​பட்​டது என்​றெல்​லாம் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு காவல் ஆணை​யர் பதில் அளித்​தார்.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​காக மனு​தா​ரர், அவரது வழக்​கறிஞர்​கள் ஆகியோர் சிஐஎஸ்​எப் பாது​காப்​புடன் மலைக்​குச் செல்ல முயன்​ற​போது காவல் ஆணை​யர் தடுத்​துள்​ளார். 144 தடை உத்​தரவு அமலில் இருப்​ப​தால், மேலே செல்ல அனு​ம​திக்க இயலாது என்று கூறி​யுள்​ளார்.

அதாவது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரி​வித்​துளளார். இதனால் தீபம் ஏற்ற இயல​வில்​லை. காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பு வழங்​கி​யிருந்​தால், பிரச்​சினை பெரி​தாகி​யிருக்​காது. ஆணை​யர் நீதி​மன்​றத்​தை​விட, ஆட்​சி​யர் பெரிய​வர் என்று எண்​ணி​யுள்​ளார். ஆட்​சி​யர் பிறப்​பித்த உத்​தர​வால், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த இயல​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளார். மாவட்ட ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இன்று (டிசம்பர் 4) சர்​வாலய தீபத்திரு​நாள் என்​ப​தால் இன்​றும் கார்த்​திகை தீபம் ஏற்​றலாம். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற காவல் ஆணை​யர் முழு பாது​காப்பு வழங்க வேண்​டும். மனு​தா​ரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தரவை மீறி​னால் கடும் விளைவு​கள் ஏற்​படும்​.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 06-40: AM

மதுரை,

திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் தனி நீதிப​தி​யின் அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்​து, நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்த வேண்​டியது அரசின் கடமை என்று உத்​தர​விட்​டது.

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற உத்​தரவை செயல்​படுத்​தாத​தால், மாவட்ட ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், மனு​தா​ரர்​கள் மற்​றும் 10 பேர் சிஐஎஸ்​எப் வீரர்​கள் பாது​காப்​புடன் தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​மாறும், நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றியது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறும் உத்​தர​விட்​டார். ஆனால், தீபம் ஏற்ற போலீ​ஸார் அனு​மதி மறுத்​தனர்.

இந்​நிலை​யில், தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கக்கோரி ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர்தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு மற்​றும் மனு​தா​ரர்​கள் தரப்​பில் பல்​வேறு வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

அரசுத் தரப்​பில், "நீ​தி​மன்ற பாது​காப்​புப் பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள சிஐஎஸ்​எப் வீரர்​களை மனு​தா​ரர்​கள் பாது​காப்​புக்கு அனுப்​பியது சட்​ட​விரோத​மாகும். காலஅவகாசம் இருந்த போதி​லும், இந்த மனுவை தனிநீதிபதி அவசர​மாக ஏற்​றுக் கொண்​டுள்​ளார். நீதிப​தி​யின் உத்​தர​வால் கலவரம் ஏற்​படும் சூழல் உரு​வாகி, 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது" என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போல, தர்கா தரப்​பிலும் வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​து​வது அரசு இயந்​திரத்​தின், அரசி​யலமைப்​புக் கடமை​யாகும். ஆனால், தனி நீதிப​தி​யின் உத்​தரவை அமல்​படுத்​த​வில்​லை. மாற்று நிவாரணத்​தைக்​கூட பின்​பற்​ற​வில்லை. மனு​தா​ரர் மற்​றும் 10 பேர் தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டும்என்று உத்​தரவு பிறப்​பித்த நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில்144 தடை உத்​தரவை எப்​படி பிறப்​பிக்க முடி​யும்? நீதி​மன்ற உத்​தரவை நிர்​வாக உத்​தரவு கட்​டுப்​படுத்​து​மா?

வழக்​கின் நிகழ்​வு​களைப் பார்க்​கும்​போது, மேல்​முறை​யீட்​டாளர்​கள் தங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்ற அச்​சத்​தில் நீதி​மன்​றத்தை நாடி​யுள்​ளனர் என்று தெரி​கிறது. இது நன்கு வடிவ​மைக்​கப்​பட்ட செய​லாகும். தனி நீதிபதி உத்​தரவை அதி​காரி​கள் வேண்​டுமென்றே பின்​பற்​ற​வில்​லையா என்​பதை சோதிக்க வேண்​டும். மேல்​முறை​யீட்​டில் அதி​காரி​களின் நடத்தை குறித்து அவசர​மாக முடிவுக்கு வர முடி​யாது.

நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்த வேண்​டாம் என்று அதி​காரி​கள் முடிவு செய்​திருப்​பதை கண்​டறிந்த தனி நீதிப​தி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்​எப் உதவியை கோரி​யுள்​ளார். மாநில காவல் துறை​யால் அரசி​யலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது. தேவைப்​பட்​டால் நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்​திய படை​யின் உதவியைப் பெறு​வ​தில் சட்​ட​விரோத​ம் இல்​லை.

மேலும், நீதி​மன்​றத்​தின் முதல் உத்​தர​வில், நீதி​மன்​றத் தீர்ப்பை நிறைவேற்​றும் பொறுப்பு கோயில் செயல் அலு​வலரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் அந்​தப் பொறுப்பை நிறைவேற்​றாததால், மனு​தா​ரர்​களிடம் அந்​தப் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த மனு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை முன்​கூட்​டியே தடுக்​கும் மறை​முக நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Section 144 imposed across Thiruparankundram - Arguments, pushing, tensi...

Thursday, December 4, 2025

திருப்பரங்குன்றம் முழுவதும் 144 தடை உத்தரவு - வாக்குவாதம், தள்ளுமுள்ளு, பதற்றம் - நடந்தது என்ன?

 

பதிவு: வியாழக்கிழமை,  டிசம்பர் 04, 2025, கார்த்திகை 18,  விசுவாவசு வருடம் 05-40: AM

மதுரை,

144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எப் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழலால் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு வீரர்களுடன் புதன்கிழமை இரவு திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீஸார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்.

திருப்பரங்குன்றம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாலும் இதில் முடிவு வரும் வரையிலும் யாரையும் மலைக்கு போகக் கூடாது போலீஸார் அறிவுறுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இந்து அமைப்பினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்களும் தடுப்புகளை மீறி மலைக்கு மேல் செல்ல முயன்றனர்.


அவர்களை போலீஸார் தடுத்ததால் ஆத்திரத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டும், மதில் சுவர்களில் ஏறியும் மலை பாதைநோக்கி ஓட முயன்றனர். தடுப்பு வேலிகளும் இந்து அமைப்பினரால் தூக்கியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முருகன் கோயிலுக்கு புகுந்து சிலர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பதற்றமான சூழலால் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதினாறு கால் மண்டபம் , கோயில், மலை பகுதி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


நீதிபதி கூறியது என்ன?

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார் உட்பட 4 பேர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச.1-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவுபடி செயல்படாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவமதிப்பு மனுவை புதன்கிழமை மாலை மனுதாரர் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு

‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் குறைபாடுகளுடன் ஒரு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான தந்திரமாகும். செயல் அலுவலர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதில் மனுதாரரின் அடிப்படை உரிமைகளும் அடங்கியுள்ளன. சட்டத்தின் ஆட்சி ஆபத்தில் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளது. யாரையும் தூக்கிலிட உத்தரவிடவில்லை. எந்த கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிடவில்லை. இந்த நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டால் எந்த மீளமுடியாத விளைவுகளும் ஏற்படாது.

மறுபுறம் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்பும். இது எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையில் ஈடுபட அதிகாரிகளை ஊக்குவிக்கும். அரசு எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யவில்லை. சட்டப்பூர்வ அர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு என்று கூறக்கூடிய தர்கா தரப்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எந்த தடையும் கோரவில்லை.

அதிகாரிகளின் நடத்தையை மன்னிக்க முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்குப் பதிலாக, அந்தச் செயலை அந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஒருவரால் செய்ய உத்தரவிடுவதன் மூலம், அதன் உத்தரவுக்கு கீழ்ப்படிவதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். இந்த வழக்கில் அத்தகைய அணுகுமுறையை பின்பற்ற விரும்புகிறேன். மனுதாரர் 10 பேருடன் மலைக்குச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கிறேன்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற மனுதாரருக்கும், அவருடன் செல்பவர்களுக்கும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப சிஐஎஸ்எப் கமாண்டருக்கு உத்தரவிடுகிறேன்.

இந்த உத்தரவை நிறைவேற்றி வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Wednesday, December 3, 2025

சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை - தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு - அன்புமணி ராமதாஸ் தாக்கு

 

பதிவு: புதன்கிழமை,  டிசம்பர் 03, 2025, கார்த்திகை 17,  விசுவாவசு வருடம் 11-30: AM

சென்னை,

தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நவீன இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் 65 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

5 ஜனாதிபதிகளை இந்தியாவுக்கு வழங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது பாடம் நடத்துவதற்கு கூட ஆளில்லாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெற்றுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65% பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் கணிசமானவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 85% பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67% பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக கிடக்கின்றன.

துறைவாரியாகப் பார்த்தால் சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 71 துறைகளில் 16 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியரும், 22 துறைகளில் தலா இரு ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதன் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஓர் ஆசிரியர் தேவை. அதன்படி பார்த்தால் 16 துறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்; 22 துறைகளில் தலா ஒரே ஒரு ஆசிரியர் தான் இருப்பார்.

இவ்வளவு குறைவான ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாது. அதனால், ஒரு நாளைக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் 6 முதல் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலை மாறி, தினமும் 3 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதற்கும் கூட போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தினமும் குறைந்தது ஒன்று அல்லது இரு பாடவேளைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1857 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின் 168 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் ரத்து செய்யப்படும் நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டதில்லை. ரூ.30,000 ஊதியத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களாக தான் தினமும் ஓரிரு வகுப்புகளாவது நடைபெறுகின்றன.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல்கலாம், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி ஆகிய 5 ஜனாதிபதிகள், நோபல் பரிசு வென்ற சர். சி.வி ராமன், கணிதமேதை ராமானுஜன் உள்ளிட்டோரை உருவாக்கிய சென்னைப் பல்கலை. பாடம் நடத்துவதற்குக் கூட ஆளில்லாமல் முடங்கிப் போகும் என்று அதை உருவாக்கியவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அவல நிலைக்குக் காரணம் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கும் அளவுக்கு பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததும்தான். சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்பதுதான். இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அதுதான் உண்மை ஆகும்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகத்தின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. அதனால் நடப்பாண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இன்னொருபுறம், பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களை வழங்க நிதி இல்லை. இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.45.6 கோடி வைப்புத்தொகையை திரும்பப் பெற்றும், அரசிடமிருந்து ரூ.50 கோடியை பெற்றும், 465 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.95.44 கோடி நிலுவைத் தொகையில் முதல் கட்டமாக ரூ.57.12 கோடியை நிர்வாகம் வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.38.31 கோடியை வழங்க மற்ற வைப்புத் தொகைகள் முதிர்ச்சியடையும் காலத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு உபரி நிதி இருந்து வந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஊதியம் வழங்குவதற்கே வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த உபரி நிதிதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதே ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்திடம் நிதி இல்லாத நிலையில், வைப்பு நிதிகளும் வேகமாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எந்த பல்கலைக்கழகத்தையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும்.

கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததுதான். பல்கலைக்கழகங்களை மீட்டெடுக்கப்போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த தி.மு.க.வின் ஆட்சியில்தான் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியும், சீரழிவுகளும் அதிகரித்தன. அந்த வகையில் தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களை சீரழித்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...