Sunday, November 16, 2025

ஐ.பி.எல். 2026 - சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-45: AM

சென்னை,

மகேந்திரசிங் தோனியை சென்னை அணி தக்கவைத்துள்ளது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், இன்று மாலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது.

இந்நிலையில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனியும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அடுத்த சீசனிலும் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது.

சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்:

மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.

சஞ்சு சாம்சன் (டிரேடிங் முறையில் வாங்கியது).

 வீடியோ பின்வருமாறு;-

 CSK

எஸ்.ஐ.ஆர். விவகாரம் - “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ

 


பதிவு: ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது;

“இந்திய அரசியல் சாசனம், தமிழகத்தில் கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது ஓட்டுரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதற்கு ஓட்டுரிமை முக்கியமாகும். நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம்.”

இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர்.. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நம்மிடம் படிவத்தை கொடுப்பார்கள். அதனை நாம் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிடும். அதில் நம் பெயர் இருக்க வேண்டும். 

பெயர் இருந்தால்தான் நம்மால் ஓட்டு போட வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் குழப்பங்கள் உள்ளன.

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்க முடியுமா? வேலைக்கு செல்வோருக்கு இந்த படிவம் கொடுக்க முடியுமா? தவெகவை சேர்ந்தவர்களுக்கு இந்த விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை என்று தகவல் வருகிறது.

இதனால் தான் நாங்கள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறோம்.

உங்களுக்கு படிவம் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைன் மூலமாக படிவம் பூர்த்தி செய்ய முடியும். வரும் தேர்தலில் ஜென் இசட் வாக்காளர்கள் மிகவும். முக்கியமானவர்கள். உங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்குவதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

வரும் தேர்தலில் நாம் யார், நம் பலம் என்ன என காட்ட வேண்டும். அந்த பலமான ஆயுதம் ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். தமிழ்நாடே வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்து, தமிழ்நாடு தவெகவ? அல்லது தவெகதான் தமிழ்நாடா? என்பதுபோல் இருக்க வேண்டும். ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்.

தவெக தோழர்களே.. ஜென் இசட் படை பலமே.. உஷாராக இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்..

விஜய் பேசிய வீடியோ பின்வருமாறு;-

VIJAY 

https://x.com/TVKVijayHQ/status/1989645823588860392 

Saturday, November 15, 2025

திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’

 


பதிவு: சனிக்கிழமை,   நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-50: AM

சென்னை,

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. அரசியல் அதிரடி படமாக உருவாகி உள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

மேலும் படத்தின் ஆடியோ உரிமைகள் ரூ.35 கோடிக்கு போயிருக்கிறது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.110 கோடிக்கு வாங்கி உள்ளது.

இதுவரை படத்தின் மொத்த வருவாய் ரூ.325 கோடியை தாண்டி இருக்கிறது. சாட்டிலைட் மற்றும் பிற பிராந்திய உரிமைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுவும் உறுதி செய்யப்பட்டால் படத்தின் வருவாய் ரூ.400 கோடியை நெருங்கும். படம்வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய வியாபாரத்தை பெற்று சாதனை படைத்து வருகிறது ‘விஜய்’யின் ஜனநாயகன்.

பிஹாரில் அமோக வெற்றி - 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி - முழு விவரம்

 

பதிவு: சனிக்கிழமை,   நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-20: AM

​பாட்னா,

பிஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தேர்தல் சமயத்தில் பிஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்​கிரஸ் - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார்.

'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் பாஸ்​வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 6 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டன.

இதில் பாஜக 89 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக பாஜக உரு​வெடுத்​துள்​ளது.

ஐக்​கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக்​ மோர்ச்சா 4, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன. அறு​திப் பெரும்​பான்​மைக்கு 122 தொகு​தி​கள் தேவை என்ற நிலை​யில் தே.ஜ.கூட்​டணி 202 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது. கடந்த தேர்​தலை​விட ஆளும் கூட்​டணிக்கு கூடு​தலாக 77 இடங்​கள் கிடைத்​துள்​ளன.

மெகா கூட்​ட​ணிக்கு பெரும் பின்​னடைவு

மெகா கூட்​ட​ணி​யில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்​கிரஸ் 61, இந்​திய கம்​யூனிஸ்ட் - எம்​எல் 20, விஐபி 15, இந்​திய கம்​யூனிஸ்ட் 9, மார்க்​சிஸ்ட் 4, ஐஐபி 3 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தின. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்​கிரஸ் 6, இந்​திய கம்​யூனிஸ்ட் - எம்​எல் 2, மார்க்​சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகு​தி​யில் வெற்றி பெற்​றன. மெகா கூட்டணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. கடந்த தேர்​தலை ஒப்​பிடும்​போது மெகா கூட்​டணி 75 இடங்​களை இழந்​துள்​ளது.

64 தொகு​தி​களில் தனித்​துப்​போட்​டி​யிட்ட ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. 

பகுஜன் சமாஜ்கட்சி ஒரு இடத்​தில் வென்​றது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஆம் ஆத்​மிக்கு ஒரு இடம்​கூட கிடைக்​க​வில்​லை.

துணை முதல்​வர்​கள்

சாம்​ராட் சவுத்ரி (தா​ராபூர்), விஜய்​கு​மார் சின்ஹா (லக்​கி​சா​ராய்) வெற்றி பெற்​றனர். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் (ராகோபூர்​)14,532 வாக்குகள் வித்​தி​யாசத்​தில் வென்றார். பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக நிதிஷ் மீண்​டும் பதவி​யேற்க உள்​ளார். 

பிரதமர் மோடி தனது சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘நல்​லாட்​சி, வளர்ச்​சி, சமூக நீதி வெற்றி பெற்​றுள்​ளது. இந்த வெற்​றியை சாத்​தி​ய​மாக்​கிய நிதிஷ் குமார், சிராக் பாஸ்​வான், ஜிதன் ராம் மாஞ்​சி, உபேந்​திர குஷ்​வா​கா​வுக்​கு ​பா​ராட்​டு​கள்​’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன? 

01. சட்டசபை தேர்தலுக்கு முன்பே, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., சார்பில், ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான், வேட்பாளர் தேர்வும் இருந்தது. 

02. கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது. 

03. அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொண்டர்களிடையே மன உறுதியை பா.ஜ., ஏற்படுத்தியது. 

04. மற்ற மாநிலங்களை போலவே, மோடி - நிதிஷ் குமார் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை பா.ஜ., எதிர்கொண்டது. 

05. கடந்த, 2020 தேர்தலில், மகத், ஷாபாத் பிராந்தியங்களில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பிராந்தியத்தில் உள்ள, 24 தொகுதிகளில், 2ல் மட்டுமே தே.ஜ., கூட்டணி வென்றது. இந்த தேர்தலில், ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ., பயன்படுத்தியது. 

06. கிராமப்புறங்களில் மக்களுக்கு உடனடி தீர்வு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ., ரேஷன் பொருட்களை வழங்கியதோடு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அடிப்படை உதவிகளையும் செய்தது. ஆனால், இலவசம் என்ற வார்த்தையை பா.ஜ., பயன்படுத்தவே இல்லை. 

07. பிரசாந்த் கிஷோரை பா.ஜ., வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. அவரை பற்றி பேசி வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேலிடம் விரும்பவில்லை.

Friday, November 14, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக - சீமான்

 


பதிவு: வெள்ளிக்கிழமை,   நவம்பர் 14, 2025, ஐப்பசி 28, விசுவாவசு வருடம் 05-00: AM

சென்னை,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உரிய ஊதியம், ஊக்கத்தொகை, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் சென்னையில் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அறிவிற் சிறந்த அடுத்தத் தலைமுறையை உருவாக்கும் பேரறிஞர்களான ஆசிரியர் பெருமக்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.

UGC நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கு முதுநிலைப் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

பணியில் உள்ள ஆசிரியர் பெருமக்களின் புத்தாக்கப் பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.

இணைப்பேராசிரியர் பணி மேம்பாட்டிற்குப் பி.எச்.டி கட்டாயம் என்ற நிபந்தனையைத் தளர்த்திட வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ் கல்வித்தகுதி தேர்வு பல்கலைக்கழகங்களில் முடித்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்.

கல்லூரி நிர்வாகிகளின் ஆசிரியர் விரோதப்போக்கினை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனித்தனியாகப் பிரித்து, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு எவ்விதப் பணிப்பலன்களும் கிடைக்கப்பெறாமல் செய்யக் கொண்டு வரப்படும் தனியார் பல்கலைக்கழகம் திருத்த சட்ட முன்வடிவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கல்லூரி ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தங்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 40-வது முறையாகத் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்துக் கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

 


பதிவு: வெள்ளிக்கிழமை,   நவம்பர் 14, 2025, ஐப்பசி 28, விசுவாவசு வருடம் 04-30: AM

பாட்னா,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிஹார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறைகளின் வளாகங்களில் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட உயர் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பாதுகாப்பு அறைகளுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஈரடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்அடுக்கில், ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், வெளிஅடுக்கில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து முன்னிலை நிலவரம் தெரிய வரும். மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

தொடரை வெற்றியுடன் துவக்குமா இந்தியா? - இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்


பதிவு: வெள்ளிக்கிழமை,   நவம்பர் 14, 2025, ஐப்பசி 28, விசுவாவசு வருடம் 03-30: AM

கோல்கட்டா,

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இன்று துவங்குகிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் (மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கோப்பை) பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி, சொந்தமண்ணில் முதன் முறையாக இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.

தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து மண்ணில் 'டிரா' (2-2) செய்து அசத்திய சுப்மன் கில், மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு இளம் ஜெய்ஸ்வால், அனுபவ லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரவுள்ளது. 3வது வீரராக தமிழகத்தின் சாய் சுதர்சன் வருகிறார். இதுவரை 5 டெஸ்டில், 9 இன்னிங்சில் 273 ரன் மட்டும் எடுத்துள்ளார். ஒரு சதமும் அடிக்கவில்லை. இத்தொடர் இவருக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும்.

'மிடில் ஆர்டரில்' கேப்டன் சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் துருவ் ஜுரெல் (140, 56, 125, 44, 132, 127) ரன் சேர்க்கும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி தரலாம்.

இரண்டு 'வேகம்'

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணியில் பும்ராவுடன், முகமது சிராஜ் அல்லது உள்ளூர் வீரர் ஆகாஷ் தீப் சேர்க்கப்படலாம்.

சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 'சீனியர்' ஜடேஜா, அக்சர் படேல் என மூவர் கூட்டணிக்கு வாய்ப்பு தரப்படும். இவர்கள் 'ஆல் ரவுண்டர்களாக' இருப்பது, இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும். இதனால் குல்தீப் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் தான்.

'சுழல்' பலம்

டெஸ்ட் உலகின் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா. கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியது பலம். மார்க்ரம், ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் தர, ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜி, விக்கெட் கீப்பர் வேர்ரேன், என பலர் பேட்டிங்கில் உதவ காத்திருக்கின்றனர். பவுமா வருகையால், விளாசல் வீரர் டிவால்டு பிரவிஸ் இடம் பறிபோகலாம்.

வழக்கமாக தென் ஆப்ரிக்க அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும். சமீபகாலமாக கேஷவ் மஹாராஜ், தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்விகமாக கொண்ட சேனுரன், சைமன் ஹார்மர் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் எதிரணிகளை மிரட்டி வருகிறது. சமீபத்திய 2 டெஸ்டில் இவர்கள் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய மண்ணிலும் நெருக்கடி தர முயற்சிக்கலாம். வேகத்தில் ரபாடா, யான் சென் உள்ளனர்.

பந்து சுழலுமா?

ஈடன் கார்டன் ஆடுகளத்தில் கடந்த 15 ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 159 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 97 விக்கெட் (61 சதவீதம்) சாய்த்துள்ளனர்.

இம்முறை ஆடுகளத்தில் லேசான புற்கள் காணப்படுகின்றன. அடுத்தடுத்த நாளில் அதிக விரிசல் ஏற்படாது. முதல் 2 நாள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். காலை, மாலையில் நன்றாக பந்து 'சுவிங்' ஆகும்.

மழை வருமா?

கோல்கட்டாவில் இன்று முதல் அடுத்த ஐந்து நாளில் வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.

யார் ஆதிக்கம்?

இரு அணிகள் 44 டெஸ்டில் மோதின. இந்தியா 16, தென் ஆப்ரிக்கா 18ல் வென்றன. 10 போட்டி 'டிரா' ஆகின.

* ஈடன் கார்டனில் இரு அணிகள் மோதிய 3 டெஸ்டில் இந்தியா 2, தென் ஆப்ரிக்கா 1ல் வென்றன.

* 2000க்குப் பின் இங்கு இந்தியா விளையாடிய 12 டெஸ்டில் 8ல் வென்றது. 3 'டிரா' ஆகின. 1ல் தோற்றது (2010, இங்கிலாந்து).

காத்திருக்கும் சாதனை

இந்திய அணியின் ஜடேஜா, இதுவரை 87 டெஸ்டில் 338 விக்கெட் வீழ்த்தி, 3990 ரன் எடுத்துள்ளார். இன்னும் 10 ரன் எடுக்கும் பட்சத்தில் டெஸ்டில் 300 விக்கெட், 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய, நான்காவது 'ஆல் ரவுண்டர்' ஆகலாம். முதல் 3 இடத்தில் இந்தியாவின் கபில் தேவ் (5248 ரன், 434 விக்.,), இங்கிலாந்தின் இயான் போத்தம் (5200, 383), நியூசிலாந்தின் வெட்டோரி (4531, 362) உள்ளனர்.

காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா

யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா

எய்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ேடானி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கைல் வெரைன், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர், கேஷவ் மகராஜ், மார்கோ யான்சென், ககிசோ ரபடா.

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...