Monday, November 17, 2025
Sabarimala Ayyappa devotees begin their viratham (fasting and austerity)...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
மகரவிளக்கு பூஜை - பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 17, 2025, கார்த்திகை 01, விசுவாவசு வருடம் 05-50: AM
திருவனந்தபுரம்,
நடப்பாண்டின் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந்தேதி நடைபெற உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந்தேதி(நேற்று), பக்தர்களின் சரண கோஷம் முழங்க மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றனர்.
தொடர்ந்து இன்று(17-ந்தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.
நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும். நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்யதுள்ளது.
சபரிமலையில் தினமும் 90,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார் - நவம்பர் 19-ல் பதவியேற்பு விழா
பதிவு: திங்கள்கிழமை, நவம்பர் 17, 2025, கார்த்திகை 01, விசுவாவசு வருடம் 04-50: AM
பாட்னா,
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நித்யானந்த ராய் பாட்னாவில் நேற்று முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்துப் பேசினார். அப்போது பிஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காலையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. இதன்பிறகு மத்திய அமைச்சர் நித்யானந்த ராய், பாஜக மூத்த தலைவர்கள் நிதின் நவீன், கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அவரை சந்தித்துப்பேசினர்.
இன்று ஆளுநருடன் சந்திப்பு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பிறகு ஆளுநர் ஆரிப் முகமது கானை அவர் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். அப்போது புதிதாக ஆட்சியமைக்கவும் அவர் உரிமை கோருவார். வரும் 19-ம் தேதி பிஹாரில் என்டிஏ அரசு பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பிஹாரில் அடுத்த சில நாட்களில் புதிய அரசு பதவியேற்கும். அமைச்சர்கள் யார் என்பது நவம்பர் 17-ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிஹார் அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 19 அல்லது 20-ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெறும். அப்போது பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் 10-வது முறையாக பதவியேற்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. பிஹார் தேர்தலில் பாஜக 89, ஐக்கிய ஜனதாதளம் 85, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சி 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பிஹார் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 36 பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் லல்லன்சிங், சஞ்சய் ஜா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், வினோத் தாவ்டே உள்ளிட்டோரை அவர்கள் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் புதிய அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் புதிய அரசு பதவியேற்றது. அப்போது 17 புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதே ஆண்டில் மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது 22 புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதே பாணியை பின்பற்றி பிஹாரிலும் பாஜக சார்பில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு பிஹார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவில் 16 அமைச்சர்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 எம்எல்ஏ.க்களுக்கு ஓர் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி பாஜகவை சேர்ந்த 16 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 14 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். ராஷ்டிரிய லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். சிறிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவி அளிக்கப்படும்.
பாஜக மூத்த தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் தற்போது துணை முதல்வர்களாக உள்ளனர். இதில் சாம்ராட் சவுத்ரி மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கக் கூடும்.
விஜய் குமார் சின்ஹாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். பாஜக மூத்த தலைவர்கள் ராம்கிருபாள் யாதவ், மங்கள் பாண்டே, ரஜ்னீஷ் குமார் ஆகியோரில் ஒருவருக்கு புதிதாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பிலும் துணை முதல்வர் பதவி கோரப்படுவதாகத் தெரிகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, November 16, 2025
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-30: AM
சென்னை,
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கிய நிலையில், நடப்பு மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியை கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு அதாவது 19-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை வழங்க இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மிக கனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
ஐ.பி.எல். 2026 - சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-45: AM
சென்னை,
மகேந்திரசிங் தோனியை சென்னை அணி தக்கவைத்துள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், இன்று மாலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனியும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அடுத்த சீசனிலும் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது.
சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்:
மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.
சஞ்சு சாம்சன் (டிரேடிங் முறையில் வாங்கியது).
வீடியோ பின்வருமாறு;-
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எஸ்.ஐ.ஆர். விவகாரம் - “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025, ஐப்பசி 30, விசுவாவசு வருடம் 06-00: AM
சென்னை,
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது;
“இந்திய அரசியல் சாசனம், தமிழகத்தில் கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது ஓட்டுரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதற்கு ஓட்டுரிமை முக்கியமாகும். நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம்.”
இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர்.. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நம்மிடம் படிவத்தை கொடுப்பார்கள். அதனை நாம் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிடும். அதில் நம் பெயர் இருக்க வேண்டும்.
பெயர் இருந்தால்தான் நம்மால் ஓட்டு போட வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் குழப்பங்கள் உள்ளன.
தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் விண்ணப்ப படிவம் கொடுக்க முடியுமா? வேலைக்கு செல்வோருக்கு இந்த படிவம் கொடுக்க முடியுமா? தவெகவை சேர்ந்தவர்களுக்கு இந்த விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை என்று தகவல் வருகிறது.
இதனால் தான் நாங்கள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறோம்.
உங்களுக்கு படிவம் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைன் மூலமாக படிவம் பூர்த்தி செய்ய முடியும். வரும் தேர்தலில் ஜென் இசட் வாக்காளர்கள் மிகவும். முக்கியமானவர்கள். உங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்குவதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
வரும் தேர்தலில் நாம் யார், நம் பலம் என்ன என காட்ட வேண்டும். அந்த பலமான ஆயுதம் ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். தமிழ்நாடே வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்து, தமிழ்நாடு தவெகவ? அல்லது தவெகதான் தமிழ்நாடா? என்பதுபோல் இருக்க வேண்டும். ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்.
தவெக தோழர்களே.. ஜென் இசட் படை பலமே.. உஷாராக இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்..
விஜய் பேசிய வீடியோ பின்வருமாறு;-
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, November 15, 2025
திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-50: AM
சென்னை,
இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. அரசியல் அதிரடி படமாக உருவாகி உள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மேலும் படத்தின் ஆடியோ உரிமைகள் ரூ.35 கோடிக்கு போயிருக்கிறது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.110 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதுவரை படத்தின் மொத்த வருவாய் ரூ.325 கோடியை தாண்டி இருக்கிறது. சாட்டிலைட் மற்றும் பிற பிராந்திய உரிமைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுவும் உறுதி செய்யப்பட்டால் படத்தின் வருவாய் ரூ.400 கோடியை நெருங்கும். படம்வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய வியாபாரத்தை பெற்று சாதனை படைத்து வருகிறது ‘விஜய்’யின் ஜனநாயகன்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
அமெரிக்க அதிபர் டிரம்ப்ம்பை மிரட்டிய பிரதமர் மோடி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026, சித்திரை, பாரபவ வருடம் 03:00 AM புதுடெல்லி, ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...





