Monday, January 12, 2026
Centre attempting to replace Constitution with Manusmriti, alleges Dravi...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
R.B.Udhaya Kumar Says, Rs.3000 Pongal gift not from the DMK party fund? ...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார்
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6-ம் தேதி சம்மன் அனுப்பியது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இதற்காக, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.
இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஏற்கெனவே சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரச்சாரத் துக்கு விஜய் பயன்படுத்திய சிறப்பு பேருந்தை கரூரில் சிபிஐ மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தனர்.
அந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிபிஐ விசாரணை குறித்து தவெக கட்சி நிர்வாகிகள் கூறும் போது, “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மாநில காவல் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் தவெகதான் கோரிக்கை விடுத்திருந்தது. எனவே, இப்போது சம்மனை தவிர்ப்பது சரியாக இருக்காது. டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு அளிப்பார்” என்றனர். விஜய் இன்று ஆஜராக உள்ள நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் குற்றப்பத்திரிகை
விஜய்யிடம் கேட்பதற்காக 50-க்கும் மேற்பட்ட முக்கியமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ தனது இறுதிக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக விஜய் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? குடிநீர் வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அம்பத்தூரைச் சேர்ந்த வக்கீல் வி.எஸ்.சுரேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் விரிவாக்கம், தென்றல் நகர் பகுதியில் இருந்து புழல் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்ல மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி 2021–22-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் இந்த பள்ளமான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு கால்வாய் வழி செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதியில் தேங்கியது. அதுவும், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கியதால், எங்கள் பகுதி மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள், வயதானவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
இதுகுறித்து ஆய்வு செய்த சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் சூப்பிரண்டு என்ஜினீயர், பள்ளமான பகுதியில் இதுபோல கழிவுநீர் தேங்கி நிற்பது தவிர்க்க முடியாதது என்று கூறிச் சென்றார்.
எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ‘‘மனுதாரர் குடியிருக்கும் பகுதியில் குடிநீருடன், மழைநீர், கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்து சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர், சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர் பிரமாண மனு தாக்கல் செய்யவேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Devotees witness ‘Ashtami Chapparam’ in Madurai | Meenakshi Sundareswara...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, January 11, 2026
"AIIMS Madurai construction, will be completed by 2027" - Health Ministe...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Advocate Kumaraguru (BJP) Press Meet | HC Fumes Over Officials Failure I...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

