பதிவு: சனிக்கிழமை, மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:20 AM
சென்னை,
“நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவுக்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Saturday, March 28, 2026
“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” - விஜய் ஆவேசம் - “திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?”
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு - 2-ம் கட்ட முழு பட்டியல்
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. கும்மிடிபூண்டி (1) - V. சுதாகர்
2. பொன்னேரி (தனி) (2) - சிறுணியம் P. பலராமன்
3. திருத்தணி (3) - திருத்தணி கோ. அரி
4. திருவள்ளூர் (4) - B.V. ரமணா
5. மாதவரம் (9) - மாதவரம் V. மூர்த்தி
6. திருவொற்றியூர் (10) - K. குப்பன்
7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) - K. பழனி
8. தாம்பரம் (31) - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9. செங்கல்பட்டு (32) - M. கஜா (எ) கஜேந்திரன்
10. செய்யூர் (தனி) (34) - E. ராஜசேகர்
11. மதுராந்தகம் (தனி) (35) - மரகதம் குமரவேல்
12. காஞ்சிபுரம் (37) - V. சோமசுந்தரம்
13. அரக்கோணம் (தனி) (38) - சு. ரவி
14. காட்பாடி (40) - V. ராமு
15. ஆற்காடு (42) - S.M சுகுமார்
16. வேலூர் (43) - S.R.K அப்பு
17. அணைக்கட்டு (44) - த. வேலழகன்
18. குடியாத்தம் (தனி) (46) - G. பரிதா புருஷோத்தமன்
19. வாணியம்பாடி (47) - G. செந்தில்குமார்
20. ஆம்பூர் (48) - R. வெங்கடேசன்
21. ஊத்தங்கரை (தனி) (51) - T.M. தமிழ்செல்வம்
22. பர்கூர் (52) - E.C. கோவிந்தராசன்
23. கிருஷ்ணகிரி (53) - K. அசோக்குமார்
24. ஓசூர் (55) - P. பாலகிருஷ்ண ரெட்டி
25. பாப்பிரெட்டிபட்டி (60) - மரகதம் வெற்றிவேல்
26. அரூர் (தனி) (61) - V. சம்பத்குமார்
27. செங்கம் (தனி) (62) - T.S. வேலு
28. கீழ்பென்னாத்தூர் (64) - எஸ். இராமச்சந்திரன்
29. ஆரணி (67) - L. ஜெயசுதா
30. செய்யார் (68) - முக்கூர் N. சுப்பிரமணியன்
31. வந்தவாசி (தனி) (69) - P. ராணி
32. திண்டிவனம் (தனி) (72) - P. அர்ஜூனன்
33. வானூர் (தனி) (73) - P. முருகன்
34. விழுப்புரம் (74) - K. விஜயா
35. திருக்கோயிலூர் (76) - S. பழனிசாமி
36. உளுந்தூர்பேட்டை (77) - இரா. குமரகுரு
37. சங்கராபுரம் (79) - R. ராகேஷ்
38. கள்ளக்குறிச்சி (தனி) (80) - ராஜீவ்காந்தி
39. கங்கவல்லி (தனி) (81) - A. நல்லதம்பி
40. ஆத்தூர் (தனி) (82) - A.P. ஜெயசங்கரன்
41. ஏற்காடு (எஸ்டி) (83) - P. உஷாராணி
42. ஓமலூர் (84) - R. மணி
43. மேட்டூர் (85) - G. வெங்கடாஜலம்
44. சங்ககிரி (87) - S. வெற்றிவேல்
45. சேலம் (தெற்கு) (90) - J. வினோத்
46. வீரபாண்டி (91) - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) - C. சந்திரசேகரன்
48. நாமக்கல் (94) - ஸ்ரீதேவி P.S. மோகன்
49. பரமத்தி வேலூர் (95) - S.சேகர்
50. திருச்செங்கோடு (96) - R. சந்திரசேகர்
51. ஈரோடு (கிழக்கு) (98) - R. மனோகரன்
52. தாராபுரம் (தனி) (101) - P. சத்தியபாமா
53. காங்கயம் (102) - N.S.N. நடராஜ்
54. பெருந்துறை (103) - J.K (எ) S. ஜெயக்குமார்
55. அந்தியூர் (105) - P. ஹரிபாஸ்கர்
56. கோபிச்செட்டிப்பாளையம் (106) - V.B. பிரபு
57. பவானிசாகர் (தனி) (107) - A. பண்ணாரி
58. கூடலூர் (தனி) (109) - பொன். ஜெயசீலன்
59. குன்னூர் (110) -A. ராமு
60. மேட்டுப்பாளையம் (111) - O.K. சின்னராஜ்
61. திருப்பூர் (வடக்கு) (113) - M.S.M. ஆனந்தன்
62. பல்லடம் (115) - பல்லடம் K.P. பரமசிவம்
63. சூலூர் (116) - V.P. கந்தசாமி
64. கவுண்டம்பாளையம் (117) - P.R.S. அருண்குமார்
65. கோயம்புத்தூர் தெற்கு (120) - அம்மன் K. அர்ச்சுணன்
66. சிங்காநல்லூர் (121) - K.R. ஜெயராம்
67. கிணத்துக்கடவு (122) - செ. தாமோதரன்
68. பொள்ளாச்சி (123) - V. பொள்ளாச்சி ஜெயராமன்
69. வால்பாறை (தனி) (124) - D. லட்சுமண சிங்
70. உடுமலைப்பேட்டை (125) - உடுமலை K. ராதாகிருஷ்ணன்
71. பழனி (127) - K. ரவி மனோகரன்
72. ஆத்தூர் (129) - A. விஸ்வநாதன்
73. நிலக்கோட்டை (தனி) (130) - S. தேன்மொழி
74. வேடசந்தூர் (133) - V.P.B. பரமசிவம்
75. அரவக்குறிச்சி (134) - K. செல்வக்குமார்
76. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) - S. திவ்யா
77. குளித்தலை (137) - S. கருணாகரன்
78. மணப்பாறை (138) - P.L. விஜயகுமார்
79. ஸ்ரீரங்கம் (139) - R. மனோகரன்
80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) - க. ராஜசேகரன்
81. திருவெறும்பூர் (142) - ப. குமார்
82. லால்குடி (143) -M. லீமா ரோஸ்
83. முசிறி (145) - N. யோகநாதன்
84. துறையூர் (தனி) (146) - இ. சுரோஜா
85. பெரம்பலூர் (தனி) (147) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86. நெய்வேலி (153) - சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87. பண்ருட்டி (154) - K. மோகன்
88. கடலூர் (155) - M.C. சம்பத்
89. குறிஞ்சிப்பாடி (156) - A. புவனேந்திரன்
90. புவனகிரி (157) - ஆ. அருண்மொழிதேவன்
91. சிதம்பரம் (158) - K.A. பாண்டியன்
92.சீர்காழி (தனி) (160) - ம. சக்தி
93. பூம்புகார் (162) - S. பவுன்ராஜ்
94. நாகப்பட்டினம் (163) - தங்க. கதிரவன்
95. திருத்துறைப்பூண்டி (தனி) (166) - உ. பாலதண்டாயுதம்
96. திருவிடைமருதூர் (தனி) (170) - இளமதி சுப்ரமணியன்
97. பாபநாசம் (172) - D. சண்முகபிரபு
98. ஒரத்தநாடு (175) - M. சேகர்
99. பட்டுக்கோட்டை (176) - C.V. சேகர்
100. பேராவூரணி (177) - கோவி. இளங்கோ
101. திருமயம் (181) - P.K. வைரமுத்து
102. சிவகங்கை (186) - P.R. செந்தில்நாதன்
103. மேலூர் (188) - P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104. மதுரை கிழக்கு (189) - மாங்குளம் K. மகேந்திரன்
105. சோழவந்தான் (தனி) (190) - கி. மாணிக்கம்
106. மதுரை வடக்கு (191) - P. சரவணன்
107. உசிலம்பட்டி (197) - I. மகேந்திரன்
108. ஆண்டிபட்டி (198) - A. லோகிராஜன்
109. போடிநாயக்கனூர் (200) - V.T. நாராயணசாமி
110. கம்பம் (201) - S.T.K. ஜக்கையன்
111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) - M. சந்திரபிரபா
112. விருதுநகர் (206) - V.G. கணேசன்
113. அருப்புக்கோட்டை (207) -S. சேதுபதி
114. பரமக்குடி (தனி) (209) - S. முத்தையா
115. திருவாடானை (210) - கீர்த்திகா முனியசாமி
116. முதுகுளத்தூர் (212) - மலேசியா S. பாண்டி
117. விளாத்திகுளம் (213) - R.சத்யா
118. தூத்துக்குடி (214) - சி.த. செல்லப்பாண்டியன்
119. ஸ்ரீவைகுண்டம் (216) - S.P. சண்முகநாதன்
120. சங்கரன்கோவில் (தனி) (219) - திலிபன் ஜெய்சங்கர்
121. கடையநல்லூர் (221) - C. கிருஷ்ணமுரளி
122. தென்காசி (222) - S. செல்வமோகன்தாஸ்
123. ஆலங்குளம் (223) - K.R.P. பிரபாகரன்
124. திருநெல்வேலி (224) - தச்சை N. கணேசராஜா
125. அம்பாசமுத்திரம் (225) - இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
126. பாளையங்கோட்டை (226) - S. சையது சுல்தான் சம்சுதீன்
127. கன்னியாகுமரி (229) - என். தளவாய்சுந்தரம்
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. கும்மிடிபூண்டி (1) - V. சுதாகர்
2. பொன்னேரி (தனி) (2) - சிறுணியம் P. பலராமன்
3. திருத்தணி (3) - திருத்தணி கோ. அரி
4. திருவள்ளூர் (4) - B.V. ரமணா
5. மாதவரம் (9) - மாதவரம் V. மூர்த்தி
6. திருவொற்றியூர் (10) - K. குப்பன்
7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) - K. பழனி
8. தாம்பரம் (31) - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9. செங்கல்பட்டு (32) - M. கஜா (எ) கஜேந்திரன்
10. செய்யூர் (தனி) (34) - E. ராஜசேகர்
11. மதுராந்தகம் (தனி) (35) - மரகதம் குமரவேல்
12. காஞ்சிபுரம் (37) - V. சோமசுந்தரம்
13. அரக்கோணம் (தனி) (38) - சு. ரவி
14. காட்பாடி (40) - V. ராமு
15. ஆற்காடு (42) - S.M சுகுமார்
16. வேலூர் (43) - S.R.K அப்பு
17. அணைக்கட்டு (44) - த. வேலழகன்
18. குடியாத்தம் (தனி) (46) - G. பரிதா புருஷோத்தமன்
19. வாணியம்பாடி (47) - G. செந்தில்குமார்
20. ஆம்பூர் (48) - R. வெங்கடேசன்
21. ஊத்தங்கரை (தனி) (51) - T.M. தமிழ்செல்வம்
22. பர்கூர் (52) - E.C. கோவிந்தராசன்
23. கிருஷ்ணகிரி (53) - K. அசோக்குமார்
24. ஓசூர் (55) - P. பாலகிருஷ்ண ரெட்டி
25. பாப்பிரெட்டிபட்டி (60) - மரகதம் வெற்றிவேல்
26. அரூர் (தனி) (61) - V. சம்பத்குமார்
27. செங்கம் (தனி) (62) - T.S. வேலு
28. கீழ்பென்னாத்தூர் (64) - எஸ். இராமச்சந்திரன்
29. ஆரணி (67) - L. ஜெயசுதா
30. செய்யார் (68) - முக்கூர் N. சுப்பிரமணியன்
31. வந்தவாசி (தனி) (69) - P. ராணி
32. திண்டிவனம் (தனி) (72) - P. அர்ஜூனன்
33. வானூர் (தனி) (73) - P. முருகன்
34. விழுப்புரம் (74) - K. விஜயா
35. திருக்கோயிலூர் (76) - S. பழனிசாமி
36. உளுந்தூர்பேட்டை (77) - இரா. குமரகுரு
37. சங்கராபுரம் (79) - R. ராகேஷ்
38. கள்ளக்குறிச்சி (தனி) (80) - ராஜீவ்காந்தி
39. கங்கவல்லி (தனி) (81) - A. நல்லதம்பி
40. ஆத்தூர் (தனி) (82) - A.P. ஜெயசங்கரன்
41. ஏற்காடு (எஸ்டி) (83) - P. உஷாராணி
42. ஓமலூர் (84) - R. மணி
43. மேட்டூர் (85) - G. வெங்கடாஜலம்
44. சங்ககிரி (87) - S. வெற்றிவேல்
45. சேலம் (தெற்கு) (90) - J. வினோத்
46. வீரபாண்டி (91) - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) - C. சந்திரசேகரன்
48. நாமக்கல் (94) - ஸ்ரீதேவி P.S. மோகன்
49. பரமத்தி வேலூர் (95) - S.சேகர்
50. திருச்செங்கோடு (96) - R. சந்திரசேகர்
51. ஈரோடு (கிழக்கு) (98) - R. மனோகரன்
52. தாராபுரம் (தனி) (101) - P. சத்தியபாமா
53. காங்கயம் (102) - N.S.N. நடராஜ்
54. பெருந்துறை (103) - J.K (எ) S. ஜெயக்குமார்
55. அந்தியூர் (105) - P. ஹரிபாஸ்கர்
56. கோபிச்செட்டிப்பாளையம் (106) - V.B. பிரபு
57. பவானிசாகர் (தனி) (107) - A. பண்ணாரி
58. கூடலூர் (தனி) (109) - பொன். ஜெயசீலன்
59. குன்னூர் (110) -A. ராமு
60. மேட்டுப்பாளையம் (111) - O.K. சின்னராஜ்
61. திருப்பூர் (வடக்கு) (113) - M.S.M. ஆனந்தன்
62. பல்லடம் (115) - பல்லடம் K.P. பரமசிவம்
63. சூலூர் (116) - V.P. கந்தசாமி
64. கவுண்டம்பாளையம் (117) - P.R.S. அருண்குமார்
65. கோயம்புத்தூர் தெற்கு (120) - அம்மன் K. அர்ச்சுணன்
66. சிங்காநல்லூர் (121) - K.R. ஜெயராம்
67. கிணத்துக்கடவு (122) - செ. தாமோதரன்
68. பொள்ளாச்சி (123) - V. பொள்ளாச்சி ஜெயராமன்
69. வால்பாறை (தனி) (124) - D. லட்சுமண சிங்
70. உடுமலைப்பேட்டை (125) - உடுமலை K. ராதாகிருஷ்ணன்
71. பழனி (127) - K. ரவி மனோகரன்
72. ஆத்தூர் (129) - A. விஸ்வநாதன்
73. நிலக்கோட்டை (தனி) (130) - S. தேன்மொழி
74. வேடசந்தூர் (133) - V.P.B. பரமசிவம்
75. அரவக்குறிச்சி (134) - K. செல்வக்குமார்
76. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) - S. திவ்யா
77. குளித்தலை (137) - S. கருணாகரன்
78. மணப்பாறை (138) - P.L. விஜயகுமார்
79. ஸ்ரீரங்கம் (139) - R. மனோகரன்
80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) - க. ராஜசேகரன்
81. திருவெறும்பூர் (142) - ப. குமார்
82. லால்குடி (143) -M. லீமா ரோஸ்
83. முசிறி (145) - N. யோகநாதன்
84. துறையூர் (தனி) (146) - இ. சுரோஜா
85. பெரம்பலூர் (தனி) (147) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86. நெய்வேலி (153) - சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87. பண்ருட்டி (154) - K. மோகன்
88. கடலூர் (155) - M.C. சம்பத்
89. குறிஞ்சிப்பாடி (156) - A. புவனேந்திரன்
90. புவனகிரி (157) - ஆ. அருண்மொழிதேவன்
91. சிதம்பரம் (158) - K.A. பாண்டியன்
92.சீர்காழி (தனி) (160) - ம. சக்தி
93. பூம்புகார் (162) - S. பவுன்ராஜ்
94. நாகப்பட்டினம் (163) - தங்க. கதிரவன்
95. திருத்துறைப்பூண்டி (தனி) (166) - உ. பாலதண்டாயுதம்
96. திருவிடைமருதூர் (தனி) (170) - இளமதி சுப்ரமணியன்
97. பாபநாசம் (172) - D. சண்முகபிரபு
98. ஒரத்தநாடு (175) - M. சேகர்
99. பட்டுக்கோட்டை (176) - C.V. சேகர்
100. பேராவூரணி (177) - கோவி. இளங்கோ
101. திருமயம் (181) - P.K. வைரமுத்து
102. சிவகங்கை (186) - P.R. செந்தில்நாதன்
103. மேலூர் (188) - P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104. மதுரை கிழக்கு (189) - மாங்குளம் K. மகேந்திரன்
105. சோழவந்தான் (தனி) (190) - கி. மாணிக்கம்
106. மதுரை வடக்கு (191) - P. சரவணன்
107. உசிலம்பட்டி (197) - I. மகேந்திரன்
108. ஆண்டிபட்டி (198) - A. லோகிராஜன்
109. போடிநாயக்கனூர் (200) - V.T. நாராயணசாமி
110. கம்பம் (201) - S.T.K. ஜக்கையன்
111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) - M. சந்திரபிரபா
112. விருதுநகர் (206) - V.G. கணேசன்
113. அருப்புக்கோட்டை (207) -S. சேதுபதி
114. பரமக்குடி (தனி) (209) - S. முத்தையா
115. திருவாடானை (210) - கீர்த்திகா முனியசாமி
116. முதுகுளத்தூர் (212) - மலேசியா S. பாண்டி
117. விளாத்திகுளம் (213) - R.சத்யா
118. தூத்துக்குடி (214) - சி.த. செல்லப்பாண்டியன்
119. ஸ்ரீவைகுண்டம் (216) - S.P. சண்முகநாதன்
120. சங்கரன்கோவில் (தனி) (219) - திலிபன் ஜெய்சங்கர்
121. கடையநல்லூர் (221) - C. கிருஷ்ணமுரளி
122. தென்காசி (222) - S. செல்வமோகன்தாஸ்
123. ஆலங்குளம் (223) - K.R.P. பிரபாகரன்
124. திருநெல்வேலி (224) - தச்சை N. கணேசராஜா
125. அம்பாசமுத்திரம் (225) - இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
126. பாளையங்கோட்டை (226) - S. சையது சுல்தான் சம்சுதீன்
127. கன்னியாகுமரி (229) - என். தளவாய்சுந்தரம்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 27, 2026
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் - பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க புகார்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:40 AM
சென்னை,
பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். இந்த மனுவை அளிக்கும் போது தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடனிருந்தார்.
டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து விஜய் அளித்த புகார் மனுவில்,
‘ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். இந்த மனுவை அளிக்கும் போது தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடனிருந்தார்.
டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து விஜய் அளித்த புகார் மனுவில்,
‘ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
பெண்கள் குறித்த பொன்ராஜ் கருத்துக்கு விஜய் கண்டனம் - திமுக மீதும் காட்டமான விமர்சனம்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:30 AM
சென்னை,
தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.
எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?
இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?
கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.
எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?
இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?
கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 01:55 AM
டெஹ்ரான்/ வாஷிங்டன்,
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், எல்பிஜி எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அங்கு காத்துக் கிடந்தன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கும்படி ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல, ஈரானின் நட்பு நாடுகளும் பேச்சு நடத்தின. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்ளது. மேற்கு ஆசியா போர்க்களமாக உள்ளது. இதனால், இங்கு எதிரி நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது’’ என்றார்.
‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானின் உச்ச தலைவராக என்னை நியமிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் வெகுவிரைவாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரான் விரும்புகிறது. ஆனால், ஈரான் பிரதிநிதிகளால் இதை வெளிப்படையாக கூற முடியவில்லை. ஈரான் ஆட்சியாளர்கள், ராணுவதளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். உயிர்பயம் காரணமாக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இதை பகிரங்கமாக அறிவித்தால் சொந்த நாட்டு மக்கள் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர். ஒருவேளை, ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
போரை நீண்ட காலம் நீட்டிக்க ட்ரம்ப் விரும்பவில்லை. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 5 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது.
ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.
ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெஹ்ரான்/ வாஷிங்டன்,
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், எல்பிஜி எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அங்கு காத்துக் கிடந்தன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கும்படி ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல, ஈரானின் நட்பு நாடுகளும் பேச்சு நடத்தின. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்ளது. மேற்கு ஆசியா போர்க்களமாக உள்ளது. இதனால், இங்கு எதிரி நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது’’ என்றார்.
‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானின் உச்ச தலைவராக என்னை நியமிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் வெகுவிரைவாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரான் விரும்புகிறது. ஆனால், ஈரான் பிரதிநிதிகளால் இதை வெளிப்படையாக கூற முடியவில்லை. ஈரான் ஆட்சியாளர்கள், ராணுவதளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். உயிர்பயம் காரணமாக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இதை பகிரங்கமாக அறிவித்தால் சொந்த நாட்டு மக்கள் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர். ஒருவேளை, ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
போரை நீண்ட காலம் நீட்டிக்க ட்ரம்ப் விரும்பவில்லை. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 5 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது.
ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.
ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 26, 2026
கடைசி வாய்ப்பு - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே இறுதி நாள்
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 26, 2026, பங்குனி 12, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.
பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.
பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, March 25, 2026
வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி
பதிவு: புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM
புதுடெல்லி,
ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும். அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை.
சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.
இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.
பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார்.
முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார். இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.
புதுடெல்லி,
ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும். அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை.
சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.
இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.
பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார்.
முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார். இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM சிவகாசி, “இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி த...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...






