பதிவு: புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM
புதுடெல்லி,
ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும். அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை.
சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.
இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.
பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார்.
முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார். இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.
Wednesday, March 25, 2026
வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி - அரிசி கார்டுக்கு இலவச பிரிட்ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு
பதிவு: புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதனைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பெற்றுக் கொண்டார். மொத்தமாக அதில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதிமுக.வின் முழு தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்தப்படும். மகளிரைப் போலவே, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அம்மா இல்லம் திட்டம் மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்குக் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் விலையில்லாமல் கட்டித் தரப்படும்.
மேலும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். வேலைக்குச் செல்லும் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். முதியோர், கணவனை இழந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கடனை அரசே ஏற்கும்.
நெல் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு உர மானியமாக ஆண்டுக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விவசாயப் பணியின் போது உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 450 யூனிட்டாகவும், விசைத்தறிக்கு 1,400 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.
மீன்பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
மத்திய வரி வசூலில் செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்க வலியுறுத்தப்படும். இதுபோன்று 297 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது,
‘‘கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஆதாரங்களைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றிச் செயல்படுத்தப்படும். அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும். அரசியல் சூழலுக்குத் தகுந்தவாறுதான் கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. அந்தந்தக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்பவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதனைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பெற்றுக் கொண்டார். மொத்தமாக அதில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதிமுக.வின் முழு தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்தப்படும். மகளிரைப் போலவே, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அம்மா இல்லம் திட்டம் மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்குக் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் விலையில்லாமல் கட்டித் தரப்படும்.
மேலும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். வேலைக்குச் செல்லும் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். முதியோர், கணவனை இழந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கடனை அரசே ஏற்கும்.
நெல் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு உர மானியமாக ஆண்டுக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விவசாயப் பணியின் போது உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 450 யூனிட்டாகவும், விசைத்தறிக்கு 1,400 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.
மீன்பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
மத்திய வரி வசூலில் செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்க வலியுறுத்தப்படும். இதுபோன்று 297 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது,
‘‘கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஆதாரங்களைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றிச் செயல்படுத்தப்படும். அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும். அரசியல் சூழலுக்குத் தகுந்தவாறுதான் கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. அந்தந்தக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்பவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, March 24, 2026
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு - மதுரை நீதிமன்றத்தில் மார்ச் 30-ல் தண்டனை விவரம் அறிவிப்பு
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026, பங்குனி 10, விசுவாவசு வருடம் 04:50 AM
மதுரை,
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஆனால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை - மகன் காவல் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது.
சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் நேற்று (மார்ச் 23) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன.
இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். போலீஸார் இரவு முழுவதும் இடைவெளி விட்டு தன்னை தாக்கியதாகவும், 200 முறைக்கு மேல் தனது பின்பகுதியில் தாக்கியதாகவும் உறவினர்களிடம் பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.
போலீஸ் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும்.
இவர்களது சம்பள விவரங்களை தூத்துக்குடி எஸ்.பி.யும், சொத்து விவரங்களை தூத்துக்குடி, நெல்லை, தேனி எஸ்.பி.க்களும், நன்னடத்தை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி முத்துக்குமரன் 265 பக்க தீர்ப்பை மாலை 4 மணிக்கு வாசிக்கத் தொடங்கி 5.30 மணிக்கு முடித்தார். முன்னதாக, 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களை சிறையில் அடைக்கவும், மார்ச் 30-ல் தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். தொடர்ந்து 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘உச்சபட்ச தண்டனை’
தீர்ப்பைக் கேட்பதற்காக, கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் வந்திருந்தனர். தீர்ப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் செல்வராணி மற்றும் அவரது மகள்கள் கூறியபோது, “இதுபோல வேறு எந்த குடும்பமும் பாதிக்கப்படக்க கூடாது. 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.
மதுரை,
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஆனால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை - மகன் காவல் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது.
சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் நேற்று (மார்ச் 23) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன.
இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். போலீஸார் இரவு முழுவதும் இடைவெளி விட்டு தன்னை தாக்கியதாகவும், 200 முறைக்கு மேல் தனது பின்பகுதியில் தாக்கியதாகவும் உறவினர்களிடம் பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.
போலீஸ் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும்.
இவர்களது சம்பள விவரங்களை தூத்துக்குடி எஸ்.பி.யும், சொத்து விவரங்களை தூத்துக்குடி, நெல்லை, தேனி எஸ்.பி.க்களும், நன்னடத்தை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி முத்துக்குமரன் 265 பக்க தீர்ப்பை மாலை 4 மணிக்கு வாசிக்கத் தொடங்கி 5.30 மணிக்கு முடித்தார். முன்னதாக, 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களை சிறையில் அடைக்கவும், மார்ச் 30-ல் தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். தொடர்ந்து 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘உச்சபட்ச தண்டனை’
தீர்ப்பைக் கேட்பதற்காக, கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் வந்திருந்தனர். தீர்ப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் செல்வராணி மற்றும் அவரது மகள்கள் கூறியபோது, “இதுபோல வேறு எந்த குடும்பமும் பாதிக்கப்படக்க கூடாது. 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, March 23, 2026
அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடங்களில் போட்டி - தொகுதிப் பங்கீடு விவரம்
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 05:20 AM
சென்னை,
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.
சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் அமித் ஷாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.
இதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் கூறியது என்ன?
செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அதிமுக நிச்சயமாக 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக தலைவர், அதன் கூட்டணி தலைவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் டெல்லி சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கை உள்ளது. நான் டெல்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி. இன்று இரவுக்குள் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஓதுக்கீடு செய்வது குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி இதில் தெளிவாக உள்ளது” என்றார்.
சென்னை,
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.
சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் அமித் ஷாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.
இதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் கூறியது என்ன?
செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அதிமுக நிச்சயமாக 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக தலைவர், அதன் கூட்டணி தலைவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் டெல்லி சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கை உள்ளது. நான் டெல்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி. இன்று இரவுக்குள் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஓதுக்கீடு செய்வது குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி இதில் தெளிவாக உள்ளது” என்றார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 04:00 AM
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு இடையே தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகக் களம் காண்பதால், அங்கு தேர்தல் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
01. லாஸ்பேட்டை - V.சாமிநாதன்
02. காரைக்கால் தெற்கு - K.A.U.அசனா
03. நெட்டப்பாக்கம் (தனி) - L.பெரியசாமி
04. திருபுவனை (தனி) - AK. சாய் J. சரவணன் குமார்
05. முத்தியால்பேட்டை - J.பிரகாஷ் குமார்
06. பாகூர் - N.தனவேலு
07. ராஜ் பவன் - V.J.சந்திரன்
08. உப்பளம் - S.சிவா
09. உழவர்கரை - S.சசிபாலன்
10. அரியாங்குப்பம் - S.குமரவேலு
11. மணவெளி - B.ராமு
12. வில்லியனூர் - R.ரமேஷ்
13. முதலியார்பேட்டை - N.மணிபாலன்
14. மண்ணாடிப்பட்டு - K.பாரதிதாசன்
15. உருளையன்பேட்டை - S.மரிய பிரான்சிஸ்
16. மங்கலம் - M.K.சத்யா
17. காமராஜ் நகர் - Dr.R.சுமன்
18. நெல்லித்தோப்பு - S.விக்னேஷ்வரன்
19. காலாப்பட்டு - D.சசிக்குமார்
20. இந்திரா நகர் - S.முருகன்
21. கதிர்காமம் - R.ஜெயந்தி
22. ஊசுடு (தனி) - S.சரகணபவா
23. தட்டாஞ்சாவடி - M.பன்னீர்செல்வம்
24. ஏம்பலம் (தனி) - V.தமிழ்ச்செல்வன்
25. நெடுங்காடு (தனி) - U.காமராஜ்
26. திருநள்ளாறு - A.ராஜா முஹம்மது
27. காரைக்கால் வடக்கு - A.வெங்கடேஷ்
28. நிரவி -T.R. பட்டினம் - G.கணேஷ்
29. மாகே - M.பிரிஜேஷ்
30. ஏனாம் - A.தோட்டா ராஜூ
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு இடையே தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகக் களம் காண்பதால், அங்கு தேர்தல் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
01. லாஸ்பேட்டை - V.சாமிநாதன்
02. காரைக்கால் தெற்கு - K.A.U.அசனா
03. நெட்டப்பாக்கம் (தனி) - L.பெரியசாமி
04. திருபுவனை (தனி) - AK. சாய் J. சரவணன் குமார்
05. முத்தியால்பேட்டை - J.பிரகாஷ் குமார்
06. பாகூர் - N.தனவேலு
07. ராஜ் பவன் - V.J.சந்திரன்
08. உப்பளம் - S.சிவா
09. உழவர்கரை - S.சசிபாலன்
10. அரியாங்குப்பம் - S.குமரவேலு
11. மணவெளி - B.ராமு
12. வில்லியனூர் - R.ரமேஷ்
13. முதலியார்பேட்டை - N.மணிபாலன்
14. மண்ணாடிப்பட்டு - K.பாரதிதாசன்
15. உருளையன்பேட்டை - S.மரிய பிரான்சிஸ்
16. மங்கலம் - M.K.சத்யா
17. காமராஜ் நகர் - Dr.R.சுமன்
18. நெல்லித்தோப்பு - S.விக்னேஷ்வரன்
19. காலாப்பட்டு - D.சசிக்குமார்
20. இந்திரா நகர் - S.முருகன்
21. கதிர்காமம் - R.ஜெயந்தி
22. ஊசுடு (தனி) - S.சரகணபவா
23. தட்டாஞ்சாவடி - M.பன்னீர்செல்வம்
24. ஏம்பலம் (தனி) - V.தமிழ்ச்செல்வன்
25. நெடுங்காடு (தனி) - U.காமராஜ்
26. திருநள்ளாறு - A.ராஜா முஹம்மது
27. காரைக்கால் வடக்கு - A.வெங்கடேஷ்
28. நிரவி -T.R. பட்டினம் - G.கணேஷ்
29. மாகே - M.பிரிஜேஷ்
30. ஏனாம் - A.தோட்டா ராஜூ
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எரிபொருள், உரம் விநியோகம் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:30 AM
புதுடெல்லி,
மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.
கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.
கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
8,931 நாட்கள் - புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:20 AM
புதுடெல்லி,
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
நேற்றுடன் (மார்ச் 22) தனது பதவிக்காலத்தில் 8,931 நாட்களை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வசம் இருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.
அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் மோடியின் வாழ்க்கை, தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட மாறாத அர்ப்பணிப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து பெற்றுள்ளார். இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் (மொத்தம் 6130 நாட்கள்) என்ற சாதனையை முறியடிக்க அவர் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து 'அரசுத் தலைவராக' அதிக நாட்கள் பணியாற்றிய இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
நேற்றுடன் (மார்ச் 22) தனது பதவிக்காலத்தில் 8,931 நாட்களை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வசம் இருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.
அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் மோடியின் வாழ்க்கை, தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட மாறாத அர்ப்பணிப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து பெற்றுள்ளார். இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் (மொத்தம் 6130 நாட்கள்) என்ற சாதனையை முறியடிக்க அவர் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து 'அரசுத் தலைவராக' அதிக நாட்கள் பணியாற்றிய இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
கடைசி வாய்ப்பு - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே இறுதி நாள்
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 26, 2026, பங்குனி 12, விசுவாவசு வருடம் 06:00 AM சென்னை, தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் ...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...






