Saturday, March 28, 2026

அதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு - 2-ம் கட்ட முழு பட்டியல்

பதிவு:  சனிக்கிழமை,  மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:

1. கும்மிடிபூண்டி (1) - V. சுதாகர்

2. பொன்னேரி (தனி) (2) - சிறுணியம் P. பலராமன்

3. திருத்தணி (3) - திருத்தணி கோ. அரி

4. திருவள்ளூர் (4) - B.V. ரமணா

5. மாதவரம் (9) - மாதவரம் V. மூர்த்தி

6. திருவொற்றியூர் (10) - K. குப்பன்

7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) - K. பழனி

8. தாம்பரம் (31) - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்

9. செங்கல்பட்டு (32) - M. கஜா (எ) கஜேந்திரன்

10. செய்யூர் (தனி) (34) - E. ராஜசேகர்

11. மதுராந்தகம் (தனி) (35) - மரகதம் குமரவேல்

12. காஞ்சிபுரம் (37) - V. சோமசுந்தரம்

13. அரக்கோணம் (தனி) (38) - சு. ரவி

14. காட்பாடி (40) - V. ராமு

15. ஆற்காடு (42) - S.M சுகுமார்

16. வேலூர் (43) - S.R.K அப்பு

17. அணைக்கட்டு (44) - த. வேலழகன்

18. குடியாத்தம் (தனி) (46) - G. பரிதா புருஷோத்தமன்

19. வாணியம்பாடி (47) - G. செந்தில்குமார்

20. ஆம்பூர் (48) - R. வெங்கடேசன்

21. ஊத்தங்கரை (தனி) (51) - T.M. தமிழ்செல்வம்

22. பர்கூர் (52) - E.C. கோவிந்தராசன்

23. கிருஷ்ணகிரி (53) - K. அசோக்குமார்

24. ஓசூர் (55) - P. பாலகிருஷ்ண ரெட்டி

25. பாப்பிரெட்டிபட்டி (60) - மரகதம் வெற்றிவேல்

26. அரூர் (தனி) (61) - V. சம்பத்குமார்

27. செங்கம் (தனி) (62) - T.S. வேலு

28. கீழ்பென்னாத்தூர் (64) - எஸ். இராமச்சந்திரன்

29. ஆரணி (67) - L. ஜெயசுதா

30. செய்யார் (68) - முக்கூர் N. சுப்பிரமணியன்

31. வந்தவாசி (தனி) (69) - P. ராணி

32. திண்டிவனம் (தனி) (72) - P. அர்ஜூனன்

33. வானூர் (தனி) (73) - P. முருகன்

34. விழுப்புரம் (74) - K. விஜயா

35. திருக்கோயிலூர் (76) - S. பழனிசாமி

36. உளுந்தூர்பேட்டை (77) - இரா. குமரகுரு

37. சங்கராபுரம் (79) - R. ராகேஷ்

38. கள்ளக்குறிச்சி (தனி) (80) - ராஜீவ்காந்தி

39. கங்கவல்லி (தனி) (81) - A. நல்லதம்பி

40. ஆத்தூர் (தனி) (82) - A.P. ஜெயசங்கரன்

41. ஏற்காடு (எஸ்டி) (83) - P. உஷாராணி

42. ஓமலூர் (84) - R. மணி

43. மேட்டூர் (85) - G. வெங்கடாஜலம்

44. சங்ககிரி (87) - S. வெற்றிவேல்

45. சேலம் (தெற்கு) (90) - J. வினோத்

46. வீரபாண்டி (91) - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்

47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) - C. சந்திரசேகரன்

48. நாமக்கல் (94) - ஸ்ரீதேவி P.S. மோகன்

49. பரமத்தி வேலூர் (95) - S.சேகர்

50. திருச்செங்கோடு (96) - R. சந்திரசேகர்

51. ஈரோடு (கிழக்கு) (98) - R. மனோகரன்

52. தாராபுரம் (தனி) (101) - P. சத்தியபாமா

53. காங்கயம் (102) - N.S.N. நடராஜ்

54. பெருந்துறை (103) - J.K (எ) S. ஜெயக்குமார்

55. அந்தியூர் (105) - P. ஹரிபாஸ்கர்

56. கோபிச்செட்டிப்பாளையம் (106) - V.B. பிரபு

57. பவானிசாகர் (தனி) (107) - A. பண்ணாரி

58. கூடலூர் (தனி) (109) - பொன். ஜெயசீலன்

59. குன்னூர் (110) -A. ராமு

60. மேட்டுப்பாளையம் (111) - O.K. சின்னராஜ்

61. திருப்பூர் (வடக்கு) (113) - M.S.M. ஆனந்தன்

62. பல்லடம் (115) - பல்லடம் K.P. பரமசிவம்

63. சூலூர் (116) - V.P. கந்தசாமி

64. கவுண்டம்பாளையம் (117) - P.R.S. அருண்குமார்

65. கோயம்புத்தூர் தெற்கு (120) - அம்மன் K. அர்ச்சுணன்

66. சிங்காநல்லூர் (121) - K.R. ஜெயராம்

67. கிணத்துக்கடவு (122) - செ. தாமோதரன்

68. பொள்ளாச்சி (123) - V. பொள்ளாச்சி ஜெயராமன்

69. வால்பாறை (தனி) (124) - D. லட்சுமண சிங்

70. உடுமலைப்பேட்டை (125) - உடுமலை K. ராதாகிருஷ்ணன்

71. பழனி (127) - K. ரவி மனோகரன்

72. ஆத்தூர் (129) - A. விஸ்வநாதன்

73. நிலக்கோட்டை (தனி) (130) - S. தேன்மொழி

74. வேடசந்தூர் (133) - V.P.B. பரமசிவம்

75. அரவக்குறிச்சி (134) - K. செல்வக்குமார்

76. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) - S. திவ்யா

77. குளித்தலை (137) - S. கருணாகரன்

78. மணப்பாறை (138) - P.L. விஜயகுமார்

79. ஸ்ரீரங்கம் (139) - R. மனோகரன்

80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) - க. ராஜசேகரன்

81. திருவெறும்பூர் (142) - ப. குமார்

82. லால்குடி (143) -M. லீமா ரோஸ்

83. முசிறி (145) - N. யோகநாதன்

84. துறையூர் (தனி) (146) - இ. சுரோஜா

85. பெரம்பலூர் (தனி) (147) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்

86. நெய்வேலி (153) - சொரத்தூர் இரா. ராஜேந்திரன்

87. பண்ருட்டி (154) - K. மோகன்

88. கடலூர் (155) - M.C. சம்பத்

89. குறிஞ்சிப்பாடி (156) - A. புவனேந்திரன்

90. புவனகிரி (157) - ஆ. அருண்மொழிதேவன்

91. சிதம்பரம் (158) - K.A. பாண்டியன்

92.சீர்காழி (தனி) (160) - ம. சக்தி

93. பூம்புகார் (162) - S. பவுன்ராஜ்

94. நாகப்பட்டினம் (163) - தங்க. கதிரவன்

95. திருத்துறைப்பூண்டி (தனி) (166) - உ. பாலதண்டாயுதம்

96. திருவிடைமருதூர் (தனி) (170) - இளமதி சுப்ரமணியன்

97. பாபநாசம் (172) - D. சண்முகபிரபு

98. ஒரத்தநாடு (175) - M. சேகர்

99. பட்டுக்கோட்டை (176) - C.V. சேகர்

100. பேராவூரணி (177) - கோவி. இளங்கோ

101. திருமயம் (181) - P.K. வைரமுத்து

102. சிவகங்கை (186) - P.R. செந்தில்நாதன்

103. மேலூர் (188) - P. பெரியபுள்ளான் (எ) செல்வம்

104. மதுரை கிழக்கு (189) - மாங்குளம் K. மகேந்திரன்

105. சோழவந்தான் (தனி) (190) - கி. மாணிக்கம்

106. மதுரை வடக்கு (191) - P. சரவணன்

107. உசிலம்பட்டி (197) - I. மகேந்திரன்

108. ஆண்டிபட்டி (198) - A. லோகிராஜன்

109. போடிநாயக்கனூர் (200) - V.T. நாராயணசாமி

110. கம்பம் (201) - S.T.K. ஜக்கையன்

111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) - M. சந்திரபிரபா

112. விருதுநகர் (206) - V.G. கணேசன்

113. அருப்புக்கோட்டை (207) -S. சேதுபதி

114. பரமக்குடி (தனி) (209) - S. முத்தையா

115. திருவாடானை (210) - கீர்த்திகா முனியசாமி

116. முதுகுளத்தூர் (212) - மலேசியா S. பாண்டி

117. விளாத்திகுளம் (213) - R.சத்யா

118. தூத்துக்குடி (214) - சி.த. செல்லப்பாண்டியன்

119. ஸ்ரீவைகுண்டம் (216) - S.P. சண்முகநாதன்

120. சங்கரன்கோவில் (தனி) (219) - திலிபன் ஜெய்சங்கர்

121. கடையநல்லூர் (221) - C. கிருஷ்ணமுரளி

122. தென்காசி (222) - S. செல்வமோகன்தாஸ்

123. ஆலங்குளம் (223) - K.R.P. பிரபாகரன்

124. திருநெல்வேலி (224) - தச்சை N. கணேசராஜா

125. அம்பாசமுத்திரம் (225) - இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா

126. பாளையங்கோட்டை (226) - S. சையது சுல்தான் சம்சுதீன்

127. கன்னியாகுமரி (229) - என். தளவாய்சுந்தரம்

Friday, March 27, 2026

டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் - பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க புகார்

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:40 AM

சென்னை,

பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். இந்த மனுவை அளிக்கும் போது தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடனிருந்தார்.

டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து விஜய் அளித்த புகார் மனுவில், 

‘ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் குறித்த பொன்ராஜ் கருத்துக்கு விஜய் கண்டனம் - திமுக மீதும் காட்டமான விமர்சனம்

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:30 AM

சென்னை,

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.

திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.

எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?

இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?

கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 01:55 AM

டெஹ்ரான்/ வாஷிங்டன்,

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்​பிஜி எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.

இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது’’ என்​றார்​.

‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்​பில் நேற்று முன்​தினம் நடந்த நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: அமெரிக்​கா - ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​கிறது. ஈரானின் உச்ச தலை​வ​ராக என்னை நியமிக்க அவர்​கள் விரும்​பு​கின்​றனர். ஆனால் நான் மறுத்​து​விட்​டேன். அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் ஈரான் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

அமெரிக்கா​வுடன் வெகு​விரை​வாக அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த ஈரான் விரும்​பு​கிறது. ஆனால், ஈரான் பிர​தி​நி​தி​களால் இதை வெளிப்​படை​யாக கூற முடிய​வில்​லை. ஈரான் ஆட்​சி​யாளர்​கள், ராணுவதளப​தி​கள் அடுத்​தடுத்து கொல்லப்​பட்டு வரு​கின்​றனர். உயிர்பயம் காரண​மாக ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிர​தி​நி​திகள் ஆர்​வம் காட்​டு​கின்​றனர்.

ஆனால் இதை பகிரங்​க​மாக அறி​வித்தால் சொந்த நாட்டு மக்​கள் அடித்துக் கொன்​று​விடு​வார்​கள் என்று அஞ்​சுகின்​றனர். ஒரு​வேளை, ஒப்பந்​தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரக​மாக மாறும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார்.

போரை நீண்ட காலம் நீட்​டிக்க ட்ரம்ப் விரும்​ப​வில்​லை. அடுத்த சில வாரங்​களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, 5 நாட்​கள் போர் நிறுத்​தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்​தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது.

ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.

ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thursday, March 26, 2026

கடைசி வாய்ப்பு - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே இறுதி நாள்

பதிவு:  வியாழக்கிழமை, மார்ச் 26, 2026, பங்குனி 12, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.

பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Wednesday, March 25, 2026

வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM

புதுடெல்லி,

ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும். அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை.

சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.

இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது. 

மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.

பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார்.

முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார். இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி - அரிசி கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக் கொண்​டார். மொத்​த​மாக அதில் 297 அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றிருக்​கின்​றன. அதி​முக.வின் முழு தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

வரிச் சுமை மற்​றும் விலை​வாசி ஏற்​றத்​தைச் சமாளிக்க ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்​கப்​படும். குல விளக்கு திட்​டத்​தின் கீழ் அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் குடும்​பத் தலை​வி​யின் வங்​கிக் கணக்​கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்​தப்​படும். மகளிரைப் போல​வே, ஆண்களுக்​கும் நகரப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

அம்மா இல்​லம் திட்​டம் மூல​மாக வீடு இல்​லாத ஏழைகளுக்​குக் கிராமங்​களில் கான்​கிரீட் வீடு​களும், நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி வீடு​களும் விலை​யில்​லாமல் கட்​டித் தரப்​படும்.

மேலும், 100 நாட்​கள் வேலை​வாய்ப்​புத் திட்​டம் 150 நாட்​களாக உயர்த்​தப்​படும். வேலைக்​குச் செல்​லும் 5 லட்​சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானி​யத்​துடன் இரு சக்கர வாக​னங்​கள் வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர்​கள் விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். முதி​யோர், கணவனை இழந்​தவர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரமாக உயர்த்​தப்​படும், வங்​கி​களில் கல்விக் கடன் பெற்​றுத் திருப்​பிச் செலுத்த முடி​யாமல் உள்​ளவர்​களின் கடனை அரசே ஏற்​கும்.

நெல் ஆதார விலை குவிண்​டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்​தப்​படும். சிறு, குறு விவ​சா​யிகளுக்கு உர மானிய​மாக ஆண்​டுக்கு எக்​டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கப்​படும். விவ​சாயப் பணி​யின் போது உயி​ரிழக்​கும் விவ​சா​யிகளின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும்.

வேலைக்​காகக் காத்​திருக்​கும் பட்​ட​தாரி இளைஞர்​களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்​றும் பிளஸ் 2 முடித்​தவர்​களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்​கப்​படும். கைத்​தறி நெச​வாளர்​களுக்கு விலை​யில்லா மின்​சா​ரம் 450 யூனிட்​டாக​வும், விசைத்​தறிக்கு 1,400 யூனிட்டாக​வும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். பொங்​கல் தொகுப்​புடன் ரூ.1,000 ரொக்​கம் வழங்​கப்​படும். அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு குளிர்​சாதனப் பெட்டி (பிரிட்​ஜ்) விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் உயி​ரிழக்​கும் வீரர்​களின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும். கல்வி மற்​றும் மருத்து​வம் ஆகிய துறை​களைப் பொதுப் பட்​டியலில் இருந்து மாநிலப் பட்​டியலுக்கு மாற்ற வலி​யுறுத்​தப்​படும்.

மத்​திய வரி வசூலில் செஸ் மற்​றும் கூடு​தல் வரி ஆகிய​வற்​றைப் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி​யில் சேர்க்க வலி​யுறுத்​தப்​படும். இது​போன்று 297 வாக்​குறு​தி​கள் அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்​ளன.

தேர்​தல் அறிக்கை வெளி​யிட்ட பின், செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறும்போது, 

‘‘கூட்​ட​ணி​யில் உள்ள சிறிய கட்​சிகளுக்​கான தொகு​திப் பங்​கீடு விரை​வில் இறுதி செய்​யப்​படும். மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தவுடன் நிதி ஆதா​ரங்​களைப் பெருக்​கி, மக்​கள் நலத்​திட்​டங்​கள் தொய்​வின்​றிச் செயல்​படுத்​தப்​படும். அதி​முக மீண்​டும் ஆட்​சிப் பொறுப்​பேற்​றதும் தமிழகத்​தில் மதுக்​கடைகள் படிப்​படி​யாகக் குறைக்​கப்​படும். அரசி​யல் சூழலுக்​குத் தகுந்​த​வாறு​தான் கூட்​ட​ணி​கள் அமைக்​கப்​படு​கின்​றன. அந்​தந்​தக் கட்​சிகளின் பலத்​துக்​கு ஏற்​பவே தொகு​தி​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன” என்று தெரிவித்​தார்​.

Featured post

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 A M நாகர்கோவில், “எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ...