Sunday, April 12, 2026

‘ஜன​நாயகன்’ பட விவகாரம் - மத்திய தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) பரபரப்பு விளக்கம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 12, 2026, பங்குனி 29, விசுவாவசு வருடம் 00:10 AM

சென்னை,

ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. 

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. 

விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது; 

“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை  சிபிஎப்சி பின்பற்றுகிறது. 

படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது. 

ஜன நாயகன்  திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ்  மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல்  பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 11, 2026

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி - டிஜிபியிடம் புகார்

 
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 05:20 AM

சென்னை,

​திரைப்​படத் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் நிலை​யில், விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழு திரைப்​பட​மும் நேற்று இணை​யத்​தில் வெளி​யாகி வைரலான​தால் விஜய் உள்​ளிட்ட படக் குழு​வினர் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்​கக் கோரி டிஜிபி​யிடம் புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

தவெக தலை​வர் விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ‘ஜன​நாயகன்’. ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். 

ரூ.500 கோடி பட்​ஜெட்​டில் பிரம்​மாண்​ட​மாக தயாரிக்​கப்​பட்ட படம் என்​ப​தா​லும், தமிழகம், புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்​முறை​யாக களமிறங்​கி​யுள்ள விஜய்​யின் கடைசி திரைப்​படம் என்று அறிவிக்​கப்​பட்​ட​தா​லும், ரசிகர்​கள் மத்​தி​யில் இத்​திரைப்​படம் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யது.

கடந்த ஜனவரி மாதம் பொங்​கல் பண்​டிகைக்கு இப்​படம் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், தணிக்​கைப் பிரச்​சினை காரண​மாக இது​வரை வெளி​யாக​வில்​லை. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, படத்தை மறு​தணிக்​கைக் குழு கடந்த மாதம் பார்த்​தது. படத்​துக்கு விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த சூழலில், ‘ஜன​நாயகன்’ படத்​தில் இடம்​பெற்​றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணை​யத்​தில் கடந்த 9-ம் தேதி வெளி​யானது. பல்​வேறு வலை​தளங்​களி​லும் இது வேக​மாக பகிரப்​பட்​டது. இதனால், படத் தயாரிப்பு நிறு​வன​மும், படக் குழு​வினரும் அதிர்ச்​சி​யடைந்​தனர். 

இந்த நிலை​யில், ‘ஜன​நாயகன்’ முழு திரைப்​பட​மும் நேற்று அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாக மர்ம நபர்​களால் வெளி​யிடப்​பட்​டது. இணை​யம் மற்​றும் வலை​தளங்​களில் இது​வும் வேக​மாக பகிரப்​பட்​டது. திரைப்படத் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் சூழலில், முழு படமும் இணை​யத்​தில் வெளி​யானது விஜய் உள்ளிட்ட படக் குழு​வினருக்கு பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செய​லா​ளர் விஷால், நடிகர்​கள் ரஜினிகாந்த், சூர்​யா, சிரஞ்​சீ​வி, சிவ​கார்த்​தி​கேயன், விஜய் ஆண்​டனி, ஜீவா, ஜி.​வி.பிர​காஷ் குமார், தயாரிப்​பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரை​யுல​கினர் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

திரைப்​படத்தை இணை​யத்​தில் கசி​ய​விட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர் சங்க முன்​னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்​ளார்.

சட்டப்படி நடவடிக்கை

இதற்​கிடையே, ‘ஜன​நாயகன்’ திரைப்​படக் காட்​சிகளை பகிர்ந்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தயாரிப்​பாளர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது

‘ஜன​நாயகன்’ படத்​தின் கசிந்த காட்​சிகள் அல்​லது காணொளியை வாட்​ஸ்​அப், டெலிகி​ராம், இன்​ஸ்​டாகி​ராம், முகநூல், எக்​ஸ், யூ-டியூப், இணை​யதளங்​கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழி​யாக​வும் பதி​விறக்கம் செய்​வது, அனுப்​புவது, பகிர்​வது, பதிவேற்​றம் செய்​வது, மீண்​டும் பதி​விடு​வது, சேமிப்​பது, பரப்புவதுகடுமை​யான குற்​றச்​செயல் மற்​றும் பதிப்​புரிமை மீறல் ஆகும். இதில் சம்​பந்​தப்​பட்டவர்கள் மீது குற்​ற​வியல் நடவடிக்​கை எடுக்கப்படும்.

‘ஜன​நாயகன்’ படத்​தின் காட்​சிகளை சட்​ட​விரோத​மாகப் பதி​விறக்​கம்செய்து அனுப்​பிய நபருக்கு எதி​ராக எனது கட்​சிக்​காரர் ஏற்​கெனவே உரியசட்ட நடவடிக்​கை​ தொடங்கி​உள்​ளார். 

மேலும், இத்​தகைய சட்ட ​விரோத செயல்களில் ஈடு​பட்ட அனைத்து நபர்​களுக்​கும் எதி​ராக மேல​திக நடவடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்பட்டு வரு​கின்​றன. இது​போன்ற செயல்​களில் ஈடு​படும் எவரும், அதன் விளைவு​களுக்கு, உடனடி உரிமையியல் மற்​றும் குற்​ற​வியல்​ நடவடிக்​கைகளை எதிர்​கொள்ள நேரிடும்​. 

இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம் - அபின் தினேஷ் மோடக் பொறுப்பேற்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 04:40 AM

சென்னை,

சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகை​யில் ஏற்​கெனவே, விருதுநகர், நாமக்​கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.​பி.க்​கள் மாற்​றப்​பட்​டனர். கடந்த 2-ம் தேதி தலை​மைச் செயல​ராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்​டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்​கடராமன் மாற்றப்​பட்டு சந்​தீப் ராய் ரத்​தோரும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர். 

இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Friday, April 10, 2026

இறுதி வேட்​பாளர்​கள் பட்டியல் வெளி​யீடு - சட்டப்பேரவை தேர்​தல் களத்தில் 4500 வேட்பாளர்​கள்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 07:30 AM

சென்னை,

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் இறுதி வேட்​பாளர்களின் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் உள்ள 234 தொகு​தி​களில் சுமார் 4,500 வேட்​பாளர்​கள் போட்டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. மார்ச் 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி நிறைவடைந்​தது. 234 தொகு​தி​களி​லும் மொத்​தம் 7,599 வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. 7-ம் தேதி வேட்​புமனுக்​கள் பரிசீலனை நடை​பெற்​றது. இதில் 5,139 மனுக்​கள் ஏற்​கப்​பட்​டன.

முறை​யாக பூர்த்தி செய்​யப்​ப​டாத 2 460 மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. மனுக்​களை திரும்​பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்​கப்பட்​டது. இதில் 500-க்​கும் மேற்பட்ட வேட்​புமனுக்​கள் திரும்​பப் பெறப்​பட்​டன.

இதையடுத்​து, நேற்று மாலை இறுதி வேட்​பாளர்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. 234 தொகு​தி​களி​லும் 4,500-க்​கும் மேற்​பட்ட வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது. இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்​பாளர்​களுக்​கான சின்​னங்​கள் ஒதுக்​கப்​பட்​டன.

அந்​தந்த தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் உறு​தி​யாகி​யுள்ள நிலை​யில், அத்​தொகு​தி​களுக்​கான தபால் வாக்​குச்​சீட்​டு​களை அச்​சிடும் பணி​கள் இன்று தொடங்​கு​கின்​றன. அடுத்த சில தினங்​களில் தேர்​தல் அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்கு அடுத்​தகட்ட பயிற்சி வழங்​கப்பட உள்​ளது. அப்​போது அவர்​களிடம் தபால் வாக்​குச் சீட்​டு​கள் வழங்​கப்பட உள்​ளன.

அதனைத் தொடர்ந்​து, வேட்​பாளர்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​ற​வாறு, தேவை​யான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் கணக்​கிடப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் ஒவ்​வொன்​றி​லும் 16 வேட்​பாளர்​களின் பெயர் மற்​றும் சின்​னங்​கள் இடம்​பெறும். வேட்​பாளர்​களின் எண்​ணிக்கை அதற்கு மேல் இருந்​தால் கூடு​தலாக ஒரு வாக்​குப்​ப​திவு இயந்​திரம் இணைக்​கப்​படும். அதி​கபட்​ச​மாக 4 அலகு​களை சேர்க்க முடி​யும். அவற்​றில் 63 வேட்​பாளர்​கள் மற்​றும் ஒரு நோட்டா பொத்​தான் இடம்​பெறும்.

ஏற்​கெனவே, தொகுதி வாரி​யாக வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பிரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் வேட்​பாளர்​களின் பெயர்​கள் மற்​றும் சின்​னங்​களை பொருத்​தும் பணி​கள் ஓரிரு தினங்​களில் தொடங்க உள்​ளன. அதற்​கான பெயர், சின்னங்​களை அச்​சிடும் பணி​களும் இன்று தொடங்​கு​கின்​றன.

இந்த தேர்​தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்​றாம் பாலினத்​தினர் என மொத்​தம் 5,73,43,291 பேர் வாக்​களிக்க உள்​ளனர். இவர்​களுக்கு வீடு வீடாக சென்று வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூல​மாக வாக்​காளர் சீட்டு விநி​யோகம் செய்​யும் பணி இன்று தொடங்​கு​கிறது. 17-ம் தேதிக்​குள் இப்​பணி​களை முடிக்க வேண்​டும் என மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்கு தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இத்​தேர்​தலில் சுமார் 75 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் தயார்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதில் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான மற்​றும் மிக​வும் பதற்​ற​மானவை​யாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 23 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட துணை ராணுவப்​படை​யினர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யான நிலை​யில், தமிழகம் முழு​வதும் நியமிக்​கப்​பட்​டுள்ள 151 செல​வின பார்​வை​யாளர்​களும், வேட்​பாளர்​களின் பிரச்​சார செல​வினங்​களை வீடியோ​வில் பதிவு செய்​து, செல​வினத்தை மதிப்​பிட்டு வரு​கின்​றனர். அவற்​றை, வேட்​பாளர்​களின் செலவு கணக்​கில் சேர்க்​கும் பணி​களை இன்​று​முதல் தீவிரப்​படுத்த இருப்​ப​தாக தகவல் வெளி​யாகியுள்ளது.

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு - வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 06:30 AM

புதுச்சேரி -புதுடெல்லி,

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் - திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.

இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

மே 4-ல் வாக்கு எண்​ணிக்கை

தமிழகத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி​யும், மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23, 29 என 2 கட்​ட​மாக​வும் சட்​டப் ​பேரவைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு​ எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

எஸ்​ஐஆர் காரண​மாக அதி​கரிப்பு

நாடு முழு​வதும் 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்​டது. கேரளா​வில் 2.78 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். எஸ்​ஐஆர் பணி​யின்​போது போலி வாக்​காளர்கள், இரட்​டைப் பதிவு, உயி​ரிழந்​தவர்​கள் என 9.06 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்​ர​வரி​யில் வெளி​யிடப்​பட்ட இறுதி வாக்​காளர் பட்​டியலில் 2.69 கோடி வாக்​காளர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். இந்நிலை​யில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகியுள்ளன.

அதே​போல, புதுச்​சேரி​யில் எஸ்​ஐஆர் திருத்​தத்​தின்போது 1.03 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டு, வாக்​காளர் பட்​டியலில் 9.50 லட்சம் வாக்​காளர்​கள் இடம் பெற்​றிருந்​தனர். முதல்​முறை வாக்காளர்​கள் 24,919 பேர் இருந்​தனர். கேரளா, புதுச்​சேரி​யில் எஸ்ஐஆர் காரண​மாகவே வாக்கு சதவீதம் அதி​கரித்​துள்​ள​து.

அசாமில் தேசிய குடிமக்​கள் பதிவேடு ஏற்​கெனவே சரிபார்க்கப்பட்​ட​தால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்​லை. பதிவேடு கணக்​கெடுப்​பின்​போதே போலி வாக்​காளர்​கள்​ நீக்​கப்​பட்​ட​தால்​ அங்​கு தற்போது வாக்குப்பதிவு அதி​கரித்​துள்​ள​து.

Thursday, April 9, 2026

“உண்மையான காங்கிரஸார் தவெகவில் உள்ளனர்” - திருநெல்வேலியில் தவெக தலை​வர் விஜய்​ பேச்சு

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 03:30 AM

திருநெல்வேலி,

“பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் உள்ளனர்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது:

“திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால், இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது.

திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள். திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என் மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.

அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார்.

கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டர்கள் போலிருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கடும் ஆத்திரம். அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம்.

சில பல கோடிகளை கொடுத்து தனது பையில் காங்கிரஸை திமுக போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.

நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதற்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்‌ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும், எனக்கும் கண் கலங்கும்.

கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால், ஜனநாயகன் படத்தை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரயும். அதுவும் எடுபடவில்லை.

நான் வெளியே வரக் கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.                              
எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக, பாஜவினரால் என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டியிலும் விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் விஜய்தான் நிற்கிறேன். வேட்பாளர்தான் விஜய், விஜய்தான் வேட்பாளர். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கெல்லாம் ஓட்டு போட்டீர்கள். இந்த முறை உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது நமக்கு நாமே ஓட்டு போடுவது மாதிரி. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நீங்கள் வெற்றிபெற்றது போன்றதாகும்.

இந்த தேர்தல் 50 ஆண்டு நடக்கும் அதிசய தேர்தல். உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., அழகுமுத்துகோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும்.

தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே வேறு யாருக்கும் ஓட்டு போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள்.

மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்குமுன் ஆண்டவர்களும் இதை சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்பு கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?

இரண்டரை வயது குழந்தையை திமுகவை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக் கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பீர்கள்?

உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது.

வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துளளேன். தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும்” என்று விஜய் பேசினார். ‘நான் தன்னந்தனி ஆளு’ என்ற கட்சியின் தேர்தல் பரப்புரை பாடலை பாடி முடித்தார் விஜய்.

“தலைமைச் செயலர் மாற்றம் அத்துமீறிய அரசியல் நடவடிக்கை” - தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 01:30 AM

சென்னை,

தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜகவுக்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம். நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனித்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ‘தலைமைச் செயலாளர்’, ‘டிஜிபி’ ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பா.ஜ.க. அடங்கிய என்டிஏ கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Featured post

ராகுல்காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 14, 2026, சித்திரை, பாரபவ வருடம் 01:40 AM சென்னை, தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல...