Thursday, January 15, 2026

சபரிமலையில் தோன்றிய மகர ஜோதி... லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்

பதிவு:  வியாழக்கிழமை,  ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 04:30 AM

சபரிமலை,

தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

சபரிமலை​யில் ஐயப்​பனுக்கு திரு​வாபரணங்​கள் அணிவிக்​கப்​பட்டு மகர விளக்கு வழி​பாடு கோலாகல​மாக நடை​பெற்​றது. பொன்​னம்​பலமேட்​டில் திரண்​டிருந்த திரளான பக்​தர்​கள் மகரஜோ​தியை வழிபட்​டனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லின் முக்​கிய நிகழ்ச்​சி​யாக மகரஜோதி தரிசனம் திகழ்​கிறது. மகரஜோ​தியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும், மாலை அணிந்​து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்​தர்​கள், பொன்​னம்​பலமேட்​டில் மகரஜோ​தி​யைக் காண நேற்று காலை முதலே திரண்​டிருந்​தனர்.

முன்​ன​தாக, மகரஜோ​தியை முன்​னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்​பரிய ஆபரணங்​கள் பந்​தளத்​தில் இருந்து புறப்​பட்டு நேற்று மாலை சந்​நி​தானத்தை வந்​தடைந்​தது. 

திரு ஆபரணப்​பெட்டி ஊர்​வல​மாகக் கொண்டு செல்​லப்​பட்​ட​தால் காலை 10 மணி முதல் பக்​தர்​கள் நிலக்​கல்​லில் இருந்து பம்​பைக்​குச் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. அதே​போல, காலை 11 மணி முதல் பக்​தர்​கள் பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. ஊர்​வலம் சென்ற பிறகே பக்​தர்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

சந்​நி​தானம் வந்த திரு ஆபரணங்​களை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் வரவேற்​றனர். தொடர்ந்​து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்​பெட்டி கொண்டு செல்​லப்​பட்டு நேற்று மாலை ஐயப்​பனுக்கு ஆபரணங்​கள் அணிவிக்​கப்​பட்​டன. 

மகரஜோதி வழி​பாட்​டுக்கு முன்​னோடி​யாக நேற்று மாலை மகர சங்​கிரம பூஜை நடை​பெற்​றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபா​ராதனை உள்​ளிட்டவை நடை​பெற்​றன. 

மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது. சபரிமலை முழுவதும் சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.

தொடர்ந்​து, பொன்​னம்​பலமேட்​டில் ஜோதி தெரிந்​ததும், சபரிமலை​யில் திரண்​டிருந்த ஐயப்ப பக்​தர்​கள் சரணகோஷங்​கள் முழங்க தரிசித்​தனர். பொன்​னம்​பலமேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை தரிசனம் செய்ய பக்​தர்​களுக்கு 14 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், வண்​டிப்பெரி​யாறு, புல்​மேடு, பஞ்​சாலிமேடு, சத்​திரம், பருந்​துப்​பாறை, அய்​யன்​மலை, நீலிமலை உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்​தும் பக்​தர்​கள் மகரஜோ​தியை தரிசனம் செய்​தனர்.

மகரஜோ​தியை தரிசனம் செய்ய லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​ட​தால் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. மகரஜோ​தியை தரிசித்த பக்​தர்​கள், புல்​மேட்​டில் இருந்து சத்​திரம், வல்​லக்​கடவு வழி​யாக சந்​நி​தானம் சென்​றனர். இரவு 11 மணி வரை பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகர​விளக்கு பூஜைக்​காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு தொடர்ந்து வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன. மண்​டல, மகர​விளக்கு விழாக்​களில் இது​வரை 52 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.


Tuesday, January 13, 2026

Urgent need to protect youth from falling prey to drugs - Vaiko | Samath...

Monday, January 12, 2026

Centre attempting to replace Constitution with Manusmriti, alleges Dravi...

R.B.Udhaya Kumar Says, Rs.3000 Pongal gift not from the DMK party fund? ...

கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார்

 

பதிவு:  திங்கள்க்கிழமை,  ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 05:30 AM

சென்னை,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6-ம் தேதி சம்மன் அனுப்பியது.

அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இதற்காக, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.

இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஏற்கெனவே சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரச்சாரத் துக்கு விஜய் பயன்படுத்திய சிறப்பு பேருந்தை கரூரில் சிபிஐ மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தனர்.

அந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சிபிஐ விசாரணை குறித்து தவெக கட்சி நிர்வாகிகள் கூறும் போது, “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மாநில காவல் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் தவெகதான் கோரிக்கை விடுத்திருந்தது. எனவே, இப்போது சம்மனை தவிர்ப்பது சரியாக இருக்காது. டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு அளிப்பார்” என்றனர். விஜய் இன்று ஆஜராக உள்ள நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் குற்றப்பத்திரிகை

விஜய்யிடம் கேட்பதற்காக 50-க்கும் மேற்பட்ட முக்கியமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ தனது இறுதிக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக விஜய் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? குடிநீர் வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

 

பதிவு:  திங்கள்க்கிழமை,  ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM

சென்னை,

அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், அம்பத்தூரைச் சேர்ந்த வக்கீல் வி.எஸ்.சுரேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் விரிவாக்கம், தென்றல் நகர் பகுதியில் இருந்து புழல் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்ல மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி 2021–22-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் இந்த பள்ளமான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு கால்வாய் வழி செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதியில் தேங்கியது. அதுவும், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கியதால், எங்கள் பகுதி மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள், வயதானவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்த சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் சூப்பிரண்டு என்ஜினீயர், பள்ளமான பகுதியில் இதுபோல கழிவுநீர் தேங்கி நிற்பது தவிர்க்க முடியாதது என்று கூறிச் சென்றார்.

எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ‘‘மனுதாரர் குடியிருக்கும் பகுதியில் குடிநீருடன், மழைநீர், கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்து சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர், சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர் பிரமாண மனு தாக்கல் செய்யவேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Devotees witness ‘Ashtami Chapparam’ in Madurai | Meenakshi Sundareswara...

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...