Thursday, April 2, 2026

புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று ஸ்டாலினுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே பிரச்சார மோதல்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 03:00 AM

புதுச்சேரி, 

ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஏப்ரல் 6 அன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, அஜந்தா சிக்னல் சந்திப்பிலிருந்து அண்ணா சதுக்கம் வரை நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 3 அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவர் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் சென்று, பின்னர் அன்றைய தினம் சென்னை திரும்பி பாஜக தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

ஏப்ரல் 4 அன்று, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் ஒரு சாலைப் பேரணியையும் நடத்தக்கூடும்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பாதுகாப்புக் குழுவினர் உள்ளூர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், சாலைப் பேரணி செல்லும் பாதையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 4 அன்று காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொள்வார், அதனைத் தொடர்ந்து மறுநாள் புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்வார்.

ஏப்ரல் 6 அன்று, அமித் ஷா திருக்கனூரில் என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார், அதே நேரத்தில் ஸ்டாலின் தட்டஞ்சாவடியில் ஒரு பேரணியில் பேச உள்ளார்.

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான ஏஐஎன்ஆர்சி தலைமையிலான என்டிஏ அரசு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்வதால், அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யுங்கள் - டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 02:10 AM

புதுடெல்லி,

ஈ​ரான் - அமெரிக்க, இஸ்​ரேல் போரால் மேற்​காசி​யா​வில் பதற்​றம் தொடரும் நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கவுன்​சில் (சிசிஎஸ்) ஆலோ​சனை நடத்​தி​யது. ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை சமாளிக்க எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்து இந்​தக் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரானுக்கு எதி​ராக கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போரைத் தொடங்​கின. இந்​தப் போரில் ஈரான் நாட்​டின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய தலை​வர்​கள் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்​து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்​கத் தொடங்​கியது. வளை​குடா நாடு​களில் அமைந்​துள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் கடும் தாக்​குதலை நடத்​தி​யது. கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக போர் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறி​வைத்து ஈரான் தாக்​குதல்​களை நடத்​து​வ​தால் கச்சா எண்​ணெய்யை மற்ற நாடு​களுக்கு அனுப்​புவ​தில் கடும் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. மேலும், எண்​ணெய் கப்​பல்​கள் செல்​லும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முற்​றி​லும் முடக்​கி​யுள்​ளது. இதனால், சர்​வ​தேச அளவில் எரிபொருள் தட்​டுப்​பாடு அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் நடை​பெற்​றது.

டெல்​லி​யில் பிரதமரின் அதி​காரப்​பூர்வ அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மேலும், பொருளா​தா​ரம் மற்​றும் உள்​கட்​டமைப்​புத் துறை​களைக் கையாளும் பல மூத்த அமைச்​சர்​களும் இந்த கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். மேற்​காசி​யா​வில் தொடரும் போர், அதனால் இந்​தி​யா​வில் ஏற்​பட்​டுள்ள தாக்​கங்​கள், நாடு சந்​தித்து வரும் பிரச்​சினை​கள், அதற்​கான தீர்​வு​கள் உள்​ளிட்​டவை குறித்து இந்​தக் கூட்​டத்​தில் அமைச்​சர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

மேலும், ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியைச் சமாளிக்க எடுக்க வேண்​டிய உடனடி நடவடிக்​கைகள் குறித்து தீவிர​மாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. குறிப்​பாக நாட்​டில் எரிபொருள் மற்​றும் எல்​பிஜி, பிஎன்ஜி விநி​யோகத்​தின் தொடர்ச்​சியை மதிப்​பிட வேண்​டும் என்​றும், உணவு மற்​றும் உரங்​களில் பதுக்​கல் மற்​றும் செயற்​கை​யான விலை உயர்​வு​களைத் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

அது​மட்​டுமல்​லாமல் வளை​குடா நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களை அங்​கிருந்து பாது​காப்​பாக வெளி​யேற்றி இந்​தி​யா​வுக்கு அழைத்து வரு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்​தும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இதே பிரச்​சினை தொடர்​பாக, இதற்கு முன்பு பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில், மேற்​காசிய போரால் ஏற்​பட்​டுள்ள உலகளா​விய சூழல் குறித்​தும், இந்​திய அரசின் தொடர்​புடைய அமைச்​சகங்​கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7 மணிக்கு தொடங்​கிய கூட்​டம் 9.15 மணிக்கு நிறைவடைந்​தது. மத்​திய பாது​காப்​புக்​கான அமைச்​சர​வைக் கவுன்​சில் கூட்​டத்​தில் நடந்த ஆலோ​சனை தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் விளக்​கி​னார். செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

மேற்​காசி​யா​வில் நடந்து வரும் போரின் காரண​மாக பல்​வேறு தாக்​கங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன. இதை இந்​தியா ராஜதந்​திர ரீதி​யாக அணுகி வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் ராஜதந்​திர ரீதி​யாக நாங்​கள் பரந்த சர்​வ​தேச சமூகத்​துடன் தொடர்ந்து தொடர்​பில் இருந்து வரு​கிறோம்.

மேற்​காசிய போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி, நெதர்​லாந்து பிரதமர் ராப் ஜெட்​டனைத் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, இரு​நாட்டு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகள் குறித்து 2 நாட்டு தலை​வர்​களும் நீண்ட ஆலோ​சனையை நடத்​தினர்.

அதே நேரத்​தில், மேற்கு ஆசி​யா​வின் நிலைமை குறித்​தும் அவர்​கள் கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர், மேலும் அப்​பகு​தி​யில் அமைதி மற்​றும் ஸ்திரத்​தன்​மையை விரை​வில் மீட்​டெடுக்க வேண்​டியதன் அவசி​யத்​தை​யும் 2 நாட்​டுத் தலை​வர்​களும் வலி​யுறுத்​தினர்.

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர், போர்ச்​சுகல் நாட்​டின் வெளி​யுறவு அமைச்​சர் பாலோ ரங்​கலுடன் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, மேற்​காசி​யா​வில் நடந்து வரும் மோதல் குறித்து கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர்.

இந்தியர்கள் பாதுகாப்பு

இது​வரை, ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்​தி​யர்​களை தொடர்பு கொண்டு அவர்​கள் பாது​காப்​பாக இந்​தியா திரும்​புதவற்​கான ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளது.

இதில், 818 இந்​திய மாணவர்​கள் தரைவழி எல்லை வழி​யாக ஈரானை விட்டு ஆர்​மீனியா மற்​றும் அஜர்​பைஜான் வழி​யாக வெளி​யேறு​வதும் அடங்​கும். இவ்​வாறு வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர்​ ஜெய்​ஸ்​வால்​ தெரிவித்​தார்​.

Wednesday, April 1, 2026

“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM

சிவகாசி,

“இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.

காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.

ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.

எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?

நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.

73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.

கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.

இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.

“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 02:40 AM

திருவாரூர்,

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.

‘‘​தி​ரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் எங்​கள் சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும் அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​கு​வோம்’’ என்று திரு​வாரூரில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், திரு​வாரூரில் நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். திரு​வாரூர் தெற்கு வீதி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் திமுக வேட்​பாளர்​கள் திரு​வாரூர் பூண்டி கலை​வாணன், மன்​னார்​குடி டிஆர்​பி.​ராஜா, திருத்​துறைப்​பூண்டி இந்​திய கம்​யூனிஸ்ட் வேட்​பாளர் மாரி​முத்​து, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிடும் நன்​னிலம் எஸ்​டிபிஐ வேட்​பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்த 2026 தேர்​தலின் சூப்​பர் ஸ்டார் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளி​யிட்​டேன். நேற்று கொளத்​தூர் தொகு​தி​யில் வேட்பு மனு தாக்​கல் செய்​தேன். இன்று தலை​வர் கருணாநி​தியை வளர்த்​தெடுத்த திரு​வாரூர் மண்​ணிலிருந்து திமுக தலை​மை​யில் அமைந்​துள்ள மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யின் வெற்றி பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறேன். திரு​வாரூர் என்​றால் அது திமுக ஊர். அதனால் இங்​கிருந்து தொடங்​கு​கிறேன்.

திரு​வாரூர் பெயர் அழகு. அதை​விட திரு​வாரூர் தேர் பேரழகு. நேற்று முன்​தினம் தான் திரு​வாரூர் தேரோட்​டம் கம்​பீர​மாக நடந்து முடிந்​துள்​ளது. கடந்த 1948-க்​குப் பிறகு 22 ஆண்​டு​கள் ஓடா​மல் இருந்த திரு​வாரூர் ஆழித்​தேரை ஓட வைத்​தவர் கருணாநி​தி. திமுக ஆட்​சி​யில் இருக்​கும் போதெல்​லாம் திரு​வாரூருக்கு நிறைய செய்​துள்​ளோம்.

திரு​வாரூர் மாவட்​டத்தை உரு​வாக்​கியது, ஆட்​சி​யர், நீதி​மன்​றம், மாவட்ட காவல் அலு​வல​கங்​கள், நகராட்சி கட்​டிடம், புதிய பேருந்து நிலை​யம், மத்​திய பல்​கலைக்​கழகம், மருத்​து​வக் கல்​லூரி, மன்​னார்​குடி அரசு கல்​லூரி, பாமணி உரத் தொழிற்​சாலை, மாவட்​டம் முழு​வதும் குடிநீர் வசதி, டி.ஆர்​.​பாலு முயற்​சி​யால் செம்​மொழி உட்பட 5 புதிய ரயில்​கள் என ஏராள​மான வளர்ச்சி திட்​டங்​களை செய்​துள்​ளோம். நெல் ஜெய​ராமனுக்கு நினை​வுச் சின்​னம் அமைத்து வரு​கிறோம்.

கடந்த 2021-ல் எங்​கள் மீது நீங்​கள் நம்​பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்​படைத்​தீர்​கள். முதல்​வ​ராக பொறுப்​பேற்ற முதல் நாளி​லிருந்து பெண்​கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்​களுக்கு உரிமைத் தொகை, மாணவர்​களுக்கு காலை உணவு, நான் முதல்​வன், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டம் என ஏராள​மான திட்​டங்​கள் கொண்டு வந்​தேன். பொங்​கல் தொகுப்பு ரூ.3,000 வழங்​கினோம்.

தமிழகத்தை பார்த்து பல மாநிலங்​கள் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை தொடங்கி உள்​ளனர். தேர்​தலைக் காட்டி அதை நிறுத்த மத்​திய பாஜக அரசு திட்​ட​மிட்​டது. நாங்​கள் விழித்​துக் கொண்​டோம். ஏழைகளின் சுருக்​குப்​பை​யில் இருந்து காசை உரு​வ திட்​டம் போடும் பாஜக​வுக்​கு, திரா​விட மாடல் நலத்​திட்​டம் மூலம் மக்​களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்​பது எரி​யத்​தான் செய்​யும். யார் வயிறு எரிந்​தால் என்ன? மக்​களின் மனசு நிறையணும் என்​பது​தான் என் லட்​சி​யம். அதனால்​தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்​கினோம்.

எல்​லாத் திட்​டத்​தி​லும் தமிழகம் டாப்​பில் இருப்​பது​தான் பாஜக தலை​மை​யில் செயல்​படும் அதி​முக உள்​ளிட்ட அடிமைக் கட்​சிகளுக்கு எரிச்​சலை உண்​டாக்கி உள்​ளது. தமிழகத்தை எப்​படி​யா​வது கலவர பூமி​யாக்​கி​விடலாம் என திட்​ட​மிட்டு ஏராள​மான போலி செய்​தி​களைப் பரப்​பிப் பார்த்​தனர். கலவர வெறியோடு திரிந்​தவர்​களுக்கு ஏமாற்​றம்​தான் மிஞ்​சி​யது. அவர்​கள் பரப்​பியது அனைத்​தும் அவதூறு என உண்மை வெளிப்​பட்டு மக்​கள் முன் அசிங்​கப்​பட்டு நிற்​கின்​றனர்.

கடந்த 2011-21 வரை தமிழகத்​தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதி​முக, 2014-லிருந்து இந்​தி​யாவை மோச​மான நிலைக்கு அழைத்​துச் சென்​றுள்ள பாஜக​வுடன் சரணாக​தி​யடைந்து கூட்​டணி அமைத்​துள்​ளது. அவர் நம் தேர்​தல் அறிக்​கை​யைப் பார்த்து காப்பி அடித்து விட்​டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்​தோம் என புலம்​பு​கிறார்.

அவருக்கு எதைப் பற்​றி​யும் புரிதல் கிடை​யாது. தொலை நோக்கு பார்​வை​யும் இல்​லை. அவரது உளறல்​களில் ‘ஹை லைட்’ எது தெரி​யு​மா? எப்​படி உங்​கள் திட்​டங்​களை நிறைவேற்​று​வீர்​கள் எனக் கேட்​டால் வரியை உயர்த்தி நிறைவேற்​று​வேன் என்​கிறார். அதனால் தான் பழனி​சாமியை எளி​தாக மிரட்டி அடிமைக் கூட்​ட​ணி​யில் பாஜக வைத்​துள்​ளது. தமிழகத்​தின் வளர்ச்​சியை தடுப்​பது, திரா​விட மாடல் ஏற்​படுத்​திய வளர்ச்​சியை அழிப்​பது​தான் என்​டிஏ கூட்​ட​ணி​யின் நோக்​கம்.

தமிழகத்​தில் திமுகவை எதிர்க்க தங்​களுக்கு வலிமை​யில்லை என்​ப​தால் அதி​முகவை பாஜக விலைக்கு வாங்கி உள்​ளது. பொது​வாக பாஜக மக்​களுக்கு நல்​லது செய்​யாது. தேர்​தல் வந்​தால் பட்​ஜெட்​டில் கண்​துடைப்​புக்​காக சில அறி​விப்​பு​களைப் கொடுப்​பார்​கள். ஆனால், தமிழகத்​தில் அதைக்​கூட செய்ய மனமில்​லாத வஞ்சக எண்​ணத்​தோடு இருக்​கும் உரு​வம்​தான் என்​டிஏ.

பாஜக மத்​தி​யில் ஆட்​சிக்கு வந்த பிறகு தமிழகத்​துக்கு எந்த நன்​மை​யும் செய்​ய​வில்​லை. எந்த சிறப்பு திட்​டத்​தை​யும் செய்​ய​வில்​லை. இத்​தனை​யும் சமாளித்து பல்​வேறு சாதனை​களை செய்​துள்​ளோம். திறமை​யான நிர்​வாகத்​தால் நம்​பர் ஒன் மாநில​மாக உள்​ளோம்.இந்தி திணிப்பை ஏற்​க​வில்லை என்​ப​தால் நம் வீட்டு குழந்​தைகளுக்​கான கல்வி நிதி​யைக் கூட தரவில்​லை. இப்​படி வஞ்சக எண்​ணம் கொண்ட கூட்​டத்​திடம் தமிழகத்​தின் எதிர்​காலத்தை ஒப்​படைக்க முடி​யு​மா? எனவே, என்​டிஏவை புறக்​கணிக்க வேண்​டும். அப்​போது தான் தமிழகத்​தின் எதிர்​காலம் காப்​பாற்​றப்​படும்.

இந்​தத் தேர்​தல் என்​பது தமிழ்​நாடு அணி வெர்​சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுக​தான் மீண்​டும் ஆட்​சிக்கு வரவேண்​டும். தமிழகம் கலவர பூமி​யாக மாறாமல் இருக்க பாஜக- அதி​முக கூட்​ட​ணியை வேரோடு வீழ்த்த வேண்​டும். நாம் போராடு​வது திமுக கூட்​ட​ணிக்​கான வெற்றி அல்ல, இது தமிழகத்​துக்​கான வெற்​றி. எனவே, அரசி​யல் விருப்பு வெறுப்​பு​களுக்கு அப்​பாற்​பட்​டு,தமிழகத்​தைக் காக்க மக்​கள் அனை​வரும் தி​முக தலை​மையி​லான மதச்​சார்ப்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யை ஆதரிக்​க வேண்​டும்​. அடுத்​து அமைய​வுள்​ள தி​ரா​விட மாடல்​ 2.0 ஆட்​சி​யில்​ எங்​கள்​ சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும்​ அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​குவோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Tuesday, March 31, 2026

நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு - நாளை முதல் துவங்குகிறது!

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM

சென்னை,

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது. ஆன்லைனிலும், நேரடியாகவும் இரு கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில், ஜூலை 17 முதல் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவிடலாம்.

நாட்டில், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சுதந்திரத்திற்கு பின் எட்டாவது முறையாக நாளை மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது.

இது குறித்து, தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்ஜய் குமார் நாராயணன் நேற்று கூறியதாவது:

நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்குகிறது. இந்த முறை பொதுமக்கள் தங்களை பற்றிய விபரங்களை, இணையதளம் வாயிலாக அவர்களாகவே பதிவு செய்யும், 'சுய விபரம்' என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ், அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உட்பட, 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் சுய விபரங்களை பதிவு செய்வோருக்கு, 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பாளர், வீட்டிற்கு நேரில் வரும்போது, இந்த 16 இலக்க எண்ணை அவர்களிடம் வழங்கினால் போதும். 

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என, வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படும். 

இந்த பிரமாண்ட பணி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, 33 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள், பின் அறிவிக்கப்படும். 

பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15ன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது. சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், 'என்கிரிப்ட்' செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

நாடு முழுதும் இந்த முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாநிலம் வாரியாக, சுய விபர பதிவு மற்றும் கணக்கெடுப்பாளர் வீடு தேடி வரும் தேதிகள் மாறுபடுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 - 31 வரை பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆகஸ்டு 1 - 30 வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 - 31 வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 - 30 வரையிலும் நடக்கிறது. 

நேரடி கணக்கெடுப்பு

தலைநகர் டில்லியில், மாநகராட்சி ஒரு பகுதியாகவும், புதுடில்லி மற்றொரு பகுதியாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. அந்த வகையில், டில்லி மாநகராட்சி பகுதிகளில் சுய விபர பதிவு ஏப்ரல் 1 - 15 வரையிலும், நேரடி கணக்கெடுப்பு ஏப்ரல் 16 - மே 15 வரையிலும் நடக்கிறது. டில்லியின் பிற பகுதிகளில் சுய விபர பதிவு, மே 1 - 15 வரை நடக்கிறது. வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, மே 16 - ஜூன் 14 வரை நடக்கிறது.

கேள்விகள்!

கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வரும்போது, 33 கேள்விகளை கேட்பர்.  அதில் இடம் பெற்ற சில முக்கியமான கேள்விகள்: வீட்டு விலாசம், மாடி வீடா - கூரை வீடா, வீட்டின் தற்போதைய நிலை, எத்தனை பேர் வசிக்கின்றனர், வீடு யார் பெயரில் இருக்கிறது, குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா, பிற சமூகத்தை சேர்ந்தவரா என்ற கேள்விகள் அடங்கும். 

வீட்டில் உள்ள மொத்த அறைகள், திருமணமானவர்கள் எத்தனை பேர் வசிக்கின்றனர். குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிப்பறை, குளியலறை வசதிகள், டிவி, இணையதளம், கணினி வசதிகள், தரைவழி தொலைபேசி, மொபைல் போன், சைக்கிள், ஸ்கூட்டர், பைக், மொபட், கார், ஜீப், வேன் போன்ற வாகன வசதிகள் குறித்தும் கேள்விகள் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்காக மொபைல் எண் கேட்கப்படும்.

இனி இவங்களும் தம்பதி தான்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கும் வகையில், 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் தற்கால சமூக மாற்றங்களை கருதி, அதற்கேற்ப சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக, திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில், 'லிவ் - இன்' முறையில் இணைந்து வாழும் தம்பதியரின் உறவு நிலை, அவர்களை திருமணம் முடித்த தம்பதியராகவே கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும். இது தவிர, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, உணவு முறை, பழக்க வழக்கம், சொந்த வீடு எனில், அதற்காக பயன்படுத்திய கட்டுமான பொருட்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

‘விஜய்க்கு அசையும் சொத்து ரூ.404.58 கோடி உள்ளது’ - வேட்பு மனுவில் தகவல்

 
 
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 04:40 AM

சென்னை,

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி அசையும் சொத்து இருப்பதாக விஜய் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். விஜய்யின் மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் மகன், மகள் வங்கி கணக்கில் ரூ.4 லட்சம் உள்ளது. விஜய்யின் பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.21.83 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வங்கி கணக்கில் ரூ.220 கோடி உள்ளதாகவும், அவரது மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2024-25ல் மட்டும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரூ.184 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு ரூ.7.45 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

விஜய்யிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. விஜய் மனைவியிடம் 2 கிலோ வெள்ளி, ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் மொத்த வருமானம் ரூ.734.45 கோடி என்றும், பல்வேறு தனி நபர்கள், நிறுவனங்களுக்கு விஜய் சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளார் என்றும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் இல்லை - வேட்பு மனுவில் தகவல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 04:00 AM

சென்னை,

மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், 720 கிராம் தங்கம் உள்ளதாகவும், கையிருப்பில் ரூ.40 ஆயிரம் உள்ளதாகவும் தனது வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை என மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினிடம் ரூ.10 ஆயிரம் கையிருப்பு பணம் உள்ளதாகவும், அவரின் வருவாய்க்கான ஆதாரம் எம்.எல்.ஏ. ஊதியம், வங்கி வைப்பு நிதி வட்டி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் பெயரில் குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவிக்கு எந்த கடன்களும் இல்லை என்றும், மு.க.ஸ்டாலின் பெயரில் தஞ்சை அகரத்திருநல்லூரில் 2.86 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், திருவாரூரில் ரூ.1.12 கோடி மதிப்பில் நிலம் உள்ளதாகவும் அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Featured post

48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM வாஷிங்டன், ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு...