Wednesday, April 8, 2026

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பழனி​சாமி, சீமான், மனு ஏற்பு - வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு - எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் போட்டியில்லை

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 08, 2026, பங்குனி 25, விசுவாவசு வருடம் 03:45 AM

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் இறு​திப்​பட்​டியல் நாளை வெளி​யாகும் நிலை​யில், மு.க.ஸ்​டா​லின், பழனி​சாமி, விஜய், சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்​கள் ஏற்​கப்​பட்​டுள்​ளன. எடப்​பாடி​யில் தவெக வேட்​பாளரின் மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களுக்​கும் ஒரே கட்​ட​மாக நடை​பெறவுள்ள தேர்​தலுக்​கு, வேட்பு மனுத் தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளி​லேயே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்பு மனுத் தாக்​கல் செய்​தனர்.

சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கடந்த 4-ம் தேதி வேட்பு மனுத் தாக்​கல் செய்​தார். ஏப்​ரல் 6-ம் தேதி நேற்று முன்​தினம் வேட்பு மனுத் தாக்​கல் செய்ய கடைசி நாள் என்​ப​தால், அனைத்து தொகு​தி​களி​லும் வேட்பு மனுத் தாக்​கல் செய்ய அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள், சுயேச்சை வேட்​பாளர்​கள் குவிந்​தனர்.

எடப்​பாடி தொகு​தி​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி (இபிஎஸ்), சாத்​தூரில் பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், விருத்​தா​சலத்​தில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், ஸ்ரீபெரும்​புதூரில் தமிழகக் காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி​யின் மனைவி சவுமியா அன்​புமணி, அவி​நாசி​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மயி​லாப்​பூரில் தமிழகப் பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், கோவை வடக்கு தொகு​தி​யில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வேட்பு மனுத் தாக்​கல் செய்​தனர்.

சென்​னை​யில் 628 உட்பட 234 தொகு​தி​களி​லும் மொத்​தம் 7,599 வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. ஏராள​மானோர் கூடு​தல் மனுக்​களைத் தாக்​கல் செய்​தனர். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 4 மனுக்​களை​யும், தவெக தலை​வர் 3 மனுக்​களை​யும் தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று பகல் 11 மணிக்கு தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தலை​மை​யில் வேட்பு மனுக்​கள் பரிசீலனை தொடங்​கியது. இதில் வேட்​பாளர்​கள், வேட்​பாளர்​களின் முகவர்​கள் பங்​கேற்​றனர். 

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பழனி​சாமி, சீமான், நயி​னார் நாகேந்​திரன், செல்​வப்​பெருந்​தகை, சவுமியா அன்​புமணி, பிரேமலதா விஜய​காந்த் உள்​ளிட்​டோரின் வேட்பு மனுக்​கள் ஏற்றுக் கொள்​ளப்​பட்​டன.

ஆட்​சேபனை

பெரம்​பூர் தொகு​தி​யில் தவெக தலை​வர் விஜய்​யின் வேட்பு மனு​வில், சான்​றொப்​பம் காலாவ​தி​யான நோட்​டரி வழக்​கறிஞரிடம் இருந்து பெறப்​பட்​ட​தாக பாமக​வினர் ஆட்​சேபனை தெரி​வித்​த​தால் பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இதையடுத்து அதற்​குரிய ஆவணங்​களைச் சமர்​பித்த பின்​னர், விஜய்​யின் மனு ஏற்​கப்​பட்​டது.

அதே​போல், திருச்சி கிழக்​குத் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக தலை​வர் விஜய்​யின் மனு ஏற்​கப்​பட்​டது. வில்​லி​வாக்​கத்​தில் ஆதவ் அர்​ஜுனா சொத்து விவரங்​களை மறைத்​த​தாக சுயேச்சை வேட்​பாளர்​கள் குற்​றம் சாட்​டிய​தால், பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இறு​தி​யில் அவரது மனு​வும் ஏற்​கப்​பட்​டது.

கோபிச்​செட்​டிப்​பாளை​யம் தொகு​தி​யில் வரு​மான வரித் தாக்​கல் செய்​ய​வில்லை எனக் கூறி, தவெக வேட்​பாளர் செங்​கோட்​டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டு, நீண்ட நேரம் கழித்து ஏற்​கப்​பட்​டது. அவருக்கு அதி​முக​வினர் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தனர். சென்னை ஆர்​.கே.நகரில் தவெக வேட்​பாளர் மரிய வில்​சன் முறை​யாக மனுவை பூர்த்தி செய்​யாத​தால் பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்டு கடைசி​யில் ஏற்​கப்​பட்​டது.

எடப்​பாடி தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் அருண்​கு​மார் மற்​றும் அவருக்கு மாற்று வேட்​பாள​ராக அவரது மனைவி நித்யா மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர். அங்​கீகரிக்​கப்​ப​டாத அரசி​யல் கட்​சிகளின் வேட்​பாளரை அதே தொகு​தியை சேர்ந்த 10 பேர் முன்​மொழிய வேண்​டும் என்று விதி​முறை உள்​ளது.

ஆனால், அருண்​கு​மாரின் மனு​வில் 8 பேர் மட்​டுமே முன்​மொழிந்​துள்​ளனர். உரிய விதி​முறை​களைப் பின்​பற்​றாத​தால் அருண்​கு​மாரின் மனுவை தள்​ளு​படி செய்​து, தேர்​தல் நடத்​தும் அலு​வலர் நடராஜன் உத்​தர​விட்​டார். இதே காரணத்​துக்​காக, மாற்று வேட்​பாளர் நித்​யா​வின் மனு​வும் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. இதனால், எடப்​பாடி தொகு​தி​யில் தவெக போட்​டி​யிட முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

சிதம்​பரம் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் பாரி​யின் வேட்பு மனு​வில் எழுத்​துப் பிழை மற்​றும் முறை​யாகப் பூர்த்தி செய்​யப்​ப​டாத காரணங்​களுக்​காக நிராகரிக்​கப்​பட்​டது. அதனால், மாற்று வேட்​பாள​ராக வேட்பு மனுத் தாக்​கல் செய்​திருந்த அவரது தந்தை நெடுஞ்​செழியனின் மனு ஏற்​கப்​பட்​டது.

பரிசீலனை முடி​வில் சென்​னை​யில் 462 உட்பட 234 தொகு​தி​களி​லும் 4,738 வேட்பு மனுக்​கள் ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டன. நாளை பிற்​பகல் 3 மணி வரை வேட்பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்கு கால அவகாசம் உள்​ளது. அதன்​பிறகு இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாக​வுள்​ளது.

விஜய் பெயரில் 4 பேர்: தவெக தலை​வர் விஜய் போட்​டி​யிடும் பெரம்​பூர் தொகு​தி​யில் 66 வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதில், விஜய்​யின் மனு உட்பட 48 பேரின் வேட்பு மனுக்​கள் ஏற்​கப்​பட்​டன. மற்ற மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. பொது​வாகவே நட்​சத்​திர வேட்​பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே மற்ற கட்​சிகள் அதி​க​மான சுயேச்சை வேட்​பாளர்​களை வேட்பு மனுத் தாக்​கல் செய்ய வைப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது.

அந்த வகை​யில் பெரம்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக தலை​வர் விஜய், அவரது முழுப்​பெய​ரான ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்பு மனுத் தாக்​கல் செய்​துள்​ளார். அவருக்கு எதி​ராக எம்​.ஜோசப், எஸ்​.ஜோசப், கே.​விஜய், ஜி.​விஜய் ஆகியோர் களம் இறக்​கப்​பட்​டுள்​ளனர். இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Sunday, April 5, 2026

48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM

வாஷிங்டன்,

‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்.

இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறது

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் 15 அம்ச திட்டம்

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை.

இந்த சூழலில், கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது’ என்று தெரிவித்தார்.

கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் கூறும் போது, “ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது’’ என்று தெரிவித்தார்.

தீவிரமடையும் போர்: எனினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் 2 போர் விமானங்களை ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியது. மேலும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. எனினும், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: 

அதிபர் ட்ரம்ப் விதித்த 10 நாள் கெடு ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி 7-ம் தேதி அதிகாலை) நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஈரான் ஆட்சியாளர்கள், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

போர்க் கப்பல்கள் முகாம்

அமெரிக்க கடற்படையின் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக ட்ரிபொலி போர்க்கப்பலை சேர்ந்த வீரர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிதீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரைவழி தாக்குதல்களுக்கு தயாராக உள்ளனர்.

அமெரிக்காவின் பி-2 ஸ்பிரிட், எப்-35, எப்-22, எப்-15இ, ஏ-10 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அதிதீவிர தாக்குதல்களுக்கு தயாராக உள்ளன. பிஆர்எஸ்எம், டோமாஹாக், பேட்ரியாட், தாட், ஹிமார்ஸ், ஜிஎம்எல்ஆர்எஸ் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எம்கியூ-9 ரக ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர இறுதி கெடுவை விதித்துள்ளார். இந்த கெடு முடிந்த பிறகு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும். ஈரான் நரகமாக மாறும் வரை தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்ல மறுப்பா? - ஈரான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சியில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ‘‘இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு

ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எனது நன்றி. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்ல நாங்கள் ஒருபோதும் மறுத்தது இல்லை. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதப் போருக்கு ஒரு உறுதியான மற்றும் நிரந்தரமான முடிவைக் கொண்டு வருவதற்கான விதிமுறைகளையே நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரான் பதில் அளிக்காததால் அமைதிப் பேச்சுவார்த்தை மந்தம் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', பாகிஸ்தானின் 'டான்' ஆகிய இதழ்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபியும் மறுத்துள்ளார். இத்தகைய செய்திகள் அடிப்படையற்றவை, கற்பனையானவை என்று அவர் கூறியுள்ளார்.

Saturday, April 4, 2026

தமிழக சட்டசபை தேர்தல் - பாஜக வேட்பாளர் பட்டியல் - அமர்பிரசாத் ரெட்டி, வினோஜ்.பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா.. சீட் இல்லை

சனிக்கிழமை, ஏப்ரல் 04, 2026, பங்குனி 21, விசுவாவசு வருடம் 04:50 AM

சென்னை,

வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது பாஜகவில் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது தீவிர ஆதரவாளர்களான பலருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால், அண்ணாமலையின் கை சறுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இது பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் நிலவி வந்தன. சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்பட்டது. 

வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், இன்றுதான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. கடந்த முறை நெல்லை தொகுதியில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர். 

நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார். 

மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கு தொகுதியில் பேராசிரியர் ராம சீனிவாசனும், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்திருந்த விஜயதாரணிக்கு இந்த முறை விளவங்கோட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் சீட் பெற்றுள்ளனர்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய ஷாக், அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது தான். இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவில் கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது. 

கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்த முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

சீட் அதிருப்தி காரணமாக சென்னையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணமலை பங்கேற்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கவும் அண்ணாமலை செல்லவில்லை. 

2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம், ஏபி முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

வேளச்சேரி தொகுதியில் நீண்ட நாட்களாக போட்டியிட தீவிரம் காட்டி வந்தார் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். அண்ணாமலை இவருக்கு பரிந்துரை செய்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

எஸ்.ஜி.சூர்யா போட்டியிட விரும்பிய வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அசோக் என்பவர் போட்டியிடுகிறார். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார். 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார். 

வினோஜ் பி செல்வம் தனக்கு இந்த முறை துறைமுகம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அங்கு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.

அதேபோல, பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, தளி தொகுதியில் போட்டியிட விரும்பி, சீட் பெற முயற்சித்து வந்தார். அவருக்கும் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏபி முருகானந்தம், அஸ்வத்தாமன் ஆகியோரும் சீட் பெற முயற்சித்தனர். அவர்களுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

ஒருகாலத்தில் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை தற்போது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Friday, April 3, 2026

அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் - ஈரான் திட்டவட்டம் - அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு பதிலடி

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03, 2026, பங்குனி 20, விசுவாவசு வருடம் 03:00 AM

தெஹ்ரான்,

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத் தகவல் முழுமையற்றது.

எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.

அத்தகைய அனுமானங்கள் நீங்கள் சிக்கியுள்ள சகதியை மேலும் ஆழமாக்கும். நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை; எங்களின் முக்கிய ராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகிறது.

எங்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுத தளங்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்; நீங்கள் தவறாகவே அதனை கணிப்பீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியாது.

எங்கள் கண்ணியமிக்க, அன்புக்குரிய, முஸ்லிம் தேசத்துக்கு எதிராக நீங்கள் தொடங்கிய போருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும். நீங்கள் நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்தப் போர் தொடரும்.

நீங்கள் ஏற்கெனவே பெற்ற கடுமையான அடிகளின் தொடர்ச்சியாக, எங்களிடமிருந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதம் அல்-அன்பியா தலைமையகம் என்பது ஈரானின் கட்டளையிடும் மிக முக்கிய அமைப்பாகும். இது ஈரான் ராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) ஆகியவற்றுக்கு இடையேயான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

முன்னதாக நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீர்க்கமான தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்போது ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்கள் முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பரந்த அளவிலான ராணுவக் கட்டமைப்பும் கடுமையாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் தற்போது கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகளும், ராக்கெட் ஏவுதளங்களும் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகச் சிலவே எஞ்சியுள்ளன. அமெரிக்கா முன்னெப்போதையும் விடப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம் - புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03, 2026, பங்குனி 20, விசுவாவசு வருடம் 02:30 AM

சென்னை,

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார். தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தையும் தொடங்கினர்.

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு, சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். அனுமதி பெறப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்ற இடங்களில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்தார்.

இதற்கிடையே, அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையும் கோரினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கோரி தவெக சார்பில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்தது. அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்‌ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதிநியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. புதிய டிஜிபி உடனடியாக பதவி ஏற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், நேற்று இரவே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விரைவில் மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

சந்தீப் ராய் ரத்தோர் யார்?

டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். தமிழக காவல் துறையில் பல முக்கிய பொறுப்புகள், குறிப்பாக சிபிசிஐடி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கியப் பங்காற்றினார்.

ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றியவர், 2024 ஜூலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு, காவல் உயர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார். சிறந்த பணிக்கான மத்திய, மாநில அரசுகளின் பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Thursday, April 2, 2026

புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று ஸ்டாலினுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே பிரச்சார மோதல்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 03:00 AM

புதுச்சேரி, 

ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஏப்ரல் 6 அன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, அஜந்தா சிக்னல் சந்திப்பிலிருந்து அண்ணா சதுக்கம் வரை நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 3 அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவர் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் சென்று, பின்னர் அன்றைய தினம் சென்னை திரும்பி பாஜக தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

ஏப்ரல் 4 அன்று, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் ஒரு சாலைப் பேரணியையும் நடத்தக்கூடும்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பாதுகாப்புக் குழுவினர் உள்ளூர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், சாலைப் பேரணி செல்லும் பாதையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 4 அன்று காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொள்வார், அதனைத் தொடர்ந்து மறுநாள் புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்வார்.

ஏப்ரல் 6 அன்று, அமித் ஷா திருக்கனூரில் என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார், அதே நேரத்தில் ஸ்டாலின் தட்டஞ்சாவடியில் ஒரு பேரணியில் பேச உள்ளார்.

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான ஏஐஎன்ஆர்சி தலைமையிலான என்டிஏ அரசு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்வதால், அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யுங்கள் - டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 02:10 AM

புதுடெல்லி,

ஈ​ரான் - அமெரிக்க, இஸ்​ரேல் போரால் மேற்​காசி​யா​வில் பதற்​றம் தொடரும் நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கவுன்​சில் (சிசிஎஸ்) ஆலோ​சனை நடத்​தி​யது. ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை சமாளிக்க எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்து இந்​தக் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரானுக்கு எதி​ராக கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போரைத் தொடங்​கின. இந்​தப் போரில் ஈரான் நாட்​டின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய தலை​வர்​கள் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்​து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்​கத் தொடங்​கியது. வளை​குடா நாடு​களில் அமைந்​துள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் கடும் தாக்​குதலை நடத்​தி​யது. கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக போர் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறி​வைத்து ஈரான் தாக்​குதல்​களை நடத்​து​வ​தால் கச்சா எண்​ணெய்யை மற்ற நாடு​களுக்கு அனுப்​புவ​தில் கடும் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. மேலும், எண்​ணெய் கப்​பல்​கள் செல்​லும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முற்​றி​லும் முடக்​கி​யுள்​ளது. இதனால், சர்​வ​தேச அளவில் எரிபொருள் தட்​டுப்​பாடு அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் நடை​பெற்​றது.

டெல்​லி​யில் பிரதமரின் அதி​காரப்​பூர்வ அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மேலும், பொருளா​தா​ரம் மற்​றும் உள்​கட்​டமைப்​புத் துறை​களைக் கையாளும் பல மூத்த அமைச்​சர்​களும் இந்த கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். மேற்​காசி​யா​வில் தொடரும் போர், அதனால் இந்​தி​யா​வில் ஏற்​பட்​டுள்ள தாக்​கங்​கள், நாடு சந்​தித்து வரும் பிரச்​சினை​கள், அதற்​கான தீர்​வு​கள் உள்​ளிட்​டவை குறித்து இந்​தக் கூட்​டத்​தில் அமைச்​சர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

மேலும், ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியைச் சமாளிக்க எடுக்க வேண்​டிய உடனடி நடவடிக்​கைகள் குறித்து தீவிர​மாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. குறிப்​பாக நாட்​டில் எரிபொருள் மற்​றும் எல்​பிஜி, பிஎன்ஜி விநி​யோகத்​தின் தொடர்ச்​சியை மதிப்​பிட வேண்​டும் என்​றும், உணவு மற்​றும் உரங்​களில் பதுக்​கல் மற்​றும் செயற்​கை​யான விலை உயர்​வு​களைத் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

அது​மட்​டுமல்​லாமல் வளை​குடா நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களை அங்​கிருந்து பாது​காப்​பாக வெளி​யேற்றி இந்​தி​யா​வுக்கு அழைத்து வரு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்​தும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இதே பிரச்​சினை தொடர்​பாக, இதற்கு முன்பு பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில், மேற்​காசிய போரால் ஏற்​பட்​டுள்ள உலகளா​விய சூழல் குறித்​தும், இந்​திய அரசின் தொடர்​புடைய அமைச்​சகங்​கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7 மணிக்கு தொடங்​கிய கூட்​டம் 9.15 மணிக்கு நிறைவடைந்​தது. மத்​திய பாது​காப்​புக்​கான அமைச்​சர​வைக் கவுன்​சில் கூட்​டத்​தில் நடந்த ஆலோ​சனை தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் விளக்​கி​னார். செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

மேற்​காசி​யா​வில் நடந்து வரும் போரின் காரண​மாக பல்​வேறு தாக்​கங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன. இதை இந்​தியா ராஜதந்​திர ரீதி​யாக அணுகி வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் ராஜதந்​திர ரீதி​யாக நாங்​கள் பரந்த சர்​வ​தேச சமூகத்​துடன் தொடர்ந்து தொடர்​பில் இருந்து வரு​கிறோம்.

மேற்​காசிய போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி, நெதர்​லாந்து பிரதமர் ராப் ஜெட்​டனைத் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, இரு​நாட்டு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகள் குறித்து 2 நாட்டு தலை​வர்​களும் நீண்ட ஆலோ​சனையை நடத்​தினர்.

அதே நேரத்​தில், மேற்கு ஆசி​யா​வின் நிலைமை குறித்​தும் அவர்​கள் கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர், மேலும் அப்​பகு​தி​யில் அமைதி மற்​றும் ஸ்திரத்​தன்​மையை விரை​வில் மீட்​டெடுக்க வேண்​டியதன் அவசி​யத்​தை​யும் 2 நாட்​டுத் தலை​வர்​களும் வலி​யுறுத்​தினர்.

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர், போர்ச்​சுகல் நாட்​டின் வெளி​யுறவு அமைச்​சர் பாலோ ரங்​கலுடன் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, மேற்​காசி​யா​வில் நடந்து வரும் மோதல் குறித்து கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர்.

இந்தியர்கள் பாதுகாப்பு

இது​வரை, ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்​தி​யர்​களை தொடர்பு கொண்டு அவர்​கள் பாது​காப்​பாக இந்​தியா திரும்​புதவற்​கான ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளது.

இதில், 818 இந்​திய மாணவர்​கள் தரைவழி எல்லை வழி​யாக ஈரானை விட்டு ஆர்​மீனியா மற்​றும் அஜர்​பைஜான் வழி​யாக வெளி​யேறு​வதும் அடங்​கும். இவ்​வாறு வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர்​ ஜெய்​ஸ்​வால்​ தெரிவித்​தார்​.

Featured post

“உண்மையான காங்கிரஸார் தவெகவில் உள்ளனர்” - திருநெல்வேலியில் தவெக தலை​வர் விஜய்​ பேச்சு

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 03:30 AM திருநெல்வேலி, “பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்ட...