Saturday, November 29, 2025

சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா புயல்’ - வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 29, 2025, கார்த்திகை 13,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

‘டிட்வா' புயல் காரணமகா இன்று டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்க உள்ளது. இலங்கை பகு​தி​யில் இருந்து வடமேற்​காக நகர்ந்து வரும் ‘டிட்​வா’ புயல் நாளை அதி​காலை வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இதன் காரண​மாக, டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது. மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் அதி​க​னமழைக்​கான ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

‘டிட்வா' புயல்

‘டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவிலும் நேற்று மாலை வரை நிலைகொண்டு இருந்தது.

இது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று (சனிக்கிழமை) காலை அடையும். பொதுவாக காற்றின் சுழற்சி 63 கி.மீ. முதல் 83 கி.மீ. வேகத்தில் இருந்தால் அது புயலாக கணக்கில் கொள்ளப்படும். தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று சுழற்சி இருக்கிறது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல், அதை ஒட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் நில​விய ‘டிட்​வா’ புயல், இலங்கை திரி​கோண மலை​யில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ., சென்​னை​யில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலை​வில் நிலை​கொண்​டுள்​ளது.


இது வடமேற்​காக நகர்ந்​து, இலங்கை கடலோரப் பகு​தி​கள் மற்​றும் அதை ஒட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களைக் கடந்து நவ.30 (நாளை) அதி​காலை வங்​கக்​கடல் பகு​தி​களில் வட தமிழகம் - புதுச்​சேரி மற்​றும் அதை ஒட்​டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும்.

இதன் காரண​மாக வட தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் (நவம்பர் 29,30) பெரும்​பாலான இடங்களி​லும், தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இதர கடலோர மாவட்​டங்களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​திகளுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும்.

புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்ணா​மலை, காஞ்​சிபுரம், சென்னை, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, நாமக்​கல், கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும்.

நாளை டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தி​லும், இதர வட தமிழக கடலோர மாவட்டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த காற்று வீசக்கூடும். திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்களில் அதி​க​னமழை​யும், சென்னை, காஞ்​சிபுரம், வேலூர், செங்​கல்பட்​டு, திருப்​பத்தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ரயில்​கள் நிறுத்​தம்

‘டிட்​வா’ புயலின் தாக்​கத்தால் ராமேசுவரம் தீவு பகு​தி​யில் பலத்த காற்​றுடன் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. இதனால், பாம்​பன் பாலத்​தில் நேற்று ரயில் போக்​கு​வரத்​துக்கு தடை விதிக்​கப்​பட்​டு, ராமேசுவரத்​துக்கு ரயில் சேவை நிறுத்​தப்​பட்​டது. பாசஞ்​சர் ரயில்​கள் ராம​நாத​புரம் வரை​யும், விரைவு ரயில்​கள் மண்​டபம் வரை​யும் இயக்​கப்​பட்​டன.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், அதிகனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (நவ.29) விடுமுறை விடப்பட்டுள்ளது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். அதாவது புயல் தன்னுடைய சக்தியை புதுப்பித்துக்கொண்டு பயணிக்கும் என சொல்லப்படுகிறது.

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை

மேலும் டெல்டா கடற்கரையை நெருங்கும்போது பசிபிக் உயர் அழுத்தம் காரணமாக புயல் மிகவும் மெதுவாக நகரவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அந்த நேரத்தில் புயலின் மேற்கு பகுதி அதாவது முன் பகுதி காவிரி டெல்டா பகுதிகளில் கரையைத் தொட இருப்பதாகவும், அது முழுமையாக கரையை கடக்காது எனவும் ஹேமச்சந்தர் கூறினார்.

சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று அதன் நகர்வை பொறுத்து, அது எங்கே கரையை கடக்கும்? என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடதமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு

இந்த புயல் காரணமாக டெல்டாவில் இன்றும், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரையிலும் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், அதுவும் டெல்டாவில் இன்று குறுகியநேரத்தில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வட தமிழகம்

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயலினால் இன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலும், ஏனைய கடலோர மாவட்டங்களில் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், நாளை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Featured post

8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!

  பதிவு: செவ்வாய்க்கிழமை,  பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை,  மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...