Sunday, January 25, 2026
உள்துறை மந்திரி அமித்ஷா வரும் ஜனவரி 28ம் தேதி தமிழகம் வருகை
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
3வது T20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
கவுகாத்தி,
டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 23ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் அல்லது ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து
டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), ஜாக் போல்க்ஸ் அல்லது கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, January 24, 2026
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி - யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இடம்பெறப்போகும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும்.
இறுதி வடிவம் பெற்ற கூட்டணி
கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது. பா.ம.க. ராமதாஸ் அணியையும், தே.மு.தி.க.வையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படாத நிலையில், தி.மு.க. கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.
ராமதாஸ் அணி, தே.மு.தி.க.
பா.ம.க. ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.வும் தி.மு.க. கூட்டணியில் தான் கைகோர்க்கப்போவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இடம்பெறப்போகும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அப்போதைய எண்ணிக்கையிலான தொகுதிகளே மீண்டும் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. புதிதாக இணைந்த மற்றும் இணையும் கட்சிகளுக்கே தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கின்றன.
இறுதி வடிவம் பெற்றுள்ளதாக கூறப்படும் தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தொகுதிகளின் விவரம் வருமாறு:-
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தி.மு.க. - 164, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, ம.தி.மு.க. - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 6, இந்திய கம்யூனிஸ்டு - 6, தே.மு.தி.க. - 6 (ஒரு ராஜ்யசபா சீட்), பா.ம.க. (ராமதாஸ் அணி) - 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -3, மக்கள் நீதி மய்யம் - 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2
இதுபோக, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்து விட்டது திமுக அரசு’’ - பிரதமர் மோடி
மதுராந்தகம்,
‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக அரசு. தங்கள் கண் முன்னால் தங்கள் குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து தாய், தந்தையரெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் அபாயத்தில் இருந்து நமது இளைஞர்களை நாம் மீட்டே ஆக வேண்டும்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘2026-ம் ஆண்டிலே தமிழ்நாட்டுக்கு எனது முதல் பயணம் இது. தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு சிறப்பானதொரு ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தமிழகத்தின் வளர்ச்சி நாயகர் எம்ஜிஆரின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து மதுராந்தகத்தின் ஏரி காத்த ராமரை நான் வணங்குகிறேன். அனைவரின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன்.
இன்று நேதாஜியின் பிறந்த நாள். தேசம், இந்த நாளை பராக்கிரம திருநாள் என கொண்டாடி வருகிறது. தமிழகத்தின் பராக்கிரமம் நிறைந்த தலைவர்கள் பலர், நேதாஜியோடு தோள் சேர்ந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தார்கள். வீரம் மற்றும் நாட்டுப் பற்று தமிழக மக்களின் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புனித மண்ணில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு என் நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
மக்கள் அலைகடனெ இங்கே திரண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேசத்துக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. அது, தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதுதான். திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக - என்டிஏ அரசை விரும்புகிறது.
இந்த மேடையைப் பாருங்கள். என்டிஏ குடும்பத்தின் நமது மூத்த தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க குழுமியிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் அனைவரும ஒரே முடிவோடு, ஒரே உறுதிப்பாட்டோடு இங்கே இணைந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அந்த உறுதிப்பாடு.
நாம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசின் முடிவுக் காலம் (கவுன்டவுன்) தொடங்கிவிட்டது. இதை என்னால், தெளிவாகக் காண முடிகிறது.
ஆட்சி செய்ய நீங்கள் திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால், ஆற்றியது என்னமோ பூஜ்ஜியம்தான்.
திமுக அரசை மக்கள் CMC அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பாஜக - என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசு இருக்கிறது என்றால், இங்கு ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது. நீங்கள் திமுகவில் முன்னேற வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு ஆமாம் சாமி போட்டாக வேண்டும். இங்கு 3-4 பாதைகள் மட்டுமே இருக்கின்றன. வம்சாவளி, ஊழல், பெண்களை வசைபாடுவது, நமது கலாச்சாரத்தை வசைபாடுவது ஆகியவையே அவை.
இந்த காரணத்தால்தான் திமுகவில் இருப்பவர்களால் கட்சியில் முன்னேற முடிகிறது. இதன் பாதிப்பை தமிழ்நாடு சுமக்க வேண்டி இருக்கிறது. இங்கே ஊழல் எவ்வாறு மலிந்திருக்கிறது, அந்த ஊழல் பணம் யாருடைய பைகளுக்குச் செல்கிறது என்பதை சிறு குழந்தைகூட நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது.
தமிழ்நாடு எப்படிப்பட்ட பூமி என்றால், இதுதான் பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்க கால இலக்கியங்கள், விஞ்ஞானம், ஆலயங்கள், தொழில்நுட்பம், பாரத நாட்டின் கவுரவத்தை உயர்த்தின.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டை திமுகவின் கொடூர கரங்களில் இருந்து நாம் விடுவித்தாக வேண்டும். எந்த அளவுக்கு தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறதோ, அந்த அளவு தேசமும் முன்னேற்றம் அடையும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள என்டிஏ அரசாங்கம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை ஆற்றி இருக்கிறது. 2014-க்கு முன்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் என்டிஏ அரசு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
இதுமட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு 11 லட்சம கோடி ரூபாய் உதவிகளை அளித்திருக்கிறது. ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டாட்சியின்போது ஏழைகள், பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலன்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடி மட்டும்தான் அரங்கேறின.
திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் பட்ஜெட்டுக்கு அளித்த நிதியைவிட என்டிஏ அரசு ஏழு மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற நவீனமான, விரைவாகச் செல்லக்கூடிய, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்களை என்டிஏ அரசுதான் அளித்திருக்கிறது.
தமிழநாட்டின் மிகப் பெரிய பலம், நமது விவசாயிகள், நமது மீனவர்கள்தான். என்டிஏ அரசின் கொள்கைகள் காரணமாக தேசத்தின் விவசாயம் மற்றும் மீன்வளத் துறையில் சாதனைப் படைக்கும் உற்பத்தி எட்டப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு நிலையிலும் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ஆதரவாக இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.
முன்பு குறைவான விவசாயிகளிடம் மட்டுமே வங்கிக் கணக்குகள் இருந்தன. என்டிஏ அரசாங்கம் வங்கிக் கணக்குகளை திறந்து கொடுத்தது. அதோடு, விவசாயிகளுக்கான பிரதமரின் கவுரவக் கொடை திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
என்டிஏ அரசாங்கம் பிரதமரின் மீன் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மீனவர்களுக்கு 50 ஆயிரம் கடன் அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.
வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், இங்கே இருப்பதோ திமுக அரசு. இவர்கள் நமது இளைஞர்களை போதைப் பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
தாய், தந்தையெரல்லாம் தங்கள் கண்களுக்கு முன்பாக, தங்கள் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு நாசமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும்.
திமுக அரசாங்கத்தில் போதைப் பொருள் பெருங்குற்றவாளிகளும் மதுபான பெருங்குற்றவாளிகளும் செழிப்பாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ மக்களின் உடல் நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது’’ என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, January 23, 2026
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 23, 2026, தை 09, விசுவாவசு வருடம் 08:00 AM
நெல்லை,
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வரும் 1-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையார் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது.
வரும் 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
2-ந்தேதி காலை 10 மணிக்கு கீழரதவீதி சவுந்தர சபை மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சியும், பின்னர் சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவமும் நடைபெறுகிறது. 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சொக்கப்பனை முக்கு அருகே உள்ள சந்திர புஷ்கரணி எனப்படும் வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை - தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்...!
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார்.
பின்னர், பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி உரையை நிறைவு செய்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, January 22, 2026
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பாரா? சட்டசபை தேர்தலில் கூட்டணியா?.. தனித்து போட்டியா?..
சென்னை,
மாமல்லபுரத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சிக்கு முன்னரே முந்தி கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசார தேரை ஓட்ட தொடங்கி விட்டார்.
அதே சமயத்தில், மகளிருக்காக செயல்படுத்திய திட்டங்கள் உள்பட தாங்கள் கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், ஆளும் கட்சியான தி.மு.க. நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருந்தாலும், ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதேசமயம் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்கள் நடந்தன. அதேநேரத்தில், கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
ஜனநாயகன் பட விவகாரம், சி.பி.ஐ. விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களில் விஜய் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்தநிலையில், வருகிற 25-ந்தேதி விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். 25-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, த.வெ.க. தேர்தல் பிரசார ஆலோசனை குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில், தேர்தல் பிரசார வியூகம், பிரசார மேற்கொள்ள வேண்டிய இடங்கள், மக்கள் சந்திப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி பிரசார பயண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “த.வெ.க. சார்பில் வருகிற 26-ந்தேதி சென்னையில் இருந்து எங்கள் பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளுடன் பணிகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு இடத்திலும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்க இருக்கிறோம். கூட்டணியா?.. தனித்து போட்டியா? என்பது குறித்து விஜய் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, January 21, 2026
T.T.V. Dhinakaran’s AMMK returns to NDA in Tamil Nadu ahead of Assembly ...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, January 20, 2026
கவர்னர் ஆர்.என்.ரவி 4-வது ஆண்டாக தமிழக சட்டசபை உரையை புறக்கணித்து வெளியேறினார்
சென்னை,
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றனர்.
சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். அங்கு நின்றபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் மு.அப்பாவுவும், இடது புறம் போடப்பட்டிருந்த இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமாரும் அமர்ந்தனர்.
சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, கவர்னர் உரை நேரலையாக வழங்கப்படும். ஆனால், இன்று நேரலை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி, 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை.
2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்த நிலையில், இந்த ஆண்டும் அவர் உரையை புறக்கணித்து வெளியேறி இருக்கிறார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, January 19, 2026
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - கவர்னர் உரை நிகழ்த்துவாரா?
பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026, தை 04, விசுவாவசு வருடம் 06:30 PM
சென்னை,
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை நாளை கூடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.
கவர்னர் உரை
அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடது புறம் கவர்னரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டு இருக்கும்.
சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும்.
முறையாக நிகழ்த்துவாரா?
கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அனேகமாக, வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.
அதே நேரத்தில், நாளைய கூட்டத்தில் கவர்னர் தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
உறவில் விரிசல்
அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை.
2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.
கேள்விக்குறி
2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இப்படி கவர்னர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, நாளைய சட்டசபை கூட்டத்தில் முறையாக வாசிப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அமெரிக்க வரி விதிப்பால் மூலப்பொருள் விலை உயர்வு - கோவையில் வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம்
கோவை,
கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால் கோவை, திருப்பூரில் ஜவுளித்தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஜவுளி தொழில் துறையினர் கூறியதாவது:-
கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததால் அது ஒரு பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் அமெரிக்க சந்தைக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி பூஜ்ஜியமாகி விடும். 50 சதவீத வரிக்கு கூடுதலாக, சாத்தியமான பிற நிலையான வரிகளும் உள்ளன.
இதனால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதற்கிடையே அமெரிக்கா 500 சதவீத வரி விதிக்கப்போவதாக கூறுகிறார்கள். அப்படியானால் ஜவுளி ஏற்றுமதி சரிவை சந்திக்கும். எனவே மாற்று வழியாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டு சந்தைகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும் ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற பிற சந்தைகள் உள்ளன, அவற்றில் சில வரம்புகள் உள்ளன.
ஆப்பிரிக்க சந்தைகள் நம்பகத்தன்மையற்றதால் சவாலாக இருக்கும். ஆசிய சந்தைகள் சிறியவை. அவற்றை மேம்படுத்தி அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வார்ப்படம் மற்றும் வால்வுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி மீதான தாக்கம் குறித்து தொழில்முனைவோர் கூறியதாவது:-
வார்ப்புத்தொழில் துறை இதுவரை வெளிப்படையான பாதிப்பை சந்திக்க வில்லை. ஆனாலும் அடுத்த சில மாதங்களில் 50 ஆயிரம் வேலை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முதலில் பாதிப்பு இருக்கும். வார்ப்பட தொழிலை பொறுத்தவரை, ஒவ்வொரு நிறுவனமும் முதலில் தேவையை புரிந்துகொண்டு உற்பத்தி பிரிவை வடிவமைக்க வேண்டும். தொடர் ஆய்வுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வர 7 மாதங்களுக்கு மேல் ஆகும்.
கோவையில் பம்புகள், மோட்டார்கள், ஆட்டோமொபைல், ஜவுளி எந்திரங்கள், சுரங்கம் மற்றும் கட்டுமானம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எந்திர கருவிகள், காற்றாலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.2 மெட்ரிக் டன் இரும்பு வார்ப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையில் இருந்து சராசரியாக 0.75 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பம்ப் தொழில் முனைவோர் கூறுகையில், அமெரிக்க வரிவிதிப்பு பம்ப் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. இது பெரும்பாலும் உள்நாட்டு சந்தையை சார்ந்து உள்ளது. ஆனாலும், அமெரிக்க வர்த்தகத்தை நம்பி உள்ள கோவையை சேர்ந்த மிக சில பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றனர்.
வால்வு உற்பத்தியாளர்கள் கூறும்போது, வால்வு உற்பத்தி துறையில் பெரிய வேலை இழப்பு ஏற்படாது. ஆனால் நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. ஐரோப்பா மற்றும் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தி அமெரிக்க தாக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.தற்போது கோவையில் மூலப்பொருள் விலை உயர்வு, அமெரிக்க வரி உயர்வு தாக்கம் காரணமாக வேலை இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, January 18, 2026
சி.பி.ஐ. விசாரணை - டெல்லி புறப்பட்டார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை,
இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதில் 12-ந்தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’ என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.
அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதற்காக விஜய் தற்போது தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
இந்தூர்,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வதோதராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான, ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
கடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை 47.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (112 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில் (56 ரன்கள்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. அதேபோல் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி எடுபடவில்லை. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் கடைசி வரை களத்தில் நின்று 131 ரன்கள் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு வில் யங் (87 ரன்கள்), கிளென் பிலிப்ஸ் (32 ரன்கள்) பக்கபலமாக இருந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முந்தைய இரு ஆட்டங்களிலும் நல்ல தொடக்கம் கண்டாலும் (26, 24 ரன்கள்) அதனை பெரிய இன்னிங்சாக மாற்றவில்லை. எனவே அவர் நிலைத்து நின்று ஆடினால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தனர். இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம். அர்ஷ்தீப் சிங் அல்லது புதுமுக வீரர் ஆயுஷ் பதோனி ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் இறங்கும். அந்த அணியில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (215 ரன்கள்), வில் யங், டிவான் கான்வே, ஹென்றி நிகோல்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கைல் ஜாமிசன், கிறிஸ்டியன் கிளார்க் வலுசேர்க்கின்றனர்.
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய அணி உள்ளூரில் இருநாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது கிடையாது. இதனால் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லா வகையிலும் வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - எடப்பாடி அதிரடி அறிவிப்பு
சென்னை,
* ஆண்களுக்கும் கட்டணமில்லா பஸ் வசதி
* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
* வீடு இல்லாதவர்களுக்கு புது வீடு
* ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்
அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார்.
ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் என எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைமை கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பெரிய ரோஜா மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் தலைமை கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 109 கிலோ ராட்சத கேக் வெட்டி அனைவருக்கும் தன் கைப்பட வழங்கினார்.
5 தேர்தல் வாக்குறுதிகள்
இதன் பின்னர் தலைமை கழகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது முதல் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் அதிரடியாக அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் 17–வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அண்ணா தி.மு.க.வின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்
மகளிருக்கு ரூ.2000
1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் வீடு
3. அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
பெண்களுக்கு ஸ்கூட்டர்
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000 - மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஏற்கனவே அரசுக்கு அதிக அளவில் கடன் சுமை உள்ளது. இந்த நிலையில் இந்த வாக்குறுதிகள் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர்.
எங்களிடம் நிர்வாகத் திறமை உள்ளது
அவர்களுக்கு (தி.மு.க.) நிர்வாக திறமை இல்லை. எங்களுக்கு நிர்வாகத் திறமை இருக்கிறது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொரோனா காலத்திலேயே அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு இருந்தது. அப்போதே நாங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம். நிதி நிலைமையை உருவாக்கி தந்தோம். தி.மு.க. ஆட்சியில் நிதி மேலாண்மை குழு அமைத்தார்கள். ஆனாலும் கடன் குறையவில்லை. தி.மு.க. ஆட்சியின் முடிவில் கடன் சுமை 5.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில் ஆண்களுக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாம் சரி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மண்டல வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு மனுக்களை பெற்று அறிக்கை தயார் செய்து அளிப்பார்கள். அதில் மக்கள் நினைப்பது தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, January 17, 2026
இன்று காணும் பொங்கல் - தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு - மெரினாவில் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு
சென்னை,
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினர் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப்பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் பிரத்யேக அடையாளப் பட்டை (பேண்ட்) கட்டிவிடப்படுகிறது.
மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் அதிக திறன் கொண்ட ‘ஏஐ’ ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவை மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கைத் தகவல்களை ஒலிபரப்பி வருகின்றனர்.
கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சி,செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா, பொழுதுபோக்கு தலங்கள், பூங்காக்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, January 16, 2026
சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகவும், பாதுகாக்கவும் கொண்டாட கமிஷனர் அருண் சிறப்பு நடவடிக்கை - கடற்கரையில் குளிக்கத் தடை
சென்னை,
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுவதற்காக சென்னை காவல்துறை கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
17–ந் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக கமிஷனர் ஆ.அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை மூலம் விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில்
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு அமைக்கப்பட்டும், பைனாகுலர், ட்ரோன் கேமிரா மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும் மற்றும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு அடையாள அட்டை
குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை: கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
விருப்பத்துக்கு ஏற்ப பேருந்துகளில் பயணம் செய்யும் ‘சென்னை உலா’ - அமைச்சர் சிவசங்கர் துவக்கினார் - ரூ.50 கட்டணத்தில் நாள் முழுக்கச் சுற்றலாம்
சென்னை,
போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” – விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை, இன்று சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். அதோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
“சென்னை உலா” பேருந்து – “ஹாப் -ஆன் ஹாப் -ஆஃப்” சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும், இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னைவாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.
* பழங்கால, பாரம்பரியம் -1980களின் காலகட்ட பேருந்துகள் — சென்னையின் பொதுப் போக்குவரத்து பரிணாமத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் கூடிய ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (HO-HO)மாதிரி – அணுகல் மற்றும் வசதி உள்ளது.
* குறிப்பாக மகளிர், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பள்ளி குழுக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயக்கும்.
* இந்தப் பாரம்பரியப் பேருந்தில், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒன் செயலி சிறப்பு சேவைகள்:
சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50 மட்டுமே.
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை மற்றும் நடத்துனரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சொகுசுப் பேருந்துகட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.
16ந் தேதி முதல் 18ந் தேதி வரை
பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16–18 காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும். வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.
அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும். இனி வரும் விழாக்களிலும் இப்பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, January 15, 2026
Camberley, Madurai to link cultural twinning pact
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் - 2026
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!
சென்னை,
பொங்கல் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி
தமிழ் கலாச்சாரத்தையும், இயற்கையுடனான நமது பிணைப்பையும் பொங்கல் கொண்டாடுகிறது. இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இயற்கைக்கு மரியாதை செலுத்துவதை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற பொங்கல் நம்மை ஊக்குவிக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல் வாழ்த்துகள். ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இப்பண்டிகை வழிநடத்தட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள், தைத்திருநாள், உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாக திகழ்வது பொங்கலாகும். உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக் கோலம், விளையாட்டுப் போட்டிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழகமெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைய எனது நல் வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
உழவுத் தொழிலை மையமாகக்கொண்ட தமிழரின் வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டுக் கொண்டாட்டமான பொங்கல் திருநாளில், உலகத் தமிழர் அனைவருக்கும் எனது உளமர்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
உழைப்பை போற்றும் உன்னத திருவிழாவான இந்த நன்னாளில் இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கி, நம் அனைவரின் உள்ளத்திலும் ஊக்கமும், உத்வேகமும் சிறந்து விளங்கட்டும்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தி.க. தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மநீம தலைவர் கமல்ஹாசன், தவாக தலைவர் வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பெருந் தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக நிர்வாகி சரத்குமார், இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி நிறுவனர் எம்.எஸ்.மார்டின், இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊர்களில் உற்சாகம்
சென்னை, கோவை, மதுரை,திருப்பூர், திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்கள் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு - உலகம் முழுவதும் கொண்டாடும் விழா என பெருமிதம்
பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 15, 2026, தை 01, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி,
டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ‘ஒரே பாரதம் உன்னதபாரதம்’ என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரும்பு, வாழை தோரணம்
இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
“ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.
தமிழ் பொங்கல் வாழ்த்து
விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தன் உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழா. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான் பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்துதமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது. தமிழ் கலாசாரம் என்பது முழு தேசத்தின் ஒரு பொதுவான பாரம்பரியம்.
இயற்கையின் மீதான நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளுக்குள் நின்றுவிடாமல், அது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்பதை பொங்கல் பண்டிகை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.
கடந்த ஆண்டு, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாரம்பரியமான தமிழ் கலாசாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. திருக்குறள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.
வாழ்க தமிழ், வளர்க பாரதம்! வாழ்க தமிழ், வளர்க பாரதம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்.
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. திருக்குறளை போற்றி பாடல் பாடப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பிரதமர் மிகவும் ரசித்து பார்த்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
சபரிமலையில் தோன்றிய மகர ஜோதி... லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்
சபரிமலை,
தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
சபரிமலையில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகர விளக்கு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் மகரஜோதியை வழிபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் திகழ்கிறது. மகரஜோதியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாலை அணிந்து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்தர்கள், பொன்னம்பலமேட்டில் மகரஜோதியைக் காண நேற்று காலை முதலே திரண்டிருந்தனர்.
முன்னதாக, மகரஜோதியை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்பரிய ஆபரணங்கள் பந்தளத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது.
திரு ஆபரணப்பெட்டி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டதால் காலை 10 மணி முதல் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, காலை 11 மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊர்வலம் சென்ற பிறகே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சந்நிதானம் வந்த திரு ஆபரணங்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
மகரஜோதி வழிபாட்டுக்கு முன்னோடியாக நேற்று மாலை மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது. சபரிமலை முழுவதும் சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.
தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரிந்ததும், சபரிமலையில் திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் சரணகோஷங்கள் முழங்க தரிசித்தனர். பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும், வண்டிப்பெரியாறு, புல்மேடு, பஞ்சாலிமேடு, சத்திரம், பருந்துப்பாறை, அய்யன்மலை, நீலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
மகரஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மகரஜோதியை தரிசித்த பக்தர்கள், புல்மேட்டில் இருந்து சத்திரம், வல்லக்கடவு வழியாக சந்நிதானம் சென்றனர். இரவு 11 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. மண்டல, மகரவிளக்கு விழாக்களில் இதுவரை 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, January 13, 2026
Urgent need to protect youth from falling prey to drugs - Vaiko | Samath...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, January 12, 2026
Centre attempting to replace Constitution with Manusmriti, alleges Dravi...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
R.B.Udhaya Kumar Says, Rs.3000 Pongal gift not from the DMK party fund? ...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார்
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6-ம் தேதி சம்மன் அனுப்பியது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இதற்காக, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.
இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஏற்கெனவே சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரச்சாரத் துக்கு விஜய் பயன்படுத்திய சிறப்பு பேருந்தை கரூரில் சிபிஐ மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தனர்.
அந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிபிஐ விசாரணை குறித்து தவெக கட்சி நிர்வாகிகள் கூறும் போது, “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மாநில காவல் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் தவெகதான் கோரிக்கை விடுத்திருந்தது. எனவே, இப்போது சம்மனை தவிர்ப்பது சரியாக இருக்காது. டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு அளிப்பார்” என்றனர். விஜய் இன்று ஆஜராக உள்ள நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் குற்றப்பத்திரிகை
விஜய்யிடம் கேட்பதற்காக 50-க்கும் மேற்பட்ட முக்கியமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ தனது இறுதிக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக விஜய் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? குடிநீர் வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அம்பத்தூரைச் சேர்ந்த வக்கீல் வி.எஸ்.சுரேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் விரிவாக்கம், தென்றல் நகர் பகுதியில் இருந்து புழல் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்ல மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி 2021–22-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் இந்த பள்ளமான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு கால்வாய் வழி செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதியில் தேங்கியது. அதுவும், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கியதால், எங்கள் பகுதி மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள், வயதானவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
இதுகுறித்து ஆய்வு செய்த சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் சூப்பிரண்டு என்ஜினீயர், பள்ளமான பகுதியில் இதுபோல கழிவுநீர் தேங்கி நிற்பது தவிர்க்க முடியாதது என்று கூறிச் சென்றார்.
எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ‘‘மனுதாரர் குடியிருக்கும் பகுதியில் குடிநீருடன், மழைநீர், கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்து சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர், சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர் பிரமாண மனு தாக்கல் செய்யவேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Devotees witness ‘Ashtami Chapparam’ in Madurai | Meenakshi Sundareswara...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, January 11, 2026
"AIIMS Madurai construction, will be completed by 2027" - Health Ministe...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Advocate Kumaraguru (BJP) Press Meet | HC Fumes Over Officials Failure I...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
R.B.Udhaya Kumar Says, Is the 3000 rupee gift for Pongal or an election ...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
‘200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயமாக’ வெற்றி பெறுவோம் - முதல்வர் ஸ்டாலின்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 2026, மார்கழி 27, விசுவாவசு வருடம் 02:40 AM
சென்னை,
இதுவரை ஆற்றியிருக்கும் பணிகளைப் பார்த்தால் ‘200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயமாக’ வெற்றி பெறுவோம் என்று பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
‘‘கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியுடன் தான் நான் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன்.
பொங்கல் விழாவை இன்றைக்கு நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது, என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை இப்படி எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளில் 50 சதவிகிதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவிகிதம் தான் மீதம் இருக்கிறது.
சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு...
இன்றைக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். ஏன், பா.ஜ.க.வில் இருக்கக்கூடியவர்கள் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், தி.மு.க.-காரர்கள் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 1967-இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது அன்றைக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
“திமுக-காரன் ஒரு சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது” என்று வெளிப்படையாகவே சென்னவர் அவர். அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகள், ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் நம்முடைய செயல் வீரர்கள் ஆற்றும் அந்தப் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது - 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று, நம்முடைய கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
சபதமெடுப்போம்
ஆனால், நாம் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கைஎனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம் சபதம் எடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, முனைவர் பர்வீன் சுல்தானா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், வாரியத் தலைவர் ரங்கநாதன், பகுதிக் கழக செயலாளர்கள் முரளி, நாகராஜன், கொளத்தூர் பகுதியைச் சார்ந்த கிளைக் கழகத்தின் செயலாளர்கள், சார்பு மன்ற நிருவாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் துர்கா ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை "திராவிட பொங்கல் விழா" மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று காலை வருகை தந்த போது முதலமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த பெண்கள் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றனர். பொங்கல் விழா நடைபெறும் இடம் கரும்பு மற்றும் வாழைத் தோரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மிகப்பெரிய பொங்கல் பானை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பசு மற்றும் கன்று ஆகியவையும் நின்று கொண்டு இருந்தது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்து முடித்ததும் அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வழங்கினார்கள்.அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள்
விழாவில் பங்கேற்ற 8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Featured post
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் ப...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...




































