Saturday, June 20, 2020

ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103



சீன ராணுவம் இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்றால், எதற்காக மோதல் நடைபெற்றது? - ப. சிதம்பரம் கேள்வி



இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை



உங்கள் ரத்தம் என்ன வகை? கொரோனாவில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டா?

உங்கள் ரத்தம் என்ன வகை? கொரோனாவில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு கணமும் யாருக்கேனும் இந்த பூமிப்பந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஏறத்தாழ 200 நாடுகளில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி இந்த தொற்று மொத்தம் 83 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து இருக்கிறது, சற்றேறக்குறைய 4½ லட்சம் பேரின் உயிரைப்பறித்தும் இருக்கிறது என்று கணக்கு சொல்கிறது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம்.



சென்னையில் முழு ஊரடங்கை மீறியதாக முதல் நாளில் 2,436 பேர் மீது அதிரடி வழக்கு - 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்