Wednesday, July 8, 2020

தன்னைப் போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார் – ராகுல் காந்தி

தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதல் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்டைகள் ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.


தமிழகத்தில் இன்று (ஜூலை 08) 3,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப்போகின்றன: ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவின் மோசமான பொருளாதார மேலாண்மையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போவதாக காங்., எம்பி, ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரசை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளதாக காங்., எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். அந்தவகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலை நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.



அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று – அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Featured post

கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே  17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 09:30 AM திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெ...