பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 07:30 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 மனுக்கள் ஏற்கப்பட்டன.
முறையாக பூர்த்தி செய்யப்படாத 2 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில், அத்தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அடுத்த சில தினங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன. அதற்கான பெயர், சின்னங்களை அச்சிடும் பணிகளும் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 17-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 151 செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்களை வீடியோவில் பதிவு செய்து, செலவினத்தை மதிப்பிட்டு வருகின்றனர். அவற்றை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் பணிகளை இன்றுமுதல் தீவிரப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Friday, April 10, 2026
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 4500 வேட்பாளர்கள்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு - வரலாறு காணாத வகையில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 06:30 AM
புதுச்சேரி -புதுடெல்லி,
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 போலீஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
கண்ணூர் மாவட்டம் பினராயி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளாவில் ஒட்டுமொத்தமாக 78.21 சதவீத வாக்குகள் பதிவாகின.
அசாமின் 126 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியின் அசாராவில் குடும்பத்துடன் வாக்களித்தார். திப்ருகார் பகுதியில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பெரும்பாலான பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 85.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
மே 4-ல் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என 2 கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
எஸ்ஐஆர் காரணமாக அதிகரிப்பு
நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் 2.78 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியின்போது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் என 9.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, புதுச்சேரியில் எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 9.50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல்முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். கேரளா, புதுச்சேரியில் எஸ்ஐஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டதால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. பதிவேடு கணக்கெடுப்பின்போதே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அங்கு தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
புதுச்சேரி -புதுடெல்லி,
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 போலீஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
கண்ணூர் மாவட்டம் பினராயி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளாவில் ஒட்டுமொத்தமாக 78.21 சதவீத வாக்குகள் பதிவாகின.
அசாமின் 126 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியின் அசாராவில் குடும்பத்துடன் வாக்களித்தார். திப்ருகார் பகுதியில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பெரும்பாலான பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 85.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
மே 4-ல் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என 2 கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
எஸ்ஐஆர் காரணமாக அதிகரிப்பு
நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் 2.78 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியின்போது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் என 9.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, புதுச்சேரியில் எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 9.50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல்முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். கேரளா, புதுச்சேரியில் எஸ்ஐஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டதால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. பதிவேடு கணக்கெடுப்பின்போதே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அங்கு தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Posts (Atom)
Featured post
கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே 17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 09:30 AM திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெ...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

