Friday, April 10, 2026

இறுதி வேட்​பாளர்​கள் பட்டியல் வெளி​யீடு - சட்டப்பேரவை தேர்​தல் களத்தில் 4500 வேட்பாளர்​கள்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 07:30 AM

சென்னை,

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் இறுதி வேட்​பாளர்களின் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் உள்ள 234 தொகு​தி​களில் சுமார் 4,500 வேட்​பாளர்​கள் போட்டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. மார்ச் 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி நிறைவடைந்​தது. 234 தொகு​தி​களி​லும் மொத்​தம் 7,599 வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. 7-ம் தேதி வேட்​புமனுக்​கள் பரிசீலனை நடை​பெற்​றது. இதில் 5,139 மனுக்​கள் ஏற்​கப்​பட்​டன.

முறை​யாக பூர்த்தி செய்​யப்​ப​டாத 2 460 மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. மனுக்​களை திரும்​பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்​கப்பட்​டது. இதில் 500-க்​கும் மேற்பட்ட வேட்​புமனுக்​கள் திரும்​பப் பெறப்​பட்​டன.

இதையடுத்​து, நேற்று மாலை இறுதி வேட்​பாளர்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. 234 தொகு​தி​களி​லும் 4,500-க்​கும் மேற்​பட்ட வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது. இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்​பாளர்​களுக்​கான சின்​னங்​கள் ஒதுக்​கப்​பட்​டன.

அந்​தந்த தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் உறு​தி​யாகி​யுள்ள நிலை​யில், அத்​தொகு​தி​களுக்​கான தபால் வாக்​குச்​சீட்​டு​களை அச்​சிடும் பணி​கள் இன்று தொடங்​கு​கின்​றன. அடுத்த சில தினங்​களில் தேர்​தல் அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்கு அடுத்​தகட்ட பயிற்சி வழங்​கப்பட உள்​ளது. அப்​போது அவர்​களிடம் தபால் வாக்​குச் சீட்​டு​கள் வழங்​கப்பட உள்​ளன.

அதனைத் தொடர்ந்​து, வேட்​பாளர்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​ற​வாறு, தேவை​யான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் கணக்​கிடப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் ஒவ்​வொன்​றி​லும் 16 வேட்​பாளர்​களின் பெயர் மற்​றும் சின்​னங்​கள் இடம்​பெறும். வேட்​பாளர்​களின் எண்​ணிக்கை அதற்கு மேல் இருந்​தால் கூடு​தலாக ஒரு வாக்​குப்​ப​திவு இயந்​திரம் இணைக்​கப்​படும். அதி​கபட்​ச​மாக 4 அலகு​களை சேர்க்க முடி​யும். அவற்​றில் 63 வேட்​பாளர்​கள் மற்​றும் ஒரு நோட்டா பொத்​தான் இடம்​பெறும்.

ஏற்​கெனவே, தொகுதி வாரி​யாக வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பிரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் வேட்​பாளர்​களின் பெயர்​கள் மற்​றும் சின்​னங்​களை பொருத்​தும் பணி​கள் ஓரிரு தினங்​களில் தொடங்க உள்​ளன. அதற்​கான பெயர், சின்னங்​களை அச்​சிடும் பணி​களும் இன்று தொடங்​கு​கின்​றன.

இந்த தேர்​தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்​றாம் பாலினத்​தினர் என மொத்​தம் 5,73,43,291 பேர் வாக்​களிக்க உள்​ளனர். இவர்​களுக்கு வீடு வீடாக சென்று வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூல​மாக வாக்​காளர் சீட்டு விநி​யோகம் செய்​யும் பணி இன்று தொடங்​கு​கிறது. 17-ம் தேதிக்​குள் இப்​பணி​களை முடிக்க வேண்​டும் என மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்கு தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இத்​தேர்​தலில் சுமார் 75 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் தயார்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதில் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான மற்​றும் மிக​வும் பதற்​ற​மானவை​யாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 23 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட துணை ராணுவப்​படை​யினர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யான நிலை​யில், தமிழகம் முழு​வதும் நியமிக்​கப்​பட்​டுள்ள 151 செல​வின பார்​வை​யாளர்​களும், வேட்​பாளர்​களின் பிரச்​சார செல​வினங்​களை வீடியோ​வில் பதிவு செய்​து, செல​வினத்தை மதிப்​பிட்டு வரு​கின்​றனர். அவற்​றை, வேட்​பாளர்​களின் செலவு கணக்​கில் சேர்க்​கும் பணி​களை இன்​று​முதல் தீவிரப்​படுத்த இருப்​ப​தாக தகவல் வெளி​யாகியுள்ளது.

புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு - வரலாறு காணாத வகை​யில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 06:30 AM

புதுச்சேரி -புதுடெல்லி,

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது. புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது.

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் - திமுக கூட்​டணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 4 பிராந்​தி​யங்​களி​லும் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்கு நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,099 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​தல் பணி​யில் 5,000 அதி​காரி​கள், பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

காலை முதலே மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.

இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்​குப்பதிவு நடந்​துள்ளது‌. தொடர்ந்து பெறப்​படும் தபால் வாக்​கு​கள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்​தல் அதி​காரி ஜவஹர் கூறி​யுள்​ளார். புதுச்​சேரி​யில் இதுவரை நடந்த தேர்​தல்​களில் இதுவே அதி​கபட்ச வாக்​குப்​ப​திவு ஆகும்.

கேரளா​வின் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கும் ஒரே கட்​ட​மாக நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது. 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.69 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 30,471 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. 76,203 போலீ​ஸார், மத்​திய படைகளை சேர்ந்த 140 அணி​கள் மற்​றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணி​களை சேர்ந்த வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 1.46 லட்​சம் அரசு ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

கண்​ணூர் மாவட்​டம் பின​ராயி நகரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் வாக்​களித்​தார். கேரளாவில் ஒட்​டுமொத்​த​மாக 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

அசாமின் 126 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆளும் பாஜக தலை​மையி​லான வடக்​கு-கிழக்கு ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. 722 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 2.50 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றுள்​ளனர். 31,486 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. மாநில போலீஸார், மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்கும் மேற்பட்ட வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். 2 லட்​சம் ஊழியர்​கள் தேர்​தல் பணி​யாற்​றினர்.

முதல்​வரும், பாஜக மூத்த தலைவரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்​டி​யின் அசா​ரா​வில் குடும்​பத்​துடன் வாக்​களித்​தார். திப்​ரு​கார் பகு​தி​யில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்​டர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் பலர் காயமடைந்​தனர். பெரும்​பாலான பகு​தி​யில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக நடை​பெற்​றது. 85.38 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

மே 4-ல் வாக்கு எண்​ணிக்கை

தமிழகத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி​யும், மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23, 29 என 2 கட்​ட​மாக​வும் சட்​டப் ​பேரவைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு​ எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

எஸ்​ஐஆர் காரண​மாக அதி​கரிப்பு

நாடு முழு​வதும் 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்​டது. கேரளா​வில் 2.78 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். எஸ்​ஐஆர் பணி​யின்​போது போலி வாக்​காளர்கள், இரட்​டைப் பதிவு, உயி​ரிழந்​தவர்​கள் என 9.06 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்​ர​வரி​யில் வெளி​யிடப்​பட்ட இறுதி வாக்​காளர் பட்​டியலில் 2.69 கோடி வாக்​காளர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். இந்நிலை​யில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்​கு​கள் பதி​வாகியுள்ளன.

அதே​போல, புதுச்​சேரி​யில் எஸ்​ஐஆர் திருத்​தத்​தின்போது 1.03 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டு, வாக்​காளர் பட்​டியலில் 9.50 லட்சம் வாக்​காளர்​கள் இடம் பெற்​றிருந்​தனர். முதல்​முறை வாக்காளர்​கள் 24,919 பேர் இருந்​தனர். கேரளா, புதுச்​சேரி​யில் எஸ்ஐஆர் காரண​மாகவே வாக்கு சதவீதம் அதி​கரித்​துள்​ள​து.

அசாமில் தேசிய குடிமக்​கள் பதிவேடு ஏற்​கெனவே சரிபார்க்கப்பட்​ட​தால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்​லை. பதிவேடு கணக்​கெடுப்​பின்​போதே போலி வாக்​காளர்​கள்​ நீக்​கப்​பட்​ட​தால்​ அங்​கு தற்போது வாக்குப்பதிவு அதி​கரித்​துள்​ள​து.

Featured post

கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே  17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 09:30 AM திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெ...