Saturday, November 15, 2025

திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’

 


பதிவு: சனிக்கிழமை,   நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-50: AM

சென்னை,

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. அரசியல் அதிரடி படமாக உருவாகி உள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

மேலும் படத்தின் ஆடியோ உரிமைகள் ரூ.35 கோடிக்கு போயிருக்கிறது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.110 கோடிக்கு வாங்கி உள்ளது.

இதுவரை படத்தின் மொத்த வருவாய் ரூ.325 கோடியை தாண்டி இருக்கிறது. சாட்டிலைட் மற்றும் பிற பிராந்திய உரிமைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுவும் உறுதி செய்யப்பட்டால் படத்தின் வருவாய் ரூ.400 கோடியை நெருங்கும். படம்வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய வியாபாரத்தை பெற்று சாதனை படைத்து வருகிறது ‘விஜய்’யின் ஜனநாயகன்.

பிஹாரில் அமோக வெற்றி - 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி - முழு விவரம்

 

பதிவு: சனிக்கிழமை,   நவம்பர் 15, 2025, ஐப்பசி 29, விசுவாவசு வருடம் 06-20: AM

​பாட்னா,

பிஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தேர்தல் சமயத்தில் பிஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்​கிரஸ் - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார்.

'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் பாஸ்​வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 6 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டன.

இதில் பாஜக 89 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக பாஜக உரு​வெடுத்​துள்​ளது.

ஐக்​கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக்​ மோர்ச்சா 4, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன. அறு​திப் பெரும்​பான்​மைக்கு 122 தொகு​தி​கள் தேவை என்ற நிலை​யில் தே.ஜ.கூட்​டணி 202 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது. கடந்த தேர்​தலை​விட ஆளும் கூட்​டணிக்கு கூடு​தலாக 77 இடங்​கள் கிடைத்​துள்​ளன.

மெகா கூட்​ட​ணிக்கு பெரும் பின்​னடைவு

மெகா கூட்​ட​ணி​யில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்​கிரஸ் 61, இந்​திய கம்​யூனிஸ்ட் - எம்​எல் 20, விஐபி 15, இந்​திய கம்​யூனிஸ்ட் 9, மார்க்​சிஸ்ட் 4, ஐஐபி 3 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தின. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்​கிரஸ் 6, இந்​திய கம்​யூனிஸ்ட் - எம்​எல் 2, மார்க்​சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகு​தி​யில் வெற்றி பெற்​றன. மெகா கூட்டணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. கடந்த தேர்​தலை ஒப்​பிடும்​போது மெகா கூட்​டணி 75 இடங்​களை இழந்​துள்​ளது.

64 தொகு​தி​களில் தனித்​துப்​போட்​டி​யிட்ட ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. 

பகுஜன் சமாஜ்கட்சி ஒரு இடத்​தில் வென்​றது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஆம் ஆத்​மிக்கு ஒரு இடம்​கூட கிடைக்​க​வில்​லை.

துணை முதல்​வர்​கள்

சாம்​ராட் சவுத்ரி (தா​ராபூர்), விஜய்​கு​மார் சின்ஹா (லக்​கி​சா​ராய்) வெற்றி பெற்​றனர். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் (ராகோபூர்​)14,532 வாக்குகள் வித்​தி​யாசத்​தில் வென்றார். பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக நிதிஷ் மீண்​டும் பதவி​யேற்க உள்​ளார். 

பிரதமர் மோடி தனது சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘நல்​லாட்​சி, வளர்ச்​சி, சமூக நீதி வெற்றி பெற்​றுள்​ளது. இந்த வெற்​றியை சாத்​தி​ய​மாக்​கிய நிதிஷ் குமார், சிராக் பாஸ்​வான், ஜிதன் ராம் மாஞ்​சி, உபேந்​திர குஷ்​வா​கா​வுக்​கு ​பா​ராட்​டு​கள்​’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன? 

01. சட்டசபை தேர்தலுக்கு முன்பே, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., சார்பில், ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான், வேட்பாளர் தேர்வும் இருந்தது. 

02. கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது. 

03. அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொண்டர்களிடையே மன உறுதியை பா.ஜ., ஏற்படுத்தியது. 

04. மற்ற மாநிலங்களை போலவே, மோடி - நிதிஷ் குமார் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை பா.ஜ., எதிர்கொண்டது. 

05. கடந்த, 2020 தேர்தலில், மகத், ஷாபாத் பிராந்தியங்களில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பிராந்தியத்தில் உள்ள, 24 தொகுதிகளில், 2ல் மட்டுமே தே.ஜ., கூட்டணி வென்றது. இந்த தேர்தலில், ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ., பயன்படுத்தியது. 

06. கிராமப்புறங்களில் மக்களுக்கு உடனடி தீர்வு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ., ரேஷன் பொருட்களை வழங்கியதோடு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அடிப்படை உதவிகளையும் செய்தது. ஆனால், இலவசம் என்ற வார்த்தையை பா.ஜ., பயன்படுத்தவே இல்லை. 

07. பிரசாந்த் கிஷோரை பா.ஜ., வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. அவரை பற்றி பேசி வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேலிடம் விரும்பவில்லை.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...