Monday, June 29, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை மிஞ்சும் வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் கடந்த 25ம் தேதி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து 26ம் தேதி 3,645 பேருக்கும், நேற்று முன் தினம் 3,713 பேருக்கும், நேற்று 3940 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,079ல் இருந்து 1,141 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து இன்று 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனாவை ஒழித்து விட்டு சாதனைப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் என்றும், கொரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக்கொள்ளாதீர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை (மக்களை) நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!


இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி 16 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்குக்கு பின்னர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் ‘அன்லாக்-1’ என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அவை இந்த மாத தொடக்கம் முதல் அமலுக்கு வந்தன. சரிந்து வந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும், சொல்லி வைத்தாற்போல தொற்று புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்று தொடர்ந்து 5-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



பண மதிப்பிழப்பின் போது ரூ.1,911 கோடி பரிவர்த்தனை - வருமான வரித்துறை குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு

பண மதிப்பிழப்பின் போது ரூ.1,911 கோடிக்கு பரிவர்த்தனை நடந்ததாக கூறப்பட்ட வருமான வரித்துறை குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தன்னிடம் அந்த சமயத்தில் ரூ.48.31 லட்சம் மட்டுமே இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.


ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை


சென்னையில் இடி-மின்னலுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இடி-மின்னலுடன் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் வடமாவட்டங்களில் மட்டும் மழை குறைவாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.



DMK EX MP Arjunan Vs Tamil Nadu Police | Must Watch | Sicp

Thirumuruga Kirupanandha Variyar Mahabharatham Sorpozhivu - Tamil Speech...

Sunday, June 28, 2020

Indian National League Demonstration demanding complete cancellation of ...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு : முதல்வர் பழனிசாமி அதிரடி

கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். போலீசாரால் உயிரிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.



''கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்''- நடிகை சமந்தா



அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார்

நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின. முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.



சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு; அதிகபட்மாக ராயபுரம் மண்டலத்தில் 7,455 பேர் பாதிப்பு; இதுவரை 776 பேர் பலி..!!

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள்  திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக,  ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,400ஐ தாண்டியுள்ளது.


கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.



உலகளவில் கொரோனாவுக்கு ஒரு கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான்மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது.



Saturday, June 27, 2020

கொரோனா பிடியில் சென்னை.. அச்சத்தில் உறைந்த சென்னை வாசிகள்...

கொரோனா பிடியில் சென்னை...கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்து.: அச்சத்தில் உறைந்த சென்னை வாசிகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை சென்னை மாநகரம் மிஞ்சிவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் தற்போது உள்ளனர். தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,335-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின. முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.




தமிழகத்தில் இன்று கொரோனாவால் 3,713 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,025 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதிர்ச்சியளிக்கும் வகையில், நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.


Minister Selur Raju inspected Madurai Madakkulam Dank tarn without Socia...

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் உயிரிழப்பு




இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது: 15,685 பேர் பலி

நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.



Friday, June 26, 2020

DMK MLA Moorthy Booked for Threatening BJP Functionary | Detailed Report...

Tamil Nadu Chief Minister Coimbatore District Visit | Athikadavu-Avinas...

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று - உயர்நீதிமன்றம் கருத்து

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற விசாரணையை பொதுமக்கள் குறைத்து எடைபோட்டு விட வேண்டாம் என்றும் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் பரிந்துரை அளித்தனர்.

போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? - வரும் 29-ம் தேதி முதல்வர் ஆலோசனை

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?; மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Thursday, June 25, 2020

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-



நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை

கொரோனா பாதிப்பால் நேர்ந்த சோகம்; புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை...பெரும் அதிர்ச்சியில் நெல்லை மக்கள்..!!

நெல்லையில் அல்வாவுக்கு புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வாதான், இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி மவுசு உண்டு என்றே சொல்லலாம். நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா என்பது பல நூற்றாண்டுகள் பழமையானது.


ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள்: கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி செய்யும் நடவடிக்கை மு.க.ஸ்டாலின்

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள்: கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி செய்யும் நடவடிக்கை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு காணொலக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.



ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்



விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல தடை - டிஜிபி திரிபாதி




அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட பாத்திமா ரெஹானா

அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட சர்ச்சை புகழ் பாத்திமா ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். பாத்திமா ரெஹானா என்ற பெண் செயற்பாட்டாளரும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.


முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேர் கொரோனாவால் பாதிப்பு

முதன்முறையாக ஒரே நாளில் 16,922 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.73 லட்சத்தை தாண்டியது; 14,894 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,105-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 16,922 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,894 பேர் உயிரிழந்த நிலையில் 2,71,697 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Wednesday, June 24, 2020

கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பது போன்று, தற்போது தமிழக அரசு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீர் உள்ளிட்ட ப்ரோப்பைலக்டிக் மருந்துகள் அடங்கிய தொகுப்பையும் வீடு வீடாக சென்று வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது.


நாளை முதல் தமிழக மாவட்ட எல்லைகள் மூடல் - மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ - பாஸ் அவசியம்

நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.



வில்சன் கொலை வழக்கு: 'சிம் கார்டு' வாங்கி கொடுத்த 12 பேர் மீது குற்றப்பத்திரிகை



அக்டோபரில் உச்சம்...! சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாறுகிறது...!!

அக்டோபரில் உச்சம் அடையும் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.



கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 15,968 ஆக உயர்வு



7-days intense lockdown starts today in Madurai | door-to-door surveilla...

Tuesday, June 23, 2020

Thalapathy Vijay Birthday Poster Reaction | Birthday Special | Tomorro...

15 Interesting and Amazing Facts about Cricket Part II | Sabarish In Ave...

மதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு ஊரடங்கு.....! கொரோனா பரவல் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி


தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



All Jamaat and Islamic Movements in Coimbatore District - Covid-19 Awar...

Thamizhaga Makkal Jananayaka Katchi (TMJK) Protest | Struggle via the In...

'13 மாவட்டங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும்' - டாக்டர் குழந்தைசாமி எச்சரிக்கை


கொரோனா பாதிப்பு சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் 5,000-ஐ தாண்டியது

கொரோனா பாதிப்பு சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் 5,000-ஐ தாண்டியது

பதிவு: ஜூன் 23,  2020 02:40 PM

சென்னை,



Sunday, June 21, 2020

நடிகர் அஸ்வின் குமார் டிரட்மில்லில் ஆடிய அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... : வாழ்க மகனே என பாராட்டிய கமல்

தமிழ் சினிமாவின் நடன நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். அவர் நடனத்திற்கு பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தை பள்ளியில், கல்லூரியில் ஆடாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நடனம் புகழ் பெற்றது.

இப்போது அந்த நடனத்தை நடைபயிற்சி செய்யும் டிரட்மில்லில் நின்று கொண்டு ஆடியுள்ளார் நடிகர் அஸ்வின் குமார். இவர் துருவங்கள் பதினாரு படத்தில் அறிமுமானவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். டிரட்மில்லில் நடனம் ஆடியிருப்பதோடு கமல்ஹாசன் போன்ற தோற்றத்திலும் இருப்பதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 64 பேருக்கும், கடலூரில் 102 பேருக்கும், திருவண்ணாமலையில் 77 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


"பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி...." - சீன விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசைச் சாடி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சரண்டர் மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

Past & Present Thiruparankundram Murugan Temple | Subramanya Swamy Templ...

V. V. Rajan Chellappa MLA Provide Corona Relief Assistance for 300 civil...

அருள்மிகு கள்ளழகருக்கு மஞ்சள் நீராட்டு விழா | சூர்ணோற்சவம் | Lord Kallal...

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம்  நாங்கள் பல நாட்கள்  காத்திருந்து  தற்போது தான்  ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன்  இந்த படத்தை  தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,413 பேருக்கு கொரோனா தொற்று


6வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாள்.

6வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



Saturday, June 20, 2020

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103