South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Sunday, June 21, 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 64 பேருக்கும், கடலூரில் 102 பேருக்கும், திருவண்ணாமலையில் 77 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
Subramaniapuram police Case against H Raja under four sections | “protec...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
Jasmine flowers are borne on the stem rot disease affecting farmers 02
No comments:
Post a Comment