Wednesday, April 15, 2026
அமெரிக்க அதிபர் டிரம்ப்ம்பை மிரட்டிய பிரதமர் மோடி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026, சித்திரை, பாரபவ வருடம் 03:00 AM
புதுடெல்லி,
ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
டிரம்ப்பிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“என் நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசித்தோம். மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீர்மானித்தோம். மேற்கு ஆசிய போர்ச்சூழல் பற்றியும், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, April 14, 2026
ராகுல்காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026, சித்திரை, பாரபவ வருடம் 01:40 AM
சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, April 12, 2026
‘ஜனநாயகன்’ பட விவகாரம் - மத்திய தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) பரபரப்பு விளக்கம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026, பங்குனி 29, விசுவாவசு வருடம் 00:10 AM
சென்னை,
ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது.
படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது.
படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, April 11, 2026
‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி - டிஜிபியிடம் புகார்
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 05:20 AM
சென்னை,
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானதால் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதாலும், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டதாலும், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைப் பிரச்சினை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, படத்தை மறுதணிக்கைக் குழு கடந்த மாதம் பார்த்தது. படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணையத்தில் கடந்த 9-ம் தேதி வெளியானது. பல்வேறு வலைதளங்களிலும் இது வேகமாக பகிரப்பட்டது. இதனால், படத் தயாரிப்பு நிறுவனமும், படக் குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று அதிகாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இணையம் மற்றும் வலைதளங்களில் இதுவும் வேகமாக பகிரப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் சூழலில், முழு படமும் இணையத்தில் வெளியானது விஜய் உள்ளிட்ட படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.
திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ திரைப்படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
‘ஜனநாயகன்’ படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளியை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ், யூ-டியூப், இணையதளங்கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றம் செய்வது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது, பரப்புவதுகடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம்செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரியசட்ட நடவடிக்கை தொடங்கிஉள்ளார்.
மேலும், இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்கு, உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம் - அபின் தினேஷ் மோடக் பொறுப்பேற்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 04:40 AM
சென்னை,
சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். கடந்த 2-ம் தேதி தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை,
சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். கடந்த 2-ம் தேதி தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, April 10, 2026
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 4500 வேட்பாளர்கள்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 07:30 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 மனுக்கள் ஏற்கப்பட்டன.
முறையாக பூர்த்தி செய்யப்படாத 2 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில், அத்தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அடுத்த சில தினங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன. அதற்கான பெயர், சின்னங்களை அச்சிடும் பணிகளும் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 17-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 151 செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்களை வீடியோவில் பதிவு செய்து, செலவினத்தை மதிப்பிட்டு வருகின்றனர். அவற்றை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் பணிகளை இன்றுமுதல் தீவிரப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 மனுக்கள் ஏற்கப்பட்டன.
முறையாக பூர்த்தி செய்யப்படாத 2 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில், அத்தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அடுத்த சில தினங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன. அதற்கான பெயர், சின்னங்களை அச்சிடும் பணிகளும் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 17-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 151 செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்களை வீடியோவில் பதிவு செய்து, செலவினத்தை மதிப்பிட்டு வருகின்றனர். அவற்றை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் பணிகளை இன்றுமுதல் தீவிரப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவு - வரலாறு காணாத வகையில் அசாமில் 85%, கேரளாவில் 78% பதிவானது
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 06:30 AM
புதுச்சேரி -புதுடெல்லி,
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 போலீஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
கண்ணூர் மாவட்டம் பினராயி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளாவில் ஒட்டுமொத்தமாக 78.21 சதவீத வாக்குகள் பதிவாகின.
அசாமின் 126 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியின் அசாராவில் குடும்பத்துடன் வாக்களித்தார். திப்ருகார் பகுதியில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பெரும்பாலான பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 85.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
மே 4-ல் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என 2 கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
எஸ்ஐஆர் காரணமாக அதிகரிப்பு
நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் 2.78 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியின்போது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் என 9.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, புதுச்சேரியில் எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 9.50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல்முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். கேரளா, புதுச்சேரியில் எஸ்ஐஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டதால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. பதிவேடு கணக்கெடுப்பின்போதே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அங்கு தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
புதுச்சேரி -புதுடெல்லி,
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 போலீஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
கண்ணூர் மாவட்டம் பினராயி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளாவில் ஒட்டுமொத்தமாக 78.21 சதவீத வாக்குகள் பதிவாகின.
அசாமின் 126 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியின் அசாராவில் குடும்பத்துடன் வாக்களித்தார். திப்ருகார் பகுதியில் பாஜக - அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பெரும்பாலான பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 85.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
மே 4-ல் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என 2 கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
எஸ்ஐஆர் காரணமாக அதிகரிப்பு
நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் 2.78 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியின்போது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் என 9.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, புதுச்சேரியில் எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 9.50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல்முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். கேரளா, புதுச்சேரியில் எஸ்ஐஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டதால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. பதிவேடு கணக்கெடுப்பின்போதே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அங்கு தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, April 9, 2026
“உண்மையான காங்கிரஸார் தவெகவில் உள்ளனர்” - திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் பேச்சு
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 03:30 AM
திருநெல்வேலி,
“பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் உள்ளனர்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது:
“திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால், இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது.
திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள். திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என் மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.
அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார்.
கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டர்கள் போலிருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கடும் ஆத்திரம். அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம்.
சில பல கோடிகளை கொடுத்து தனது பையில் காங்கிரஸை திமுக போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.
நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதற்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும், எனக்கும் கண் கலங்கும்.
கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால், ஜனநாயகன் படத்தை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரயும். அதுவும் எடுபடவில்லை.
நான் வெளியே வரக் கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக, பாஜவினரால் என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டியிலும் விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் விஜய்தான் நிற்கிறேன். வேட்பாளர்தான் விஜய், விஜய்தான் வேட்பாளர். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கெல்லாம் ஓட்டு போட்டீர்கள். இந்த முறை உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது நமக்கு நாமே ஓட்டு போடுவது மாதிரி. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நீங்கள் வெற்றிபெற்றது போன்றதாகும்.
இந்த தேர்தல் 50 ஆண்டு நடக்கும் அதிசய தேர்தல். உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., அழகுமுத்துகோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும்.
தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே வேறு யாருக்கும் ஓட்டு போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள்.
மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்குமுன் ஆண்டவர்களும் இதை சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்பு கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?
இரண்டரை வயது குழந்தையை திமுகவை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக் கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பீர்கள்?
உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது.
வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துளளேன். தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும்” என்று விஜய் பேசினார். ‘நான் தன்னந்தனி ஆளு’ என்ற கட்சியின் தேர்தல் பரப்புரை பாடலை பாடி முடித்தார் விஜய்.
திருநெல்வேலி,
“பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் உள்ளனர்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது:
“திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால், இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது.
திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள். திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என் மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.
அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார்.
கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டர்கள் போலிருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கடும் ஆத்திரம். அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம்.
சில பல கோடிகளை கொடுத்து தனது பையில் காங்கிரஸை திமுக போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.
நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதற்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும், எனக்கும் கண் கலங்கும்.
கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால், ஜனநாயகன் படத்தை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரயும். அதுவும் எடுபடவில்லை.
நான் வெளியே வரக் கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக, பாஜவினரால் என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டியிலும் விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் விஜய்தான் நிற்கிறேன். வேட்பாளர்தான் விஜய், விஜய்தான் வேட்பாளர். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கெல்லாம் ஓட்டு போட்டீர்கள். இந்த முறை உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது நமக்கு நாமே ஓட்டு போடுவது மாதிரி. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நீங்கள் வெற்றிபெற்றது போன்றதாகும்.
இந்த தேர்தல் 50 ஆண்டு நடக்கும் அதிசய தேர்தல். உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., அழகுமுத்துகோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும்.
தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே வேறு யாருக்கும் ஓட்டு போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள்.
மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்குமுன் ஆண்டவர்களும் இதை சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்பு கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?
இரண்டரை வயது குழந்தையை திமுகவை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக் கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பீர்கள்?
உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது.
வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துளளேன். தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும்” என்று விஜய் பேசினார். ‘நான் தன்னந்தனி ஆளு’ என்ற கட்சியின் தேர்தல் பரப்புரை பாடலை பாடி முடித்தார் விஜய்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
“தலைமைச் செயலர் மாற்றம் அத்துமீறிய அரசியல் நடவடிக்கை” - தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 01:30 AM
சென்னை,
தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜகவுக்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம். நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனித்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ‘தலைமைச் செயலாளர்’, ‘டிஜிபி’ ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பா.ஜ.க. அடங்கிய என்டிஏ கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜகவுக்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம். நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனித்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ‘தலைமைச் செயலாளர்’, ‘டிஜிபி’ ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக - பா.ஜ.க. அடங்கிய என்டிஏ கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம் - புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம்
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 09, 2026, பங்குனி 26, விசுவாவசு வருடம் 00:55 AM
சென்னை,
தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு செய்திக் காகித நிறுவனத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலர் தவிர ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இணைந்தது தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்றாலும்கூட, தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலரையே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
சென்னை,
தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு செய்திக் காகித நிறுவனத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலர் தவிர ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இணைந்தது தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்றாலும்கூட, தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலரையே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, April 8, 2026
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பழனிசாமி, சீமான், மனு ஏற்பு - வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு - எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் போட்டியில்லை
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 08, 2026, பங்குனி 25, விசுவாவசு வருடம் 03:45 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியாகும் நிலையில், மு.க.ஸ்டாலின், பழனிசாமி, விஜய், சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எடப்பாடியில் தவெக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு, வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஏப்ரல் 6-ம் தேதி நேற்று முன்தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்தனர்.
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி (இபிஎஸ்), சாத்தூரில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மயிலாப்பூரில் தமிழகப் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சென்னையில் 628 உட்பட 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏராளமானோர் கூடுதல் மனுக்களைத் தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 மனுக்களையும், தவெக தலைவர் 3 மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று பகல் 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. இதில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பழனிசாமி, சீமான், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, சவுமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஆட்சேபனை
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுவில், சான்றொப்பம் காலாவதியான நோட்டரி வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்டதாக பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்குரிய ஆவணங்களைச் சமர்பித்த பின்னர், விஜய்யின் மனு ஏற்கப்பட்டது.
அதேபோல், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் மனு ஏற்கப்பட்டது. வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா சொத்து விவரங்களை மறைத்ததாக சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டியதால், பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில் அவரது மனுவும் ஏற்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்ட நேரம் கழித்து ஏற்கப்பட்டது. அவருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சென்னை ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சன் முறையாக மனுவை பூர்த்தி செய்யாததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு கடைசியில் ஏற்கப்பட்டது.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமார் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா மனுத்தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரை அதே தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால், அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளனர். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாததால் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார். இதே காரணத்துக்காக, மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்பு மனுவில் எழுத்துப் பிழை மற்றும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. அதனால், மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டது.
பரிசீலனை முடிவில் சென்னையில் 462 உட்பட 234 தொகுதிகளிலும் 4,738 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கால அவகாசம் உள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
விஜய் பெயரில் 4 பேர்: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், விஜய்யின் மனு உட்பட 48 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பொதுவாகவே நட்சத்திர வேட்பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே மற்ற கட்சிகள் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வைப்பது வாடிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், அவரது முழுப்பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியாகும் நிலையில், மு.க.ஸ்டாலின், பழனிசாமி, விஜய், சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எடப்பாடியில் தவெக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு, வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஏப்ரல் 6-ம் தேதி நேற்று முன்தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்தனர்.
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி (இபிஎஸ்), சாத்தூரில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மயிலாப்பூரில் தமிழகப் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சென்னையில் 628 உட்பட 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏராளமானோர் கூடுதல் மனுக்களைத் தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 மனுக்களையும், தவெக தலைவர் 3 மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று பகல் 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. இதில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பழனிசாமி, சீமான், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, சவுமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஆட்சேபனை
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுவில், சான்றொப்பம் காலாவதியான நோட்டரி வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்டதாக பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்குரிய ஆவணங்களைச் சமர்பித்த பின்னர், விஜய்யின் மனு ஏற்கப்பட்டது.
அதேபோல், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் மனு ஏற்கப்பட்டது. வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா சொத்து விவரங்களை மறைத்ததாக சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டியதால், பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில் அவரது மனுவும் ஏற்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்ட நேரம் கழித்து ஏற்கப்பட்டது. அவருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சென்னை ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சன் முறையாக மனுவை பூர்த்தி செய்யாததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு கடைசியில் ஏற்கப்பட்டது.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமார் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா மனுத்தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரை அதே தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால், அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளனர். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாததால் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார். இதே காரணத்துக்காக, மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்பு மனுவில் எழுத்துப் பிழை மற்றும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. அதனால், மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டது.
பரிசீலனை முடிவில் சென்னையில் 462 உட்பட 234 தொகுதிகளிலும் 4,738 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கால அவகாசம் உள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
விஜய் பெயரில் 4 பேர்: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், விஜய்யின் மனு உட்பட 48 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பொதுவாகவே நட்சத்திர வேட்பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே மற்ற கட்சிகள் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வைப்பது வாடிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், அவரது முழுப்பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, April 5, 2026
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கையால் உச்சக்கட்ட பதற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 05, 2026, பங்குனி 22, விசுவாவசு வருடம் 03:20 AM
வாஷிங்டன்,
‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்.
இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறது
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ட்ரம்ப் 15 அம்ச திட்டம்
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை.
இந்த சூழலில், கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது’ என்று தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் கூறும் போது, “ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது’’ என்று தெரிவித்தார்.
தீவிரமடையும் போர்: எனினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் 2 போர் விமானங்களை ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியது. மேலும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. எனினும், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
அதிபர் ட்ரம்ப் விதித்த 10 நாள் கெடு ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி 7-ம் தேதி அதிகாலை) நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஈரான் ஆட்சியாளர்கள், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
போர்க் கப்பல்கள் முகாம்
அமெரிக்க கடற்படையின் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக ட்ரிபொலி போர்க்கப்பலை சேர்ந்த வீரர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிதீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரைவழி தாக்குதல்களுக்கு தயாராக உள்ளனர்.
அமெரிக்காவின் பி-2 ஸ்பிரிட், எப்-35, எப்-22, எப்-15இ, ஏ-10 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அதிதீவிர தாக்குதல்களுக்கு தயாராக உள்ளன. பிஆர்எஸ்எம், டோமாஹாக், பேட்ரியாட், தாட், ஹிமார்ஸ், ஜிஎம்எல்ஆர்எஸ் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எம்கியூ-9 ரக ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர இறுதி கெடுவை விதித்துள்ளார். இந்த கெடு முடிந்த பிறகு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும். ஈரான் நரகமாக மாறும் வரை தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்ல மறுப்பா? - ஈரான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சியில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ‘‘இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு
ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எனது நன்றி. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்ல நாங்கள் ஒருபோதும் மறுத்தது இல்லை. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதப் போருக்கு ஒரு உறுதியான மற்றும் நிரந்தரமான முடிவைக் கொண்டு வருவதற்கான விதிமுறைகளையே நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரான் பதில் அளிக்காததால் அமைதிப் பேச்சுவார்த்தை மந்தம் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', பாகிஸ்தானின் 'டான்' ஆகிய இதழ்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபியும் மறுத்துள்ளார். இத்தகைய செய்திகள் அடிப்படையற்றவை, கற்பனையானவை என்று அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்.
இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறது
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ட்ரம்ப் 15 அம்ச திட்டம்
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை.
இந்த சூழலில், கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது’ என்று தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் கூறும் போது, “ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது’’ என்று தெரிவித்தார்.
தீவிரமடையும் போர்: எனினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் 2 போர் விமானங்களை ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியது. மேலும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. எனினும், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
அதிபர் ட்ரம்ப் விதித்த 10 நாள் கெடு ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி 7-ம் தேதி அதிகாலை) நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஈரான் ஆட்சியாளர்கள், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
போர்க் கப்பல்கள் முகாம்
அமெரிக்க கடற்படையின் 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக ட்ரிபொலி போர்க்கப்பலை சேர்ந்த வீரர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிதீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரைவழி தாக்குதல்களுக்கு தயாராக உள்ளனர்.
அமெரிக்காவின் பி-2 ஸ்பிரிட், எப்-35, எப்-22, எப்-15இ, ஏ-10 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அதிதீவிர தாக்குதல்களுக்கு தயாராக உள்ளன. பிஆர்எஸ்எம், டோமாஹாக், பேட்ரியாட், தாட், ஹிமார்ஸ், ஜிஎம்எல்ஆர்எஸ் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எம்கியூ-9 ரக ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர இறுதி கெடுவை விதித்துள்ளார். இந்த கெடு முடிந்த பிறகு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும். ஈரான் நரகமாக மாறும் வரை தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்ல மறுப்பா? - ஈரான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சியில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ‘‘இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு
ஈரானின் நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எனது நன்றி. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்ல நாங்கள் ஒருபோதும் மறுத்தது இல்லை. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோதப் போருக்கு ஒரு உறுதியான மற்றும் நிரந்தரமான முடிவைக் கொண்டு வருவதற்கான விதிமுறைகளையே நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரான் பதில் அளிக்காததால் அமைதிப் பேச்சுவார்த்தை மந்தம் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', பாகிஸ்தானின் 'டான்' ஆகிய இதழ்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபியும் மறுத்துள்ளார். இத்தகைய செய்திகள் அடிப்படையற்றவை, கற்பனையானவை என்று அவர் கூறியுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, April 4, 2026
தமிழக சட்டசபை தேர்தல் - பாஜக வேட்பாளர் பட்டியல் - அமர்பிரசாத் ரெட்டி, வினோஜ்.பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா.. சீட் இல்லை
சனிக்கிழமை, ஏப்ரல் 04, 2026, பங்குனி 21, விசுவாவசு வருடம் 04:50 AM
சென்னை,
வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது பாஜகவில் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது தீவிர ஆதரவாளர்களான பலருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால், அண்ணாமலையின் கை சறுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இது பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் நிலவி வந்தன. சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், இன்றுதான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. கடந்த முறை நெல்லை தொகுதியில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர்.
நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார்.
மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கு தொகுதியில் பேராசிரியர் ராம சீனிவாசனும், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்திருந்த விஜயதாரணிக்கு இந்த முறை விளவங்கோட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் சீட் பெற்றுள்ளனர்.
பாஜக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய ஷாக், அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது தான். இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவில் கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்த முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சீட் அதிருப்தி காரணமாக சென்னையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணமலை பங்கேற்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கவும் அண்ணாமலை செல்லவில்லை.
2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம், ஏபி முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வேளச்சேரி தொகுதியில் நீண்ட நாட்களாக போட்டியிட தீவிரம் காட்டி வந்தார் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். அண்ணாமலை இவருக்கு பரிந்துரை செய்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எஸ்.ஜி.சூர்யா போட்டியிட விரும்பிய வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அசோக் என்பவர் போட்டியிடுகிறார். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்.
வினோஜ் பி செல்வம் தனக்கு இந்த முறை துறைமுகம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அங்கு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.
அதேபோல, பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, தளி தொகுதியில் போட்டியிட விரும்பி, சீட் பெற முயற்சித்து வந்தார். அவருக்கும் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏபி முருகானந்தம், அஸ்வத்தாமன் ஆகியோரும் சீட் பெற முயற்சித்தனர். அவர்களுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஒருகாலத்தில் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை தற்போது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை,
வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது பாஜகவில் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது தீவிர ஆதரவாளர்களான பலருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால், அண்ணாமலையின் கை சறுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இது பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் நிலவி வந்தன. சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், இன்றுதான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. கடந்த முறை நெல்லை தொகுதியில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர்.
நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார்.
மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கு தொகுதியில் பேராசிரியர் ராம சீனிவாசனும், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தமும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்திருந்த விஜயதாரணிக்கு இந்த முறை விளவங்கோட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் சீட் பெற்றுள்ளனர்.
பாஜக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய ஷாக், அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது தான். இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவில் கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்த முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சீட் அதிருப்தி காரணமாக சென்னையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணமலை பங்கேற்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கவும் அண்ணாமலை செல்லவில்லை.
2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம், ஏபி முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வேளச்சேரி தொகுதியில் நீண்ட நாட்களாக போட்டியிட தீவிரம் காட்டி வந்தார் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். அண்ணாமலை இவருக்கு பரிந்துரை செய்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எஸ்.ஜி.சூர்யா போட்டியிட விரும்பிய வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அசோக் என்பவர் போட்டியிடுகிறார். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்.
வினோஜ் பி செல்வம் தனக்கு இந்த முறை துறைமுகம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அங்கு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.
அதேபோல, பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, தளி தொகுதியில் போட்டியிட விரும்பி, சீட் பெற முயற்சித்து வந்தார். அவருக்கும் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏபி முருகானந்தம், அஸ்வத்தாமன் ஆகியோரும் சீட் பெற முயற்சித்தனர். அவர்களுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஒருகாலத்தில் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை தற்போது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, April 3, 2026
அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் - ஈரான் திட்டவட்டம் - அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு பதிலடி
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03, 2026, பங்குனி 20, விசுவாவசு வருடம் 03:00 AM
தெஹ்ரான்,
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத் தகவல் முழுமையற்றது.
எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.
அத்தகைய அனுமானங்கள் நீங்கள் சிக்கியுள்ள சகதியை மேலும் ஆழமாக்கும். நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை; எங்களின் முக்கிய ராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகிறது.
எங்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுத தளங்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்; நீங்கள் தவறாகவே அதனை கணிப்பீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியாது.
எங்கள் கண்ணியமிக்க, அன்புக்குரிய, முஸ்லிம் தேசத்துக்கு எதிராக நீங்கள் தொடங்கிய போருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும். நீங்கள் நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்தப் போர் தொடரும்.
நீங்கள் ஏற்கெனவே பெற்ற கடுமையான அடிகளின் தொடர்ச்சியாக, எங்களிடமிருந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதம் அல்-அன்பியா தலைமையகம் என்பது ஈரானின் கட்டளையிடும் மிக முக்கிய அமைப்பாகும். இது ஈரான் ராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) ஆகியவற்றுக்கு இடையேயான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.
முன்னதாக நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீர்க்கமான தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்போது ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்கள் முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பரந்த அளவிலான ராணுவக் கட்டமைப்பும் கடுமையாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் தற்போது கொல்லப்பட்டுவிட்டனர்.
இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகளும், ராக்கெட் ஏவுதளங்களும் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகச் சிலவே எஞ்சியுள்ளன. அமெரிக்கா முன்னெப்போதையும் விடப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான்,
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத் தகவல் முழுமையற்றது.
எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.
அத்தகைய அனுமானங்கள் நீங்கள் சிக்கியுள்ள சகதியை மேலும் ஆழமாக்கும். நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை; எங்களின் முக்கிய ராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகிறது.
எங்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுத தளங்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்; நீங்கள் தவறாகவே அதனை கணிப்பீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியாது.
எங்கள் கண்ணியமிக்க, அன்புக்குரிய, முஸ்லிம் தேசத்துக்கு எதிராக நீங்கள் தொடங்கிய போருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும். நீங்கள் நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்தப் போர் தொடரும்.
நீங்கள் ஏற்கெனவே பெற்ற கடுமையான அடிகளின் தொடர்ச்சியாக, எங்களிடமிருந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதம் அல்-அன்பியா தலைமையகம் என்பது ஈரானின் கட்டளையிடும் மிக முக்கிய அமைப்பாகும். இது ஈரான் ராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) ஆகியவற்றுக்கு இடையேயான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.
முன்னதாக நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீர்க்கமான தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்போது ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்கள் முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பரந்த அளவிலான ராணுவக் கட்டமைப்பும் கடுமையாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் தற்போது கொல்லப்பட்டுவிட்டனர்.
இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகளும், ராக்கெட் ஏவுதளங்களும் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகச் சிலவே எஞ்சியுள்ளன. அமெரிக்கா முன்னெப்போதையும் விடப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம் - புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03, 2026, பங்குனி 20, விசுவாவசு வருடம் 02:30 AM
சென்னை,
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார். தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தையும் தொடங்கினர்.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு, சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். அனுமதி பெறப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்ற இடங்களில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே, அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையும் கோரினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கோரி தவெக சார்பில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்தது. அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதிநியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. புதிய டிஜிபி உடனடியாக பதவி ஏற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், நேற்று இரவே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விரைவில் மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
சந்தீப் ராய் ரத்தோர் யார்?
டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். தமிழக காவல் துறையில் பல முக்கிய பொறுப்புகள், குறிப்பாக சிபிசிஐடி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கியப் பங்காற்றினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றியவர், 2024 ஜூலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு, காவல் உயர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார். சிறந்த பணிக்கான மத்திய, மாநில அரசுகளின் பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார். தாம்பரம், மதுரை காவல் ஆணையர்கள், தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தையும் தொடங்கினர்.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு, சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். அனுமதி பெறப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்ற இடங்களில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே, அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையும் கோரினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கோரி தவெக சார்பில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்தது. அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதிநியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. புதிய டிஜிபி உடனடியாக பதவி ஏற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், நேற்று இரவே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விரைவில் மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
சந்தீப் ராய் ரத்தோர் யார்?
டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். தமிழக காவல் துறையில் பல முக்கிய பொறுப்புகள், குறிப்பாக சிபிசிஐடி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கியப் பங்காற்றினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றியவர், 2024 ஜூலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு, காவல் உயர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார். சிறந்த பணிக்கான மத்திய, மாநில அரசுகளின் பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, April 2, 2026
புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று ஸ்டாலினுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே பிரச்சார மோதல்
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 03:00 AM
புதுச்சேரி,
ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஏப்ரல் 6 அன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, அஜந்தா சிக்னல் சந்திப்பிலிருந்து அண்ணா சதுக்கம் வரை நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 3 அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவர் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் சென்று, பின்னர் அன்றைய தினம் சென்னை திரும்பி பாஜக தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
ஏப்ரல் 4 அன்று, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் ஒரு சாலைப் பேரணியையும் நடத்தக்கூடும்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பாதுகாப்புக் குழுவினர் உள்ளூர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், சாலைப் பேரணி செல்லும் பாதையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 4 அன்று காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொள்வார், அதனைத் தொடர்ந்து மறுநாள் புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்வார்.
ஏப்ரல் 6 அன்று, அமித் ஷா திருக்கனூரில் என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார், அதே நேரத்தில் ஸ்டாலின் தட்டஞ்சாவடியில் ஒரு பேரணியில் பேச உள்ளார்.
வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான ஏஐஎன்ஆர்சி தலைமையிலான என்டிஏ அரசு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்வதால், அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
புதுச்சேரி,
ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஏப்ரல் 6 அன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, அஜந்தா சிக்னல் சந்திப்பிலிருந்து அண்ணா சதுக்கம் வரை நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 3 அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவர் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் சென்று, பின்னர் அன்றைய தினம் சென்னை திரும்பி பாஜக தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
ஏப்ரல் 4 அன்று, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் ஒரு சாலைப் பேரணியையும் நடத்தக்கூடும்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பாதுகாப்புக் குழுவினர் உள்ளூர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், சாலைப் பேரணி செல்லும் பாதையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 4 அன்று காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொள்வார், அதனைத் தொடர்ந்து மறுநாள் புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்வார்.
ஏப்ரல் 6 அன்று, அமித் ஷா திருக்கனூரில் என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார், அதே நேரத்தில் ஸ்டாலின் தட்டஞ்சாவடியில் ஒரு பேரணியில் பேச உள்ளார்.
வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான ஏஐஎன்ஆர்சி தலைமையிலான என்டிஏ அரசு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்வதால், அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யுங்கள் - டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 02, 2026, பங்குனி 19, விசுவாவசு வருடம் 02:10 AM
புதுடெல்லி,
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போரைத் தொடங்கின. இந்தப் போரில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்துவதால் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது.
டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளைக் கையாளும் பல மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்காசியாவில் தொடரும் போர், அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார்.
மேலும், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக நாட்டில் எரிபொருள் மற்றும் எல்பிஜி, பிஎன்ஜி விநியோகத்தின் தொடர்ச்சியை மதிப்பிட வேண்டும் என்றும், உணவு மற்றும் உரங்களில் பதுக்கல் மற்றும் செயற்கையான விலை உயர்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதே பிரச்சினை தொடர்பாக, இதற்கு முன்பு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. இதில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழல் குறித்தும், இந்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9.15 மணிக்கு நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக செய்தியாளர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் விளக்கினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்காசியாவில் நடந்து வரும் போரின் காரணமாக பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதை இந்தியா ராஜதந்திர ரீதியாக அணுகி வருகிறது. இந்த விவகாரத்தில் ராஜதந்திர ரீதியாக நாங்கள் பரந்த சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.
மேற்காசிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து 2 நாட்டு தலைவர்களும் நீண்ட ஆலோசனையை நடத்தினர்.
அதே நேரத்தில், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் 2 நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், போர்ச்சுகல் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாலோ ரங்கலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, மேற்காசியாவில் நடந்து வரும் மோதல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியர்கள் பாதுகாப்பு
இதுவரை, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்தியர்களை தொடர்பு கொண்டு அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புதவற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதில், 818 இந்திய மாணவர்கள் தரைவழி எல்லை வழியாக ஈரானை விட்டு ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக வெளியேறுவதும் அடங்கும். இவ்வாறு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போரைத் தொடங்கின. இந்தப் போரில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்துவதால் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது.
டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளைக் கையாளும் பல மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்காசியாவில் தொடரும் போர், அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார்.
மேலும், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக நாட்டில் எரிபொருள் மற்றும் எல்பிஜி, பிஎன்ஜி விநியோகத்தின் தொடர்ச்சியை மதிப்பிட வேண்டும் என்றும், உணவு மற்றும் உரங்களில் பதுக்கல் மற்றும் செயற்கையான விலை உயர்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதே பிரச்சினை தொடர்பாக, இதற்கு முன்பு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. இதில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழல் குறித்தும், இந்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9.15 மணிக்கு நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக செய்தியாளர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் விளக்கினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்காசியாவில் நடந்து வரும் போரின் காரணமாக பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதை இந்தியா ராஜதந்திர ரீதியாக அணுகி வருகிறது. இந்த விவகாரத்தில் ராஜதந்திர ரீதியாக நாங்கள் பரந்த சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.
மேற்காசிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து 2 நாட்டு தலைவர்களும் நீண்ட ஆலோசனையை நடத்தினர்.
அதே நேரத்தில், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் 2 நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், போர்ச்சுகல் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாலோ ரங்கலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, மேற்காசியாவில் நடந்து வரும் மோதல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியர்கள் பாதுகாப்பு
இதுவரை, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்தியர்களை தொடர்பு கொண்டு அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புதவற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதில், 818 இந்திய மாணவர்கள் தரைவழி எல்லை வழியாக ஈரானை விட்டு ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக வெளியேறுவதும் அடங்கும். இவ்வாறு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, April 1, 2026
“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM
சிவகாசி,
“இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.
காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.
ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.
எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?
நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.
73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.
கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.
சிவகாசி,
“இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.
காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.
ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.
எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?
நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.
73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.
கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 02:40 AM
திருவாரூர்,
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.
‘‘திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம்’’ என்று திருவாரூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நன்னிலம் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த 2026 தேர்தலின் சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டேன். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இன்று தலைவர் கருணாநிதியை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் இங்கிருந்து தொடங்குகிறேன்.
திருவாரூர் பெயர் அழகு. அதைவிட திருவாரூர் தேர் பேரழகு. நேற்று முன்தினம் தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 1948-க்குப் பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய செய்துள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியது, ஆட்சியர், நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகங்கள், நகராட்சி கட்டிடம், புதிய பேருந்து நிலையம், மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, மன்னார்குடி அரசு கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை, மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி, டி.ஆர்.பாலு முயற்சியால் செம்மொழி உட்பட 5 புதிய ரயில்கள் என ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். நெல் ஜெயராமனுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வருகிறோம்.
கடந்த 2021-ல் எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து பெண்கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவு, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தேன். பொங்கல் தொகுப்பு ரூ.3,000 வழங்கினோம்.
தமிழகத்தை பார்த்து பல மாநிலங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி உள்ளனர். தேர்தலைக் காட்டி அதை நிறுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்து காசை உருவ திட்டம் போடும் பாஜகவுக்கு, திராவிட மாடல் நலத்திட்டம் மூலம் மக்களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்பது எரியத்தான் செய்யும். யார் வயிறு எரிந்தால் என்ன? மக்களின் மனசு நிறையணும் என்பதுதான் என் லட்சியம். அதனால்தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கினோம்.
எல்லாத் திட்டத்திலும் தமிழகம் டாப்பில் இருப்பதுதான் பாஜக தலைமையில் செயல்படும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளது. தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என திட்டமிட்டு ஏராளமான போலி செய்திகளைப் பரப்பிப் பார்த்தனர். கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் பரப்பியது அனைத்தும் அவதூறு என உண்மை வெளிப்பட்டு மக்கள் முன் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.
கடந்த 2011-21 வரை தமிழகத்தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதிமுக, 2014-லிருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாஜகவுடன் சரணாகதியடைந்து கூட்டணி அமைத்துள்ளது. அவர் நம் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து விட்டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்தோம் என புலம்புகிறார்.
அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது. தொலை நோக்கு பார்வையும் இல்லை. அவரது உளறல்களில் ‘ஹை லைட்’ எது தெரியுமா? எப்படி உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் எனக் கேட்டால் வரியை உயர்த்தி நிறைவேற்றுவேன் என்கிறார். அதனால் தான் பழனிசாமியை எளிதாக மிரட்டி அடிமைக் கூட்டணியில் பாஜக வைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது, திராவிட மாடல் ஏற்படுத்திய வளர்ச்சியை அழிப்பதுதான் என்டிஏ கூட்டணியின் நோக்கம்.
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தங்களுக்கு வலிமையில்லை என்பதால் அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. பொதுவாக பாஜக மக்களுக்கு நல்லது செய்யாது. தேர்தல் வந்தால் பட்ஜெட்டில் கண்துடைப்புக்காக சில அறிவிப்புகளைப் கொடுப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதைக்கூட செய்ய மனமில்லாத வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை. இத்தனையும் சமாளித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளோம்.இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்பதால் நம் வீட்டு குழந்தைகளுக்கான கல்வி நிதியைக் கூட தரவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, என்டிஏவை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.
இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க பாஜக- அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது திமுக கூட்டணிக்கான வெற்றி அல்ல, இது தமிழகத்துக்கான வெற்றி. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,தமிழகத்தைக் காக்க மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
திருவாரூர்,
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.
‘‘திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம்’’ என்று திருவாரூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நன்னிலம் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த 2026 தேர்தலின் சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டேன். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இன்று தலைவர் கருணாநிதியை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் இங்கிருந்து தொடங்குகிறேன்.
திருவாரூர் பெயர் அழகு. அதைவிட திருவாரூர் தேர் பேரழகு. நேற்று முன்தினம் தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 1948-க்குப் பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய செய்துள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியது, ஆட்சியர், நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகங்கள், நகராட்சி கட்டிடம், புதிய பேருந்து நிலையம், மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, மன்னார்குடி அரசு கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை, மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி, டி.ஆர்.பாலு முயற்சியால் செம்மொழி உட்பட 5 புதிய ரயில்கள் என ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். நெல் ஜெயராமனுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வருகிறோம்.
கடந்த 2021-ல் எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து பெண்கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவு, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தேன். பொங்கல் தொகுப்பு ரூ.3,000 வழங்கினோம்.
தமிழகத்தை பார்த்து பல மாநிலங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி உள்ளனர். தேர்தலைக் காட்டி அதை நிறுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்து காசை உருவ திட்டம் போடும் பாஜகவுக்கு, திராவிட மாடல் நலத்திட்டம் மூலம் மக்களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்பது எரியத்தான் செய்யும். யார் வயிறு எரிந்தால் என்ன? மக்களின் மனசு நிறையணும் என்பதுதான் என் லட்சியம். அதனால்தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கினோம்.
எல்லாத் திட்டத்திலும் தமிழகம் டாப்பில் இருப்பதுதான் பாஜக தலைமையில் செயல்படும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளது. தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என திட்டமிட்டு ஏராளமான போலி செய்திகளைப் பரப்பிப் பார்த்தனர். கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் பரப்பியது அனைத்தும் அவதூறு என உண்மை வெளிப்பட்டு மக்கள் முன் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.
கடந்த 2011-21 வரை தமிழகத்தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதிமுக, 2014-லிருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாஜகவுடன் சரணாகதியடைந்து கூட்டணி அமைத்துள்ளது. அவர் நம் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து விட்டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்தோம் என புலம்புகிறார்.
அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது. தொலை நோக்கு பார்வையும் இல்லை. அவரது உளறல்களில் ‘ஹை லைட்’ எது தெரியுமா? எப்படி உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் எனக் கேட்டால் வரியை உயர்த்தி நிறைவேற்றுவேன் என்கிறார். அதனால் தான் பழனிசாமியை எளிதாக மிரட்டி அடிமைக் கூட்டணியில் பாஜக வைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது, திராவிட மாடல் ஏற்படுத்திய வளர்ச்சியை அழிப்பதுதான் என்டிஏ கூட்டணியின் நோக்கம்.
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தங்களுக்கு வலிமையில்லை என்பதால் அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. பொதுவாக பாஜக மக்களுக்கு நல்லது செய்யாது. தேர்தல் வந்தால் பட்ஜெட்டில் கண்துடைப்புக்காக சில அறிவிப்புகளைப் கொடுப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதைக்கூட செய்ய மனமில்லாத வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை. இத்தனையும் சமாளித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளோம்.இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்பதால் நம் வீட்டு குழந்தைகளுக்கான கல்வி நிதியைக் கூட தரவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, என்டிஏவை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.
இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க பாஜக- அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது திமுக கூட்டணிக்கான வெற்றி அல்ல, இது தமிழகத்துக்கான வெற்றி. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,தமிழகத்தைக் காக்க மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
அமெரிக்க அதிபர் டிரம்ப்ம்பை மிரட்டிய பிரதமர் மோடி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026, சித்திரை, பாரபவ வருடம் 03:00 AM புதுடெல்லி, ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...



















