Friday, December 5, 2025

Tiruparankundram Deepathoon row: contempt petition against the violation...

Madras HC permits the devotees to Light Karthigai Deepam at Deepathoon; ...

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 07-00: AM

மதுரை,


திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் மதுரை ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று மாலை விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, கோயில் செயல் அலு​வலர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் ஆஜராக வேண்​டும் எனவும், நேரில் இல்​லா​விட்​டாலும் காணொலி வாயி​லாக உடனடி​யாக ஆஜராக வேண்​டும் எனவும், காவல் ஆணை​யர் சீருடை​யில் இல்​லா​விட்​டாலும் பரவா​யில்​லை, கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார்.

அரசுத் தரப்​பில் "அதி​காரி​கள் 5 நிமிடங்​களில் ஆஜராக வேண்​டும் என்​றால் எப்​படி?" என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, "5.30 மணிக்​குள் ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் காணொலி வாயி​லாக ஆஜராகா​விட்​டால் கடும் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்" என்​றார். பின்​னர் காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் காணொலி வாயி​லாக ஆஜரா​னார்.

அவரிடம் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுத்​தீர்​களா, 144 தடை உத்​தர​வைப் பிறப்​பிக்க ஆட்​சி​யருக்கு எப்​போது பரிந்​துரைக்​கப்​பட்​டது என்​றெல்​லாம் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு காவல் ஆணை​யர் பதில் அளித்​தார்.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​காக மனு​தா​ரர், அவரது வழக்​கறிஞர்​கள் ஆகியோர் சிஐஎஸ்​எப் பாது​காப்​புடன் மலைக்​குச் செல்ல முயன்​ற​போது காவல் ஆணை​யர் தடுத்​துள்​ளார். 144 தடை உத்​தரவு அமலில் இருப்​ப​தால், மேலே செல்ல அனு​ம​திக்க இயலாது என்று கூறி​யுள்​ளார்.

அதாவது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரி​வித்​துளளார். இதனால் தீபம் ஏற்ற இயல​வில்​லை. காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பு வழங்​கி​யிருந்​தால், பிரச்​சினை பெரி​தாகி​யிருக்​காது. ஆணை​யர் நீதி​மன்​றத்​தை​விட, ஆட்​சி​யர் பெரிய​வர் என்று எண்​ணி​யுள்​ளார். ஆட்​சி​யர் பிறப்​பித்த உத்​தர​வால், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த இயல​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளார். மாவட்ட ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இன்று (டிசம்பர் 4) சர்​வாலய தீபத்திரு​நாள் என்​ப​தால் இன்​றும் கார்த்​திகை தீபம் ஏற்​றலாம். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற காவல் ஆணை​யர் முழு பாது​காப்பு வழங்க வேண்​டும். மனு​தா​ரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தரவை மீறி​னால் கடும் விளைவு​கள் ஏற்​படும்​.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  டிசம்பர் 05, 2025, கார்த்திகை 19,  விசுவாவசு வருடம் 06-40: AM

மதுரை,

திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் தனி நீதிப​தி​யின் அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்​து, நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்த வேண்​டியது அரசின் கடமை என்று உத்​தர​விட்​டது.

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற உத்​தரவை செயல்​படுத்​தாத​தால், மாவட்ட ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், மனு​தா​ரர்​கள் மற்​றும் 10 பேர் சிஐஎஸ்​எப் வீரர்​கள் பாது​காப்​புடன் தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​மாறும், நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றியது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறும் உத்​தர​விட்​டார். ஆனால், தீபம் ஏற்ற போலீ​ஸார் அனு​மதி மறுத்​தனர்.

இந்​நிலை​யில், தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கக்கோரி ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர்தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு மற்​றும் மனு​தா​ரர்​கள் தரப்​பில் பல்​வேறு வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

அரசுத் தரப்​பில், "நீ​தி​மன்ற பாது​காப்​புப் பணிக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள சிஐஎஸ்​எப் வீரர்​களை மனு​தா​ரர்​கள் பாது​காப்​புக்கு அனுப்​பியது சட்​ட​விரோத​மாகும். காலஅவகாசம் இருந்த போதி​லும், இந்த மனுவை தனிநீதிபதி அவசர​மாக ஏற்​றுக் கொண்​டுள்​ளார். நீதிப​தி​யின் உத்​தர​வால் கலவரம் ஏற்​படும் சூழல் உரு​வாகி, 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது" என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போல, தர்கா தரப்​பிலும் வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​து​வது அரசு இயந்​திரத்​தின், அரசி​யலமைப்​புக் கடமை​யாகும். ஆனால், தனி நீதிப​தி​யின் உத்​தரவை அமல்​படுத்​த​வில்​லை. மாற்று நிவாரணத்​தைக்​கூட பின்​பற்​ற​வில்லை. மனு​தா​ரர் மற்​றும் 10 பேர் தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டும்என்று உத்​தரவு பிறப்​பித்த நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில்144 தடை உத்​தரவை எப்​படி பிறப்​பிக்க முடி​யும்? நீதி​மன்ற உத்​தரவை நிர்​வாக உத்​தரவு கட்​டுப்​படுத்​து​மா?

வழக்​கின் நிகழ்​வு​களைப் பார்க்​கும்​போது, மேல்​முறை​யீட்​டாளர்​கள் தங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்ற அச்​சத்​தில் நீதி​மன்​றத்தை நாடி​யுள்​ளனர் என்று தெரி​கிறது. இது நன்கு வடிவ​மைக்​கப்​பட்ட செய​லாகும். தனி நீதிபதி உத்​தரவை அதி​காரி​கள் வேண்​டுமென்றே பின்​பற்​ற​வில்​லையா என்​பதை சோதிக்க வேண்​டும். மேல்​முறை​யீட்​டில் அதி​காரி​களின் நடத்தை குறித்து அவசர​மாக முடிவுக்கு வர முடி​யாது.

நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்த வேண்​டாம் என்று அதி​காரி​கள் முடிவு செய்​திருப்​பதை கண்​டறிந்த தனி நீதிப​தி, தீர்ப்பை நிறைவேற்ற சிஐஎஸ்​எப் உதவியை கோரி​யுள்​ளார். மாநில காவல் துறை​யால் அரசி​யலமைப்பு ஆணையை நிறைவேற்ற முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது. தேவைப்​பட்​டால் நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்ற, மத்​திய படை​யின் உதவியைப் பெறு​வ​தில் சட்​ட​விரோத​ம் இல்​லை.

மேலும், நீதி​மன்​றத்​தின் முதல் உத்​தர​வில், நீதி​மன்​றத் தீர்ப்பை நிறைவேற்​றும் பொறுப்பு கோயில் செயல் அலு​வலரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் அந்​தப் பொறுப்பை நிறைவேற்​றாததால், மனு​தா​ரர்​களிடம் அந்​தப் பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த மனு நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை முன்​கூட்​டியே தடுக்​கும் மறை​முக நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது.

இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Section 144 imposed across Thiruparankundram - Arguments, pushing, tensi...

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...