பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:
தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்
சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.
தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்
தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.
பெண்களுக்குத் தனித்தொகுதி
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.
எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.
தமிழர்களுக்கு முன்னுரிமை
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை
தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.
மணல் கொள்ளைத் தடுப்பு
அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.
பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.
வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்
குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.
ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி
ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 20, 2026
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 19, 2026
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் உளவுத் துறை அமைச்சர் உயிரிழப்பு - ஹார்முஸ் ஜலசந்தி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசியது அமெரிக்கா
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 19, 2026, பங்குனி 05, விசுவாவசு வருடம் 06:40 AM
டெல் அவிவ்,
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று அறிவித்துள்ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறும்போது, “ஈரானின் எந்தவொரு மூத்த தலைவரையோ அல்லது அதிகாரியையோ கொல்லும் அதிகாரத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கியுள்ளார். எந்தவித அனுமதியையும் பெறாமலேயே ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள பிரதமர் நெதன்யாகு எங்களுக்கு அனுமதி தந்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில்
ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துவிட்டார். இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வரலாம்" என்றார்.
ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.
மேலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவும், உச்சத் தலைவருமான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்ப்பது நடக்கவில்லை.
முன்னதாக ஈரான் மீதான தாக்குல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கச்சா எண்ணெய் போக்குவரத்து ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட போர்க் கப்பல்களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள கரைப் பகுதிகளில் ஈரான் ஏவுகணை தளங்கள் பல உள்ளன. இங்கிருந்துதான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாதாளத்தில்உள்ள இந்த ஏவுகணை கிடங்குகளை குறி வைத்து 2,200 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை அமெரிக்க ராணுவம் வீசியது. இந்த குண்டுகள் பாதாள பகுதிகளை ஊடுருவி தாக்கும் திறன் படைத்தவை. இந்த குண்டுகளை ஈரான் மீது வெற்றிகரமாக வீசியதாக அமெரிக்க ராணுவம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்
ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று அறிவித்துள்ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறும்போது, “ஈரானின் எந்தவொரு மூத்த தலைவரையோ அல்லது அதிகாரியையோ கொல்லும் அதிகாரத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கியுள்ளார். எந்தவித அனுமதியையும் பெறாமலேயே ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள பிரதமர் நெதன்யாகு எங்களுக்கு அனுமதி தந்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில்
ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துவிட்டார். இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வரலாம்" என்றார்.
ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.
மேலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவும், உச்சத் தலைவருமான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்ப்பது நடக்கவில்லை.
முன்னதாக ஈரான் மீதான தாக்குல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கச்சா எண்ணெய் போக்குவரத்து ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட போர்க் கப்பல்களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள கரைப் பகுதிகளில் ஈரான் ஏவுகணை தளங்கள் பல உள்ளன. இங்கிருந்துதான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாதாளத்தில்உள்ள இந்த ஏவுகணை கிடங்குகளை குறி வைத்து 2,200 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை அமெரிக்க ராணுவம் வீசியது. இந்த குண்டுகள் பாதாள பகுதிகளை ஊடுருவி தாக்கும் திறன் படைத்தவை. இந்த குண்டுகளை ஈரான் மீது வெற்றிகரமாக வீசியதாக அமெரிக்க ராணுவம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்
ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, March 18, 2026
தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் - அர்ச்சனா பட்நாயக் தகவல்
பதிவு: புதன்கிழமை, மார்ச் 18, 2026, பங்குனி 04, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காகச் செலவு செய்ய முடியும்.
தேர்தல் நடைமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமல்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இடம்பெற்றுள்ளன. இதில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.
பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று காலை வரை 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டியதில்லை என்றும், தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டு இருந்தால் அவை மறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும் பொழுது அவை எப்படி பெறப்பட்டது, எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், அத்தொகை பறிமுதல் செய்யப்படாது. உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும். இது குறித்து முறையீடு ஏதும் இருப்பின் மாவட்ட குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
மேலும், புகார்கள் தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியரை மாற்றுவது தொடர்பான புகார் தேர்தல் தொடர்பானது இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்லடத்தில் மருத்துவச் செலவுக்காக கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
327 பார்வையாளர்கள் நியமனம்
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்கள், 188 காவல் துறை பார்வையாளர்கள், 366 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் துறை பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்கள், 4 காவல் துறை பார்வையாளர்கள், 17 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 18-க்குள் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்களில் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, March 17, 2026
5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் - அர்ச்சனா பட்நாயக் தகவல் - பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைப்பு
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 17, 2026, பங்குனி 03, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 3.14 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச்26-ம் தேதி வரை விண்ணப்பித்தால், தேர்தலுக்கு முன்பு, பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். இதற்கிடையே, மார்ச் 31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 3 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனுக்களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.
50 கம்பெனி துணை ராணுவம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம்வெளியிடப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம்.
ரூ.1.26 கோடி பறிமுதல்
மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம். பிரச்சார அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரச்சாரத்தின்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி மேனுவல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 3.14 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச்26-ம் தேதி வரை விண்ணப்பித்தால், தேர்தலுக்கு முன்பு, பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். இதற்கிடையே, மார்ச் 31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 3 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனுக்களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.
50 கம்பெனி துணை ராணுவம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம்வெளியிடப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம்.
ரூ.1.26 கோடி பறிமுதல்
மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம். பிரச்சார அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரச்சாரத்தின்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி மேனுவல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, March 16, 2026
தேர்தல் அறிவிப்பால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லக்கூடாது - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன...?
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 16, 2026, பங்குனி 02, விசுவாவசு வருடம் 04:40 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியில் நடக்கும் என்று நேற்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (எம்.சி.சி.) உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிட்டன.
ஏதாவது மிக முக்கிய பிரச்சினை நடந்துவிட்டது என்றால் மட்டுமே, அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடை பெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதிவரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல்ல முடியாது.
அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும்படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்துவிடுவார்கள்.
அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:-
* ஒட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப்பொருள் கொடுக்கக்கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக்கூடாது.
* தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது.
* தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. அரசு அலுவலர்களை அமைச்சர் தனது அலுவலக பணிகளுடன் சேர்க்கக்கூடாது. அரசு பணியை அரசியல் பணிகளுடன் சேர்க்கக்கூடாது.
* தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் உபகரணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்களை சென்று சந்திக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். குற்ற வழக்குக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.
* மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் அனைத்து குறிப்புகளும், அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை போலப் புகழ்ந்து பேசுவதாக இருந்தால் நீக்கப்படும்.
* அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களை அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக தூண்டும் வகையில் அதுபற்றிய புதிய திட்டங்கள், அறிவிப்புகளை செய்யக்கூடாது.
* இந்த கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் சமமாக பொருந்தும். ஆனாலும், ஏற்கனவே நிறைவடையும் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய, பிராந்திய மற்றும் மாநில பயன்பாட்டுத் திட்டங்களின் விஷயத்தில், அவற்றின் பயன் பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
அது போன்ற திட்டங்களின் செயல்பாடு, அரசு அதிகாரிகளால் செய்யப்படுகிறதா? என்பதும், அரசியல் செயல்பாடுகள் இல்லாமலும், விழாக்களை நடத்தாமலும், திட்டத்தின் செயல்பாடுகளின் பயன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செல்கிறது என்ற எண்ணம் ஏற்படாமலும் செயல்படுத்த வேண்டும். இதில் தேர்தல் கமிஷனை ஆலோசிக்கலாம்.
* அரசினால் பட்ஜெட்டிலோ, கவர்னர் உரையிலோ அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என்று அவற்றை தொடங்கினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றமாக கருதப்படும். திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணி ஆணை கொடுக்கப் பட்டு இருந்தாலும் அந்தப் பணிகள் தேர்தல் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகளை முடித்து அதற்கான தொகையை உரியவருக்கு வழங்குவதற்கு தடையில்லை.
* திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்வது கூடாது. மக்கள் நலத்திட் டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும்கூட, தேர்தல் முடியும் வரை அவை நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் முன் அனுமதியின்றி, நலத் திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்கான புதிய நிதியை வெளியிடவோ அல்லது வழங்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யவோ கூடாது. இதில், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியும் அடங்கும்.
* இயற்கை பேரிடர் நிவாரண நிதி, முதியோர் உதவி நிதி அளிப்பதற்கு தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்று வழங்கலாம். ஆனால் வாக்கா ளர்களுக்கு கட்சி சார்பான தூண்டுதல் ஏற்படாதபடி, அனைத்து ஆடம்பர மான செயல்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 15, 2026
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ல் ஒரே கட்டமாக தேர்தல் - மே.4ல் வாக்கு எண்ணிக்கை
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.
இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 இந்திய சரக்குக் கப்பல்கள்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 07:30 AM
புதுடெல்லி,
இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30+ சரக்கு கப்பலிகளில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல். இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின்...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...






