Monday, March 30, 2026

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 AM

நாகர்கோவில்,

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ்டாலின் பாடுபடுகிறார். இம்முறை அப்படியே திமுக வென்றாலும் ஸ்டாலின் முதல்வர் கிடையாது. அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை சாதாரண மக்களில் ஒருவர்தான் ஆள வேண்டும். மக்கள் மனதை புரிந்தவர் தான் வரவேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “இந்த மாவட்டத்தில் வேளாண்மை, மீன்பிடித்தொழில், ரப்பர் தோட்டம் ஆகியவையே மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தோம். நானும் விவசாயி தான். நாட்டுக்கு உணவு அளிப்பவர் விவசாயி. அடுத்து மீன்பிடித் தொழில். அது சாதாரண தொழில் அல்ல, வீடு திரும்பினால் தான் நிச்சயம். ஆபத்தான தொழில். அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம், பல திட்டங்கள் சொல்லியிருக்கிறோம்.

இங்கு ரப்பர் தொழிலும் சிறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2017ல் இந்த மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியது. உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தோம், கப்பல் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டோம். 31 ஆயிரம் மீனவர்களுக்கு வாழ்வாதார நிதி 2,500 ரூபாய் வழங்கினோம். சேதமடைந்த வீடுகள் விவசாயப் பயிர்களுக்கும் நிவாரணம் அளித்தோம். 16 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது, அவற்றையும் சரிசெய்தோம்.

திமுக ஆட்சியில் மத்தியில் காங்கிரஸ் இருக்கும்போதுதான் கச்சத்தீவை தாரை வார்த்தனர், மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்த, ஓய்வெடுக்க கச்சத்தீவை பயன்படுத்தி வந்தனர், அதனை மீண்டும் மீட்க அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். அதிமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதிக்கு தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள். கிள்ளியூர் தொகுதியின் தமாகா வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன், நாகர்கோவில் குளச்சல் பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதியில் போட்டியிடும் பாஜகவினருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களியுங்கள்.

இந்த மாவட்டத்தில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ளது. அதிமுக ஆட்சியில் இங்கு இரண்டு இடங்களில் கல்லூரி கொடுத்தோம், நாகர்கோவில் மற்றும் பால்குளம் இரண்டு இடத்தில் அரசு கல்லூரி கொடுத்தோம். கல்விக்கு முன்னுரிமை கொடுத்தோம். பல துறைகள் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியை மையமாக வைத்துத்தான் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் முன்னுரிமை கொடுத்து அதிக நிதியுதவி செய்தோம்.

2011-2021 அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளில் 68 கலை, அறிவியல் கல்லூரிகள் கொடுத்தோம். 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்தோம். 248 தொடக்கப்பள்ளிகள், 117 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 1079 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டன. ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம்.

ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர கூட திராணியற்றது திமுக அரசு. மிகப்பெரிய கால்நடை பூங்கா, ஆயிரம் கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா தலைவாசலில் உருவாக்கினோம் அதைக்கூட முழுமையாக திறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டு கலப்பின பசுக்களை உருவாக்கி பால் வளத்தைப் பெருக்குவோம்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. திமுக அதை நிறுத்திவிட்டது.

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம். நான்கரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஆட்சியின் கடைசி நேரத்தில் அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது தரமற்ற லேப்டாப்பாக உள்ளதாக கேள்விபட்டேன். அதிமுக அரசு அமைந்தபிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, இதில் ஊழல் நடந்திருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், தாங்கள் இருக்கும் ஊர்களிலும், அருகாமையிலும் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டன. அதையும் நிறுத்திவிட்டனர், மீண்டும் அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும். அம்மா மினி கிளினிக்கில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தப்பட்டு, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அம்மா கிளினிக் மூடிய இடங்களில் மட்டுமல்ல, மக்கள் கோரும் இடங்களில் எல்லாம் திறக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 254 ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவந்தோம். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தியாவிலே அதிகமான தேசிய விருது பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. நூற்றுக்கணக்கான தேசிய விருதுகள் பெற்றது. உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை என பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு.

அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு. இதெல்லாம் அதிமுக சிறந்த ஆட்சி என்பதற்கான உதாரணம்.

கொரோனா காலத்தில் ஓராண்டு மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் கூட ஒரு வருடம் ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு கொடுத்தோம். உயிர்களைக் காப்பாற்றினோம். ஓராண்டு வரி வருவாய் அரசுக்கு இல்லை. அப்போதும் கூட சிறப்பான ஆட்சி கொடுத்தோம்.

இந்த ஆட்சியில் புயல், வெள்ளம், கொரோனா வந்ததா? ஒன்றுமில்லை. ஆனால், ஊழல் மட்டும் நிறைந்திருக்கிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மூன்றும் தான் ஐந்தாண்டு சாதனை. எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ்டாலின் பாடுபடுகிறார். வெற்றி பெறமாட்டார்கள், அப்படியே வென்றாலும் ஸ்டாலின் முதல்வர் கிடையாது. உங்கள் கனவு பலிக்காது. அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை சாதாரண மக்களில் ஒருவர்தான் ஆள வேண்டும். மக்கள் மனதை புரிந்தவர் தான் வரவேண்டும். அந்த வகையில் கீழே இருந்து தான் நான் வந்துள்ளேன். ஸ்டாலின் போல வரவில்லை.

எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு சிறப்பான ஆட்சி செய்தேன். வறட்சி, புயலின்போதும் சிறப்பாக செயல்பட்டோம். கொரோனாவிலும் விலைவாசி உயரவில்லை, அப்படியொரு திறமையான ஆட்சி கொடுத்தோம். இந்த ஆட்சியில் சொத்துவரி, வீட்டு வரி, கடை வரி எல்லாம் 100% முதல் 150% உயர்ந்துவிட்டது. குப்பையைக் கூட விட்டுவைக்கவில்லை. மின்கட்டணம் 67% உயர்வு. இந்த அரசு மீண்டும் தொடர வேண்டுமா?.

மேலாக, இந்த ஆட்சியில் வருமானம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. ஆனாலும் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கியும் புதிய திட்டம் எதுவும் வரவில்லை. இந்த பணம் எல்லாம் போக வேண்டிய இடத்துக்கு போய்விட்டது. 5 லட்சம் கோடி கடன். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடிதான், ஆனால் அதைவிட திமுகவின் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்.

கடன் வாங்கி என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்..? ஒருபக்கம் வருவாய் அதிகரிப்பு, ஒரு பக்கம் கடன் வாங்குகிறார்கள். ஆனால், அதிமுக கொரோனாவில் ஒரு வருடம் வருவாய் இல்லாமல் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு தலை தொங்கிப் போயிருக்கிறது. இந்த கடன் எல்லாம் மக்கள் தலையில் தான் விழும். நான் பேசுவது சரியா, தவறா என்று சிந்தியுங்கள், சரியாக இருந்தால் ஆதரியுங்கள். எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருட்கள் பல வடிவத்தில் வந்துவிட்டது, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடரவேண்டுமா?

கன்னியாகுமரியில் அரசு கலைக் கல்லூரி, 110 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம், சுற்றுலாவுக்கு இரண்டு அதிநவீன கப்பல் வாங்கி கொடுத்தோம், மேலமணக்குடி கீழ மணக்குடி மேம்பாலம் கட்டப்பட்டது. மணக்குடி உயர்மட்டப் பாலத்துக்கு லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் பெயர் சூட்டப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தோவாளையில் தென்னை மதிப்புக் கூட்டு மையம் அமைக்கப்பட்டது. 250 கோடியில் குடிநீர்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, அதனை திமுக கிடப்பில் போட்டது, இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலர் உற்பத்தி சாகுபடி விவசாயிகளுக்கு எம்ஜிஆர் மலர் வணிக வளாகம் தோவாளையில் அமைத்துக் கொடுத்தோம். தென்னை மதிப்புக் கூட்டு வாரியத்துக்கு 16 கோடியில் கட்டிடம் அமைக்கப்பட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மூடிவிட்டனர்.

மீனவர் மக்கள் கோரிக்கையை ஏற்று மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை 12 ஆயிரமாக உயர்த்தி கொடுத்திருக்கிறோம். மீனவர் இறந்தால் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்படும், மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்துகொடுக்கப்படும். பிரீமியத்தை அரசே செலுத்தும். மீனவர் மீட்புக்குழு, இழுவைப்படகு வசதி செய்துகொடுக்கப்படும்,. கடற்கரை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். தூண்டில் வளைவு, கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும். மீனவர் மானிய டீசல் 500 லிட்டராக உயர்த்தப்படும். மீனவர் பொருளாதாரம் மேம்படுத்த மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். நவீன படகுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும். தொலைதொடர்பு மையம் ஏற்படுத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு எண்ணெய் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டுக்கொடுக்கும். பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை ஓரமாக புதிய கடை வைப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கடனுதவி வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உயிர் இழந்தால் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் காப்பீட்டில் சேர்க்கப்பட்டு பிரீமியம் தொகையை அரசே செலுத்தும்.

திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்வேன் என்று சொன்னார்கள். ஆனால், நீட் கொண்டுவந்ததே திமுக தான். 2010 டிசம்பர் 21ம் தேதி திமுகவை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் நீட் சட்டம் கொண்டுவரப்பட்டது. கொண்டுவந்ததும் திமுக, காங்கிரஸ். எதிர்ப்பதும் அவர்கள் தான். இரட்டை வேடம் போடுகிறார்கள். நீட் ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி. நீட்டுக்கு விதிவிலக்கு பெற முடியாது என்று சட்டமன்றத்தில் ரகசியத்தை சொல்லிவிட்டார் ஸ்டாலின். மக்களை ஏமாற்றி திமுக அந்தர் பல்டி அடித்துவிட்டது. இதைத்தான் நாங்களும் சொன்னோம்.

வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.

இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் - திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் - முழு விபரம்

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 01:00 AM

சென்னை,

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி திமுக தேர்​தல் அறிக்​கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளி​யிட்​டார். வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோக பொருட்​கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்​பில் கூப்​பன் வழங்​கும் 'இல்​லத்​தரசி' திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று அவர் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, திமுக தேர்​தல் அறிக்​கையை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று வெளியிட்டார். அவர் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மகளிர் உரிமைத்​தொகை உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களைச் செயல்​படுத்தி தமிழகத்தை அனைத்து துறை​யிலும் வளர்த்​தோம்.

தொலைநோக்​குத் திட்​டங்​கள் மூல​மாக தமிழகம் முழு​மை​யான வளர்ச்​சி​யைப் பெற்​றுள்​ளது. தமிழகத்​தில் கல்​வியை, கட்​டமைப்​பை, சமூகநீ​தி​யை, இது​வரை நாம் அடைந்த முன்​னேற்​றத்தை பாது​காக்க வேண்​டு​மா​னால் திமுக ஆட்​சி தொடர வேண்​டும். திரா​விட மாடல் 2.0 அமைய வேண்​டும்.

அதற்கு அடித்​தள​மாக, உங்​களின் கனவு​களை நிறைவேற்ற ‘ஸ்டா​லின் ஸ்டேட்​மென்ட்டை (Stalin Statement)’ வழங்​கி​யிருக்​கிறேன். அதன் விரி​வாக்​கம்​தான் திமுக​வின் தேர்​தல் அறிக்​கை. வரு​மான வரி செலுத்​தாத குடும்​பங்​களைச் சேர்ந்த இல்​லத்​தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்​பிலான கூப்​பனை பயன்​படுத்தி வாஷிங் மெஷின், டிவி. பிரிட்ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்​களை புதி​தாக வாங்​கிக்​கொள்ள அல்​லது ஏற்​கெனவே பயன்​படுத்தி வரும் பழைய பொருட்​களுக்கு மாற்​றாக​ பெற்​றுக்​கொள்ள ‘இல்​லத்​தரசி' திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

முதல்​வரின் காலை உணவு திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்​தப்​படும். 1.31 கோடி சகோதரி​கள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ​ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். இலவச மின்​சா​ரம் பெறும் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும்.

அடுத்த 5 ஆண்டு​களில் 10 லட்​சம் புதிய வீடு​கள் கட்​டித்​தரப்​படும். முதல்​வரின் மருத்​துவக் காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​வதற்​கான வரு​மான வரம்பு ரூ.5 லட்​ச​மாக​வும், காப்​பீட்​டுத்​தொகை ரூ.10 லட்​ச​மாக​வும் உயர்த்​தப்​படும். நெல் கொள்​முதல் விலை குவின்​டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்​முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்​கப்​படும். முதி​யோர் உதவித்​தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிர​மாக​வும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடி தடைக்​கால சிறப்பு நிவாரணத் ​தொகை ரூ.8 ஆயிரத்​தில் இருந்து ரூ.12 ஆயிர​மாக​வும், மீன்​பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்​தொகை ரூ.6 ஆயிரத்​தில் இருந்து ரூ.9 ஆயிர​மாக​வும் உயர்த்​தப்​படும். சுயஉதவிக் ​குழு உறுப்பின​ராக இருக்​கும் பெண்​களை, தொழில் ​முனை​வோ​ராக முன்​னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படும்.

பேரிடர் கால இழப்​பீடு​கள் ஹெக்​டேர் ஒன்​றுக்​கு, இறவைப் பாசன பயிர்​கள் மற்​றும் நெற்​ப​யிர்​களுக்கு ரூ.25 ஆயிரம், நீண்​ட​கால பயிர்​களுக்கு ரூ.27 ஆயிரம், மானாவரி பயிருக்கு ரூ.12 ஆயிர​மாக உயர்த்தி வழங்​கப்​படும். அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​காக அறிவிக்​கப்​பட்ட தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் சிறப்​பாக செயல்​படுத்​தப்​படும். 8-வது ஊதி​யக்​குழு அறிக்​கையை மத்​திய அரசு செயல்​படுத்​தி​யதும், மாநில அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கும் செயல்​படுத்​தப்​படும். 1.50 லட்​சம் அரசு காலி ​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்.

உயர்​கல்வி பயிலும் 35 லட்​சம் மாணவர்​களுக்கு 5 ஆண்​டு​களில் மடிக்​கணினி வழங்​கப்​படும். தகவல் தொழில்​நுட்ப ஏற்​றுமதி ரூ.2.50 லட்​சம் கோடியில்​இருந்து ரூ.5 லட்​சம் கோடி​யாக உயர்த்​தப்​படும். ஆயிரம் கிராம தெய்வ கோயில்​கள் மறுசீரமைக்​கப்​படும். 5 ஆயிரம் கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்தப்​படும்.

சிறு​பான்​மை​யினர் தொழில் தொடங்க டாம்கோ (TAMCO) மூலம் கடன் பெறும் உச்​சவரம்பு ரூ.30 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். முதல்​வரின் கிராம சாலை திட்​டத்​தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் ரூ.10 ஆயிரம் கோடி​யில் சீரமைக்​கப்​படும். அனைத்து மாநக​ராட்​சிகள், முக்​கிய நகராட்​சிகளில் 50 புதிய செம்​மொழி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும். திருச்​சி, மதுரை, கோவை, சேலம் மாநக​ராட்​சிகளின் அரு​கில் நவீன உலகத்தர வசதி​களு​டன் புதிய நகரங்​கள் அமைக்​கப்​படும். தமிழகத்​தில் 10 கைத்​தறி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும்.

தமிழகத்​தில் திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. இப்​போது இது சூப்​பர் ஸ்டா​ராக களமிறங்​கி​யுள்​ளது. இதில் இடம்​பெற்​றுள்ள அனைத்து வாக்​குறு​தி​களும் சட்​டங்​கள், மாபெரும் திட்​டங்​களாக​வும் மாறும். இவ்​வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளார்.தேர்​தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலை​வர் கனி​மொழி, உறுப்

​பினர்​கள் டிகேஎஸ்​. இளங்​கோவன், கோவி.செழியன், பிடிஆர்​.பழனிவேல் தி​யாக​ராஜன்,டிஆர்​பி. ​ராஜா உள்​ளிட்​டோரை முதல்​வர்​ கவுர​வித்​தார்​. கட்​சி​யின்​ பொதுச் ​செய​லா​ளர்​ துரை​முரு​கன்​, பொருளாளர்​ டி.ஆர்​.​பாலு உள்​ளிட்​டோர்​ பங்கேற்றனர்​. கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘‘திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் உண்மையை பேசக்கூடியதேர்தல் அறிக்கை எதுவோ,யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்களோ, அந்த தேர்தல் அறிக்கைக்குதான் மரியாதையும் செல்வாக்கும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

DMK promises homemakers ₹8,000 coupons to buy electronic appliances in election manifesto


 DMK manifesto: DMK promises Rs 2,000 pension, Rs 8,000 household support | 2026 TN elections

2026 TN elections | DMK promises Rs 2,000 pension, Rs 8,000 household support

M.K. Stalin expressed the hope that DMK would form the government for the 7th time since no State government could match the schemes implemented by them.

Chief Minister and DMK President M.K. Stalin releasing party's manifesto ahead of Assembly elections on March 29, 2026.

Releasing what he described as a “superstar” manifesto for the Tamil Nadu Assembly elections on Sunday (March 29, 2026, DMK president and Chief Minister M. K. Stalin announced the “ Illatharasi scheme” under which all non-Income Tax assessee housewives, will be given a coupon valued at ₹8,000 to purchase or replace household electronic appliances.

Asked whether the government would have funds to implement the new schemes, Mr. Stalin said similar doubts were raised in the 2021 election, but the DMK government fulfilled all its promises. He also announced that the Kalaignar Magalir Urimai Thoagai for women heads of families will be increased to ₹2,000 from ₹1,000.

DMK manifesto, 2000 Pension, M.K.Stalin,
#DMKmanifesto, #2000Pension, #MKStalin,

Sunday, March 29, 2026

DMK Chief and TN CM M.K. Stalin announced Candidates for 164 Constituencies | TN Assembly election


 DMK Chief and TN CM M.K. Stalin announced Candidates for 164 Constituencies | TN Assembly election

Tamil Nadu Assembly election: DMK announces candidates for 164 constituencies

Notably, former Chief Minister O. Panneerselvam is set to contest from Bodinayakanur, while V. Senthilbalaji has shifted from Karur to Coimbatore South

DMK chief and Tamil Nadu CM M.K. Stalin announced the party’s candidates on Saturday.

The Dravida Munnetra Kazhagam (DMK) on Saturday (March 28, 2026) announced the list of 164 candidates who will be contesting the upcoming Tamil Nadu Assembly elections. Chief Minister M.K. Stalin and Deputy Chief Minister Udhayanidhi Stalin will once again contest from the Kolathur and Chepauk-Tiruvallikeni constituencies, respectively. 

Mr. Stalin has been representing the Kolathur constituency since its creation following delimitation. He won the seat in 2011, 2016, and 2021, and will now be contesting from the seat for the fourth time.

DMK’s Karthik Mohan, son of DMK MLA M.K. Mohan who was elected from the Anna Nagar constituency, is set to contest from Villivakkam, where he is likely to face Aadhav Arjuna, a once-close associate of Udhayanidhi Stalin who previously worked as a strategist for the DMK before entering full-time politics. Mr. Arjuna is now with actor Vijay’s Tamilaga Vettri Kazhagam (TVK). A. Vetriazhagan, grandson of the late K. Anbazhagan, former general secretary of the DMK, won the Villivakkam seat in the 2021 election.

The party has also fielded Vinoth Gandhi, son of Textiles and Handlooms Minister, R. Gandhi, in Ranipet constituency. Mr. Gandhi, however, has not been allotted a constituency.

imilarly, senior DMK leader K. Ponmudy’s son, Gautham Sigamani, has been fielded from the Thirukoilur constituency. Mr. Ponmudy has also been denied a seat this time. DMK leader N. Chitrarasu will contest from the Anna Nagar constituency. 

Notably, former Chief Minister O. Panneerselvam is set to contest from Bodinayakanur, while V. Senthilbalaji has shifted from Karur to Coimbatore South, where he will face Amman Arjunan of the AIADMK in a direct contest.

In a move to recognise one of the most familiar faces defending the DMK on news debates, Tamilan Prasanna has been fielded from the Egmore constituency.

The DMK’s senior-most Minister and general secretary, Duraimurugan, has been fielded from the Katpadi constituency for the seventh time.

DMK candidates in Chennai

Constituency - Candidate
Alandur  - T. M. Anbarasan
Ambattur -  A.P. Poornima
Anna Nagar - N. Chitrarasu
Avadi - S.M. Nasar
Chengalpattu - M.K.D. Karthik Dhandapani
Chepauk-Thiruvallikeni  - Udhayanidhi Stalin
Dr. Radhakrishnan Nagar - J.J. Ebenezer
Egmore (SC)  - Tamilan Prasanna B.L.
Gummidipoondi - T.J. Govindarajan
Harbour - P.K. Sekarbabu
Kanchipuram - Nithya Sukumar
Kolathur - Muthuvel Karunanidhi Stalin
Madhavaram - S. Sudharsanam
Maduravoyal - Karambakkam Ganapathi
Mylapore - T. Velu
Perambur - R.D. Sekar

DMK Candidates, M.K.Stalin, Udhayanidhi Stalin, Duraimurugan, 
#DMKCandidates, #MKStalin, #UdhayanidhiStalin, #Duraimurugan, 

திமுகவின் 164 வேட்பாளர்கள் அறிவிப்பு - முழு பட்டியல்


 பதிவு:   ஞாயிற்றுக்கிழமை,  மார்ச் 29, 2026, பங்குனி 15, விசுவாவசு வருடம் 03:00 AM

சென்னை,

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று (மார்ச் 28) வெளியிட்டார். 

அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்:

001. கன்னியாகுமரி - ரெ.மகேஷ்

002. நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின்

003. ராதாபுரம் - மு.அப்பாவு

004. பாளையங்கோட்டை - மு.அப்துல் வஹாப்

005. திருநெல்வேலி - சு.சுப்பிரமணியன்

006. ஆலங்குளம் - பால் மனோஜ் பாண்டியன்

007. தென்காசி - கலை கதிரவன்

008. வாசுதேவநல்லூர் - ஈ.ராஜா

009. கோவில்பட்டி - கா.கருணாநிதி

010. ஓட்டபிடாரம் (தனி) - பி.எம்.ராமஜெயம்

011. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

012. தூத்துக்குடி - கீதா ஜீவன்

013. விளாத்திகுளம் - ஜி.வி.மார்கண்டேயன்

014. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

015. ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்

016. பரமக்குடி (தனி) - கே.கே.கதிரவன்

017. திருச்சுழி - தங்கம் தென்னரசு

018. அருப்புக்கோடை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

019. சாத்தூர் - அ.கடற்கரை ராஜ்

020. ராஜபாளையம் - சௌ.தங்கப்பாண்டியன்

021. கம்பம் - நா.ராமகிருஷ்ணன்

022. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்

023. ஆண்டிப்பட்டி - ஆ.மகராஜன்

024. திருமங்கலம் - சேடப்பட்டி மு.மணிமாறன்

025. திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி

026. மதுரை மேற்கு - ரகு பாலாஜி

027. மதுரை மத்தி - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

028. மதுரை வடக்கு - கோ.தளபதி

029. சோழவந்தான் (தனி) - ஆ.வெங்கடேசன்

030. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி

031. மானாமதுரை (தனி) - ஆ.தமிழரசி ரவிக்குமார்

032. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்

033. ஆலங்குடி - சிவ வீ மெய்யநாதன்

034. திருமயம் - எஸ்.ரகுபதி

035. புதுக்கோட்டை - வை.முத்துராஜா

036. விராலிமலை - கே.கே.செல்லபாண்டியன்

037. பேராவூரணி - நா.அசோக்குமார்

038. பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை

039. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்

040. தஞ்சாவூர்- சண்.ராமநாதன்

041. திருவையாறு - துரை.சந்திரசேகரன்

042. கும்பகோணம் - சாக்கோட்டை கா.அன்பழகன்

043. திருவிடைமருதூர் - கோவி.செழியன்

044. திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன்

045. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா

046. வேதாரண்யம் - மா.மீ.புகழேந்தி

047. பூம்புகார் - நிவேதா முருகன்

048. புவனகிரி - துரை கி.சரவணன்

049. குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

050. நெய்வேலி - சபா.ராஜேந்திரன்

051. திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன்

052. ஜெயங்கொண்டம் - க.சொ.க.கண்ணன்

053. அரியலூர் - லதா பாலு

054. குன்னம் - சா.சி.சிவசங்கர்

055. பெரம்பலூர் (தனி) - எஸ்.டி.ஜெயலட்சுமி

056. முசிறி - என்.எஸ்.கருணைராஜா

057. மண்ணச்சநல்லூர் - சீ.கதிரவன்

058. லால்குடி - த.பாரிவள்ளல்

059. திருவெறும்பூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி

060. திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்

061. திருச்சி மேற்கு - கே.என்.நேரு

062. ஸ்ரீரங்கம் - எஸ்.துரைராஜ்

063. குளித்தலை - சூரியனூர் அ.சந்திரன்

064. கிருஷ்ணராயபுரம் (தனி) - சி.கே.ராஜா

065. கரூர் - ஆசி.எம்.தியாகராஜன்

066. அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ

067. வேடசந்தூர் - டி.சாமிநாதன்

068. திண்டுக்கல் - ஐ.பி.செந்தில்குமார்

069. நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி

070. ஆத்தூர் - இ.பெரியசாமி

071. ஒட்டன்சத்திரம் -அர.சக்கரபாணி

072. மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன்

073. உடுமலைப்பேட்டை - மு.ஜெயகுமார்

074. வால்பாறை (தனி) - ஆ.சுதாகர்

075. கிணத்துக்கடவு - கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்

076. கோயமுத்தூர் தெற்கு - வி.செந்தில்பாலாஜி

077. தொண்டாமுத்தூர் - என்.ஆர்.கார்த்தியேன்

078. கோயமுத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன்

079. சூலூர் - தளபதி முருகேசன்

080. பல்லடம் - க.செல்வராஜ்

081. திருப்பூர் தெற்கு - ந.தினேஷ்குமார்

082. அவினாசி(தனி) - டாக்டர். கோகிலா மணி

083. மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாணசுந்தரம்

084. குன்னூர் - கே.எம்.ராஜூ பி.காம்.,

085. கூடலூர்தனி) - மு.திராவிடமணி

086. கோபிச்செட்டிபாளையம் - என் நல்லசிவம்

087. அந்தியூர் - எம்.சிவபாலன்

088. பவானி - கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர்

089. பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்

090. காங்கயம் - மு.பெ.சாமிநாதன்

091. தாராபுரம் (தனி) - இந்திராணி

092. ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி

093. குமாரபாளையம் - எஸ்.பாலு

094. பரமத்திவேலூர் - கே.எஸ்.மூர்த்தி

095. நாமக்கல் - ப.இராணி

096. சேந்தமங்கலம் (தனி) - பி.பூமலர்

097. ராசிபுரம்(தனி) - மா.மதிவேந்தன்

098. வீரபாண்டி - ஆ.கா.தருண்

099. சேலம் தெற்கு - எம்.லோகநாதன்

100. சேலம் வடக்கு - இரா.இராஜேந்திரன்

101. சங்ககிரி - மு.மணிகண்டன்

102. எடப்பாடி - காசி

103. மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி பி.இ.

104. ஏற்காடு தனி) - டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்

105. கெங்கவல்லி (தனி) - கு.சின்னதுரை

106. சங்கராபுரம் - தா உதயசூரியன்

107. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

108. உளுந்தூர்பேட்டை - ஜி.ஆர்.வசந்தவேல்

109. திருக்கோயிலூர் - பொன்.கௌதமசிகாமணி

110. விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்

111. விழுப்புரம் - இரா.லட்சுமணன்

112. வானூர் (தனி) - கௌதம் திராவிடமணி

113. செஞ்சி- கே.எஸ்.மஸ்தான்,

114. வந்தவாசி (தனி) - எஸ்.அம்பேத்குமார்

115. செய்யாறு - ஓ.ஜோதி

116. ஆரணி - மகாலட்சுமி கோவர்த்தனன்

117. கலசப்பாக்கம் -பெ.சு.தி.சரவணன்

118. கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி

119. திருவண்ணாமலை - எ.வ.வேலு

120. செங்கம் - மு.பெ.கிரி.

121. அரூர் - அ. சண்முகம்

122. பாப்பிரெட்டிப்பட்டி - பெ.பழனியப்பன்

123. பாலக்கோடு - டி.என்.வி.செந்தில்குமார்

124. ஓசூர் - எஸ்.ஏ. சத்யா

125. வேப்பனஹள்ளி - பி.எஸ்.சீனிவாசன்

126. பர்கூர் - தே.மதியழகன்

127. திருப்பத்தூர் - அ.நல்லதம்பி

128. ஜோலார்பேட்டை - கவிதா தண்டபாணி

129. ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்

130. கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) - ராஜேஸ்வரி மோகன்காந்தி

131. அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார்

132. வேலூர் - ப.கார்த்திகேயன்

133. ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

134. ராணிப்பேட்டை - வினோத் காந்தி

135. காட்பாடி - துரைமுருகன்

136. காஞ்சிபுரம் - நித்யா சுகுமார்

137. உத்திரமேரூர் - க.சுந்தர்

138. மதுராந்தகம் (தனி) - எஸ்.அமுலு பொன்மலர்

139. செங்கல்பட்டு - எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி

140. தாம்பரம் - ஆர்.எஸ்.கிருத்திகாதேவி

141. ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்

142. சோழிங்கநல்லூர் - ச.அரவிந்த் ரமேஷ்

143. மயிலாப்பூர் - தா.வேலு

144. தியாகராயநகர் - ராஜா அன்பழகன்

145. சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்

146. விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா

147. அண்ணாநகர் - நே.சிற்றரசு

148. ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன்

149. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்

150. துறைமுகம் - பி.கே.சேகர்பாபு

151. ராயபுரம் - சுபேர்கான்

152. எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா

153. திரு.வி.க.நகர் (தனி) - கே.எஸ்.ரவிச்சந்திரன்

154. வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்

155. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

156. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜே.ஜே.எபினேசர்

157. மாதவரம் - எஸ்.சுதர்சனம்

158. அம்பத்தூர் - அ.பு.பூர்ணிமா

159. மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி

160. ஆவடி - சா.மு.நாசர்

161. பூந்தமல்லி - ஆ.கிருஷ்ணசாமி

162. திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்

163. கும்மிடிப்பூண்டி - டி.ஜெ. கோவிந்தராஜன்

164. கொளத்தூர் - மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக-வின் 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம்  வெளியிட்டார்.

இதனிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் நேற்று (மார்ச் 28) அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறும்போது “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகின்றன” என்றார்.

Saturday, March 28, 2026

பதிவு:  சனிக்கிழமை,  மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:40 AM

சென்னை,

“திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவர் வெள்ளிக்கிழமை மாலை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

“ஆலந்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இங்கே கூடியிருக்கும் மக்களே சாட்சி.

மயிலாப்பூரில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோன். நான் பேசியதில் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. என் பேச்சுக்கு மூன்று அமைச்சர்கள் ஏதேதோ வகையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் சொன்ன கருத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஸ்டாலின் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். நிச்சயமாக அதிமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் தொடர்ந்து 25 நாட்களாக தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறார். 25 நாட்கள் பேசியும் இன்னும் முடிவு எட்டவில்லை. 4 நாட்கள் மட்டும் நாங்கள் பேசினோம். முதல் நாள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வந்தார்கள். பேசினோம், உடனே, எத்தனை எத்தனை இடங்கள் என்று அப்போதே அறிவித்த கட்சி அதிமுக.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சியின் மூத்த தலைவர், திமுக தலைமையுடன் பேசிவிட்டு வந்து, ‘அழுதுக்கொண்டே சிரிக்கிறோம்’ என்று பேட்டி அளித்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் திமுக தலைமையேற்று இருக்கிறது. அதுமட்டுமல்ல, விசிகவுக்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அறிவிக்கவில்லை.

ஆனால், ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஊடகங்களில், ‘எங்கள் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி’ என்று செய்தி வெளியிடுவார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று பெருமை பேசுவார். அப்படி 10 ஆண்டுகள் உங்கள் கூட்டணியில் இருந்த காரணத்தினால் தான், அவர்களுக்கு ஒரு தொகுதியைக் குறைத்து கொடுத்து இருக்கிறீர்கள்.

10 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகள் உங்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலியல், கொலை, கொள்ளை பற்றி திமுக கூட்டணிக் கட்சிகள் பேசவே இல்லை. வாயை திறக்காமல் மவுனம் காத்தார்கள், உங்கள் ஆட்சிக்கு துணையாக நின்றார்கள், உங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுடன் இருந்தவர்களுக்கு ஓர் இடம் குறைத்து கொடுத்துள்ளீர்கள்.

அண்மையில் திமுகவுடன் போய் சேர்ந்த கட்சிக்கு அதிக இடம் கொடுத்தார்கள். இதுதான் திமுக. ஆனால், அதிமுக அப்படி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம், முடிந்து விட்டால் அந்தந்த கட்சி அவரவர்களின் கொள்கையில் மக்கள் பிரச்சினையை முன்வைப்பார்கள். அது எங்கள் கூட்டணி தர்மம்.

ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கங்கள். மக்கள் பிரச்சினையை எடுத்துரைக்க வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. அதனால் அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

இபிஎஸ் 10 தோல்விகளை கண்டு விட்டார் என்று ஸ்டாலின் பேசிகிறார். 2011 முதல் 2021 வரை தில்லு, திராணி தெம்பு இருந்தால், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதும், மறைந்த பின்னும், அதிமுகவை திமுக வீழ்த்தியதாக வரலாறே கிடையாது.

2011-ல் கருணாநிதி தலைமையில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் அம்மா மறைவுக்கு பிறகு எவ்வளவோ சோதனைகள். அத்தனை சோதனைகளையும் சந்தித்து 2021-ல் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் அமர்ந்தோம். அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 75 இடங்களில் வென்றது. இது எங்கள் சாதனை. தலைவர்கள் இல்லை, தொண்டர்கள், மக்களின் ஆதரவோடு, மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றி மக்களை சந்தித்து 75 இடங்களில் வென்றோம். இதுதான் வெற்றி ஸ்டாலின் அவர்களே. வாய்சவடால் பேசுவதால் மட்டும் பிரயோஜனம் இல்லை. 5 ஆண்டு கால உங்கள் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது?

விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. விலை குறைக்க நடவடிக்கை எடுத்தீர்களா? அதிமுக ஆட்சியில் பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 40 ரூபாய் - திமுக ஆட்சியில் 75 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய் - திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய் - திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய் - திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய் - திமுக ஆட்சியில் 500 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய் - திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய் - திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை.

விலைவாசியால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் வெளி மாநிலத்தில் இருந்து மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்தது அதிமுக அரசு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தோம்..? கட்சியில் பிரச்சினை, திமுகவின் பி டீமாக இருந்தவர்கள் எங்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே எங்களுக்கு குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அந்த விஷமிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

மக்கள் ஆதரவோடு தொண்டர்கள் ஆதரவோடு 4 ஆண்டுகள் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். முதற்கட்டமாக 2017-ல் கடுமையான வறட்சி, நகர மக்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கிடையாது. அந்த கால கட்டத்தில் மக்களுக்குத் தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுத்தது, அதிமுக அரசு.

டெல்டாவில் ஐந்தாறு மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதமடைந்தன. மக்களின் உடைமைகள் புயலால் சேதமடைந்தன. அவற்றையெல்லாம் சரி செய்தோம். அதன் பிறகு கரோனா. அது எப்படிப்பட்ட காலம் என்பது உங்களுக்குத் தெரியும்.

மக்கள் யாரும் விதியில் நடமாடவில்லை. ஓராண்டு 11 மாத காலம் மக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அந்த காலத்தில் கூட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வருமானம் கிடையாது. தொழிற்சாலைகள் திறக்கவில்லை., ஜிஎஸ்டி வரி கிடையாது, பெட்ரோல் பங்க் திறக்கவில்லை. அதிலிருந்து வருவாய் கிடைக்கவில்லை. டாஸ்மாக் மூடப்பட்டது, சாலை வரி கிடையாது, பத்திரப்பதிவு கிடையாது, வருவாய் இல்லாத நிலையிலும் சிறப்பான ஆட்சியை தந்த அரசு, அதிமுக அரசு.

விலைவாசியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏழை மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், 11 மாதம் ரேஷன் கடையில் மளிகைப்பொருள்கள் விலை இல்லாமல் கொடுத்தோம். வருமானமே இல்லாமல் கரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடியை செலவு செய்த அரசு அதிமுக அரசு. திறமையாக செயல்பட்டு ஒரு நல்ல அரசு என்று மக்களிடம் பேர் வாங்கியது அதிமுக அரசு.

ஆனால், உங்கள் அரசு அப்படியா இருக்கிறது…? புயல் வந்ததா…? வெள்ளம் வந்ததா…?. கொரோனா வந்ததா…? எதுவுமில்லை. ஆனால், கடன் மட்டும் 5 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. எப்போது பார்தாலும் இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார். கடன் வாங்குவதில் முதல் முதலமைச்சர் என்பது உண்மைதான். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. ஒரு பக்கம் கடன் வாங்குகிறீர்கள், அதன் மூலம் சென்னை மக்களுக்கு ஏதாவது திட்டம் வந்ததா? தமிழ்நாட்டு மக்களுக்கு வந்ததா?

2021 அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயை விட 2024-25 திமுக ஆட்சியில் வருவாய் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளது. அப்படி இருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? அதாவது அத்தனையும் ஊழல். கலெக்சன், கமிஷன், கரப்ஷன் அது தான் திமுக ஆட்சி.

அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள வேறுபாடுகளை எண்ணிப்பாருங்கள். அதிமுக ஆட்சி மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்ததால், இந்தியாவிலேயே அதிகமான தொகை ஒரு திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2, 118 கி.மீ ரயில்வே பாதைகள் அமைக்க, 63 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து நாம் பெற்றோம். மத்திய அரசு அள்ளிக்கொடுத்தது.

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமரை அணுகினோம், கோரிக்கை வைத்தோம், பிரதமர் அறிவிப்பை கொடுத்து, உள்துறை அமைச்சர் நேரடியாக சென்னைக்கு வந்து அடிக்கல் நாட்டினார். இது அதிமுகவின் வரலாற்று சாதனை. இப்படி ஒரு சாதனை திமுக ஆட்சியில் பார்க்க முடிந்ததா…?

எத்தனை பாலங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். அற்புதமான சாலைகள் கொடுத்திருக்கிறோம். தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர் மட்டப் பாலத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கினோம், அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை நிறைவேற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைப்போம்.

சென்னை நகரைச்சுற்றி ரிங் சாலை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அந்த திட்டத்திற்கு ஒதுக்கி தொடங்கிவைத்தோம். ஆனால் இன்னும் அந்த பணி நிறைவு பெறவில்லை. எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.

இன்று திமுக ஆட்சியில் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழலை ஆதாரத்தோடு கண்டுபிடித்து, டிஜிபிக்கு மூன்று முறை அறிக்கை அனுப்பினார்கள். இதுவரை எஃப்.ஐ.ஆர். போடவில்லை. நீதிமன்றம் சென்று, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்வதில் மன்னர்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பணி நியமன ஊழல், அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதிமுக ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கு பார்த்தாலும் போதை பல வடிவத்தில் விற்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் விற்பதே திமுகவினர் தான். போதை ஆசாமிகளால் தான் மக்கள் நடமாட முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. தங்க விலை நிலவரம் போல கொலை நிலவரம் தினமும் வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

வீட்டு வரி 100% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 6% உயர்வு. கடைக்கு 150% உயர்வு. குப்பைக்கும் வரி போட்ட அரசு இது. மின்கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. 52% உயர்வு, ஆண்டுக்கு 5% உயரும். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாநகராட்சியில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர், ஊழல் செய்துள்ளனர்.

மதுரையில் 200 கோடி ஊழல், பன்றிக்கு போட்ட வரியிலும் ஊழல் செய்தனர். திமுக அரசே அதை கண்டுபிடித்தது. பலர் ராஜினாமா செய்துள்ளனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தொடர வேண்டுமா?

அதிமுக ஆட்சியில் விலைவாசி குறைக்கப்படும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். திமுக என்றால் கருணாநிதி குடும்பம் ஆகிவிட்டது. திமுக கட்சியினருக்கு மரியாதை இல்லை, என் பக்கத்தில் கந்தன் இருப்பது போல, ஸ்டாலின் பக்கத்தில் யாராவது நிற்க முடியுமா? நான் கீழேயிருந்து மேலே வந்தவன். மக்களோடு மக்களாக இருந்தேன், மக்கள் அவதிகள் அறிந்தவன். ஆட்சி எப்படி செய்யவேண்டும், எப்படி நிவர்த்தி செய்வது என்று தெரிந்ததால் தான், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக ஆட்சி செய்தோம். மக்கள் இந்த தேர்தலில் நல்ல வாய்ப்பை தருவீர்கள் என்று நம்புகிறோம், கொடுத்தால் இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஆட்சி கொடுப்போம்.

நான் தெய்வ பக்தி உள்ளவன். ஸ்டாலினைப் போல் வாரிசாக இல்லாமல், உழைத்து உங்களிடம் வந்திருக்கிறேன். ஸ்டாலினும் நானும் 1989-ல் எம்.எல்.ஏ. ஆனோம். சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றேன். அவர் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு, அவர் அப்பா கருணாநிதி. அதனால் சுலபமாக வென்று வந்தார். நான் சாதாரண தொண்டராக இருந்து எம்.எல்.ஏ ஆகி, அமைச்சராகி, படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன். வாரிசு அரசியல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. சுதந்திரமாக மக்கள் செயல்படும் ஆட்சி வேண்டும் என்றால் தே.ஜ கூட்டணியில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.

வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டுக்கொடுக்கும். சென்னையிலும் கிராமத்திலும், பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுசேலை வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து பதிவு செய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இன்னும் நிறைய அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம்’’ என்று பேசினார்.

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” - விஜய் ஆவேசம் - “திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?”

பதிவு:  சனிக்கிழமை,  மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:20 AM

சென்னை,

“நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவுக்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Featured post

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 A M நாகர்கோவில், “எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ...