பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 17, 2026, பங்குனி 03, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 3.14 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச்26-ம் தேதி வரை விண்ணப்பித்தால், தேர்தலுக்கு முன்பு, பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். இதற்கிடையே, மார்ச் 31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 3 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனுக்களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.
50 கம்பெனி துணை ராணுவம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம்வெளியிடப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம்.
ரூ.1.26 கோடி பறிமுதல்
மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம். பிரச்சார அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரச்சாரத்தின்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி மேனுவல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tuesday, March 17, 2026
5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் - அர்ச்சனா பட்நாயக் தகவல் - பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைப்பு
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, March 16, 2026
தேர்தல் அறிவிப்பால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லக்கூடாது - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன...?
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 16, 2026, பங்குனி 02, விசுவாவசு வருடம் 04:40 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியில் நடக்கும் என்று நேற்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (எம்.சி.சி.) உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிட்டன.
ஏதாவது மிக முக்கிய பிரச்சினை நடந்துவிட்டது என்றால் மட்டுமே, அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடை பெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதிவரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல்ல முடியாது.
அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும்படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்துவிடுவார்கள்.
அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:-
* ஒட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப்பொருள் கொடுக்கக்கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக்கூடாது.
* தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது.
* தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. அரசு அலுவலர்களை அமைச்சர் தனது அலுவலக பணிகளுடன் சேர்க்கக்கூடாது. அரசு பணியை அரசியல் பணிகளுடன் சேர்க்கக்கூடாது.
* தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் உபகரணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்களை சென்று சந்திக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். குற்ற வழக்குக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.
* மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் அனைத்து குறிப்புகளும், அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை போலப் புகழ்ந்து பேசுவதாக இருந்தால் நீக்கப்படும்.
* அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களை அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக தூண்டும் வகையில் அதுபற்றிய புதிய திட்டங்கள், அறிவிப்புகளை செய்யக்கூடாது.
* இந்த கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் சமமாக பொருந்தும். ஆனாலும், ஏற்கனவே நிறைவடையும் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய, பிராந்திய மற்றும் மாநில பயன்பாட்டுத் திட்டங்களின் விஷயத்தில், அவற்றின் பயன் பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
அது போன்ற திட்டங்களின் செயல்பாடு, அரசு அதிகாரிகளால் செய்யப்படுகிறதா? என்பதும், அரசியல் செயல்பாடுகள் இல்லாமலும், விழாக்களை நடத்தாமலும், திட்டத்தின் செயல்பாடுகளின் பயன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செல்கிறது என்ற எண்ணம் ஏற்படாமலும் செயல்படுத்த வேண்டும். இதில் தேர்தல் கமிஷனை ஆலோசிக்கலாம்.
* அரசினால் பட்ஜெட்டிலோ, கவர்னர் உரையிலோ அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என்று அவற்றை தொடங்கினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றமாக கருதப்படும். திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணி ஆணை கொடுக்கப் பட்டு இருந்தாலும் அந்தப் பணிகள் தேர்தல் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகளை முடித்து அதற்கான தொகையை உரியவருக்கு வழங்குவதற்கு தடையில்லை.
* திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்வது கூடாது. மக்கள் நலத்திட் டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும்கூட, தேர்தல் முடியும் வரை அவை நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் முன் அனுமதியின்றி, நலத் திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்கான புதிய நிதியை வெளியிடவோ அல்லது வழங்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யவோ கூடாது. இதில், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியும் அடங்கும்.
* இயற்கை பேரிடர் நிவாரண நிதி, முதியோர் உதவி நிதி அளிப்பதற்கு தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்று வழங்கலாம். ஆனால் வாக்கா ளர்களுக்கு கட்சி சார்பான தூண்டுதல் ஏற்படாதபடி, அனைத்து ஆடம்பர மான செயல்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 15, 2026
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ல் ஒரே கட்டமாக தேர்தல் - மே.4ல் வாக்கு எண்ணிக்கை
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.
இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 இந்திய சரக்குக் கப்பல்கள்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 07:30 AM
புதுடெல்லி,
இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30+ சரக்கு கப்பலிகளில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல். இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, March 14, 2026
இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு - மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 14, 2026, மாசி 30, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி,
எல்பிஜி சிலிண்டர்கள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து எல்பிஜி வருவது தடைபட்டுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீட்டு உபயோக சிலிண்டருக்கான புக்கிங்கை அதிக அளவில் செய்யத் தொடங்கினர்.
போன் மூலம் அதிக அளவில் புக்கிங் செய்யப்படுவதால் அந்த சிஸ்டம் செயலிழந்தது. இதையடுத்து எல்பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், எல்பிஜி சிலிண்டர் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது:-
வழக்கமாக தினந்தோறும் நாடு முழுவதும் 55.7 லட்சம் பேர் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்வார்கள். சிலிண்டர் கிடைக்காது என்று கருதி, கடந்த சில நாட்களாக 75.7 லட்சம் பேர் சிலிண்டருக்காக புக்கிங் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்தப் பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்துள்ளோம். எனவே, சிலிண்டர் கிடைக்காது என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
புக்கிங் செய்யும் அனைவருக்கும் காஸ் சிலிண்டர் நிச்சயம் கிடைக்கும். மக்கள் பீதி அடையாமல் இருக்கவேண்டும். மக்களுக்கு 100 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
எனவே, இதுதொடர்பாக யாரும் பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதி அடையச் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 13, 2026
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணிக்க இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி - எரிவாயு நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு தீவிரம்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 13, 2026, மாசி 29, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி/டெஹ்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.
ஈரான் மட்டுமின்றி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பரோட் ஆகியோருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த தாய்லாந்து கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்ம ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்த 20 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர்.
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஈரான், ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிப்பதற்கு முன்பே, லைபீரியா நாட்டு ஆயில் டேங்கர் கப்பல் ‘சென்லாங் சூயிஸ்மேக்ஸ்’ சவுதி அரேபியாவின் ராஸ் டானுரா துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி ஒரு லட்சத்து 35,335 டன் கச்சா எண்ணெய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டது. இது கடந்த 8-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை வந்தடைந்ததாக கடல்சார் கண்காணிப்பு தரவு காட்டியது. அதன்பின் அந்த கப்பல் பற்றி சிக்னல் கிடைக்கவில்லை.
ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்களின் சிக்னல்களை கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடப்படுவதால், சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பலின் தானியங்கி அடையாள கருவியை, அதன் இந்திய கேப்டன் ஆஃப் செய்துள்ளார்.
இதனால் கப்பல் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறிய முடியாது. இதற்கு கடல்சார் துறையில் ‘டார்க் மோட்’ அல்லது ‘கோயிங் டார்க்’ என பெயர். இதன் மூலம் ஏவுகணைகளால் கப்பல் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறைவு.
இவ்வாறு சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து நேற்று முன்தினம் மாலை மும்பை ஜவஹர் தீப் துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பின் மார்ச் 9-ம் தேதிதான்
இந்த கப்பலின் தானியங்கி அடையாள கருவி ஆன் செய்யப்பட்டது. இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்த கப்பல் தப்பியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துவிட்டதால், இனிமேல் பயமில்லாமல் கச்சா எண்ணெயை கொண்டு வர முடியும். இது மத்திய அரசின் தூதரக வெற்றியாக கூறப்படுகிறது.
புதுடெல்லி/டெஹ்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.
ஈரான் மட்டுமின்றி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பரோட் ஆகியோருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த தாய்லாந்து கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்ம ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்த 20 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர்.
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஈரான், ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிப்பதற்கு முன்பே, லைபீரியா நாட்டு ஆயில் டேங்கர் கப்பல் ‘சென்லாங் சூயிஸ்மேக்ஸ்’ சவுதி அரேபியாவின் ராஸ் டானுரா துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி ஒரு லட்சத்து 35,335 டன் கச்சா எண்ணெய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டது. இது கடந்த 8-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை வந்தடைந்ததாக கடல்சார் கண்காணிப்பு தரவு காட்டியது. அதன்பின் அந்த கப்பல் பற்றி சிக்னல் கிடைக்கவில்லை.
ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்களின் சிக்னல்களை கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடப்படுவதால், சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பலின் தானியங்கி அடையாள கருவியை, அதன் இந்திய கேப்டன் ஆஃப் செய்துள்ளார்.
இதனால் கப்பல் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறிய முடியாது. இதற்கு கடல்சார் துறையில் ‘டார்க் மோட்’ அல்லது ‘கோயிங் டார்க்’ என பெயர். இதன் மூலம் ஏவுகணைகளால் கப்பல் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறைவு.
இவ்வாறு சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து நேற்று முன்தினம் மாலை மும்பை ஜவஹர் தீப் துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பின் மார்ச் 9-ம் தேதிதான்
இந்த கப்பலின் தானியங்கி அடையாள கருவி ஆன் செய்யப்பட்டது. இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்த கப்பல் தப்பியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துவிட்டதால், இனிமேல் பயமில்லாமல் கச்சா எண்ணெயை கொண்டு வர முடியும். இது மத்திய அரசின் தூதரக வெற்றியாக கூறப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 12, 2026
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல் - எரியும் கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர்
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 12, 2026, மாசி 28, விசுவாவசு வருடம் 07:00 AM
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜல சந்தி வழியாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிகமிக முக்கியமானதாக உள்ளது. இந்தப் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடல் கண்ணிவெடிகளை வைக்கும் பணியிலும் ஈரான் ஈடுபட்டது. இதனால், ஈரான் போர்க் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் பணியில் ஈடுபட்ட கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலிபா துறைமுகத்தில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த ‘மயூரி நாரி’ என்ற எண்ணெய்க் கப்பலில் இந்தியாவுக்காக 30,000 டன்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டது. இந்த கப்பல் குஜராத்தின் கண்டலா துறைமுகத்துக்கு வர வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வந்தபோது, இந்த கப்பல் மீது மர்மமான முறையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. உடனே கப்பலில் இருந்த 20 ஊழியர்கள் மிதவை மூலம் கடலில் குதித்து தப்பினர்.
அவர்களை ஓமன் கடற்படை காப்பாற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டது. கப்பலில் இருந்த 3 ஊழியர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. 178 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட ஆயில் டேங்கர் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியது யார்?
இந்த தாக்குதல் எப்படி நடைபெற்றது, எங்கிருந்து நடத்தப்பட்டது என தாய்லாந்து கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதி களும் தாக்குதல்களில் ஈடு பட்டுள்ளனர். ஈரானுடன் சேர்ந்து அவர்களும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல் நடத்துவோம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் இந்த தாக்குதலை நடத்தியது யார் என விசாரணை நடைபெறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், வளைகுடா பகுதியில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றுதான் இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற தாய்லாந்து கப்பல் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் - அர்ச்சனா பட்நாயக் தகவல் - பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைப்பு
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 17, 2026, பங்குனி 03, விசுவாவசு வருடம் 06:00 AM சென்னை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...






