பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 04:50 PM
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.
வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்
வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும்.
முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள்
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80 சதவீதம்) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.
இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும்.
வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Monday, April 27, 2026
மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, April 15, 2026
அமெரிக்க அதிபர் டிரம்ப்ம்பை மிரட்டிய பிரதமர் மோடி
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026, சித்திரை, பாரபவ வருடம் 03:00 AM
புதுடெல்லி,
ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
டிரம்ப்பிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“என் நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசித்தோம். மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீர்மானித்தோம். மேற்கு ஆசிய போர்ச்சூழல் பற்றியும், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, April 14, 2026
ராகுல்காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026, சித்திரை, பாரபவ வருடம் 01:40 AM
சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, April 12, 2026
‘ஜனநாயகன்’ பட விவகாரம் - மத்திய தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) பரபரப்பு விளக்கம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026, பங்குனி 29, விசுவாவசு வருடம் 00:10 AM
சென்னை,
ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது.
படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது.
படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, April 11, 2026
‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்தது - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி - டிஜிபியிடம் புகார்
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 05:20 AM
சென்னை,
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானதால் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதாலும், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டதாலும், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைப் பிரச்சினை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, படத்தை மறுதணிக்கைக் குழு கடந்த மாதம் பார்த்தது. படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணையத்தில் கடந்த 9-ம் தேதி வெளியானது. பல்வேறு வலைதளங்களிலும் இது வேகமாக பகிரப்பட்டது. இதனால், படத் தயாரிப்பு நிறுவனமும், படக் குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று அதிகாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இணையம் மற்றும் வலைதளங்களில் இதுவும் வேகமாக பகிரப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் சூழலில், முழு படமும் இணையத்தில் வெளியானது விஜய் உள்ளிட்ட படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.
திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ திரைப்படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
‘ஜனநாயகன்’ படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளியை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ், யூ-டியூப், இணையதளங்கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றம் செய்வது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது, பரப்புவதுகடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம்செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரியசட்ட நடவடிக்கை தொடங்கிஉள்ளார்.
மேலும், இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்கு, உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம் - அபின் தினேஷ் மோடக் பொறுப்பேற்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2026, பங்குனி 28, விசுவாவசு வருடம் 04:40 AM
சென்னை,
சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். கடந்த 2-ம் தேதி தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை,
சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். கடந்த 2-ம் தேதி தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு சந்தீப் ராய் ரத்தோரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, April 10, 2026
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 4500 வேட்பாளர்கள்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026, பங்குனி 27, விசுவாவசு வருடம் 07:30 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 மனுக்கள் ஏற்கப்பட்டன.
முறையாக பூர்த்தி செய்யப்படாத 2 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில், அத்தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அடுத்த சில தினங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன. அதற்கான பெயர், சின்னங்களை அச்சிடும் பணிகளும் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 17-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 151 செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்களை வீடியோவில் பதிவு செய்து, செலவினத்தை மதிப்பிட்டு வருகின்றனர். அவற்றை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் பணிகளை இன்றுமுதல் தீவிரப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 மனுக்கள் ஏற்கப்பட்டன.
முறையாக பூர்த்தி செய்யப்படாத 2 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில், அத்தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அடுத்த சில தினங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன. அதற்கான பெயர், சின்னங்களை அச்சிடும் பணிகளும் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 17-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 151 செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்களை வீடியோவில் பதிவு செய்து, செலவினத்தை மதிப்பிட்டு வருகின்றனர். அவற்றை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் பணிகளை இன்றுமுதல் தீவிரப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 04:50 PM சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...






