Wednesday, February 25, 2026
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ - அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 25, 2026, மாசி 25, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்.24) 3-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அந்த வாக்குறுதிகள் குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
1. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
2. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
4. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.
5. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
6. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் * முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு
$ வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி
$ வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
$ ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் நிவாரணம்
$ சிறுபான்மையினருக்கான அறிவிப்புகளாக, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, February 24, 2026
8-வது ஊதியக் குழு பரிந்துரை - மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை வரப்போகுது..!
சென்னை,
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தன. அதற்கு முன்னதாக, நவம்பர் 33-ந் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், 8-வது ஊதியக் குழுவுக்கு தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்தும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. .
சம்பள உயர்வு எவ்வளவு?அதே நேரத்தில், கடந்த கால நடைமுறைகளை பின்பற்றினால், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.
8-வது ஊதியக் குழு அறிக்கை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதை செயல்படுத்த கூடுதல் நேரம் ஆகலாம். இருப்பினும், அரசாங்கம் பரிந்துரைகளை எப்போது அங்கீகரித்தாலும், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அரியர் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே, 6-வது சம்பளக் குழு சராசரியாக 40 சதவீத சம்பள உயர்வை வழங்கியது. அதே நேரத்தில், 7-வது சம்பளக் குழு 23 முதல் 25 சதவீதம் என்ற அளவிலேயே சம்பள உயர்வை வழங்கியது.
அதாவது, தற்போதைய பொருளாதார நிலை அடிப்படையிலேயே இது கணக்கிடப்படும் என்பதால் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது..18 மாத கால அவகாசம்தற்போதைய நிலவரப்படி, 8-வது ஊதியக்குழு 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வை பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், கால அளவு இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில், பணவீக்கம், வரி உயர்வை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படக் கூடும். 8-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது உறுதியானாலும், அரியர் தொகையை எவ்வாறு கணக்கிடுவது? என்ற கேள்வி பலருக்கு எழலாம்..
அரியர் தொகையை எவ்வாறு கணக்கிடுவது?
அரியர் தொகையை கணக்கிடுவது மிகவும் எளிது. முதலில், ஊழியரின் பழைய அடிப்படை சம்பளத்திற்கும் புதிய முன்மொழியப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கும் இடையிலான வேறுபாட்டை கணக்கிடவேண்டும்.
பிறகு இந்த வேறுபாடு சம்பள உயர்வு நிலுவையில் உள்ள மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்க வேண்டும்.அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் அகவிலைப்படி (டி.ஏ) தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், புதிய அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்போது, அகவிலைப்படியில் உள்ள வித்தியாசமும் மொத்த நிலுவைத் தொகையுடன் சேர்க்கப்படுகிறது..
லட்சக்கணக்கில் அரியர் தொகைதற்போது, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசிக்கு மத்தியில் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8-வது ஊதியக் குழு 2027-ம் ஆண்டு மத்தியில் அல்லது 2028-ம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டு கால நடைமுறைப்படி, இதன் அமலாக்க தேதி 2026 ஜனவரி 1-ந் தேதி என அரசு அறிவித்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் லட்சக்கணக்கில் அரியர் தொகை கிடைக்கும்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, February 17, 2026
சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ் - எதிர் வாரம் முழு விவரம் வரும் இதழில்
எதிர் வாரம் முழு விவரம் வரும் இதழில்
பதிவு: செவ்வாய்கிழமை, பிப்ரவரி 17, 2026, மாசி 05, விசுவாவசு வருடம் 05:40 PM
சென்னை,

South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, February 9, 2026
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் குழு 36 நாட்களாக காத்திருக்கிறது - எம்.பி மாணிக்கம் தாகூர்
பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 09, 2026, தை 26, விசுவாவசு வருடம் 04:40 AM
மதுரை,
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச குழு அமைத்து 36 நாட்களாக காத்திருக்கிறோம் என, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
மதுரை திருநகரிலுள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நாடளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச, பாஜக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. ராகுல் காந்தி மட்டுமின்றி மொத்த எதிர்கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராடினோம்.
இதற்காக நான், மதுரை எம்.பி சு. வெங்கடேசன் உட்பட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். எங்களது போராட்டம் அவைக்கு வெளியில் தொடர்கிறது. இது போன்ற செயலை மத்திய அரசு கைவிடவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு உரிமை தரவேண்டும். எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்க ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்டு காங்கிரஸ் குழு டிச.3-ல் அமைக்கப்பட்டது. திமுகவுக்காக 36 நாட்களாக காத்திருக்கிறோம். திமுக குழு அமைத்து அழைக்கும்போது பேசத் தயாராக உள்ளோம். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். தோழமையை மதித்து காத்திருக்கிறோம். திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி வலுவாக இருக்கும் என, நம்புகிறோம். எங்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை 39 முக்கிய தலைவர்களை அழைத்து தனித்தனி கருத்துக் கேட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை மிக அவசியம் என்பதை தெளிவுபடுத்தினோம். இது குறித்து தகவல் உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கும். கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டணி சீமானுடன் போட்டி போடுகிறது. அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் மோடியும் உள்ளார்.
ஏற்கெனவே ‘எப்ஸ்டீன்’ கோப்புகளுக்காக முதல் இரண்டு நாள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இந்த கோப்புகளைப் பொறுத்தவரையில் அனில் அம்பானி, மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் - பிரதமர் மோடிக்கான தொடர்பு இருக்கிறது.
இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டார். 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் வந்து குவியப் போகின்றன.
நாளை அவை தொடங்கியதும் பட்ஜெட் விவாதம் தொடர வேண்டும். மோடி நாடாளுமன்ற அவைக்கு வரவே பயப்படுகிறார். மக்களவைக்கு அவர் வந்து பேசுவதற்கும் பயப்படுகிறார். தனது கட்சிக்காரர்களை வைத்து மட்டுமே பேசுகிறார். எப்ஸ்டீன் பைல் விவகாரத்தில் அனில் அம்பானி, மோடிக்குமான தொடர்புகள் இருப்பது ஊரறிந்த விஷம். இதில் பல்வேறு தகவல்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடர்ந்து கண்காணிகிறோம். கட்டிடம் முழுமையாக முடியாத நிலை உள்ளது. மதுரை எய்ம்ஸ் என்பது ராமநாதபுரத்தில் நடக்கக்கூடாது. மதுரையில் செயல்படவேண்டும். முழு கட்டுமானப் பணிகளும் முடிந்து திறக்க வேண்டும். மதுரை எய்ம்ஸை எப்போது திறக்க போக்கிறார் என, மோடி தமிழகம் வந்து சொல்லவேண்டும்.
தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சொல்ல மறுக்கின்றனர். மதுரை மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழகத்திற்கான திட்டங்களை எப்போது முடித்து கொடுக்க போகிறோம் என்பதை மாதம் தேதியை குறிப்பிட்டு மத்திய அரசு சொல்லவேண்டும்.
பிற மாநிலங்களை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமிழகம், குறிப்பாக மதுரையை வஞ்சிக்கிறது. மத்திய அரசு. கடந்த 2 ஆண்டுக்கு முன்பே எய்ம்ஸ் கட்டுமான பணி 80 சதவீதம் முடிந்தது என, அமைச்சர் ஜேபி.நட்டா சொல்லிவிட்டு சென்றார். என்ன ஆனது. இன்னும் முடிக்காத கட்டிடங்களை வைத்து கொண்டு மத்திய அரசு கதை சொல்கிறது.
அரசு வேலைக்கான போட்டி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது கண்டித்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை,
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச குழு அமைத்து 36 நாட்களாக காத்திருக்கிறோம் என, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
மதுரை திருநகரிலுள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நாடளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச, பாஜக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. ராகுல் காந்தி மட்டுமின்றி மொத்த எதிர்கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராடினோம்.
இதற்காக நான், மதுரை எம்.பி சு. வெங்கடேசன் உட்பட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். எங்களது போராட்டம் அவைக்கு வெளியில் தொடர்கிறது. இது போன்ற செயலை மத்திய அரசு கைவிடவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு உரிமை தரவேண்டும். எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்க ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்டு காங்கிரஸ் குழு டிச.3-ல் அமைக்கப்பட்டது. திமுகவுக்காக 36 நாட்களாக காத்திருக்கிறோம். திமுக குழு அமைத்து அழைக்கும்போது பேசத் தயாராக உள்ளோம். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். தோழமையை மதித்து காத்திருக்கிறோம். திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி வலுவாக இருக்கும் என, நம்புகிறோம். எங்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை 39 முக்கிய தலைவர்களை அழைத்து தனித்தனி கருத்துக் கேட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை மிக அவசியம் என்பதை தெளிவுபடுத்தினோம். இது குறித்து தகவல் உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கும். கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டணி சீமானுடன் போட்டி போடுகிறது. அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் மோடியும் உள்ளார்.
ஏற்கெனவே ‘எப்ஸ்டீன்’ கோப்புகளுக்காக முதல் இரண்டு நாள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இந்த கோப்புகளைப் பொறுத்தவரையில் அனில் அம்பானி, மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் - பிரதமர் மோடிக்கான தொடர்பு இருக்கிறது.
இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டார். 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் வந்து குவியப் போகின்றன.
நாளை அவை தொடங்கியதும் பட்ஜெட் விவாதம் தொடர வேண்டும். மோடி நாடாளுமன்ற அவைக்கு வரவே பயப்படுகிறார். மக்களவைக்கு அவர் வந்து பேசுவதற்கும் பயப்படுகிறார். தனது கட்சிக்காரர்களை வைத்து மட்டுமே பேசுகிறார். எப்ஸ்டீன் பைல் விவகாரத்தில் அனில் அம்பானி, மோடிக்குமான தொடர்புகள் இருப்பது ஊரறிந்த விஷம். இதில் பல்வேறு தகவல்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடர்ந்து கண்காணிகிறோம். கட்டிடம் முழுமையாக முடியாத நிலை உள்ளது. மதுரை எய்ம்ஸ் என்பது ராமநாதபுரத்தில் நடக்கக்கூடாது. மதுரையில் செயல்படவேண்டும். முழு கட்டுமானப் பணிகளும் முடிந்து திறக்க வேண்டும். மதுரை எய்ம்ஸை எப்போது திறக்க போக்கிறார் என, மோடி தமிழகம் வந்து சொல்லவேண்டும்.
தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சொல்ல மறுக்கின்றனர். மதுரை மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழகத்திற்கான திட்டங்களை எப்போது முடித்து கொடுக்க போகிறோம் என்பதை மாதம் தேதியை குறிப்பிட்டு மத்திய அரசு சொல்லவேண்டும்.
பிற மாநிலங்களை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமிழகம், குறிப்பாக மதுரையை வஞ்சிக்கிறது. மத்திய அரசு. கடந்த 2 ஆண்டுக்கு முன்பே எய்ம்ஸ் கட்டுமான பணி 80 சதவீதம் முடிந்தது என, அமைச்சர் ஜேபி.நட்டா சொல்லிவிட்டு சென்றார். என்ன ஆனது. இன்னும் முடிக்காத கட்டிடங்களை வைத்து கொண்டு மத்திய அரசு கதை சொல்கிறது.
அரசு வேலைக்கான போட்டி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது கண்டித்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, February 7, 2026
மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை - மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி
பதிவு: சனிக்கிழமை, பிப்ரவரி 07, 2026, தை 24, விசுவாவசு வருடம் 06:00 AM
மதுரை,
மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது.
கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது.
3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, February 6, 2026
நிகிதாவை கைது செய்ய வேண்டும் - அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி
பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 06, 2026, தை 23, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கடந்த ஜூன் 28ம் தேதி விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இது குறித்தான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அஜித் குமாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் 6 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு காது செய்யப்பட்டனர். மேலும் துணை கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் புகார் அளித்த நிகிதா, திருப்புவனம் காவல்துறையினர், இந்து அறநிலைத்துறை அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அஜித்குமாரின் தாய் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் சிறையில் உள்ள காவலர்கள் பிணை கேட்டும் போது, சிபிஐ வழங்கிய பதில் மனுவில், தங்க நகை திருடியதாக நீக்கிதா கொடுத்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றும், தனிப்படை காவலர்கள் முன்விரோதம் இன்றி, தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தாக அஜித்குமார் தெரிவித்தனர். மேலும், இது அஜித்குமார் கொடுரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தற்கு தனது கண்டனத்தை நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார் என்று தெரிய வேண்டும் நிகிதாவை கைது செய்ய வேண்டும் யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது என்றவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறும் போது இவ்வுலகில் காயமடைந்தவர்களுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன்குமார் அழகு பொண்ணு அஜித்குமார் ஆகியோர்களின் செல்போன்களை மீட்டெடுத்து அதில் உள்ள ஆதாரங்களை வெளிகொனர வேண்டும் என தெரிவித்தார்.
சென்னை,
நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கடந்த ஜூன் 28ம் தேதி விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இது குறித்தான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அஜித் குமாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் 6 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு காது செய்யப்பட்டனர். மேலும் துணை கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் புகார் அளித்த நிகிதா, திருப்புவனம் காவல்துறையினர், இந்து அறநிலைத்துறை அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அஜித்குமாரின் தாய் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் சிறையில் உள்ள காவலர்கள் பிணை கேட்டும் போது, சிபிஐ வழங்கிய பதில் மனுவில், தங்க நகை திருடியதாக நீக்கிதா கொடுத்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றும், தனிப்படை காவலர்கள் முன்விரோதம் இன்றி, தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தாக அஜித்குமார் தெரிவித்தனர். மேலும், இது அஜித்குமார் கொடுரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தற்கு தனது கண்டனத்தை நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார் என்று தெரிய வேண்டும் நிகிதாவை கைது செய்ய வேண்டும் யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது என்றவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறும் போது இவ்வுலகில் காயமடைந்தவர்களுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன்குமார் அழகு பொண்ணு அஜித்குமார் ஆகியோர்களின் செல்போன்களை மீட்டெடுத்து அதில் உள்ள ஆதாரங்களை வெளிகொனர வேண்டும் என தெரிவித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, January 25, 2026
உள்துறை மந்திரி அமித்ஷா வரும் ஜனவரி 28ம் தேதி தமிழகம் வருகை
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2026, தை 11, விசுவாவசு வருடம் 05:40 AM
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ - அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 25, 2026, மாசி 25, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்க...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...








