Friday, March 20, 2026

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM

சென்னை,

அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:

தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்

சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்

தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.

பெண்களுக்குத் தனித்தொகுதி

உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.

மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.

எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.

தமிழர்களுக்கு முன்னுரிமை

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை

தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.

மணல் கொள்ளைத் தடுப்பு

அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.

பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்

குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.

ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி

ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 19, 2026

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் உளவுத் துறை அமைச்சர் உயிரிழப்பு - ஹார்முஸ் ஜலசந்தி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசியது அமெரிக்கா

பதிவு: வியாழக்கிழமை,  மார்ச் 19, 2026, பங்குனி 05, விசுவாவசு வருடம் 06:40 AM

டெல் அவிவ், 

இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உளவுத்​துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​துள்​ளார். மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்​கர் பஸ்​டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகளுக்​கும், ஈரானுக்​கும் இடை​யில் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால், வளை​குடா நாடு​களிடையே பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் கொல்​லப்​பட்​ட​தாக, இஸ்​ரேலின் பாது​காப்​புத் துறை அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் நேற்று அறி​வித்​துள்​ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.

இஸ்​ரேல் நாட்டு அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் மேலும் கூறும்​போது, “ஈரானின் எந்​தவொரு மூத்த தலை​வரையோ அல்​லது அதி​காரியையோ கொல்​லும் அதி​காரத்தை இஸ்​ரேல் ராணுவத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு வழங்​கி​யுள்​ளார். எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமலேயே ஈரான் மீது தாக்​குதல் மேற்​கொள்ள பிரதமர் நெதன்​யாகு எங்​களுக்கு அனு​மதி தந்​துள்​ளார். இதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில்

ஈரான் உளவுத்துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​து​விட்​டார். இந்த உயி​ரிழப்​பைத் தொடர்ந்து உலகின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து பல்​வேறு ஆச்​சரிய​மான தகவல்​கள் வரலாம்" என்​றார்.

ஏற்​கெனவே, இஸ்​ரேல், அமெரிக்கா ஆகிய நாடு​கள் நடத்​திய தாக்​குதல்​களில் ஈரானின் மூத்த பாது​காப்பு அதி​காரி அலி லாரிஜானி மற்​றும் பசிஜ் துணை ராணுவப் படை​யின் தலை​வர் கோலம்​ரெசா சுலை​மானி ஆகியோர் நேற்று முன்​தினம் கொல்​லப்​பட்​டனர்.

மேலும், கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து நடத்​திய திடீர் தாக்​குதலில் ஈரானின் தலைமை மதகுரு​வும், உச்​சத் தலை​வரு​மான அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்​சத் தலை​வ​ராக காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்​பேற்​றுள்​ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்​றம், தலைமை மாற்​றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்ப்​பது நடக்​க​வில்​லை.

முன்​ன​தாக ஈரான் மீதான தாக்​குல் காரண​மாக, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​தது. இந்த வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து ஐந்​தில் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக நடை​பெறு​வ​தால், இங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட போர்க் கப்​பல்​களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்​தார். அந்த கோரிக்​கையை நேட்டோ நாடு​களின் தலை​வர்​கள் நிராகரித்​தனர்.

இதையடுத்து அமெரிக்​காவே நேரடி​யாக களத்​தில் இறங்​கி​யுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்​தியை ஒட்​டி​யுள்ள கரைப் பகு​தி​களில் ஈரான் ஏவு​கணை தளங்​கள் பல உள்​ளன. இங்​கிருந்​து​தான் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது. பாதாளத்​தில்​உள்ள இந்த ஏவு​கணை கிடங்​கு​களை குறி வைத்து 2,200 கிலோ எடை​யுள்ள ‘பங்​கர் பஸ்​டர்’ குண்​டு​களை அமெரிக்க ராணுவம் வீசி​யது. இந்த குண்​டு​கள் பா​தாள பகு​தி​களை ஊடுருவி தாக்​கும் திறன் படைத்​தவை. இந்த குண்​டுகளை ஈ​ரான்​ மீது வெற்​றிகர​மாக வீசிய​தாக அமெரிக்​க ​ராணுவம்​ எக்​ஸ்​ தளத்​தில்​ தெரிவித்​துள்​ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்

ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.
 

Wednesday, March 18, 2026

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் - அர்ச்சனா பட்நாயக் தகவல்


 பதிவு: புதன்கிழமை,  மார்ச் 18, 2026, பங்குனி 04, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அன்​றில் இருந்தே தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்து விட்​டன. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​தல் தொடர்​பாக எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்து தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் தேர்​தல் செல​வினங்​கள் உன்​னிப்​பாக கண்​காணிக்​கப்​பட்​டு, பதிவு செய்​யப்​படு​கின்​றன. ஒரு வேட்​பாளர் அதி​கபட்​சம் ரூ.40 லட்​சம் வரை மட்​டுமே தேர்​தல் சம்​பந்​த​மான பணி​களுக்​காகச் செலவு செய்ய முடி​யும்.

தேர்​தல் நடை​முறை​களை தீவிர​மாகக் கண்​காணிக்க 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் மட்​டுமல்​லாமல் 25 துறை சார்ந்த கண்​காணிப்​புக் குழுக்​களும் இடம்​பெற்​றுள்​ளன. இதில் வரு​மான வரித் துறை, அமலாக்​கத் துறை, சுங்​கத் துறை உள்​ளிட்ட துறை​களும் அடங்​கும்.

தற்​போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்​கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இக்​கண்​காணிப்​புக் குழுக்​கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம் மற்​றும் பரிசுப் பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்டு விசா​ரணை நிலை​யில் உள்​ளன.

பொது​மக்​கள் புகார் தெரி​விப்​ப​தற்கு வசதி​யாக, ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட தேர்​தல் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் அளிக்​கும் புகார்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. தமிழகம் முழு​வதும் நேற்று காலை வரை 1.68 லட்​சம் சுவர் விளம்​பரங்​கள் நீக்​கப்​பட்டு 61 இனங்​களில் குற்​ற​வியல் நடவடிக்கை தொடர்​வதற்​காக முதல் தகவல் அறிக்கை பதி​யப்​பட்டு தொடர் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

தேர்​தல் நடத்தை விதி​களின்​படி மறைந்த தலை​வர்​களின் சிலைகள் மறைக்​கப்பட வேண்​டிய​தில்லை என்​றும், தற்​போது அரசி​யல் களத்​தில் உள்ள தலை​வர்​களின் புகைப்​படங்​கள் அரசு பொது இடங்​களிலோ, அரசு கட்​டிடங்​களிலோ வைக்​கப்​பட்டு இருந்​தால் அவை மறைக்​கப்பட வேண்​டும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள், அரசி​யல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் மற்​றும் வியா​பாரி​கள் ரொக்​கம் எடுத்து செல்​லும் பொழுது அவை எப்​படி பெறப்​பட்​டது, எதற்​காக எடுத்து செல்​லப்​படு​கிறது என்​ப​தற்​கான ஆவணங்​கள் அல்​லது அதற்​கான காரணங்​களை எழுத்து மூலம் சமர்ப்​பித்​தால், அத்​தொகை பறி​முதல் செய்​யப்​ப​டாது. உடனடி​யாக உரிய​வரிடம் திரும்ப வழங்​கப்​படும். இது குறித்து முறை​யீடு ஏதும் இருப்​பின் மாவட்ட குறைதீர் குழு​விடம் முறை​யிடலாம். இவ்​வாறு அர்ச்​சனா பட்​நாயக் கூறி​னார்.

மேலும், புகார்​கள் தொடர்​பாக அவர் கூறும்​போது, ‘‘கள்​ளக்​ குறிச்சி மாவட்ட ஆட்​சி​யரை மாற்​று​வது தொடர்​பான புகார் தேர்​தல் தொடர்​பானது இல்லை என்​ப​தால் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. பல்​லடத்​தில் மருத்​து​வச் செல​வுக்​காக கொண்டு சென்ற பணம் பறி​முதல் செய்​யப்​பட்ட விவ​காரத்​தில்​ வி​சா​ரணை நடத்​தப்​படும்​’’ என்​றார்​.

327 பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்கள், 188 காவல் துறை பார்வையாளர்கள், 366 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் துறை பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்கள், 4 காவல் துறை பார்வையாளர்கள், 17 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 18-க்குள் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதோடு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்களில் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tuesday, March 17, 2026

5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் - அர்ச்சனா பட்நாயக் தகவல் - பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மார்ச் 17, 2026, பங்குனி 03, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பாது​காப்பு பணி​யில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன என தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். மேலும், மனு​தாக்​கலுக்​கான அவகாசத்​தில் 3 நாட்​கள் விடு​முறை என்​ப​தால் 5 நாட்​கள் மட்​டுமே வேட்​புமனு தாக்​கல் செய்ய முடி​யும். பிரச்​சா​ரத்​துக்​கான அனு​ம​தி, முதலில் வரு​வோருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் அளிக்​கப்​படும் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்​னேற்​பாடு​கள் தொடர்​பாக சென்னைதலைமைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஏப்​.23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இந்த தேர்​தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்​கைகள் என மொத்​தம் 5.69 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட பின்​னர் 3.14 லட்​சம் வாக்​காளர்கள் சேர்க்​கப்​பட்​டுள்ளனர். பொதுமக்​கள், வாக்​காளர் அட்டை வைத்திருந்தா​லும், தங்​கள் பெயர், வாக்​காளர் பட்​டியலில் உள்​ளதா என உறுதி செய்​து​ கொள்ள வேண்​டும். வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க மார்ச்​26-ம் தேதி வரை விண்​ணப்​பித்​தால், தேர்​தலுக்கு முன்பு, பெயர்​கள் வாக்காளர் பட்​டியலில் இடம்​பெறும்.

வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. வேட்​புமனு தாக்​கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். இதற்​கிடையே, மார்ச் 31 (மா​காவீர் ஜெயந்​தி), ஏப்​ரல் 3 (புனித வெள்​ளி), ஏப்​ரல் 5 (ஞா​யிற்​றுக்​கிழமை) ஆகிய நாட்​கள் அரசு விடு​முறை நாட்​கள் என்​ப​தால் அந்த 3 நாட்​களில் வேட்பு மனு தாக்​கல் செய்ய முடி​யாது. இதர 5 நாட்​கள் மட்​டுமே வேட்​புமனு தாக்​கல் செய்ய முடி​யும்.

வேட்​புமனுக்​களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்​கலாம். வேட்​புமனுக்​கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடை​பெறுகிறது. வேட்​புமனுக்​களை திரும்​பப் ​பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.

50 கம்பெனி துணை ராணுவம்

தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்​துள்​ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்​கும் படை, கண்​காணிப்​பு குழுக்​கள் சோதனையை தொடங்​கி​யுள்ளன. தமிழகத்துக்கு தேர்​தல் பணிக்​காக 50 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் வந்​துள்​ளனர்.

வணி​கர்​கள் கொண்டு செல்​லும் பணத்​துக்கு உரிய ஆவணங்​கள் இருந்​தால், எவ்வளவு தொகை வேண்​டு​மா​னாலும் கொண்டு செல்​லலாம். சோதனை என்ற பெயரில் பொது​மக்​களுக்கு எந்த இடையூறும் செய்​யக்​கூ​டாது என்று அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​கள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்​ணிக்​கை​யில் பணப் பரிவர்த்தனை நடந்​தால் அவை கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​படும். தேர்தல் தொடர்​பாக, சமூக வலைதளங்​களில் ஏஐ தொழில்​நுட்பம் மூலம்வெளி​யிடப்​படும் வீடியோக்களை கண்​காணித்து வரு​கிறோம்.

ரூ.1.26 கோடி பறிமுதல்

மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்​பிலான பணம், பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. பிரச்​சா​ரத்​துக்​கான அனு​ம​தி, முதலில் வரு​வோருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் அளிக்​கப்​படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளலாம். பிரச்​சார அனு​மதி பெற இணை​யதளம் மூலம் விண்​ணப்​பிக்கலாம்.

பிரச்​சா​ரத்​தின்போது, 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கூடி​னால் தண்​ணீர் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் ஏற்​படுத்த அறி​வுறுத்​தப்​படும்.இவ்​வாறு அவர் கூறி​னார். கூடு​தல் தலைமைத் தேர்​தல் அதி​காரி​கள் ஏ.சிவ​ஞானம், ஸ்ரீதர்​, இணை தலை​மை தேர்​தல்​ அதி​காரி மேனுவல்​ ராஜ் ஆகியோர்​ உடன்​ இருந்​தனர்​.

4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Monday, March 16, 2026

தேர்தல் அறிவிப்பால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லக்கூடாது - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன...?


 பதிவு: திங்கட்கிழமை,  மார்ச் 16, 2026, பங்குனி 02, விசுவாவசு வருடம் 04:40 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியில் நடக்கும் என்று நேற்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (எம்.சி.சி.) உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிட்டன.

ஏதாவது மிக முக்கிய பிரச்சினை நடந்துவிட்டது என்றால் மட்டுமே, அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடை பெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதிவரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல்ல முடியாது. 

அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும்படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்துவிடுவார்கள்.

அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:-

* ஒட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப்பொருள் கொடுக்கக்கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக்கூடாது.

* தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது.

* தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. அரசு அலுவலர்களை அமைச்சர் தனது அலுவலக பணிகளுடன் சேர்க்கக்கூடாது. அரசு பணியை அரசியல் பணிகளுடன் சேர்க்கக்கூடாது.

* தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் உபகரணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்களை சென்று சந்திக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். குற்ற வழக்குக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.

* மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் அனைத்து குறிப்புகளும், அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை போலப் புகழ்ந்து பேசுவதாக இருந்தால் நீக்கப்படும்.

* அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களை அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக தூண்டும் வகையில் அதுபற்றிய புதிய திட்டங்கள், அறிவிப்புகளை செய்யக்கூடாது.

* இந்த கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் சமமாக பொருந்தும். ஆனாலும், ஏற்கனவே நிறைவடையும் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய, பிராந்திய மற்றும் மாநில பயன்பாட்டுத் திட்டங்களின் விஷயத்தில், அவற்றின் பயன் பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. 

அது போன்ற திட்டங்களின் செயல்பாடு, அரசு அதிகாரிகளால் செய்யப்படுகிறதா? என்பதும், அரசியல் செயல்பாடுகள் இல்லாமலும், விழாக்களை நடத்தாமலும், திட்டத்தின் செயல்பாடுகளின் பயன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செல்கிறது என்ற எண்ணம் ஏற்படாமலும் செயல்படுத்த வேண்டும். இதில் தேர்தல் கமிஷனை ஆலோசிக்கலாம்.

* அரசினால் பட்ஜெட்டிலோ, கவர்னர் உரையிலோ அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என்று அவற்றை தொடங்கினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றமாக கருதப்படும். திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணி ஆணை கொடுக்கப் பட்டு இருந்தாலும் அந்தப் பணிகள் தேர்தல் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகளை முடித்து அதற்கான தொகையை உரியவருக்கு வழங்குவதற்கு தடையில்லை.

* திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்வது கூடாது. மக்கள் நலத்திட் டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும்கூட, தேர்தல் முடியும் வரை அவை நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் முன் அனுமதியின்றி, நலத் திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்கான புதிய நிதியை வெளியிடவோ அல்லது வழங்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யவோ கூடாது. இதில், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியும் அடங்கும்.

* இயற்கை பேரிடர் நிவாரண நிதி, முதியோர் உதவி நிதி அளிப்பதற்கு தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்று வழங்கலாம். ஆனால் வாக்கா ளர்களுக்கு கட்சி சார்பான தூண்டுதல் ஏற்படாதபடி, அனைத்து ஆடம்பர மான செயல்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, March 15, 2026

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ல் ஒரே கட்டமாக தேர்தல் - மே.4ல் வாக்கு எண்ணிக்கை


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 05:30 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்​களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் தலை​மையி​லான தேர்​தல் ஆணை​யர்​கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.

இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.

எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 இந்திய சரக்குக் கப்பல்கள்


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 07:30 AM

புதுடெல்லி,

இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30+ சரக்கு கப்பலிகளில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும்.

இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் மற்​றும் எல்பிஜி தேவை​யில் 80 சதவீதத்​துக்​கும் மேலாக இறக்​குமதியைச் சார்ந்தே உள்​ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்​தடத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டால் இந்​தி​யப் பொருளா​தா​ரம் கடுமையாகப் பாதிக்​கப்​படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்​னணி​யில்​தான், இந்​தி​யக் கப்​பல்​களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல். இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

முன்னதாக, மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்​சங்​கர், ஈரானிய வெளி​யுறவு அமைச்சர் அப்​பாஸ் அரக்ச்​சி​யுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோ​சனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Featured post

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின்...