பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM
சிவகாசி,
“இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.
காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.
ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.
எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?
நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.
73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.
கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.
Wednesday, April 1, 2026
“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 02:40 AM
திருவாரூர்,
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.
‘‘திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம்’’ என்று திருவாரூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நன்னிலம் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த 2026 தேர்தலின் சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டேன். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இன்று தலைவர் கருணாநிதியை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் இங்கிருந்து தொடங்குகிறேன்.
திருவாரூர் பெயர் அழகு. அதைவிட திருவாரூர் தேர் பேரழகு. நேற்று முன்தினம் தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 1948-க்குப் பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய செய்துள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியது, ஆட்சியர், நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகங்கள், நகராட்சி கட்டிடம், புதிய பேருந்து நிலையம், மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, மன்னார்குடி அரசு கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை, மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி, டி.ஆர்.பாலு முயற்சியால் செம்மொழி உட்பட 5 புதிய ரயில்கள் என ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். நெல் ஜெயராமனுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வருகிறோம்.
கடந்த 2021-ல் எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து பெண்கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவு, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தேன். பொங்கல் தொகுப்பு ரூ.3,000 வழங்கினோம்.
தமிழகத்தை பார்த்து பல மாநிலங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி உள்ளனர். தேர்தலைக் காட்டி அதை நிறுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்து காசை உருவ திட்டம் போடும் பாஜகவுக்கு, திராவிட மாடல் நலத்திட்டம் மூலம் மக்களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்பது எரியத்தான் செய்யும். யார் வயிறு எரிந்தால் என்ன? மக்களின் மனசு நிறையணும் என்பதுதான் என் லட்சியம். அதனால்தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கினோம்.
எல்லாத் திட்டத்திலும் தமிழகம் டாப்பில் இருப்பதுதான் பாஜக தலைமையில் செயல்படும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளது. தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என திட்டமிட்டு ஏராளமான போலி செய்திகளைப் பரப்பிப் பார்த்தனர். கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் பரப்பியது அனைத்தும் அவதூறு என உண்மை வெளிப்பட்டு மக்கள் முன் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.
கடந்த 2011-21 வரை தமிழகத்தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதிமுக, 2014-லிருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாஜகவுடன் சரணாகதியடைந்து கூட்டணி அமைத்துள்ளது. அவர் நம் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து விட்டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்தோம் என புலம்புகிறார்.
அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது. தொலை நோக்கு பார்வையும் இல்லை. அவரது உளறல்களில் ‘ஹை லைட்’ எது தெரியுமா? எப்படி உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் எனக் கேட்டால் வரியை உயர்த்தி நிறைவேற்றுவேன் என்கிறார். அதனால் தான் பழனிசாமியை எளிதாக மிரட்டி அடிமைக் கூட்டணியில் பாஜக வைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது, திராவிட மாடல் ஏற்படுத்திய வளர்ச்சியை அழிப்பதுதான் என்டிஏ கூட்டணியின் நோக்கம்.
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தங்களுக்கு வலிமையில்லை என்பதால் அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. பொதுவாக பாஜக மக்களுக்கு நல்லது செய்யாது. தேர்தல் வந்தால் பட்ஜெட்டில் கண்துடைப்புக்காக சில அறிவிப்புகளைப் கொடுப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதைக்கூட செய்ய மனமில்லாத வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை. இத்தனையும் சமாளித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளோம்.இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்பதால் நம் வீட்டு குழந்தைகளுக்கான கல்வி நிதியைக் கூட தரவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, என்டிஏவை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.
இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க பாஜக- அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது திமுக கூட்டணிக்கான வெற்றி அல்ல, இது தமிழகத்துக்கான வெற்றி. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,தமிழகத்தைக் காக்க மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
திருவாரூர்,
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.
‘‘திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம்’’ என்று திருவாரூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நன்னிலம் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த 2026 தேர்தலின் சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டேன். நேற்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இன்று தலைவர் கருணாநிதியை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் இங்கிருந்து தொடங்குகிறேன்.
திருவாரூர் பெயர் அழகு. அதைவிட திருவாரூர் தேர் பேரழகு. நேற்று முன்தினம் தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 1948-க்குப் பிறகு 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய செய்துள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியது, ஆட்சியர், நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகங்கள், நகராட்சி கட்டிடம், புதிய பேருந்து நிலையம், மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, மன்னார்குடி அரசு கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை, மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி, டி.ஆர்.பாலு முயற்சியால் செம்மொழி உட்பட 5 புதிய ரயில்கள் என ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். நெல் ஜெயராமனுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வருகிறோம்.
கடந்த 2021-ல் எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து பெண்கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவு, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தேன். பொங்கல் தொகுப்பு ரூ.3,000 வழங்கினோம்.
தமிழகத்தை பார்த்து பல மாநிலங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி உள்ளனர். தேர்தலைக் காட்டி அதை நிறுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்து காசை உருவ திட்டம் போடும் பாஜகவுக்கு, திராவிட மாடல் நலத்திட்டம் மூலம் மக்களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்பது எரியத்தான் செய்யும். யார் வயிறு எரிந்தால் என்ன? மக்களின் மனசு நிறையணும் என்பதுதான் என் லட்சியம். அதனால்தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கினோம்.
எல்லாத் திட்டத்திலும் தமிழகம் டாப்பில் இருப்பதுதான் பாஜக தலைமையில் செயல்படும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளது. தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என திட்டமிட்டு ஏராளமான போலி செய்திகளைப் பரப்பிப் பார்த்தனர். கலவர வெறியோடு திரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் பரப்பியது அனைத்தும் அவதூறு என உண்மை வெளிப்பட்டு மக்கள் முன் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.
கடந்த 2011-21 வரை தமிழகத்தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதிமுக, 2014-லிருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாஜகவுடன் சரணாகதியடைந்து கூட்டணி அமைத்துள்ளது. அவர் நம் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து விட்டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்தோம் என புலம்புகிறார்.
அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது. தொலை நோக்கு பார்வையும் இல்லை. அவரது உளறல்களில் ‘ஹை லைட்’ எது தெரியுமா? எப்படி உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் எனக் கேட்டால் வரியை உயர்த்தி நிறைவேற்றுவேன் என்கிறார். அதனால் தான் பழனிசாமியை எளிதாக மிரட்டி அடிமைக் கூட்டணியில் பாஜக வைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது, திராவிட மாடல் ஏற்படுத்திய வளர்ச்சியை அழிப்பதுதான் என்டிஏ கூட்டணியின் நோக்கம்.
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தங்களுக்கு வலிமையில்லை என்பதால் அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. பொதுவாக பாஜக மக்களுக்கு நல்லது செய்யாது. தேர்தல் வந்தால் பட்ஜெட்டில் கண்துடைப்புக்காக சில அறிவிப்புகளைப் கொடுப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதைக்கூட செய்ய மனமில்லாத வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை. இத்தனையும் சமாளித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளோம்.இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்பதால் நம் வீட்டு குழந்தைகளுக்கான கல்வி நிதியைக் கூட தரவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, என்டிஏவை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.
இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறாமல் இருக்க பாஜக- அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது திமுக கூட்டணிக்கான வெற்றி அல்ல, இது தமிழகத்துக்கான வெற்றி. எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,தமிழகத்தைக் காக்க மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவு சிறப்பான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM சிவகாசி, “இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி த...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

