Wednesday, April 1, 2026

“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM

சிவகாசி,

“இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.

காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.

ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.

எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?

நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.

73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.

கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.

இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.

“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 02:40 AM

திருவாரூர்,

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், டிஆர்.பி.ராஜா, மாரிமுத்து, முகமது முபாரக் உள்ளிட்டோர்.

‘‘​தி​ரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் எங்​கள் சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும் அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​கு​வோம்’’ என்று திரு​வாரூரில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், திரு​வாரூரில் நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். திரு​வாரூர் தெற்கு வீதி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் திமுக வேட்​பாளர்​கள் திரு​வாரூர் பூண்டி கலை​வாணன், மன்​னார்​குடி டிஆர்​பி.​ராஜா, திருத்​துறைப்​பூண்டி இந்​திய கம்​யூனிஸ்ட் வேட்​பாளர் மாரி​முத்​து, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிடும் நன்​னிலம் எஸ்​டிபிஐ வேட்​பாளர் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்த 2026 தேர்​தலின் சூப்​பர் ஸ்டார் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளி​யிட்​டேன். நேற்று கொளத்​தூர் தொகு​தி​யில் வேட்பு மனு தாக்​கல் செய்​தேன். இன்று தலை​வர் கருணாநி​தியை வளர்த்​தெடுத்த திரு​வாரூர் மண்​ணிலிருந்து திமுக தலை​மை​யில் அமைந்​துள்ள மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யின் வெற்றி பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறேன். திரு​வாரூர் என்​றால் அது திமுக ஊர். அதனால் இங்​கிருந்து தொடங்​கு​கிறேன்.

திரு​வாரூர் பெயர் அழகு. அதை​விட திரு​வாரூர் தேர் பேரழகு. நேற்று முன்​தினம் தான் திரு​வாரூர் தேரோட்​டம் கம்​பீர​மாக நடந்து முடிந்​துள்​ளது. கடந்த 1948-க்​குப் பிறகு 22 ஆண்​டு​கள் ஓடா​மல் இருந்த திரு​வாரூர் ஆழித்​தேரை ஓட வைத்​தவர் கருணாநி​தி. திமுக ஆட்​சி​யில் இருக்​கும் போதெல்​லாம் திரு​வாரூருக்கு நிறைய செய்​துள்​ளோம்.

திரு​வாரூர் மாவட்​டத்தை உரு​வாக்​கியது, ஆட்​சி​யர், நீதி​மன்​றம், மாவட்ட காவல் அலு​வல​கங்​கள், நகராட்சி கட்​டிடம், புதிய பேருந்து நிலை​யம், மத்​திய பல்​கலைக்​கழகம், மருத்​து​வக் கல்​லூரி, மன்​னார்​குடி அரசு கல்​லூரி, பாமணி உரத் தொழிற்​சாலை, மாவட்​டம் முழு​வதும் குடிநீர் வசதி, டி.ஆர்​.​பாலு முயற்​சி​யால் செம்​மொழி உட்பட 5 புதிய ரயில்​கள் என ஏராள​மான வளர்ச்சி திட்​டங்​களை செய்​துள்​ளோம். நெல் ஜெய​ராமனுக்கு நினை​வுச் சின்​னம் அமைத்து வரு​கிறோம்.

கடந்த 2021-ல் எங்​கள் மீது நீங்​கள் நம்​பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை ஒப்​படைத்​தீர்​கள். முதல்​வ​ராக பொறுப்​பேற்ற முதல் நாளி​லிருந்து பெண்​கள் விடியல் பயணம், 1.31 கோடி பெண்​களுக்கு உரிமைத் தொகை, மாணவர்​களுக்கு காலை உணவு, நான் முதல்​வன், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டம் என ஏராள​மான திட்​டங்​கள் கொண்டு வந்​தேன். பொங்​கல் தொகுப்பு ரூ.3,000 வழங்​கினோம்.

தமிழகத்தை பார்த்து பல மாநிலங்​கள் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை தொடங்கி உள்​ளனர். தேர்​தலைக் காட்டி அதை நிறுத்த மத்​திய பாஜக அரசு திட்​ட​மிட்​டது. நாங்​கள் விழித்​துக் கொண்​டோம். ஏழைகளின் சுருக்​குப்​பை​யில் இருந்து காசை உரு​வ திட்​டம் போடும் பாஜக​வுக்​கு, திரா​விட மாடல் நலத்​திட்​டம் மூலம் மக்​களுக்கு நேரடி பணம் பலன் கிடைப்​பது எரி​யத்​தான் செய்​யும். யார் வயிறு எரிந்​தால் என்ன? மக்​களின் மனசு நிறையணும் என்​பது​தான் என் லட்​சி​யம். அதனால்​தான் 3 மாத உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்​கினோம்.

எல்​லாத் திட்​டத்​தி​லும் தமிழகம் டாப்​பில் இருப்​பது​தான் பாஜக தலை​மை​யில் செயல்​படும் அதி​முக உள்​ளிட்ட அடிமைக் கட்​சிகளுக்கு எரிச்​சலை உண்​டாக்கி உள்​ளது. தமிழகத்தை எப்​படி​யா​வது கலவர பூமி​யாக்​கி​விடலாம் என திட்​ட​மிட்டு ஏராள​மான போலி செய்​தி​களைப் பரப்​பிப் பார்த்​தனர். கலவர வெறியோடு திரிந்​தவர்​களுக்கு ஏமாற்​றம்​தான் மிஞ்​சி​யது. அவர்​கள் பரப்​பியது அனைத்​தும் அவதூறு என உண்மை வெளிப்​பட்டு மக்​கள் முன் அசிங்​கப்​பட்டு நிற்​கின்​றனர்.

கடந்த 2011-21 வரை தமிழகத்​தைப் பாழாக்கி தலைகுனிய வைத்த அதி​முக, 2014-லிருந்து இந்​தி​யாவை மோச​மான நிலைக்கு அழைத்​துச் சென்​றுள்ள பாஜக​வுடன் சரணாக​தி​யடைந்து கூட்​டணி அமைத்​துள்​ளது. அவர் நம் தேர்​தல் அறிக்​கை​யைப் பார்த்து காப்பி அடித்து விட்​டு, நாம் அவரைப் பார்த்து காப்பி அடித்​தோம் என புலம்​பு​கிறார்.

அவருக்கு எதைப் பற்​றி​யும் புரிதல் கிடை​யாது. தொலை நோக்கு பார்​வை​யும் இல்​லை. அவரது உளறல்​களில் ‘ஹை லைட்’ எது தெரி​யு​மா? எப்​படி உங்​கள் திட்​டங்​களை நிறைவேற்​று​வீர்​கள் எனக் கேட்​டால் வரியை உயர்த்தி நிறைவேற்​று​வேன் என்​கிறார். அதனால் தான் பழனி​சாமியை எளி​தாக மிரட்டி அடிமைக் கூட்​ட​ணி​யில் பாஜக வைத்​துள்​ளது. தமிழகத்​தின் வளர்ச்​சியை தடுப்​பது, திரா​விட மாடல் ஏற்​படுத்​திய வளர்ச்​சியை அழிப்​பது​தான் என்​டிஏ கூட்​ட​ணி​யின் நோக்​கம்.

தமிழகத்​தில் திமுகவை எதிர்க்க தங்​களுக்கு வலிமை​யில்லை என்​ப​தால் அதி​முகவை பாஜக விலைக்கு வாங்கி உள்​ளது. பொது​வாக பாஜக மக்​களுக்கு நல்​லது செய்​யாது. தேர்​தல் வந்​தால் பட்​ஜெட்​டில் கண்​துடைப்​புக்​காக சில அறி​விப்​பு​களைப் கொடுப்​பார்​கள். ஆனால், தமிழகத்​தில் அதைக்​கூட செய்ய மனமில்​லாத வஞ்சக எண்​ணத்​தோடு இருக்​கும் உரு​வம்​தான் என்​டிஏ.

பாஜக மத்​தி​யில் ஆட்​சிக்கு வந்த பிறகு தமிழகத்​துக்கு எந்த நன்​மை​யும் செய்​ய​வில்​லை. எந்த சிறப்பு திட்​டத்​தை​யும் செய்​ய​வில்​லை. இத்​தனை​யும் சமாளித்து பல்​வேறு சாதனை​களை செய்​துள்​ளோம். திறமை​யான நிர்​வாகத்​தால் நம்​பர் ஒன் மாநில​மாக உள்​ளோம்.இந்தி திணிப்பை ஏற்​க​வில்லை என்​ப​தால் நம் வீட்டு குழந்​தைகளுக்​கான கல்வி நிதி​யைக் கூட தரவில்​லை. இப்​படி வஞ்சக எண்​ணம் கொண்ட கூட்​டத்​திடம் தமிழகத்​தின் எதிர்​காலத்தை ஒப்​படைக்க முடி​யு​மா? எனவே, என்​டிஏவை புறக்​கணிக்க வேண்​டும். அப்​போது தான் தமிழகத்​தின் எதிர்​காலம் காப்​பாற்​றப்​படும்.

இந்​தத் தேர்​தல் என்​பது தமிழ்​நாடு அணி வெர்​சஸ் டெல்லி அணி. தமிழகத்தை காக்க திமுக​தான் மீண்​டும் ஆட்​சிக்கு வரவேண்​டும். தமிழகம் கலவர பூமி​யாக மாறாமல் இருக்க பாஜக- அதி​முக கூட்​ட​ணியை வேரோடு வீழ்த்த வேண்​டும். நாம் போராடு​வது திமுக கூட்​ட​ணிக்​கான வெற்றி அல்ல, இது தமிழகத்​துக்​கான வெற்​றி. எனவே, அரசி​யல் விருப்பு வெறுப்​பு​களுக்கு அப்​பாற்​பட்​டு,தமிழகத்​தைக் காக்க மக்​கள் அனை​வரும் தி​முக தலை​மையி​லான மதச்​சார்ப்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யை ஆதரிக்​க வேண்​டும்​. அடுத்​து அமைய​வுள்​ள தி​ரா​விட மாடல்​ 2.0 ஆட்​சி​யில்​ எங்​கள்​ சாதனை​களை நாங்​களே முறியடிக்​கும்​ அளவு சிறப்​பான ஆட்​சியை வழங்​குவோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Featured post

“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 01, 2026, பங்குனி 18, விசுவாவசு வருடம் 03:40 AM சிவகாசி, “இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி த...