Wednesday, March 25, 2026

வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM

புதுடெல்லி,

ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும். அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை.

சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.

இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது. 

மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.

பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார்.

முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார். இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி - அரிசி கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக் கொண்​டார். மொத்​த​மாக அதில் 297 அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றிருக்​கின்​றன. அதி​முக.வின் முழு தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

வரிச் சுமை மற்​றும் விலை​வாசி ஏற்​றத்​தைச் சமாளிக்க ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்​கப்​படும். குல விளக்கு திட்​டத்​தின் கீழ் அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் குடும்​பத் தலை​வி​யின் வங்​கிக் கணக்​கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்​தப்​படும். மகளிரைப் போல​வே, ஆண்களுக்​கும் நகரப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

அம்மா இல்​லம் திட்​டம் மூல​மாக வீடு இல்​லாத ஏழைகளுக்​குக் கிராமங்​களில் கான்​கிரீட் வீடு​களும், நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி வீடு​களும் விலை​யில்​லாமல் கட்​டித் தரப்​படும்.

மேலும், 100 நாட்​கள் வேலை​வாய்ப்​புத் திட்​டம் 150 நாட்​களாக உயர்த்​தப்​படும். வேலைக்​குச் செல்​லும் 5 லட்​சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானி​யத்​துடன் இரு சக்கர வாக​னங்​கள் வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர்​கள் விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். முதி​யோர், கணவனை இழந்​தவர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரமாக உயர்த்​தப்​படும், வங்​கி​களில் கல்விக் கடன் பெற்​றுத் திருப்​பிச் செலுத்த முடி​யாமல் உள்​ளவர்​களின் கடனை அரசே ஏற்​கும்.

நெல் ஆதார விலை குவிண்​டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்​தப்​படும். சிறு, குறு விவ​சா​யிகளுக்கு உர மானிய​மாக ஆண்​டுக்கு எக்​டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கப்​படும். விவ​சாயப் பணி​யின் போது உயி​ரிழக்​கும் விவ​சா​யிகளின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும்.

வேலைக்​காகக் காத்​திருக்​கும் பட்​ட​தாரி இளைஞர்​களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்​றும் பிளஸ் 2 முடித்​தவர்​களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்​கப்​படும். கைத்​தறி நெச​வாளர்​களுக்கு விலை​யில்லா மின்​சா​ரம் 450 யூனிட்​டாக​வும், விசைத்​தறிக்கு 1,400 யூனிட்டாக​வும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். பொங்​கல் தொகுப்​புடன் ரூ.1,000 ரொக்​கம் வழங்​கப்​படும். அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு குளிர்​சாதனப் பெட்டி (பிரிட்​ஜ்) விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் உயி​ரிழக்​கும் வீரர்​களின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும். கல்வி மற்​றும் மருத்து​வம் ஆகிய துறை​களைப் பொதுப் பட்​டியலில் இருந்து மாநிலப் பட்​டியலுக்கு மாற்ற வலி​யுறுத்​தப்​படும்.

மத்​திய வரி வசூலில் செஸ் மற்​றும் கூடு​தல் வரி ஆகிய​வற்​றைப் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி​யில் சேர்க்க வலி​யுறுத்​தப்​படும். இது​போன்று 297 வாக்​குறு​தி​கள் அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்​ளன.

தேர்​தல் அறிக்கை வெளி​யிட்ட பின், செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறும்போது, 

‘‘கூட்​ட​ணி​யில் உள்ள சிறிய கட்​சிகளுக்​கான தொகு​திப் பங்​கீடு விரை​வில் இறுதி செய்​யப்​படும். மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தவுடன் நிதி ஆதா​ரங்​களைப் பெருக்​கி, மக்​கள் நலத்​திட்​டங்​கள் தொய்​வின்​றிச் செயல்​படுத்​தப்​படும். அதி​முக மீண்​டும் ஆட்​சிப் பொறுப்​பேற்​றதும் தமிழகத்​தில் மதுக்​கடைகள் படிப்​படி​யாகக் குறைக்​கப்​படும். அரசி​யல் சூழலுக்​குத் தகுந்​த​வாறு​தான் கூட்​ட​ணி​கள் அமைக்​கப்​படு​கின்​றன. அந்​தந்​தக் கட்​சிகளின் பலத்​துக்​கு ஏற்​பவே தொகு​தி​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன” என்று தெரிவித்​தார்​.

Featured post

வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM புதுடெல்லி, ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அ...