South Indian Crime Point
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine
Sunday, July 12, 2020
தமிழகத்தில் இன்று (ஜூலை 12) மேலும் 4,244 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.
தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு 14 நீதிமன்ற காவல்
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் தற்போது வரை 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன் விவரம் வருமாறு:-
திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது
திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Featured post
Eid celebrated with fervour across Tamil Nadu | TNTJ | Mahapupalayam Mad...
Vantha Rajavathaan Varuven | FDFS | sicp
TN CM EPS and OPS in Siddha hospital chennai
TMC youth wing president M Yuvaraj Press Meet at Thoothukudi