பதிவு: சனிக்கிழமை, பிப்ரவரி 07, 2026, தை 24, விசுவாவசு வருடம் 06:00 AM
மதுரை,
மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது.
கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது.
3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
