Monday, June 29, 2020

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி 16 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்குக்கு பின்னர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் ‘அன்லாக்-1’ என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அவை இந்த மாத தொடக்கம் முதல் அமலுக்கு வந்தன. சரிந்து வந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும், சொல்லி வைத்தாற்போல தொற்று புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்று தொடர்ந்து 5-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment