Friday, June 26, 2020

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? - வரும் 29-ம் தேதி முதல்வர் ஆலோசனை

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?; மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


No comments:

Post a Comment