Monday, June 29, 2020

கொரோனாவை ஒழித்து விட்டு சாதனைப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் என்றும், கொரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக்கொள்ளாதீர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை (மக்களை) நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!


இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி 16 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்குக்கு பின்னர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் ‘அன்லாக்-1’ என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அவை இந்த மாத தொடக்கம் முதல் அமலுக்கு வந்தன. சரிந்து வந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும், சொல்லி வைத்தாற்போல தொற்று புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்று தொடர்ந்து 5-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



பண மதிப்பிழப்பின் போது ரூ.1,911 கோடி பரிவர்த்தனை - வருமான வரித்துறை குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு

பண மதிப்பிழப்பின் போது ரூ.1,911 கோடிக்கு பரிவர்த்தனை நடந்ததாக கூறப்பட்ட வருமான வரித்துறை குற்றச்சாட்டுக்கு சசிகலா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தன்னிடம் அந்த சமயத்தில் ரூ.48.31 லட்சம் மட்டுமே இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.


ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை


சென்னையில் இடி-மின்னலுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இடி-மின்னலுடன் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் வடமாவட்டங்களில் மட்டும் மழை குறைவாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.



DMK EX MP Arjunan Vs Tamil Nadu Police | Must Watch | Sicp

Thirumuruga Kirupanandha Variyar Mahabharatham Sorpozhivu - Tamil Speech...