பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 04:00 AM
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு இடையே தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகக் களம் காண்பதால், அங்கு தேர்தல் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
01. லாஸ்பேட்டை - V.சாமிநாதன்
02. காரைக்கால் தெற்கு - K.A.U.அசனா
03. நெட்டப்பாக்கம் (தனி) - L.பெரியசாமி
04. திருபுவனை (தனி) - AK. சாய் J. சரவணன் குமார்
05. முத்தியால்பேட்டை - J.பிரகாஷ் குமார்
06. பாகூர் - N.தனவேலு
07. ராஜ் பவன் - V.J.சந்திரன்
08. உப்பளம் - S.சிவா
09. உழவர்கரை - S.சசிபாலன்
10. அரியாங்குப்பம் - S.குமரவேலு
11. மணவெளி - B.ராமு
12. வில்லியனூர் - R.ரமேஷ்
13. முதலியார்பேட்டை - N.மணிபாலன்
14. மண்ணாடிப்பட்டு - K.பாரதிதாசன்
15. உருளையன்பேட்டை - S.மரிய பிரான்சிஸ்
16. மங்கலம் - M.K.சத்யா
17. காமராஜ் நகர் - Dr.R.சுமன்
18. நெல்லித்தோப்பு - S.விக்னேஷ்வரன்
19. காலாப்பட்டு - D.சசிக்குமார்
20. இந்திரா நகர் - S.முருகன்
21. கதிர்காமம் - R.ஜெயந்தி
22. ஊசுடு (தனி) - S.சரகணபவா
23. தட்டாஞ்சாவடி - M.பன்னீர்செல்வம்
24. ஏம்பலம் (தனி) - V.தமிழ்ச்செல்வன்
25. நெடுங்காடு (தனி) - U.காமராஜ்
26. திருநள்ளாறு - A.ராஜா முஹம்மது
27. காரைக்கால் வடக்கு - A.வெங்கடேஷ்
28. நிரவி -T.R. பட்டினம் - G.கணேஷ்
29. மாகே - M.பிரிஜேஷ்
30. ஏனாம் - A.தோட்டா ராஜூ
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, March 23, 2026
புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எரிபொருள், உரம் விநியோகம் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:30 AM
புதுடெல்லி,
மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.
கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.
கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
8,931 நாட்கள் - புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:20 AM
புதுடெல்லி,
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
நேற்றுடன் (மார்ச் 22) தனது பதவிக்காலத்தில் 8,931 நாட்களை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வசம் இருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.
அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் மோடியின் வாழ்க்கை, தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட மாறாத அர்ப்பணிப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து பெற்றுள்ளார். இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் (மொத்தம் 6130 நாட்கள்) என்ற சாதனையை முறியடிக்க அவர் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து 'அரசுத் தலைவராக' அதிக நாட்கள் பணியாற்றிய இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
நேற்றுடன் (மார்ச் 22) தனது பதவிக்காலத்தில் 8,931 நாட்களை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வசம் இருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.
அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் மோடியின் வாழ்க்கை, தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட மாறாத அர்ப்பணிப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து பெற்றுள்ளார். இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் (மொத்தம் 6130 நாட்கள்) என்ற சாதனையை முறியடிக்க அவர் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து 'அரசுத் தலைவராக' அதிக நாட்கள் பணியாற்றிய இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 22, 2026
மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும் - ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது என்ன? - தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் வலியுறுத்தல்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026, பங்குனி 08, விசுவாவசு வருடம் 01:00 AM
புதுடெல்லி,
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும். தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஈரான் ராணுவ, அணுசக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,444 ஈரான் நாட்டினர் உயிரிழந்துள்ளனர். 18,551 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 3,730 பேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 158 பேர் காயமடைந்திருக்கின்றனர். ஈரான் ராணுவத் தாக்குதலில் சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாகப் பாதித்துள்ளன.
போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கியது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, எல்பிஜி, எல்என்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் இறங்கவில்லை என்றாலும் அமெரிக்காவுக்கு மறைமுக ஆதரவு தருகின்றன.
இந்தச் சூழலில் நடுநிலையான உலகத் தலைவர்கள் இதில் தலையிட்டு சமரச பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்கிரிகோர் கூறும் போது,போரை நிறுத்த இருதரப்பிலும் சமரசம் பேச இந்திய பிரதமரால் மட்டுமே முடியும்.ராணுவ, அரசியல்ரீதியாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பிரதமர் மோடி அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றார். ஐரோப்பிய, வளைகுடா நாடுகளின் தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த 18-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், குவைத் இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். கடந்த 19-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் பெல்ஜியம் சென்று அங்கு ஐரோப்பிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் அமைச்சர்களுடன் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ரமலான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலத்தில் மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, ஒளிமயமான எதிர்காலம் அமைய இருவரும் விரும்புகிறோம்.
பிராந்தியத்தின் முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி அறுபட்டிருக்கிறது. இதனால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாட்டு அரசுதொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா, ஈரான் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்திய பிரதமர் மோடி தீவிர முயற்சிசெய்து வருகிறார். தற்போதைய சூழலில் சில நேர்மறையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா ஒரு மாதத்துக்கு நீக்கியிருக்கிறது. மேலும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கைவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மட்டுமின்றி, உலக நாடுகளும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்றனர்.
புதுடெல்லி,
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும். தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஈரான் ராணுவ, அணுசக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,444 ஈரான் நாட்டினர் உயிரிழந்துள்ளனர். 18,551 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 3,730 பேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 158 பேர் காயமடைந்திருக்கின்றனர். ஈரான் ராணுவத் தாக்குதலில் சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாகப் பாதித்துள்ளன.
போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கியது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, எல்பிஜி, எல்என்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் இறங்கவில்லை என்றாலும் அமெரிக்காவுக்கு மறைமுக ஆதரவு தருகின்றன.
இந்தச் சூழலில் நடுநிலையான உலகத் தலைவர்கள் இதில் தலையிட்டு சமரச பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்கிரிகோர் கூறும் போது,போரை நிறுத்த இருதரப்பிலும் சமரசம் பேச இந்திய பிரதமரால் மட்டுமே முடியும்.ராணுவ, அரசியல்ரீதியாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பிரதமர் மோடி அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றார். ஐரோப்பிய, வளைகுடா நாடுகளின் தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த 18-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், குவைத் இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். கடந்த 19-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் பெல்ஜியம் சென்று அங்கு ஐரோப்பிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் அமைச்சர்களுடன் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ரமலான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலத்தில் மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, ஒளிமயமான எதிர்காலம் அமைய இருவரும் விரும்புகிறோம்.
பிராந்தியத்தின் முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி அறுபட்டிருக்கிறது. இதனால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாட்டு அரசுதொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா, ஈரான் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்திய பிரதமர் மோடி தீவிர முயற்சிசெய்து வருகிறார். தற்போதைய சூழலில் சில நேர்மறையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா ஒரு மாதத்துக்கு நீக்கியிருக்கிறது. மேலும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கைவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மட்டுமின்றி, உலக நாடுகளும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்றனர்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, March 21, 2026
டெல்லியில் முடிவான அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு - யாருக்கு எத்தனை சீட்..?
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 21, 2026, பங்குனி 07, விசுவாவசு வருடம் 02:40 AM
சென்னை,
கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது இரட்டை இலையிலா அல்லது தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க. 23 (மாம்பழம்), பா.ஜ.க. 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டாலும், ஏனைய கட்சிகள் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன.
அதாவது, த.மா.கா. (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. ஆக மொத்தம் 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர்.
அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்பட்டது.
மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது தனிச் சின்னத்திலா, அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலா, பா.ஜ.க.வின் சின்னமான தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசும்போது, பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து வெளியான தகவல்படி, அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 162 (இரட்டை இலை), பா.ஜ.க. 31 (தாமரை), பா.ம.க. 17 (மாம்பழம்), அ.ம.மு.க. 9 (குக்கர்), த.மா.கா. 4 (தனிச்சின்னம்), இந்திய ஜனநாயக கட்சி 2 (தாமரை), புதிய நீதிக்கட்சி 2 (தாமரை), புதிய தமிழகம் 2 (தாமரை), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 2 (தாமரை), பார்வர்டு பிளாக் 1 (தாமரை), பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 (தாமரை), புரட்சி பாரதம் 1 (இரட்டை இலை) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
அதாவது, இரட்டை இலை சின்னத்தில் 163 பேரும், தாமரை சின்னத்தில் 41 பேரும் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை,
கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது இரட்டை இலையிலா அல்லது தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க. 23 (மாம்பழம்), பா.ஜ.க. 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டாலும், ஏனைய கட்சிகள் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன.
அதாவது, த.மா.கா. (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. ஆக மொத்தம் 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர்.
அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்பட்டது.
மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது தனிச் சின்னத்திலா, அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலா, பா.ஜ.க.வின் சின்னமான தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசும்போது, பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து வெளியான தகவல்படி, அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 162 (இரட்டை இலை), பா.ஜ.க. 31 (தாமரை), பா.ம.க. 17 (மாம்பழம்), அ.ம.மு.க. 9 (குக்கர்), த.மா.கா. 4 (தனிச்சின்னம்), இந்திய ஜனநாயக கட்சி 2 (தாமரை), புதிய நீதிக்கட்சி 2 (தாமரை), புதிய தமிழகம் 2 (தாமரை), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 2 (தாமரை), பார்வர்டு பிளாக் 1 (தாமரை), பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 (தாமரை), புரட்சி பாரதம் 1 (இரட்டை இலை) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
அதாவது, இரட்டை இலை சின்னத்தில் 163 பேரும், தாமரை சின்னத்தில் 41 பேரும் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 20, 2026
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM
சென்னை,
அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:
தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்
சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.
தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்
தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.
பெண்களுக்குத் தனித்தொகுதி
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.
எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.
தமிழர்களுக்கு முன்னுரிமை
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை
தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.
மணல் கொள்ளைத் தடுப்பு
அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.
பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.
வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்
குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.
ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி
ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:
தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்
சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.
தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்
தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.
பெண்களுக்குத் தனித்தொகுதி
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.
எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.
தமிழர்களுக்கு முன்னுரிமை
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை
தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை
தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.
மணல் கொள்ளைத் தடுப்பு
அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.
பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.
வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்
குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.
ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி
ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 19, 2026
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் உளவுத் துறை அமைச்சர் உயிரிழப்பு - ஹார்முஸ் ஜலசந்தி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசியது அமெரிக்கா
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 19, 2026, பங்குனி 05, விசுவாவசு வருடம் 06:40 AM
டெல் அவிவ்,
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று அறிவித்துள்ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறும்போது, “ஈரானின் எந்தவொரு மூத்த தலைவரையோ அல்லது அதிகாரியையோ கொல்லும் அதிகாரத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கியுள்ளார். எந்தவித அனுமதியையும் பெறாமலேயே ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள பிரதமர் நெதன்யாகு எங்களுக்கு அனுமதி தந்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில்
ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துவிட்டார். இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வரலாம்" என்றார்.
ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.
மேலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவும், உச்சத் தலைவருமான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்ப்பது நடக்கவில்லை.
முன்னதாக ஈரான் மீதான தாக்குல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கச்சா எண்ணெய் போக்குவரத்து ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட போர்க் கப்பல்களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள கரைப் பகுதிகளில் ஈரான் ஏவுகணை தளங்கள் பல உள்ளன. இங்கிருந்துதான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாதாளத்தில்உள்ள இந்த ஏவுகணை கிடங்குகளை குறி வைத்து 2,200 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை அமெரிக்க ராணுவம் வீசியது. இந்த குண்டுகள் பாதாள பகுதிகளை ஊடுருவி தாக்கும் திறன் படைத்தவை. இந்த குண்டுகளை ஈரான் மீது வெற்றிகரமாக வீசியதாக அமெரிக்க ராணுவம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்
ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று அறிவித்துள்ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறும்போது, “ஈரானின் எந்தவொரு மூத்த தலைவரையோ அல்லது அதிகாரியையோ கொல்லும் அதிகாரத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கியுள்ளார். எந்தவித அனுமதியையும் பெறாமலேயே ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள பிரதமர் நெதன்யாகு எங்களுக்கு அனுமதி தந்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில்
ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துவிட்டார். இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வரலாம்" என்றார்.
ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.
மேலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவும், உச்சத் தலைவருமான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்ப்பது நடக்கவில்லை.
முன்னதாக ஈரான் மீதான தாக்குல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கச்சா எண்ணெய் போக்குவரத்து ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட போர்க் கப்பல்களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள கரைப் பகுதிகளில் ஈரான் ஏவுகணை தளங்கள் பல உள்ளன. இங்கிருந்துதான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாதாளத்தில்உள்ள இந்த ஏவுகணை கிடங்குகளை குறி வைத்து 2,200 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை அமெரிக்க ராணுவம் வீசியது. இந்த குண்டுகள் பாதாள பகுதிகளை ஊடுருவி தாக்கும் திறன் படைத்தவை. இந்த குண்டுகளை ஈரான் மீது வெற்றிகரமாக வீசியதாக அமெரிக்க ராணுவம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்
ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, March 18, 2026
தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் - அர்ச்சனா பட்நாயக் தகவல்
பதிவு: புதன்கிழமை, மார்ச் 18, 2026, பங்குனி 04, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காகச் செலவு செய்ய முடியும்.
தேர்தல் நடைமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமல்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இடம்பெற்றுள்ளன. இதில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.
பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று காலை வரை 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டியதில்லை என்றும், தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டு இருந்தால் அவை மறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும் பொழுது அவை எப்படி பெறப்பட்டது, எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், அத்தொகை பறிமுதல் செய்யப்படாது. உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும். இது குறித்து முறையீடு ஏதும் இருப்பின் மாவட்ட குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
மேலும், புகார்கள் தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியரை மாற்றுவது தொடர்பான புகார் தேர்தல் தொடர்பானது இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்லடத்தில் மருத்துவச் செலவுக்காக கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
327 பார்வையாளர்கள் நியமனம்
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்கள், 188 காவல் துறை பார்வையாளர்கள், 366 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் துறை பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்கள், 4 காவல் துறை பார்வையாளர்கள், 17 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 18-க்குள் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்களில் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Tuesday, March 17, 2026
5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் - அர்ச்சனா பட்நாயக் தகவல் - பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைப்பு
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 17, 2026, பங்குனி 03, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 3.14 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச்26-ம் தேதி வரை விண்ணப்பித்தால், தேர்தலுக்கு முன்பு, பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். இதற்கிடையே, மார்ச் 31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 3 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனுக்களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.
50 கம்பெனி துணை ராணுவம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம்வெளியிடப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம்.
ரூ.1.26 கோடி பறிமுதல்
மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம். பிரச்சார அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரச்சாரத்தின்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி மேனுவல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 3.14 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச்26-ம் தேதி வரை விண்ணப்பித்தால், தேர்தலுக்கு முன்பு, பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும். இதற்கிடையே, மார்ச் 31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 3 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனுக்களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.
50 கம்பெனி துணை ராணுவம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம்வெளியிடப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம்.
ரூ.1.26 கோடி பறிமுதல்
மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம். பிரச்சார அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரச்சாரத்தின்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி மேனுவல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, March 16, 2026
தேர்தல் அறிவிப்பால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லக்கூடாது - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன...?
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 16, 2026, பங்குனி 02, விசுவாவசு வருடம் 04:40 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியில் நடக்கும் என்று நேற்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (எம்.சி.சி.) உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிட்டன.
ஏதாவது மிக முக்கிய பிரச்சினை நடந்துவிட்டது என்றால் மட்டுமே, அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடை பெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதிவரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல்ல முடியாது.
அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும்படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்துவிடுவார்கள்.
அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:-
* ஒட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப்பொருள் கொடுக்கக்கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக்கூடாது.
* தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது.
* தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. அரசு அலுவலர்களை அமைச்சர் தனது அலுவலக பணிகளுடன் சேர்க்கக்கூடாது. அரசு பணியை அரசியல் பணிகளுடன் சேர்க்கக்கூடாது.
* தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் உபகரணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்களை சென்று சந்திக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். குற்ற வழக்குக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.
* மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் அனைத்து குறிப்புகளும், அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை போலப் புகழ்ந்து பேசுவதாக இருந்தால் நீக்கப்படும்.
* அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களை அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக தூண்டும் வகையில் அதுபற்றிய புதிய திட்டங்கள், அறிவிப்புகளை செய்யக்கூடாது.
* இந்த கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் சமமாக பொருந்தும். ஆனாலும், ஏற்கனவே நிறைவடையும் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய, பிராந்திய மற்றும் மாநில பயன்பாட்டுத் திட்டங்களின் விஷயத்தில், அவற்றின் பயன் பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
அது போன்ற திட்டங்களின் செயல்பாடு, அரசு அதிகாரிகளால் செய்யப்படுகிறதா? என்பதும், அரசியல் செயல்பாடுகள் இல்லாமலும், விழாக்களை நடத்தாமலும், திட்டத்தின் செயல்பாடுகளின் பயன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செல்கிறது என்ற எண்ணம் ஏற்படாமலும் செயல்படுத்த வேண்டும். இதில் தேர்தல் கமிஷனை ஆலோசிக்கலாம்.
* அரசினால் பட்ஜெட்டிலோ, கவர்னர் உரையிலோ அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என்று அவற்றை தொடங்கினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றமாக கருதப்படும். திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணி ஆணை கொடுக்கப் பட்டு இருந்தாலும் அந்தப் பணிகள் தேர்தல் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகளை முடித்து அதற்கான தொகையை உரியவருக்கு வழங்குவதற்கு தடையில்லை.
* திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்வது கூடாது. மக்கள் நலத்திட் டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும்கூட, தேர்தல் முடியும் வரை அவை நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் முன் அனுமதியின்றி, நலத் திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்கான புதிய நிதியை வெளியிடவோ அல்லது வழங்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யவோ கூடாது. இதில், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியும் அடங்கும்.
* இயற்கை பேரிடர் நிவாரண நிதி, முதியோர் உதவி நிதி அளிப்பதற்கு தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்று வழங்கலாம். ஆனால் வாக்கா ளர்களுக்கு கட்சி சார்பான தூண்டுதல் ஏற்படாதபடி, அனைத்து ஆடம்பர மான செயல்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 15, 2026
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ல் ஒரே கட்டமாக தேர்தல் - மே.4ல் வாக்கு எண்ணிக்கை
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.
இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 இந்திய சரக்குக் கப்பல்கள்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026, பங்குனி 01, விசுவாவசு வருடம் 07:30 AM
புதுடெல்லி,
இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30+ சரக்கு கப்பலிகளில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல். இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, March 14, 2026
இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு - மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 14, 2026, மாசி 30, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி,
எல்பிஜி சிலிண்டர்கள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து எல்பிஜி வருவது தடைபட்டுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீட்டு உபயோக சிலிண்டருக்கான புக்கிங்கை அதிக அளவில் செய்யத் தொடங்கினர்.
போன் மூலம் அதிக அளவில் புக்கிங் செய்யப்படுவதால் அந்த சிஸ்டம் செயலிழந்தது. இதையடுத்து எல்பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், எல்பிஜி சிலிண்டர் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது:-
வழக்கமாக தினந்தோறும் நாடு முழுவதும் 55.7 லட்சம் பேர் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்வார்கள். சிலிண்டர் கிடைக்காது என்று கருதி, கடந்த சில நாட்களாக 75.7 லட்சம் பேர் சிலிண்டருக்காக புக்கிங் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்தப் பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்துள்ளோம். எனவே, சிலிண்டர் கிடைக்காது என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
புக்கிங் செய்யும் அனைவருக்கும் காஸ் சிலிண்டர் நிச்சயம் கிடைக்கும். மக்கள் பீதி அடையாமல் இருக்கவேண்டும். மக்களுக்கு 100 சதவீத காஸ் சிலிண்டர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
எனவே, இதுதொடர்பாக யாரும் பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதி அடையச் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 13, 2026
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணிக்க இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி - எரிவாயு நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு தீவிரம்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 13, 2026, மாசி 29, விசுவாவசு வருடம் 05:30 AM
புதுடெல்லி/டெஹ்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.
ஈரான் மட்டுமின்றி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பரோட் ஆகியோருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த தாய்லாந்து கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்ம ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்த 20 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர்.
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஈரான், ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிப்பதற்கு முன்பே, லைபீரியா நாட்டு ஆயில் டேங்கர் கப்பல் ‘சென்லாங் சூயிஸ்மேக்ஸ்’ சவுதி அரேபியாவின் ராஸ் டானுரா துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி ஒரு லட்சத்து 35,335 டன் கச்சா எண்ணெய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டது. இது கடந்த 8-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை வந்தடைந்ததாக கடல்சார் கண்காணிப்பு தரவு காட்டியது. அதன்பின் அந்த கப்பல் பற்றி சிக்னல் கிடைக்கவில்லை.
ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்களின் சிக்னல்களை கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடப்படுவதால், சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பலின் தானியங்கி அடையாள கருவியை, அதன் இந்திய கேப்டன் ஆஃப் செய்துள்ளார்.
இதனால் கப்பல் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறிய முடியாது. இதற்கு கடல்சார் துறையில் ‘டார்க் மோட்’ அல்லது ‘கோயிங் டார்க்’ என பெயர். இதன் மூலம் ஏவுகணைகளால் கப்பல் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறைவு.
இவ்வாறு சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து நேற்று முன்தினம் மாலை மும்பை ஜவஹர் தீப் துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பின் மார்ச் 9-ம் தேதிதான்
இந்த கப்பலின் தானியங்கி அடையாள கருவி ஆன் செய்யப்பட்டது. இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்த கப்பல் தப்பியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துவிட்டதால், இனிமேல் பயமில்லாமல் கச்சா எண்ணெயை கொண்டு வர முடியும். இது மத்திய அரசின் தூதரக வெற்றியாக கூறப்படுகிறது.
புதுடெல்லி/டெஹ்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.
ஈரான் மட்டுமின்றி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பரோட் ஆகியோருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த தாய்லாந்து கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்ம ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்த 20 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர்.
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஈரான், ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிப்பதற்கு முன்பே, லைபீரியா நாட்டு ஆயில் டேங்கர் கப்பல் ‘சென்லாங் சூயிஸ்மேக்ஸ்’ சவுதி அரேபியாவின் ராஸ் டானுரா துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி ஒரு லட்சத்து 35,335 டன் கச்சா எண்ணெய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டது. இது கடந்த 8-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை வந்தடைந்ததாக கடல்சார் கண்காணிப்பு தரவு காட்டியது. அதன்பின் அந்த கப்பல் பற்றி சிக்னல் கிடைக்கவில்லை.
ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்களின் சிக்னல்களை கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடப்படுவதால், சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பலின் தானியங்கி அடையாள கருவியை, அதன் இந்திய கேப்டன் ஆஃப் செய்துள்ளார்.
இதனால் கப்பல் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறிய முடியாது. இதற்கு கடல்சார் துறையில் ‘டார்க் மோட்’ அல்லது ‘கோயிங் டார்க்’ என பெயர். இதன் மூலம் ஏவுகணைகளால் கப்பல் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறைவு.
இவ்வாறு சென்லாங் சூயிஸ்மேக்ஸ் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து நேற்று முன்தினம் மாலை மும்பை ஜவஹர் தீப் துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பின் மார்ச் 9-ம் தேதிதான்
இந்த கப்பலின் தானியங்கி அடையாள கருவி ஆன் செய்யப்பட்டது. இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்த கப்பல் தப்பியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துவிட்டதால், இனிமேல் பயமில்லாமல் கச்சா எண்ணெயை கொண்டு வர முடியும். இது மத்திய அரசின் தூதரக வெற்றியாக கூறப்படுகிறது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 12, 2026
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல் - எரியும் கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர்
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 12, 2026, மாசி 28, விசுவாவசு வருடம் 07:00 AM
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜல சந்தி வழியாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிகமிக முக்கியமானதாக உள்ளது. இந்தப் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடல் கண்ணிவெடிகளை வைக்கும் பணியிலும் ஈரான் ஈடுபட்டது. இதனால், ஈரான் போர்க் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் பணியில் ஈடுபட்ட கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலிபா துறைமுகத்தில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த ‘மயூரி நாரி’ என்ற எண்ணெய்க் கப்பலில் இந்தியாவுக்காக 30,000 டன்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டது. இந்த கப்பல் குஜராத்தின் கண்டலா துறைமுகத்துக்கு வர வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வந்தபோது, இந்த கப்பல் மீது மர்மமான முறையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. உடனே கப்பலில் இருந்த 20 ஊழியர்கள் மிதவை மூலம் கடலில் குதித்து தப்பினர்.
அவர்களை ஓமன் கடற்படை காப்பாற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டது. கப்பலில் இருந்த 3 ஊழியர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. 178 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட ஆயில் டேங்கர் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியது யார்?
இந்த தாக்குதல் எப்படி நடைபெற்றது, எங்கிருந்து நடத்தப்பட்டது என தாய்லாந்து கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதி களும் தாக்குதல்களில் ஈடு பட்டுள்ளனர். ஈரானுடன் சேர்ந்து அவர்களும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல் நடத்துவோம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் இந்த தாக்குதலை நடத்தியது யார் என விசாரணை நடைபெறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், வளைகுடா பகுதியில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றுதான் இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற தாய்லாந்து கப்பல் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Wednesday, March 11, 2026
விஸ்வரூபம் எடுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு எப்படி சமாளிக்க போகிறது இந்தியா? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை - ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பிப்பு
பதிவு: புதன்கிழமை, மார்ச் 11, 2026, மாசி 27, விசுவாவசு வருடம் 05:50 AM
புதுடெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கி உள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து, எல்பிஜி காஸ் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
இந்தியாவில் சுமார் 90 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, விலையும் உயர்த்தப்படவில்லை. ஆனால், சமையல் காஸ் (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எல்பிஜி.யைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது.
ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் இந்தியாவின் எல்பிஜி இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில், வணிகநிறுவனங்களுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
மும்பையில் சுமார் 3,869 பெரிய ஓட்டல்களும் ஆயிரக்கணக்கான சிறிய ஓட்டல்களும் செயல்படுகின்றன. வணிக எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன.
சென்னை, புனே, கொல்கத்தா, டெல்லி உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஓட்டல் தொழில் முடங்கிவருகிறது. நாடு முழுவதும் 33 கோடி வீட்டு
உபயோக சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு நாடு முழுவதும் 70.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கப்படுகிறது.
தட்டுப்பாடு காரணமாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. போர் நீடிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் முன்கூட்டியே எல்பிஐ சிலிண்டரை முன்பதிவு செய்து வருகின்றனர்.
சுமார் 20 சதவீதம் அளவுக்கு முன்பதிவு அதிகரித்திருக்கிறது. இதனால் சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது.
டேங்கர் லாரிகள் நிறுத்தம்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த சங்கத்தில் 4 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன.
போர் பாதிப்பு காரணமாக இந்தியாவில் வர்த்தக காஸ் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட காஸ் டேங்கர் லாரிகள் லோடு இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவி அரசியல் (ஈரான் போர்) காரணமாக எல்பிஜி இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க பொதுத்துறை, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு தடையின்றி எல்பிஜி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி விநியோகம் தொடர்பாக 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.
எஸ்மா சட்டம் அமல்
எல்பிஜி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எல்பிஜி கிடைப்பது உறுதி செய்யப்படும். எல்பிஜி விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எல்பிஜி உற்பத்தித் துறையில் வேலைநிறுத்தம் முழுமையாக தடை செய்யப்படும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை
சமையல் காஸ் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாற்று வழிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Monday, March 9, 2026
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் - முதன்முறையாக பட்டத்தை தக்கவைத்தும், 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை
பதிவு: திங்கள்க்கிழமை, மார்ச் 09, 2026, மாசி 25, விசுவாவசு வருடம் 04:00 AM
அகமதாபாத்,
ஐசிசி டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் வீச்சில் போல்டாகிறார் நியூஸிலாந்து பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ். இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்ததுடன் 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை படைத்தது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சுழற்பந்து வீச்சாளரான கோல் மெக்கோன்ஜி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் 4 பந்துகளிலும் தடுப்பாட்டம் மேற்கொண்ட சஞ்சு சாம்சன் 5-வது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன.
கிளென் பிலிப்ஸ் வீசிய 2-வது ஓவரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜேக்கப் டஃபி வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் பவுண்டரிகளை விரட்டினார். சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாச இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் விளாசப்பட்டன. லாக்கி பெர்குசன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை தேர்டு மேன் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா அடுத்த பந்தை மிட் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
தொடர்ந்து சஞ்சு சாம்சன் தலா ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விரட்ட இந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டன. 4 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 51 ரன்களை சேர்த்தது. மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா லாங் ஆஃப் திசையிலும், சஞ்சு சாம்சன் ஸ்கொயர் லெக் திசையிலும் சிக்ஸர் விளாசினர். இந்த ஓவரில் மேட் ஹென்றி 4 வைடுகளையும் வீசினார். இதனால் ஓட்டுமொத்தமாக அவர், 21 ரன்களை வாரி வழங்கினார்.
ஜேக்கப் டஃபி வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி மிரளச் செய்தார் அபிஷேக் சர்மா. மட்டையை சுழற்றிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். சர்வதேச டி 20 அரங்கில் இது அவரது 6-வது அரை சதமாக அமைந்தது.இந்த ஜோடியின் அதிரடியால் இந்திய அணி பவர்பிளேவில் 92 ரன்களை குவித்தது. மிட்செல் சாண்ட்னர் வீசிய 7-வது ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரச்சின் ரவீந்திரா வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வைடாக வீசிய பந்தை அபிஷேக் சர்மா அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பர் டிம் ஷெய்பர்ட்டிடம் கேட்ச் ஆனது.
21 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி 7.1 ஓவர்களில் 98 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் மட்டையை சுழற்றினார். ரச்சின் ரவீந்திரா வீசிய இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் இஷான் கிஷன் பவுண்டரிக்கு விரட்டினார்.
மிட்செல் சாண்ட்னர் வீசிய 9-வது ஓவரில் 5 ரன்களை வழங்கினார். ஜேம்ஸ் நீஷம் வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 127 ரன்களை குவித்தது. தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தை இஷான் கிஷன் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார்.
சீராக ரன்கள் சேர்த்த சஞ்சு சாம்சன் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 6-வது அரை சதத்தை கடந்தார். லாக்கி பெர்குசன் வீசிய 12-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும் இஷான் கிஷன் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியையும் விளாசி மிரட்டினர்.
இந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. மேட் ஹென்றி வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தை இஷான் கிஷன் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன.
ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு பறக்க விட இந்த ஓவரில் 20 ரன்கள் குவிக்கப்பட்டன. மிட்செல் சாண்ட்னர் வீசிய 15-வது ஓவரில் இஷான் கிஷன் மிட் விக்கெட் திசையில் சிக்ஸரையும், நேர் திசையில் பவுண்டரியையும் விரட்டினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 23 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவருக்கு 10-வது அரை சதமாக அமைந்தது.
இந்த ஜோடியின் தாக்குதல் ஆட்டத்தால் இந்திய அணி 15 ஓவர்களில் 203 ரன்கள் குவித்தது. கடும் அச்சுறுத்தல் கொடுத்த இந்த ஜோடியை அடுத்த ஓவரில் ஜேம்ஷ் நீஷம் பிரித்தார். ஜேம்ஸ் நீஷம் வீசிய ஃபுல்டாஸ் பந்தை சஞ்சு சாம்சன் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த போது பதிலி வீரரான மெக்கோன்ஜியிடம் கேட்ச் ஆனது. 46 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்தது.
இதே ஓவரில் ஜேம்ஸ் நீஷம் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு திடீரென நெருக்கடியை கொடுத்தார். அவர், தாழ்வாக வீசிய புல்டாஸ் பந்தை இஷான் கிஷன், லாங் ஆன் திசையில் விளாசிய போது மார்க் சாப்மேனிடம் கேட்ச் ஆனது.
இஷான் இஷன் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை தனது வழக்கமான பாணியில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்றார்.
அப்போது எல்லைக்கோட்டுக்கு அருகே ரச்சின் ரவீந்திரா பாய்ந்தபடி அற்புதமாக கேட்ச் செய்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ரன் கணக்கை தொடங்கும் முன்னரே வெளியேறினார். ஜேம்ஸ் நீஷம் ஒட்டுமொத்தமாக இந்த ஓவரில் ஒரு ரன்னை மட்டுமே வழங்கிய நிலையில் 3 விக்கெட்களை சாய்த்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். ஜேக்கப் டஃபி வீசிய 17-வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ஜேம்ஸ் நீஷம் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரியை விரட்ட 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. மேட் ஹென்றி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த பந்தை விளாச முயன்ற போது கவர் திசையில் நின்ற மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் ஆனது. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 18 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ஜேம்ஸ் நீஷம் வீசிய கடைசி ஓவரின் முதல்பந்தை பவுண்டரிக்கும் அடுத்த இரு பந்துகளை சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். இதன் பின்னர் 4-வது மற்றும் கடைசி பந்தை பவுண்டரியாக மாற்றினார். இந்த ஓவரில் 24 ரன்கள் விளாசப்பட்டன. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 8 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், திலக் வர்மா 6 பந்துகளில், 8 ரன்களும் சேர்த்தனர்.
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்துக்குள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான டிராபியை கொண்டு வந்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்தனர். ஃபின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17, ஜேம்ஸ் நீஷம் 8, மேட் ஹென்றி 0 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 27 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை சாய்த்தார். ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.
டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன.சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது.
டாப் 3 அரை சதம்
டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்
களான சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் விளாசினர். டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரை சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.
அன்று கண்ணீர்.. இன்று மகிழ்ச்சி..
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. அந்தத் தொடர் முழுவதும் அபாரமான திறனை வெளிப்படுத்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வலம் வந்திருந்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டி தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. அதே மைதானத்தில் தற்போது இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றது அசத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் சுற்றில் ஓர் அணி விரைவாக 100 ரன்களை எட்டியது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் நியூஸிலாந்து அணி 7.5 ஓவர்களில் 100 ரன்களை குவித்து இருந்தது.
வாரி வழங்கிய பெர்குசன்
டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் 4-வது ஓவரிலும், 12-வது ஓவரிலும் தலா 24 ரன்களை தாரை வார்த்தார். அவரை தொடர்ந்து ஜேம்ஷ் நீஷம் 20-வது ஓவரில் 24 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதன் மூலம் இவர்கள் இருவரும், டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் அக்சர் படேல் ஆகியோருடன் இணைந்தனர். பென் ஸ்டோக்ஸ் 2016-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், அக்சர் படேல் 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் 24 ரன்களை வழங்கியிருந்தனர்.
‘நம்பர் 2 முத்திரை’ - நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது. 50 ஓவர், டி 20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி இம்முறை இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது. இதனால் நியூஸிலாந்து அணி மீது உள்ள ‘நம்பர் 2’ முத்திரை தொடர்கிறது.
தேசிய கீதம் பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி
அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது தேசிய கீதத்தை பிரபல பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார். 68 வயதாகும் கவிதா கிருஷ்ணமூர்த்தி மைதானத்துக்கு வந்து தேசிய கீதத்தை பாடியது இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தமிழ், இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி. தமிழரான இவர், வயலின் இசைக்கலைஞரான எல்.சுப்பிரமணியத்தைத் திருமணம் செய்து கொண்டார்.
அகமதாபாத்,
ஐசிசி டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் வீச்சில் போல்டாகிறார் நியூஸிலாந்து பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ். இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்ததுடன் 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை படைத்தது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சுழற்பந்து வீச்சாளரான கோல் மெக்கோன்ஜி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் 4 பந்துகளிலும் தடுப்பாட்டம் மேற்கொண்ட சஞ்சு சாம்சன் 5-வது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன.
கிளென் பிலிப்ஸ் வீசிய 2-வது ஓவரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜேக்கப் டஃபி வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் பவுண்டரிகளை விரட்டினார். சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாச இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் விளாசப்பட்டன. லாக்கி பெர்குசன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை தேர்டு மேன் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா அடுத்த பந்தை மிட் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
தொடர்ந்து சஞ்சு சாம்சன் தலா ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விரட்ட இந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டன. 4 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 51 ரன்களை சேர்த்தது. மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா லாங் ஆஃப் திசையிலும், சஞ்சு சாம்சன் ஸ்கொயர் லெக் திசையிலும் சிக்ஸர் விளாசினர். இந்த ஓவரில் மேட் ஹென்றி 4 வைடுகளையும் வீசினார். இதனால் ஓட்டுமொத்தமாக அவர், 21 ரன்களை வாரி வழங்கினார்.
ஜேக்கப் டஃபி வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி மிரளச் செய்தார் அபிஷேக் சர்மா. மட்டையை சுழற்றிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். சர்வதேச டி 20 அரங்கில் இது அவரது 6-வது அரை சதமாக அமைந்தது.இந்த ஜோடியின் அதிரடியால் இந்திய அணி பவர்பிளேவில் 92 ரன்களை குவித்தது. மிட்செல் சாண்ட்னர் வீசிய 7-வது ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரச்சின் ரவீந்திரா வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வைடாக வீசிய பந்தை அபிஷேக் சர்மா அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பர் டிம் ஷெய்பர்ட்டிடம் கேட்ச் ஆனது.
21 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி 7.1 ஓவர்களில் 98 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் மட்டையை சுழற்றினார். ரச்சின் ரவீந்திரா வீசிய இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் இஷான் கிஷன் பவுண்டரிக்கு விரட்டினார்.
மிட்செல் சாண்ட்னர் வீசிய 9-வது ஓவரில் 5 ரன்களை வழங்கினார். ஜேம்ஸ் நீஷம் வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 127 ரன்களை குவித்தது. தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தை இஷான் கிஷன் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார்.
சீராக ரன்கள் சேர்த்த சஞ்சு சாம்சன் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 6-வது அரை சதத்தை கடந்தார். லாக்கி பெர்குசன் வீசிய 12-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும் இஷான் கிஷன் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியையும் விளாசி மிரட்டினர்.
இந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. மேட் ஹென்றி வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தை இஷான் கிஷன் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன.
ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு பறக்க விட இந்த ஓவரில் 20 ரன்கள் குவிக்கப்பட்டன. மிட்செல் சாண்ட்னர் வீசிய 15-வது ஓவரில் இஷான் கிஷன் மிட் விக்கெட் திசையில் சிக்ஸரையும், நேர் திசையில் பவுண்டரியையும் விரட்டினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 23 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவருக்கு 10-வது அரை சதமாக அமைந்தது.
இந்த ஜோடியின் தாக்குதல் ஆட்டத்தால் இந்திய அணி 15 ஓவர்களில் 203 ரன்கள் குவித்தது. கடும் அச்சுறுத்தல் கொடுத்த இந்த ஜோடியை அடுத்த ஓவரில் ஜேம்ஷ் நீஷம் பிரித்தார். ஜேம்ஸ் நீஷம் வீசிய ஃபுல்டாஸ் பந்தை சஞ்சு சாம்சன் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த போது பதிலி வீரரான மெக்கோன்ஜியிடம் கேட்ச் ஆனது. 46 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்தது.
இதே ஓவரில் ஜேம்ஸ் நீஷம் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு திடீரென நெருக்கடியை கொடுத்தார். அவர், தாழ்வாக வீசிய புல்டாஸ் பந்தை இஷான் கிஷன், லாங் ஆன் திசையில் விளாசிய போது மார்க் சாப்மேனிடம் கேட்ச் ஆனது.
இஷான் இஷன் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை தனது வழக்கமான பாணியில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்றார்.
அப்போது எல்லைக்கோட்டுக்கு அருகே ரச்சின் ரவீந்திரா பாய்ந்தபடி அற்புதமாக கேட்ச் செய்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ரன் கணக்கை தொடங்கும் முன்னரே வெளியேறினார். ஜேம்ஸ் நீஷம் ஒட்டுமொத்தமாக இந்த ஓவரில் ஒரு ரன்னை மட்டுமே வழங்கிய நிலையில் 3 விக்கெட்களை சாய்த்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். ஜேக்கப் டஃபி வீசிய 17-வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ஜேம்ஸ் நீஷம் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரியை விரட்ட 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. மேட் ஹென்றி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த பந்தை விளாச முயன்ற போது கவர் திசையில் நின்ற மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் ஆனது. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 18 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ஜேம்ஸ் நீஷம் வீசிய கடைசி ஓவரின் முதல்பந்தை பவுண்டரிக்கும் அடுத்த இரு பந்துகளை சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். இதன் பின்னர் 4-வது மற்றும் கடைசி பந்தை பவுண்டரியாக மாற்றினார். இந்த ஓவரில் 24 ரன்கள் விளாசப்பட்டன. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 8 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், திலக் வர்மா 6 பந்துகளில், 8 ரன்களும் சேர்த்தனர்.
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்துக்குள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான டிராபியை கொண்டு வந்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்தனர். ஃபின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17, ஜேம்ஸ் நீஷம் 8, மேட் ஹென்றி 0 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 27 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை சாய்த்தார். ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.
டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன.சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது.
டாப் 3 அரை சதம்
டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்
களான சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் விளாசினர். டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரை சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.
அன்று கண்ணீர்.. இன்று மகிழ்ச்சி..
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. அந்தத் தொடர் முழுவதும் அபாரமான திறனை வெளிப்படுத்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வலம் வந்திருந்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டி தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. அதே மைதானத்தில் தற்போது இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றது அசத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் சுற்றில் ஓர் அணி விரைவாக 100 ரன்களை எட்டியது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் நியூஸிலாந்து அணி 7.5 ஓவர்களில் 100 ரன்களை குவித்து இருந்தது.
வாரி வழங்கிய பெர்குசன்
டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் 4-வது ஓவரிலும், 12-வது ஓவரிலும் தலா 24 ரன்களை தாரை வார்த்தார். அவரை தொடர்ந்து ஜேம்ஷ் நீஷம் 20-வது ஓவரில் 24 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதன் மூலம் இவர்கள் இருவரும், டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் அக்சர் படேல் ஆகியோருடன் இணைந்தனர். பென் ஸ்டோக்ஸ் 2016-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், அக்சர் படேல் 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் 24 ரன்களை வழங்கியிருந்தனர்.
‘நம்பர் 2 முத்திரை’ - நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது. 50 ஓவர், டி 20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி இம்முறை இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது. இதனால் நியூஸிலாந்து அணி மீது உள்ள ‘நம்பர் 2’ முத்திரை தொடர்கிறது.
தேசிய கீதம் பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி
அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது தேசிய கீதத்தை பிரபல பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார். 68 வயதாகும் கவிதா கிருஷ்ணமூர்த்தி மைதானத்துக்கு வந்து தேசிய கீதத்தை பாடியது இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தமிழ், இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி. தமிழரான இவர், வயலின் இசைக்கலைஞரான எல்.சுப்பிரமணியத்தைத் திருமணம் செய்து கொண்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Sunday, March 8, 2026
மாதம் ரூ.2.500, திருமணத்துக்கு ஒரு பவுன்... ‘அண்ணன் சீர்’ முதல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரை - மகளிருக்கான தவெக தலைவர் விஜய்யின் வாக்குறுதி பட்டியல்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 08, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 02:50 AM
சென்னை,
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
சென்னையில் தவெக சார்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட வாக்குறுதிகள் விவரம்:
* “பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை முக்கிய நிலைப்பாடு. அதன்படி அதற்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.
* மாதம் ரூ.2,500: தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறது. எனவே, தவெக அரசில் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். இதில் மாநில, ஒன்றிய அரசின் ஊழியர்களாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
* ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். இது தாய்மார்கள் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக இருக்கும்.
* அண்ணன் சீர் திட்டம் மூலம், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் அளிக்கப்படும்.
* ரூ.15 ஆயிரம் உதவி: காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இடைநிற்றலே இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்க, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.15 ஆயிரம் பொருளாதார உதவி வழங்கப்படும்.
* இப்போது பிங்க் நிற பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் உள்ளது. தவெக அரசு அமைந்தால் வெற்றிப் பயணம் திட்டத்தின் படி, அரசுப் போக்குவரத்து கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
* பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை அமைக்கப்படும். சாதாரண உடையில் 500 படைகள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார்கள்.
* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கை பொத்தான்கள் அமைக்கப்படும்.
* சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடமே இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட்டுகள் அமைக்கப்படும்.
* பொதுவிநியோக கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.
* சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிலுவையிலுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதன் மூலமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவர்கள் தொழில் தொடங்கினால் 5 லட்சம் ரூபாய் 100% மானியத்தில் வழங்கப்படும்.
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகளுக்கான வரவேற்பு கிட் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.
சென்னை,
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
சென்னையில் தவெக சார்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட வாக்குறுதிகள் விவரம்:
* “பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை முக்கிய நிலைப்பாடு. அதன்படி அதற்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.
* மாதம் ரூ.2,500: தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறது. எனவே, தவெக அரசில் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். இதில் மாநில, ஒன்றிய அரசின் ஊழியர்களாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
* ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். இது தாய்மார்கள் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக இருக்கும்.
* அண்ணன் சீர் திட்டம் மூலம், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் அளிக்கப்படும்.
* ரூ.15 ஆயிரம் உதவி: காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இடைநிற்றலே இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்க, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.15 ஆயிரம் பொருளாதார உதவி வழங்கப்படும்.
* இப்போது பிங்க் நிற பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் உள்ளது. தவெக அரசு அமைந்தால் வெற்றிப் பயணம் திட்டத்தின் படி, அரசுப் போக்குவரத்து கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
* பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை அமைக்கப்படும். சாதாரண உடையில் 500 படைகள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார்கள்.
* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கை பொத்தான்கள் அமைக்கப்படும்.
* சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடமே இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட்டுகள் அமைக்கப்படும்.
* பொதுவிநியோக கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.
* சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிலுவையிலுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதன் மூலமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவர்கள் தொழில் தொடங்கினால் 5 லட்சம் ரூபாய் 100% மானியத்தில் வழங்கப்படும்.
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகளுக்கான வரவேற்பு கிட் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Saturday, March 7, 2026
தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 07, 2026, மாசி 23, விசுவாவசு வருடம் 05:30 AM
சென்னை,
தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் - சென்னையில் நேற்று நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் 2030-ம் ஆண்டை இலக்காக கொண்டு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’, விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தமிழக அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அரசின் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம்.
அரசியல் ரீதியாக எழுந்த சில நெருக்கடிகளை சமாளித்துதான் பல திட்டங்களை செயல்படுத்தினோம். இந்த ஆட்சியின் சாதனைகளை நம்பி உறுதியாக கூறுகிறேன். அடுத்தும் திமுக ஆட்சிதான். நமது சாதனைகளின் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என ஒரு ‘ப்ளூ பிரின்ட்’ தயாரிக்க திட்டமிட்டோம். அதற்காக, தமிழகத்தின் 1.80 கோடி குடும்பங்களிடம் நேரடியாகசென்று, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தோம். அதில் முன்னுரிமை அடிப்படையில் ‘தமிழ்நாடு 2030’ எனும் 14 முக்கிய அம்சங்களை அறிவிக்கிறேன்.
2030-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 5 லட்சம் வீடுகள், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
‘நலமுடன் தமிழ்நாடு 2030’ திட்டத்தில் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க வழிசெய்யப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயைக் கண்டறிய சிறப்பு முகாம்கள், மாவட்டம்தோறும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
விவசாய சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். 43 லட்சம் உழவர்களுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட்டு, மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். உணவு உற்பத்தி 1.25 கோடி டன்னாக உயர்த்தப்படும். 1.25 லட்சம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
அனைத்து அரசு, அரசு உதவிப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அமைக்கப்படும். ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் 1,000 மாதிரிப் பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 90 சதவீதத்தை எட்டும் வகையில் கட்டமைப்பு விரிவாக்கப்படும். ‘நான் முதல்வன் 2.0’ மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். ஆராய்ச்சியை அதிகரிக்க தொழிற்கல்வி சிறப்பு மையங்கள் நிறுவப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஏஐ ஆய்வகம் உருவாக்கப்படும்.
ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
வீட்டு மனையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின குடும்பத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
கிராம சந்தைகள், விளையாட்டு, நல்வாழ்வு கட்டமைப்புகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் இப்போதே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்வு ஆகியவை எங்கள் இலக்கு. இதற்காக மாவட்டம்தோறும் நவீன தொழிற்பூங்கா அமைக்கப்படும். ஐடி ஏற்றுமதி ரூ.6 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு, அத்துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித் தொழில் நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.
உள்நாட்டு மீன் உற்பத்தி 4.50 லட்சம் டன், பால் உற்பத்தி 4.50 கோடி லிட்டர், கால்நடை எண்ணிக்கை 3 கோடியாக உயர்த்தப்படும். ஒரு லட்சம் ஏக்கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படும்.
நகர்ப் பகுதிகளில் 20 சதவீத பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீரை முழுமையாக சேகரித்து, சுத்திகரித்து 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும்.
வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நமது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வழிசெய்யப்படும்.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பாலங்கள், சாலைகளின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டு, விபத்துகள் குறைக்கப்படும்.
நெசவுத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற வேண்டும்.
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது மாபெரும் கனவு. நான் அறிவித்த திட்டங்கள் செயல்வடிவம் பெற மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இதையெல்லாம் நனவாக்கி, 2030-ல் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: மார்ச் 6 - அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967-ல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய நாள்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்’- ஐ இந்த நாளில் அறிவிக்கிறேன். திராவிட ஆட்சி இந்த மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே ‘திராவிட மாடல் 2.0’-க்கு அடிக்கல் நாட்டுகிறேன்.. உங்கள் அனைவரின் ஆதரவோடும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 6, 2026
மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் 6 பேர் வேட்புமனு தாக்கல்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 06, 2026, மாசி 22, விசுவாவசு வருடம் 05:00 AM
சென்னை,
ராஜ்யசபா தேர்தலையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை, அதன் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அண்ணா தி.மு.க.வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடையவுள்ளது.
மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் -16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
6 இடங்களுக்கு போட்டி
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் தி.மு.க.வுக்கும் 2 இடங்கள் அண்ணா தி.மு.க.வுக்கும் கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை கட்சியில் மேலிடம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தம்பிதுரை, அன்புமணி வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று காலை தலைமை செயலகம் வந்தார். அங்கு, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுவை தம்பிதுரை தாக்கல் செய்தார்.
தம்பிதுரை 6 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகிறார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், சவுமியா அன்புமணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
இதைத் தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 9-ம் தேதி ஆகும். மார்ச் 16-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சிகள் சார்பில் 7 பேர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமதாஸ் பரிந்துரைத்த சுவாமிநாதன் மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வாய்ப்பு இல்லை என்பதால் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்படும்.
சென்னை,
ராஜ்யசபா தேர்தலையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை, அதன் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அண்ணா தி.மு.க.வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடையவுள்ளது.
மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் -16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
6 இடங்களுக்கு போட்டி
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் தி.மு.க.வுக்கும் 2 இடங்கள் அண்ணா தி.மு.க.வுக்கும் கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை கட்சியில் மேலிடம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தம்பிதுரை, அன்புமணி வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று காலை தலைமை செயலகம் வந்தார். அங்கு, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுவை தம்பிதுரை தாக்கல் செய்தார்.
தம்பிதுரை 6 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகிறார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், சவுமியா அன்புமணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
இதைத் தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 9-ம் தேதி ஆகும். மார்ச் 16-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சிகள் சார்பில் 7 பேர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமதாஸ் பரிந்துரைத்த சுவாமிநாதன் மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வாய்ப்பு இல்லை என்பதால் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்படும்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 04:00 AM புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...





















-+
