பதிவு: சனிக்கிழமை, மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:40 AM
சென்னை,
“திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் வெள்ளிக்கிழமை மாலை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
“ஆலந்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இங்கே கூடியிருக்கும் மக்களே சாட்சி.
மயிலாப்பூரில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோன். நான் பேசியதில் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. என் பேச்சுக்கு மூன்று அமைச்சர்கள் ஏதேதோ வகையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் சொன்ன கருத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஸ்டாலின் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். நிச்சயமாக அதிமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும்.
ஸ்டாலின் தொடர்ந்து 25 நாட்களாக தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறார். 25 நாட்கள் பேசியும் இன்னும் முடிவு எட்டவில்லை. 4 நாட்கள் மட்டும் நாங்கள் பேசினோம். முதல் நாள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வந்தார்கள். பேசினோம், உடனே, எத்தனை எத்தனை இடங்கள் என்று அப்போதே அறிவித்த கட்சி அதிமுக.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சியின் மூத்த தலைவர், திமுக தலைமையுடன் பேசிவிட்டு வந்து, ‘அழுதுக்கொண்டே சிரிக்கிறோம்’ என்று பேட்டி அளித்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் திமுக தலைமையேற்று இருக்கிறது. அதுமட்டுமல்ல, விசிகவுக்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அறிவிக்கவில்லை.
ஆனால், ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஊடகங்களில், ‘எங்கள் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி’ என்று செய்தி வெளியிடுவார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று பெருமை பேசுவார். அப்படி 10 ஆண்டுகள் உங்கள் கூட்டணியில் இருந்த காரணத்தினால் தான், அவர்களுக்கு ஒரு தொகுதியைக் குறைத்து கொடுத்து இருக்கிறீர்கள்.
10 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகள் உங்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலியல், கொலை, கொள்ளை பற்றி திமுக கூட்டணிக் கட்சிகள் பேசவே இல்லை. வாயை திறக்காமல் மவுனம் காத்தார்கள், உங்கள் ஆட்சிக்கு துணையாக நின்றார்கள், உங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுடன் இருந்தவர்களுக்கு ஓர் இடம் குறைத்து கொடுத்துள்ளீர்கள்.
அண்மையில் திமுகவுடன் போய் சேர்ந்த கட்சிக்கு அதிக இடம் கொடுத்தார்கள். இதுதான் திமுக. ஆனால், அதிமுக அப்படி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம், முடிந்து விட்டால் அந்தந்த கட்சி அவரவர்களின் கொள்கையில் மக்கள் பிரச்சினையை முன்வைப்பார்கள். அது எங்கள் கூட்டணி தர்மம்.
ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கங்கள். மக்கள் பிரச்சினையை எடுத்துரைக்க வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. அதனால் அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
இபிஎஸ் 10 தோல்விகளை கண்டு விட்டார் என்று ஸ்டாலின் பேசிகிறார். 2011 முதல் 2021 வரை தில்லு, திராணி தெம்பு இருந்தால், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதும், மறைந்த பின்னும், அதிமுகவை திமுக வீழ்த்தியதாக வரலாறே கிடையாது.
2011-ல் கருணாநிதி தலைமையில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் அம்மா மறைவுக்கு பிறகு எவ்வளவோ சோதனைகள். அத்தனை சோதனைகளையும் சந்தித்து 2021-ல் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் அமர்ந்தோம். அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 75 இடங்களில் வென்றது. இது எங்கள் சாதனை. தலைவர்கள் இல்லை, தொண்டர்கள், மக்களின் ஆதரவோடு, மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றி மக்களை சந்தித்து 75 இடங்களில் வென்றோம். இதுதான் வெற்றி ஸ்டாலின் அவர்களே. வாய்சவடால் பேசுவதால் மட்டும் பிரயோஜனம் இல்லை. 5 ஆண்டு கால உங்கள் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது?
விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. விலை குறைக்க நடவடிக்கை எடுத்தீர்களா? அதிமுக ஆட்சியில் பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 40 ரூபாய் - திமுக ஆட்சியில் 75 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய் - திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய் - திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய் - திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய் - திமுக ஆட்சியில் 500 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய் - திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய் - திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை.
விலைவாசியால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் வெளி மாநிலத்தில் இருந்து மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்தது அதிமுக அரசு.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தோம்..? கட்சியில் பிரச்சினை, திமுகவின் பி டீமாக இருந்தவர்கள் எங்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே எங்களுக்கு குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அந்த விஷமிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.
மக்கள் ஆதரவோடு தொண்டர்கள் ஆதரவோடு 4 ஆண்டுகள் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். முதற்கட்டமாக 2017-ல் கடுமையான வறட்சி, நகர மக்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கிடையாது. அந்த கால கட்டத்தில் மக்களுக்குத் தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுத்தது, அதிமுக அரசு.
டெல்டாவில் ஐந்தாறு மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதமடைந்தன. மக்களின் உடைமைகள் புயலால் சேதமடைந்தன. அவற்றையெல்லாம் சரி செய்தோம். அதன் பிறகு கரோனா. அது எப்படிப்பட்ட காலம் என்பது உங்களுக்குத் தெரியும்.
மக்கள் யாரும் விதியில் நடமாடவில்லை. ஓராண்டு 11 மாத காலம் மக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அந்த காலத்தில் கூட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வருமானம் கிடையாது. தொழிற்சாலைகள் திறக்கவில்லை., ஜிஎஸ்டி வரி கிடையாது, பெட்ரோல் பங்க் திறக்கவில்லை. அதிலிருந்து வருவாய் கிடைக்கவில்லை. டாஸ்மாக் மூடப்பட்டது, சாலை வரி கிடையாது, பத்திரப்பதிவு கிடையாது, வருவாய் இல்லாத நிலையிலும் சிறப்பான ஆட்சியை தந்த அரசு, அதிமுக அரசு.
விலைவாசியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏழை மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், 11 மாதம் ரேஷன் கடையில் மளிகைப்பொருள்கள் விலை இல்லாமல் கொடுத்தோம். வருமானமே இல்லாமல் கரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடியை செலவு செய்த அரசு அதிமுக அரசு. திறமையாக செயல்பட்டு ஒரு நல்ல அரசு என்று மக்களிடம் பேர் வாங்கியது அதிமுக அரசு.
ஆனால், உங்கள் அரசு அப்படியா இருக்கிறது…? புயல் வந்ததா…? வெள்ளம் வந்ததா…?. கொரோனா வந்ததா…? எதுவுமில்லை. ஆனால், கடன் மட்டும் 5 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. எப்போது பார்தாலும் இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார். கடன் வாங்குவதில் முதல் முதலமைச்சர் என்பது உண்மைதான். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. ஒரு பக்கம் கடன் வாங்குகிறீர்கள், அதன் மூலம் சென்னை மக்களுக்கு ஏதாவது திட்டம் வந்ததா? தமிழ்நாட்டு மக்களுக்கு வந்ததா?
2021 அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயை விட 2024-25 திமுக ஆட்சியில் வருவாய் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளது. அப்படி இருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? அதாவது அத்தனையும் ஊழல். கலெக்சன், கமிஷன், கரப்ஷன் அது தான் திமுக ஆட்சி.
அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள வேறுபாடுகளை எண்ணிப்பாருங்கள். அதிமுக ஆட்சி மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்ததால், இந்தியாவிலேயே அதிகமான தொகை ஒரு திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2, 118 கி.மீ ரயில்வே பாதைகள் அமைக்க, 63 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து நாம் பெற்றோம். மத்திய அரசு அள்ளிக்கொடுத்தது.
சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமரை அணுகினோம், கோரிக்கை வைத்தோம், பிரதமர் அறிவிப்பை கொடுத்து, உள்துறை அமைச்சர் நேரடியாக சென்னைக்கு வந்து அடிக்கல் நாட்டினார். இது அதிமுகவின் வரலாற்று சாதனை. இப்படி ஒரு சாதனை திமுக ஆட்சியில் பார்க்க முடிந்ததா…?
எத்தனை பாலங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். அற்புதமான சாலைகள் கொடுத்திருக்கிறோம். தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர் மட்டப் பாலத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கினோம், அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை நிறைவேற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைப்போம்.
சென்னை நகரைச்சுற்றி ரிங் சாலை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அந்த திட்டத்திற்கு ஒதுக்கி தொடங்கிவைத்தோம். ஆனால் இன்னும் அந்த பணி நிறைவு பெறவில்லை. எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.
இன்று திமுக ஆட்சியில் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழலை ஆதாரத்தோடு கண்டுபிடித்து, டிஜிபிக்கு மூன்று முறை அறிக்கை அனுப்பினார்கள். இதுவரை எஃப்.ஐ.ஆர். போடவில்லை. நீதிமன்றம் சென்று, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்வதில் மன்னர்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பணி நியமன ஊழல், அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதிமுக ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கு பார்த்தாலும் போதை பல வடிவத்தில் விற்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் விற்பதே திமுகவினர் தான். போதை ஆசாமிகளால் தான் மக்கள் நடமாட முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. தங்க விலை நிலவரம் போல கொலை நிலவரம் தினமும் வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
வீட்டு வரி 100% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 6% உயர்வு. கடைக்கு 150% உயர்வு. குப்பைக்கும் வரி போட்ட அரசு இது. மின்கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. 52% உயர்வு, ஆண்டுக்கு 5% உயரும். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாநகராட்சியில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர், ஊழல் செய்துள்ளனர்.
மதுரையில் 200 கோடி ஊழல், பன்றிக்கு போட்ட வரியிலும் ஊழல் செய்தனர். திமுக அரசே அதை கண்டுபிடித்தது. பலர் ராஜினாமா செய்துள்ளனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தொடர வேண்டுமா?
அதிமுக ஆட்சியில் விலைவாசி குறைக்கப்படும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். திமுக என்றால் கருணாநிதி குடும்பம் ஆகிவிட்டது. திமுக கட்சியினருக்கு மரியாதை இல்லை, என் பக்கத்தில் கந்தன் இருப்பது போல, ஸ்டாலின் பக்கத்தில் யாராவது நிற்க முடியுமா? நான் கீழேயிருந்து மேலே வந்தவன். மக்களோடு மக்களாக இருந்தேன், மக்கள் அவதிகள் அறிந்தவன். ஆட்சி எப்படி செய்யவேண்டும், எப்படி நிவர்த்தி செய்வது என்று தெரிந்ததால் தான், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக ஆட்சி செய்தோம். மக்கள் இந்த தேர்தலில் நல்ல வாய்ப்பை தருவீர்கள் என்று நம்புகிறோம், கொடுத்தால் இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஆட்சி கொடுப்போம்.
நான் தெய்வ பக்தி உள்ளவன். ஸ்டாலினைப் போல் வாரிசாக இல்லாமல், உழைத்து உங்களிடம் வந்திருக்கிறேன். ஸ்டாலினும் நானும் 1989-ல் எம்.எல்.ஏ. ஆனோம். சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றேன். அவர் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு, அவர் அப்பா கருணாநிதி. அதனால் சுலபமாக வென்று வந்தார். நான் சாதாரண தொண்டராக இருந்து எம்.எல்.ஏ ஆகி, அமைச்சராகி, படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன். வாரிசு அரசியல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. சுதந்திரமாக மக்கள் செயல்படும் ஆட்சி வேண்டும் என்றால் தே.ஜ கூட்டணியில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டுக்கொடுக்கும். சென்னையிலும் கிராமத்திலும், பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுசேலை வழங்கப்படும்.
பட்டப்படிப்பு படித்து பதிவு செய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இன்னும் நிறைய அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம்’’ என்று பேசினார்.
Saturday, March 28, 2026
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” - விஜய் ஆவேசம் - “திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?”
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:20 AM
சென்னை,
“நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவுக்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
“நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவுக்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு - 2-ம் கட்ட முழு பட்டியல்
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 28, 2026, பங்குனி 14, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. கும்மிடிபூண்டி (1) - V. சுதாகர்
2. பொன்னேரி (தனி) (2) - சிறுணியம் P. பலராமன்
3. திருத்தணி (3) - திருத்தணி கோ. அரி
4. திருவள்ளூர் (4) - B.V. ரமணா
5. மாதவரம் (9) - மாதவரம் V. மூர்த்தி
6. திருவொற்றியூர் (10) - K. குப்பன்
7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) - K. பழனி
8. தாம்பரம் (31) - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9. செங்கல்பட்டு (32) - M. கஜா (எ) கஜேந்திரன்
10. செய்யூர் (தனி) (34) - E. ராஜசேகர்
11. மதுராந்தகம் (தனி) (35) - மரகதம் குமரவேல்
12. காஞ்சிபுரம் (37) - V. சோமசுந்தரம்
13. அரக்கோணம் (தனி) (38) - சு. ரவி
14. காட்பாடி (40) - V. ராமு
15. ஆற்காடு (42) - S.M சுகுமார்
16. வேலூர் (43) - S.R.K அப்பு
17. அணைக்கட்டு (44) - த. வேலழகன்
18. குடியாத்தம் (தனி) (46) - G. பரிதா புருஷோத்தமன்
19. வாணியம்பாடி (47) - G. செந்தில்குமார்
20. ஆம்பூர் (48) - R. வெங்கடேசன்
21. ஊத்தங்கரை (தனி) (51) - T.M. தமிழ்செல்வம்
22. பர்கூர் (52) - E.C. கோவிந்தராசன்
23. கிருஷ்ணகிரி (53) - K. அசோக்குமார்
24. ஓசூர் (55) - P. பாலகிருஷ்ண ரெட்டி
25. பாப்பிரெட்டிபட்டி (60) - மரகதம் வெற்றிவேல்
26. அரூர் (தனி) (61) - V. சம்பத்குமார்
27. செங்கம் (தனி) (62) - T.S. வேலு
28. கீழ்பென்னாத்தூர் (64) - எஸ். இராமச்சந்திரன்
29. ஆரணி (67) - L. ஜெயசுதா
30. செய்யார் (68) - முக்கூர் N. சுப்பிரமணியன்
31. வந்தவாசி (தனி) (69) - P. ராணி
32. திண்டிவனம் (தனி) (72) - P. அர்ஜூனன்
33. வானூர் (தனி) (73) - P. முருகன்
34. விழுப்புரம் (74) - K. விஜயா
35. திருக்கோயிலூர் (76) - S. பழனிசாமி
36. உளுந்தூர்பேட்டை (77) - இரா. குமரகுரு
37. சங்கராபுரம் (79) - R. ராகேஷ்
38. கள்ளக்குறிச்சி (தனி) (80) - ராஜீவ்காந்தி
39. கங்கவல்லி (தனி) (81) - A. நல்லதம்பி
40. ஆத்தூர் (தனி) (82) - A.P. ஜெயசங்கரன்
41. ஏற்காடு (எஸ்டி) (83) - P. உஷாராணி
42. ஓமலூர் (84) - R. மணி
43. மேட்டூர் (85) - G. வெங்கடாஜலம்
44. சங்ககிரி (87) - S. வெற்றிவேல்
45. சேலம் (தெற்கு) (90) - J. வினோத்
46. வீரபாண்டி (91) - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) - C. சந்திரசேகரன்
48. நாமக்கல் (94) - ஸ்ரீதேவி P.S. மோகன்
49. பரமத்தி வேலூர் (95) - S.சேகர்
50. திருச்செங்கோடு (96) - R. சந்திரசேகர்
51. ஈரோடு (கிழக்கு) (98) - R. மனோகரன்
52. தாராபுரம் (தனி) (101) - P. சத்தியபாமா
53. காங்கயம் (102) - N.S.N. நடராஜ்
54. பெருந்துறை (103) - J.K (எ) S. ஜெயக்குமார்
55. அந்தியூர் (105) - P. ஹரிபாஸ்கர்
56. கோபிச்செட்டிப்பாளையம் (106) - V.B. பிரபு
57. பவானிசாகர் (தனி) (107) - A. பண்ணாரி
58. கூடலூர் (தனி) (109) - பொன். ஜெயசீலன்
59. குன்னூர் (110) -A. ராமு
60. மேட்டுப்பாளையம் (111) - O.K. சின்னராஜ்
61. திருப்பூர் (வடக்கு) (113) - M.S.M. ஆனந்தன்
62. பல்லடம் (115) - பல்லடம் K.P. பரமசிவம்
63. சூலூர் (116) - V.P. கந்தசாமி
64. கவுண்டம்பாளையம் (117) - P.R.S. அருண்குமார்
65. கோயம்புத்தூர் தெற்கு (120) - அம்மன் K. அர்ச்சுணன்
66. சிங்காநல்லூர் (121) - K.R. ஜெயராம்
67. கிணத்துக்கடவு (122) - செ. தாமோதரன்
68. பொள்ளாச்சி (123) - V. பொள்ளாச்சி ஜெயராமன்
69. வால்பாறை (தனி) (124) - D. லட்சுமண சிங்
70. உடுமலைப்பேட்டை (125) - உடுமலை K. ராதாகிருஷ்ணன்
71. பழனி (127) - K. ரவி மனோகரன்
72. ஆத்தூர் (129) - A. விஸ்வநாதன்
73. நிலக்கோட்டை (தனி) (130) - S. தேன்மொழி
74. வேடசந்தூர் (133) - V.P.B. பரமசிவம்
75. அரவக்குறிச்சி (134) - K. செல்வக்குமார்
76. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) - S. திவ்யா
77. குளித்தலை (137) - S. கருணாகரன்
78. மணப்பாறை (138) - P.L. விஜயகுமார்
79. ஸ்ரீரங்கம் (139) - R. மனோகரன்
80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) - க. ராஜசேகரன்
81. திருவெறும்பூர் (142) - ப. குமார்
82. லால்குடி (143) -M. லீமா ரோஸ்
83. முசிறி (145) - N. யோகநாதன்
84. துறையூர் (தனி) (146) - இ. சுரோஜா
85. பெரம்பலூர் (தனி) (147) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86. நெய்வேலி (153) - சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87. பண்ருட்டி (154) - K. மோகன்
88. கடலூர் (155) - M.C. சம்பத்
89. குறிஞ்சிப்பாடி (156) - A. புவனேந்திரன்
90. புவனகிரி (157) - ஆ. அருண்மொழிதேவன்
91. சிதம்பரம் (158) - K.A. பாண்டியன்
92.சீர்காழி (தனி) (160) - ம. சக்தி
93. பூம்புகார் (162) - S. பவுன்ராஜ்
94. நாகப்பட்டினம் (163) - தங்க. கதிரவன்
95. திருத்துறைப்பூண்டி (தனி) (166) - உ. பாலதண்டாயுதம்
96. திருவிடைமருதூர் (தனி) (170) - இளமதி சுப்ரமணியன்
97. பாபநாசம் (172) - D. சண்முகபிரபு
98. ஒரத்தநாடு (175) - M. சேகர்
99. பட்டுக்கோட்டை (176) - C.V. சேகர்
100. பேராவூரணி (177) - கோவி. இளங்கோ
101. திருமயம் (181) - P.K. வைரமுத்து
102. சிவகங்கை (186) - P.R. செந்தில்நாதன்
103. மேலூர் (188) - P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104. மதுரை கிழக்கு (189) - மாங்குளம் K. மகேந்திரன்
105. சோழவந்தான் (தனி) (190) - கி. மாணிக்கம்
106. மதுரை வடக்கு (191) - P. சரவணன்
107. உசிலம்பட்டி (197) - I. மகேந்திரன்
108. ஆண்டிபட்டி (198) - A. லோகிராஜன்
109. போடிநாயக்கனூர் (200) - V.T. நாராயணசாமி
110. கம்பம் (201) - S.T.K. ஜக்கையன்
111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) - M. சந்திரபிரபா
112. விருதுநகர் (206) - V.G. கணேசன்
113. அருப்புக்கோட்டை (207) -S. சேதுபதி
114. பரமக்குடி (தனி) (209) - S. முத்தையா
115. திருவாடானை (210) - கீர்த்திகா முனியசாமி
116. முதுகுளத்தூர் (212) - மலேசியா S. பாண்டி
117. விளாத்திகுளம் (213) - R.சத்யா
118. தூத்துக்குடி (214) - சி.த. செல்லப்பாண்டியன்
119. ஸ்ரீவைகுண்டம் (216) - S.P. சண்முகநாதன்
120. சங்கரன்கோவில் (தனி) (219) - திலிபன் ஜெய்சங்கர்
121. கடையநல்லூர் (221) - C. கிருஷ்ணமுரளி
122. தென்காசி (222) - S. செல்வமோகன்தாஸ்
123. ஆலங்குளம் (223) - K.R.P. பிரபாகரன்
124. திருநெல்வேலி (224) - தச்சை N. கணேசராஜா
125. அம்பாசமுத்திரம் (225) - இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
126. பாளையங்கோட்டை (226) - S. சையது சுல்தான் சம்சுதீன்
127. கன்னியாகுமரி (229) - என். தளவாய்சுந்தரம்
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.
அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. கும்மிடிபூண்டி (1) - V. சுதாகர்
2. பொன்னேரி (தனி) (2) - சிறுணியம் P. பலராமன்
3. திருத்தணி (3) - திருத்தணி கோ. அரி
4. திருவள்ளூர் (4) - B.V. ரமணா
5. மாதவரம் (9) - மாதவரம் V. மூர்த்தி
6. திருவொற்றியூர் (10) - K. குப்பன்
7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) - K. பழனி
8. தாம்பரம் (31) - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9. செங்கல்பட்டு (32) - M. கஜா (எ) கஜேந்திரன்
10. செய்யூர் (தனி) (34) - E. ராஜசேகர்
11. மதுராந்தகம் (தனி) (35) - மரகதம் குமரவேல்
12. காஞ்சிபுரம் (37) - V. சோமசுந்தரம்
13. அரக்கோணம் (தனி) (38) - சு. ரவி
14. காட்பாடி (40) - V. ராமு
15. ஆற்காடு (42) - S.M சுகுமார்
16. வேலூர் (43) - S.R.K அப்பு
17. அணைக்கட்டு (44) - த. வேலழகன்
18. குடியாத்தம் (தனி) (46) - G. பரிதா புருஷோத்தமன்
19. வாணியம்பாடி (47) - G. செந்தில்குமார்
20. ஆம்பூர் (48) - R. வெங்கடேசன்
21. ஊத்தங்கரை (தனி) (51) - T.M. தமிழ்செல்வம்
22. பர்கூர் (52) - E.C. கோவிந்தராசன்
23. கிருஷ்ணகிரி (53) - K. அசோக்குமார்
24. ஓசூர் (55) - P. பாலகிருஷ்ண ரெட்டி
25. பாப்பிரெட்டிபட்டி (60) - மரகதம் வெற்றிவேல்
26. அரூர் (தனி) (61) - V. சம்பத்குமார்
27. செங்கம் (தனி) (62) - T.S. வேலு
28. கீழ்பென்னாத்தூர் (64) - எஸ். இராமச்சந்திரன்
29. ஆரணி (67) - L. ஜெயசுதா
30. செய்யார் (68) - முக்கூர் N. சுப்பிரமணியன்
31. வந்தவாசி (தனி) (69) - P. ராணி
32. திண்டிவனம் (தனி) (72) - P. அர்ஜூனன்
33. வானூர் (தனி) (73) - P. முருகன்
34. விழுப்புரம் (74) - K. விஜயா
35. திருக்கோயிலூர் (76) - S. பழனிசாமி
36. உளுந்தூர்பேட்டை (77) - இரா. குமரகுரு
37. சங்கராபுரம் (79) - R. ராகேஷ்
38. கள்ளக்குறிச்சி (தனி) (80) - ராஜீவ்காந்தி
39. கங்கவல்லி (தனி) (81) - A. நல்லதம்பி
40. ஆத்தூர் (தனி) (82) - A.P. ஜெயசங்கரன்
41. ஏற்காடு (எஸ்டி) (83) - P. உஷாராணி
42. ஓமலூர் (84) - R. மணி
43. மேட்டூர் (85) - G. வெங்கடாஜலம்
44. சங்ககிரி (87) - S. வெற்றிவேல்
45. சேலம் (தெற்கு) (90) - J. வினோத்
46. வீரபாண்டி (91) - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) - C. சந்திரசேகரன்
48. நாமக்கல் (94) - ஸ்ரீதேவி P.S. மோகன்
49. பரமத்தி வேலூர் (95) - S.சேகர்
50. திருச்செங்கோடு (96) - R. சந்திரசேகர்
51. ஈரோடு (கிழக்கு) (98) - R. மனோகரன்
52. தாராபுரம் (தனி) (101) - P. சத்தியபாமா
53. காங்கயம் (102) - N.S.N. நடராஜ்
54. பெருந்துறை (103) - J.K (எ) S. ஜெயக்குமார்
55. அந்தியூர் (105) - P. ஹரிபாஸ்கர்
56. கோபிச்செட்டிப்பாளையம் (106) - V.B. பிரபு
57. பவானிசாகர் (தனி) (107) - A. பண்ணாரி
58. கூடலூர் (தனி) (109) - பொன். ஜெயசீலன்
59. குன்னூர் (110) -A. ராமு
60. மேட்டுப்பாளையம் (111) - O.K. சின்னராஜ்
61. திருப்பூர் (வடக்கு) (113) - M.S.M. ஆனந்தன்
62. பல்லடம் (115) - பல்லடம் K.P. பரமசிவம்
63. சூலூர் (116) - V.P. கந்தசாமி
64. கவுண்டம்பாளையம் (117) - P.R.S. அருண்குமார்
65. கோயம்புத்தூர் தெற்கு (120) - அம்மன் K. அர்ச்சுணன்
66. சிங்காநல்லூர் (121) - K.R. ஜெயராம்
67. கிணத்துக்கடவு (122) - செ. தாமோதரன்
68. பொள்ளாச்சி (123) - V. பொள்ளாச்சி ஜெயராமன்
69. வால்பாறை (தனி) (124) - D. லட்சுமண சிங்
70. உடுமலைப்பேட்டை (125) - உடுமலை K. ராதாகிருஷ்ணன்
71. பழனி (127) - K. ரவி மனோகரன்
72. ஆத்தூர் (129) - A. விஸ்வநாதன்
73. நிலக்கோட்டை (தனி) (130) - S. தேன்மொழி
74. வேடசந்தூர் (133) - V.P.B. பரமசிவம்
75. அரவக்குறிச்சி (134) - K. செல்வக்குமார்
76. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) - S. திவ்யா
77. குளித்தலை (137) - S. கருணாகரன்
78. மணப்பாறை (138) - P.L. விஜயகுமார்
79. ஸ்ரீரங்கம் (139) - R. மனோகரன்
80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) - க. ராஜசேகரன்
81. திருவெறும்பூர் (142) - ப. குமார்
82. லால்குடி (143) -M. லீமா ரோஸ்
83. முசிறி (145) - N. யோகநாதன்
84. துறையூர் (தனி) (146) - இ. சுரோஜா
85. பெரம்பலூர் (தனி) (147) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86. நெய்வேலி (153) - சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87. பண்ருட்டி (154) - K. மோகன்
88. கடலூர் (155) - M.C. சம்பத்
89. குறிஞ்சிப்பாடி (156) - A. புவனேந்திரன்
90. புவனகிரி (157) - ஆ. அருண்மொழிதேவன்
91. சிதம்பரம் (158) - K.A. பாண்டியன்
92.சீர்காழி (தனி) (160) - ம. சக்தி
93. பூம்புகார் (162) - S. பவுன்ராஜ்
94. நாகப்பட்டினம் (163) - தங்க. கதிரவன்
95. திருத்துறைப்பூண்டி (தனி) (166) - உ. பாலதண்டாயுதம்
96. திருவிடைமருதூர் (தனி) (170) - இளமதி சுப்ரமணியன்
97. பாபநாசம் (172) - D. சண்முகபிரபு
98. ஒரத்தநாடு (175) - M. சேகர்
99. பட்டுக்கோட்டை (176) - C.V. சேகர்
100. பேராவூரணி (177) - கோவி. இளங்கோ
101. திருமயம் (181) - P.K. வைரமுத்து
102. சிவகங்கை (186) - P.R. செந்தில்நாதன்
103. மேலூர் (188) - P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104. மதுரை கிழக்கு (189) - மாங்குளம் K. மகேந்திரன்
105. சோழவந்தான் (தனி) (190) - கி. மாணிக்கம்
106. மதுரை வடக்கு (191) - P. சரவணன்
107. உசிலம்பட்டி (197) - I. மகேந்திரன்
108. ஆண்டிபட்டி (198) - A. லோகிராஜன்
109. போடிநாயக்கனூர் (200) - V.T. நாராயணசாமி
110. கம்பம் (201) - S.T.K. ஜக்கையன்
111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) - M. சந்திரபிரபா
112. விருதுநகர் (206) - V.G. கணேசன்
113. அருப்புக்கோட்டை (207) -S. சேதுபதி
114. பரமக்குடி (தனி) (209) - S. முத்தையா
115. திருவாடானை (210) - கீர்த்திகா முனியசாமி
116. முதுகுளத்தூர் (212) - மலேசியா S. பாண்டி
117. விளாத்திகுளம் (213) - R.சத்யா
118. தூத்துக்குடி (214) - சி.த. செல்லப்பாண்டியன்
119. ஸ்ரீவைகுண்டம் (216) - S.P. சண்முகநாதன்
120. சங்கரன்கோவில் (தனி) (219) - திலிபன் ஜெய்சங்கர்
121. கடையநல்லூர் (221) - C. கிருஷ்ணமுரளி
122. தென்காசி (222) - S. செல்வமோகன்தாஸ்
123. ஆலங்குளம் (223) - K.R.P. பிரபாகரன்
124. திருநெல்வேலி (224) - தச்சை N. கணேசராஜா
125. அம்பாசமுத்திரம் (225) - இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
126. பாளையங்கோட்டை (226) - S. சையது சுல்தான் சம்சுதீன்
127. கன்னியாகுமரி (229) - என். தளவாய்சுந்தரம்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Friday, March 27, 2026
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் - பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க புகார்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:40 AM
சென்னை,
பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். இந்த மனுவை அளிக்கும் போது தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடனிருந்தார்.
டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து விஜய் அளித்த புகார் மனுவில்,
‘ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். இந்த மனுவை அளிக்கும் போது தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடனிருந்தார்.
டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து விஜய் அளித்த புகார் மனுவில்,
‘ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
பெண்கள் குறித்த பொன்ராஜ் கருத்துக்கு விஜய் கண்டனம் - திமுக மீதும் காட்டமான விமர்சனம்
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:30 AM
சென்னை,
தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.
எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?
இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?
கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.
எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?
இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?
கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
பதிவு: வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 01:55 AM
டெஹ்ரான்/ வாஷிங்டன்,
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், எல்பிஜி எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அங்கு காத்துக் கிடந்தன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கும்படி ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல, ஈரானின் நட்பு நாடுகளும் பேச்சு நடத்தின. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்ளது. மேற்கு ஆசியா போர்க்களமாக உள்ளது. இதனால், இங்கு எதிரி நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது’’ என்றார்.
‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானின் உச்ச தலைவராக என்னை நியமிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் வெகுவிரைவாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரான் விரும்புகிறது. ஆனால், ஈரான் பிரதிநிதிகளால் இதை வெளிப்படையாக கூற முடியவில்லை. ஈரான் ஆட்சியாளர்கள், ராணுவதளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். உயிர்பயம் காரணமாக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இதை பகிரங்கமாக அறிவித்தால் சொந்த நாட்டு மக்கள் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர். ஒருவேளை, ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
போரை நீண்ட காலம் நீட்டிக்க ட்ரம்ப் விரும்பவில்லை. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 5 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது.
ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.
ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெஹ்ரான்/ வாஷிங்டன்,
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், எல்பிஜி எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அங்கு காத்துக் கிடந்தன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கும்படி ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல, ஈரானின் நட்பு நாடுகளும் பேச்சு நடத்தின. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்ளது. மேற்கு ஆசியா போர்க்களமாக உள்ளது. இதனால், இங்கு எதிரி நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது’’ என்றார்.
‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானின் உச்ச தலைவராக என்னை நியமிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் வெகுவிரைவாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரான் விரும்புகிறது. ஆனால், ஈரான் பிரதிநிதிகளால் இதை வெளிப்படையாக கூற முடியவில்லை. ஈரான் ஆட்சியாளர்கள், ராணுவதளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். உயிர்பயம் காரணமாக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இதை பகிரங்கமாக அறிவித்தால் சொந்த நாட்டு மக்கள் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர். ஒருவேளை, ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
போரை நீண்ட காலம் நீட்டிக்க ட்ரம்ப் விரும்பவில்லை. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 5 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது.
ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.
ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thursday, March 26, 2026
கடைசி வாய்ப்பு - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே இறுதி நாள்
பதிவு: வியாழக்கிழமை, மார்ச் 26, 2026, பங்குனி 12, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.
பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.
பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
Featured post
“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 A M நாகர்கோவில், “எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...






