Friday, July 24, 2020

அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள், நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

பதிவு: ஜூலை 24,  2020 03:35 PM

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 4 மாத கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அதே சமயம் இத்தகைய கொரோனா பேரிடர் காலத்தை பயன்படுத்தி அதிமுக அரசு மோசடிகளை செய்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக அதிக மின்சார கட்டணம் வசூலித்தல், கொரோனா மரணத்தில் பொய் கணக்கு எழுதுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன. 



No comments:

Post a Comment