Sunday, July 5, 2020

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

அனைத்து கடைகள், பெட்ரோல் பங்க் மூடல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு: வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் இன்று 07-05-2020 (ஞாயிறு) எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று பால், மருந்து கடைகள், பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே  சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளை முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.


No comments:

Post a Comment